search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிணற்றில் விவசாயி பிணம்
    X

    கிணற்றில் விவசாயி பிணம்

    • பெரம்பலூர் அருகே கிணற்றில் மிதந்த விவசாயி பிணத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்
    • முதற்கட்ட விசாரணை அடித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது

    பாடாலூர்,

    பெரம்பலூர் மாவட்டம், பொம்மனப்பாடி இந்திரா நகரை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 58), விவசாயி. இவர் நேற்று இரவு அதே பகுதியில் உள்ள அவரது விவசாய கிணற்றில் இறந்து கிடப்பதாக பாடாலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், பெரம்பலூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் உதவியுடன் கிணற்றில் இருந்து அன்பழகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் அன்பழகனுக்கும், அவரது உறவினர்களுக்குமிடையே நிலத் தகராறு இருப்பது தெரியவந்தது. அன்பழகன் அதே பகுதியில் பிரச்சினைக்குரிய காலி இடத்தில் வீடு கட்டுவதற்கு ஏற்பாடு செய்து வந்தார். இதனால் ஏற்பட்ட தகறாரில் அன்பழகன் கிணற்றில் தள்ளி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×