என் மலர்
தலைப்புச்செய்திகள்
- 'டேஸ்ட் அட்லஸ்' என்பது உலகின் பிரபல உணவு மற்றும் பயண நிறுவனம் ஆகும்.
- உலகின் சிறந்த 100 கடல் உணவுகளின் பட்டியலை டேஸ்ட் அட்லஸ் வெளியிட்டது.
'டேஸ்ட் அட்லஸ்' என்ற உலகின் பிரபல உணவு மற்றும் பயண நிறுவனம் உலகின் சிறந்த 100 கடல் உணவுகளின் பட்டியலை வெளியிட்டது.
இந்த பட்டியலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நெத்திலி 65 உணவு 81வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளன.
மேலும், கேரளாவின் கறிமீன் பொளிச்சது 11வது இடத்தையும், மேற்கு வங்கத்தின் சிங்கிரி மலாய் கறி 30வது இடத்தையும் பிடித்து அசத்தியுள்ளன.
- லடாக்கில் இன்று காலை முதல் முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது.
- போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
லடாக்:
யூனியன் பிரதேசமாக உள்ள லடாக்கிற்கு தனி மாநில அந்தஸ்து வழங்கவேண்டும், அரசியலமைப்பின் 6-வது அட்டவணையில் சேர்க்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடந்து வருகிறது. கடந்த 10-ம் தேதி முதல் உண்ணாவிரத போராட்டமும் நடந்து வருகிறது.
இந்தப் போராட்டம் தொடர்பாக மத்திய அரசு சார்பில் அடுத்த மாதம் 6-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, லடாக்கில்முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று காலையில் முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. அப்போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். போலீசாரின் வாகனங்களுக்கு தீவைத்தனர்.
மேலும், மத்திய அரசுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் லே நகரில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்திற்கு தீ வைத்து அதன் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருவதால் போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
- வீடு புகுந்து பள்ளி சிறுவன் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- இது தொடர்பான சிசிடிவி வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் வீடு புகுந்து பள்ளி சிறுவன் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான சிசிடிவி வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் தொடர்பாக 6 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் பகுதியில் சிறுவனை போலீசார் மீட்டனர். கடத்திய கும்பல் சிறுவனை அங்கு விட்டு சென்றுள்ளனர்.
கடத்தப்பட்ட சிறுவன் தற்போது நலமுடன் உள்ளதாகவும் கடத்தல் கும்பலை தீவிரமாக தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
- தனது வயிற்றில் வளரும் குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை என ஜாய் கிரிசில்டா புகார்
- சமூக வலைத்தளங்களில் இருவருக்கும் இடையிலான தொடர்பு குறித்த படங்களையும் பகிர்ந்திருந்தார்.
மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருணம் செய்து ஏமாற்றி விட்டார். வயிற்றில் வளரும் குழந்தைக்கு அவர்தான் தந்தை என ஜாய் கிரிசில்டா போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் தெரிவித்திருந்தார். மேலும், சமூக வலைத்தளங்களில் இருவருக்கும் இடையிலான தொடர்பு குறித்த படங்களையும் பகிர்ந்திருந்தார்.
காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில் அவருடைய புகார் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டது. துணை ஆணையர் வனிதா ஜாய் கிரிசில்டாவிடம் 6 மணி நேரம் விசாரணை மேற்கொண்டார்.
இந்நிலையில், ஜாய் கிரிசில்டா கொடுத்த புகாரில், சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் வரும் 26ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று நீலாங்கரை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
- விஜயலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
- நடிகையை தொந்தரவு செய்யமாட்டேன் என சீமான் உறுதியளிக்க வேண்டும்.
தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஏமாற்றிவிட்டதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி குற்றம்சாட்டினார். இது தொடர்பாக விஜயலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நடிகை தொடர்ந்த பாலியல் புகார் வழக்கை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் சீமான் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, நடிகை விஜயலட்சுமியிடம் சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு கோர தவறினால், சீமானை கைது செய்வதற்கான தடை ரத்து செய்யப்படும். வழக்கை எதிர்கொள்ள சீமான் தயாராக இருக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்தது. மேலும், விஜயலட்சுமி சுமூகமாக செல்வதற்கான உத்தரவாதத்தை வழங்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியது.
இருவரும் குற்றச்சாட்டுகளை திரும்ப பெற்று, மன்னிப்பு கேட்கட்டும். நடிகையை தொந்தரவு செய்யமாட்டேன் என சீமான் உறுதியளிக்க வேண்டும். சீமானுக்கு எதிரான புலன்விசாரணைக்கு இடைக்கால தடை நீட்டிக்கப்பட்டுள்ளது என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பும் அனைத்து புகார்களையும் திரும்ப பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், சீமான் மன்னிப்பு கூறி தாக்கல் செய்த பிரமாண பத்திரம் திருப்திகரமாக இல்லை என்றும் அந்த மன்னிப்பு தோரணை சரியானதாக இல்லை" என்று நீதிபதிகள் காட்டமாக தெரிவித்தனர்.
இதனையடுத்து இருதரப்பும் மன்னிப்பு கோரி பிராமண பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும் இருதரப்பும் இந்த விவகாரம் தொடர்பாக எந்த ஒரு பேட்டியோ அல்லது காணொளியோ வெளியிடக்கூடாது, குறிப்பாக இந்த வழக்கு குறித்து இருவரும் எந்த ஊடகங்களில் பேச கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" உச்சநீதிமன்றம் எச்சரித்தது.
- போகோ சி71 மாடல் 4 ஜிபி ரேமுடன் ரூ.6,299 விலையில் கிடைக்கிறது.
- கூகுள் பிக்சல் ஃபோல்டு மாடலின் விலையையும் ரூ.60 ஆயிரம் வரை குறைந்திருக்கிறது.
ஜிஎஸ்டி 2.0 சீர்திருத்தத்திற்கு பிறகு, ஸ்மார்ட்போன்கள் உட்பட பல்வேறு டிஜிட்டல் பொருட்களின் விலை குறைந்திருக்கிறது. இந்நிலையில், ஆன்லைன், ஆஃப்லைன் வர்த்தக தளங்களில் சலுகை விலையுடன் விற்பனையாகும் சில ஸ்மார்ட்போன்கள் பற்றி அறிந்து கொள்வோம்.
ஏ.ஐ. பிளஸ் பல்ஸ் ஸ்மார்ட்போன், பானாசோனிக் பி110 ஆகிய ஸ்மார்ட்போன்கள் ரூ.4,999 முதல் விற்பனைக்கு கிடைக்கின்றன. குறைந்தபட்ச பயன்பாடு கொண்டவர்கள், தொலைபேசி அழைப்பிற்கு மட்டும் பயன்படுத்துபவர்கள், இந்த டச்-ஸ்கிரீன் ஸ்மார்ட்போன்களை வாங்கலாம்.
சோலோ 1எக்ஸ், லாவா இசட் 1எஸ், ரெட்மி 5ஏ போன்ற மாடல்கள் ரூ.5,299 விலையிலும், போகோ சி71 ரூ.5,599 விலையிலும், ரெட்மி ஏ2 மற்றும் சாம்சங் கேலக்ஸி ஏ2 கோர் ஆகியவை ரூ.5,900 விலையிலும் விற்பனையாகின்றன. இவையனைத்தும் 1 ஜிபி ரேம் ஸ்மார்ட்போன்கள்.
ரெட்மி ஏ3எக்ஸ், ரெட்மி ஏ5, ரெட்மி 5ஏ ஆகிய ஸ்மார்ட்போன்கள் 3 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரியுடன் ரூ.5,999 விலையில் கிடைக்கின்றன. போகோ சி71 மாடல் 4 ஜிபி ரேமுடன் ரூ.6,299 விலையில் கிடைக்கிறது.
ஏ.ஐ. பிளஸ் பல்ஸ் மாடலின் 6 ஜிபி ரேம் மாடல் 128 ஜிபி மெமரியுடன், 50MP கேமரா மற்றும் 5000mAh பேட்டரியுடன் ரூ.6,499 விலையிலேயே கிடைக்கிறது.
சாம்சங் கேலக்ஸி Z ஃபோல்டு ஸ்மார்ட்போனிற்கு ரூ.50 ஆயிரத்திற்கு மேலாக சலுகை வழங்கி அதன் விலையை ரூ.1.6 லட்சத்தில் இருந்து ரூ.1.10 லட்சமாக குறைத்திருக்கிறார்கள். அதேபோல கூகுள் பிக்சல் ஃபோல்டு மாடலின் விலையையும் ரூ.60 ஆயிரம் வரை குறைந்திருக்கிறது. அதுவும், ரூ.1.10 லட்சத்தில் விற்பனையாகிறது.
- 7 ஸ்பீடு டி.எஸ்.ஜி. ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் வழங்கப்படுகிறது.
- இந்த கார் அதிகபட்சமாக மணிக்கு 250 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.
ஸ்கோடா நிறுவனம், புதிய ஆக்டேவியா ஆர்எஸ் காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த கார் வருகிற நவம்பர் மாதம் அறிமுகமாகும் என்று அந்நிறுவனம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆக்டேவியா சீரிசில் இது 4ஆம் தலைமுறை கார் மாடல் ஆகும். இதில், 2.0 லிட்டர் 4 சிலிண்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் இடம் பெற்றிருக்கும். இத்துடன் 7 ஸ்பீடு டி.எஸ்.ஜி. ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் வழங்கப்படுகிறது. இது அதிகபட்சமாக 265 எச்.பி. பவர், 370 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்தும்.
இந்த கார் அதிகபட்சமாக மணிக்கு 250 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. மேலும், இது மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 6.4 நொடிகளில் எட்டிவிடும். தோற்றத்தை பொறுத்தவரை, கருப்பு நிற ரேடியேட்டர் கிரில், புதிய வடிவமைப்புடன் கூடிய சக்கரங்கள், ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப், எல்இடி டிஆர்எல்-கள் இடம்பெறும்.
காரின் உள்புறத்தில் சிவப்பு நிற கோடுடன் கூடிய இன்டீரியர் உள்பட பல அம்சங்கள் இடம்பெறும் என்று நிறுவனம் தரப்பில் கூறப்படுகிறது.
- அன்னாசிப்பழம் சாப்பிட்டால் கருச்சிதைவு ஏற்படும் என்று சொல்வார்கள்.
- கிரகணம் தொடர்பாக கர்ப்பிணிகள் எல்லோருமே சில கேள்விகளை கேட்கிறார்கள்.
பெண்கள் தங்களின் வாழ்க்கையில் எதிர்பார்க்கும் சிறந்த தருணம் என்பது கர்ப்ப காலம் மற்றும் பிரசவ நேரம் ஆகியவை ஆகும். இந்த காலகட்டம் பெண்களின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான பங்கை வகிக்கிறது. இந்த காலகட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு, வயதில் மூத்த பெண்கள் பலரும் பல்வேறு அறிவுரைகளை கூறுவார்கள். அவற்றில் எது நல்லது, எது கெட்டது என்பதை ஒவ்வொரு கர்ப்பிணி பெண்களும் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும்.
கர்ப்பிணி பெண்களுக்கு உணவு விஷயத்தில் ஏற்படுகிற சந்தேகங்கள்:
மேலும் கர்ப்ப காலத்தின்போது என்னென்ன உணவுகளை சாப்பிட வேண்டும், என்னென்ன உணவுகளை சாப்பிடக்கூடாது என்கிற சந்தேகங்களும் நிறைய கர்ப்பிணி பெண்களுக்கு இருக்கிறது.
வயதில் மூத்த பெண்கள் பலரும் அறிவியல் அடிப்படை இல்லாமல் தங்களின் அனுபவத்தில் ஏற்பட்ட ஏராளமான விஷயங்களை கர்ப்பிணி பெண்களிடம் சொல்வதால்தான், கர்ப்ப காலத்தின்போது கர்ப்பிணி பெண்கள் பல விஷயங்களையும் தவறாக புரிந்து கொள்கிறார்கள். இது அவர்களுக்கு தவறான வழிகாட்டுதலாக அமைகிறது. இதைப்பற்றி இன்னும் சில சுவையான விஷயங்களை பார்க்கலாம். ஏனென்றால் இதெல்லாம் கர்ப்பிணிகள் அனைவரும் தெரிந்து கொள்ளக்கூடிய முக்கியமான விஷயங்கள் ஆகும்.
பொதுவாகவே கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு மனதில் பலவிதமான குழப்பங்கள் இருக்கும். வயிற்றில் இருக்கும் குழந்தையை தான் கவனிப்பதற்கு கடைபிடிக்கும் விஷயங்கள் சரியா? தவறா? கருவில் இருக்கும் குழந்தை ஆரோக்கியமாக வளர என்ன செய்ய வேண்டும்? அதை எப்படி பாதுகாப்பாக பார்க்க வேண்டும்? அதற்காக என்ன சாப்பிட வேண்டும் என்று பலவிதமான சந்தேகங்களும், எதிர்பார்ப்புகளும் இருக்கும்.
பல நேரங்களில் இதுபோன்ற விஷயங்களால் கர்ப்பிணி பெண்களின் மனதில் பெரிய அளவிலான அழுத்தங்களும் ஏற்படும். மேலும் கர்ப்ப காலத்தின்போது அவ்வப்போது எதிர்கொள்ளும் அல்லது உணரும் விஷயங்களால் ஒவ்வொரு நாளுமே கர்ப்பிணிகளுக்கு நிறைய சந்தேகங்கள் இருந்து கொண்டே இருக்கும்.
ஆனால் இதை யாரிடம் போய் கேட்பது என்று தான் அவர்களுக்கு தெரியாது. ஏனென்றால் எல்லாம் அறிந்தவர்கள் என்று நிறைய பேர் சொல்வதையெல்லாம் அவர்கள் சரி என்று நினைப்பார்கள். ஆனால் சில நேரங்களில் அதில் அறிவியல் அடிப்படை என்பது இருக்காது. இதனால் அவர்கள் சொல்வது சில நேரங்களில் தவறாக அமையும். இந்த வகையில் கர்ப்ப காலத்தை பற்றி பலவிதமான தவறான தகவல்கள் இன்றைக்கு உலா வந்து கொண்டுதான் இருக்கிறது.
கர்ப்பிணி பெண்கள் பப்பாளி பழம் சாப்பிடலாமா?
இதில் உணவு விஷயத்தில் கர்ப்பிணிகள் நிறைய பேருக்கு பலவிதமான சந்தேகங்கள் ஏற்படுகிறது. கர்ப்பமாக இருக்கும் பெண்கள் உணவு விஷயத்தில் முதலில் என்னிடம் கேட்பது, 'டாக்டர்... கர்ப்பிணி பெண்கள் பப்பாளி சாப்பிடலாமா? பப்பாளி சாப்பிடக்கூடாது என்று பலரும் சொன்னார்கள். ஆனால் நான் அது தெரியாமல் பப்பாளி சாப்பிட்டு விட்டேன், எனக்கு கருச்சிதைவு ஏற்படுமா?' என்று கேட்பார்கள்.
அவர்களுக்கு நான் சொல்லும் பதில், கர்ப்பிணி பெண்கள் பப்பாளி பழம் சாப்பிடலாம். அதில் எந்த தவறும் இல்லை. பப்பாளி பழத்தில் உள்ள போலிக் அமிலம் குழந்தையின் நரம்பு வளர்ச்சிக்கு மிகவும் அவசியம். அதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் கர்ப்ப காலத்தில் நன்மை பயக்கும்.
ஆனால் அதில் ஒரே ஒரு விஷயம், பப்பாளி காயாக இருக்கும்போது கர்ப்பிணி பெண்கள் சாப்பிடக்கூடாது. அதேபோல் பாதி பழுத்த பப்பாளியையும் அவர்கள் சாப்பிடக்கூடாது. ஏனென்றால் பப்பாளி காயாக இருக்கும்போது அதில் உள்ள லேடெக்ஸ் எனப்படும் பொருள் பல நேரங்களில் கர்ப்பிணிகளுக்கு வயிற்று வலியை உண்டாக்கலாம்.
அது மென்மையான தசைகளை சுருங்கச் செய்யக்கூடிய தன்மை கொண்டது. இதனால் கர்ப்பப்பையில் எரிச்சலை ஏற்படுத்தலாம். அதனால் வயிற்றுவலி ஏற்படலாம். மேலும் கருப்பையை சுருங்க வைத்து சில நேரங்களில் கருச்சிதைவையும் ஏற்படுத்தலாம். இதுவே நன்றாக பழுத்த பப்பாளியில் இந்த பொருள் எதுவுமே இருப்பதில்லை. எனவே பப்பாளி பழமாக இருக்கும்போது கர்ப்பிணிகள் சாப்பிடலாம்.
இதேபோல் சிலர் அன்னாசிப்பழம் சாப்பிட்டால் கருச்சிதைவு ஏற்படும் என்று சொல்வார்கள். ஆனால் அன்னாசிப்பழம் எந்த வகையிலும் கருச்சிதைவை உருவாக்குவதில்லை. இதெல்லாம் தவறான கருத்துக்கள். ஆனால் கர்ப்பிணிகள் அன்னாசிப்பழத்தை மிதமான அளவிலேயே சாப்பிட வேண்டும்.
பல நேரங்களில் 'பேரிச்சம்பழம் சாப்பிட்டால் குழந்தை கருப்பாக இருக்கும் என்று சொல்கிறார்களே டாக்டர்' என்பார்கள். அதுவும் தவறுதான். பேரிச்சம்பழத்தில் இரும்பு சத்து இருக்கிறது, புரோட்டீன் இருக்கிறது, நிறைய நுண் ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது. இவை அனைத்தும் ஒரு குழந்தையின் வளர்ச்சிக்கு தேவை. இதெல்லாம் அவர்கள் உட்கொள்கின்ற உணவுப் பழக்க வழக்க முறைகளில் தவறான கருத்துக்களாக சொல்லப்படுகின்றன. எனவே கர்ப்பிணி பெண்கள் இதில் தெளிவு பெற வேண்டும்.

டாக்டர் ஜெயராணி காமராஜ், குழந்தையின்மை சிகிச்சை நிபுணர், செல்: 72999 74701
கர்ப்பிணிகளுக்கு வாந்தி அதிகம் ஏற்பட்டால் பெண் குழந்தை பிறக்குமா?
மேலும் பெண்கள் கர்ப்பகாலத்தில் எதிர்நோக்குகின்ற பலவிதமான பிரச்சினைகளுக்கும் ஏதாவது அறிவியல் அடிப்படை இருக்கிறதா என்பதை பார்க்கலாம். பொதுவாக கர்ப்பிணி பெண்கள் பலரும் வாந்தி எடுப்பது வழக்கம். ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும்போது அதிகாலையில், அதிக அளவில் வாந்தி எடுத்தால் அது பெண் குழந்தை என்று பலரும் கர்ப்பிணிகளிடம் சொல்கிறார்கள்.
கருவில் இருக்கும் குழந்தை பெண் குழந்தையாக இருந்தால் தான் நிறைய வாந்தி வரும். அதிகமாக வாந்தி எடுத்துக்கொண்டே இருந்தால் அது பெண் குழந்தைகள் தான் என்று பலரும் சொல்லி விடுவார்கள். இது சரியா தவறா என்று பார்த்தால், இதுபற்றி கடந்த 2014-ம் ஆண்டு ஒரு ஆய்வு செய்தார்கள். அந்த ஆய்வில் கருவில் பெண் குழந்தையை சுமக்கின்ற பெண்களுக்கு, சற்று அதிகமாக வாந்தி வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்று தெரிவித்தார்கள்.
அதற்காக ஆண் குழந்தையை சுமக்கும் பெண்களுக்கு வாந்தி வராது என்பது அர்த்தமல்ல. பொதுவாக பெண் குழந்தையை சுமந்தால் அதிகமாக வாந்தி வருகிறது என்பதை இந்த ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர். 2 ஆயிரம் கர்ப்பிணி பெண்களிடம் ஆராய்ச்சி செய்து இதை கண்டுபிடித்து அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.
மேலும் கிரகணம் தொடர்பாக கர்ப்பிணிகள் எல்லோருமே சில கேள்விகளை கேட்கிறார்கள். 'டாக்டர்... சூரிய கிரகணம், சந்திர கிரகணத்தின்போது கர்ப்பிணிகள் பலரும் பரிசோதனைக்கு வருவதில்லை. சூரிய கிரகணத்தின்போது பிரசவத்துக்கு கூட கர்ப்பிணிகள் பெரும்பாலும் வெளியே வருவதில்லையே ஏன்?' என்பார்கள்.
கர்ப்பமாக இருப்பதற்கும், சந்திர கிரகணம் மற்றும் சூரிய கிரகணத்திற்கும் ஏதாவது அறிவியல் ரீதியான அடிப்படை இருக்கிறதா என்பதை பார்த்தால், இன்றும் பலவிதமான விஞ்ஞான முறைகளில் ஆய்வு செய்த வரைக்கும், சூரிய கிரகணத்தினாலோ அல்லது சந்திர கிரகணத்தினாலோ எந்த விதமான பாதிப்பும் கர்ப்பத்துக்கு ஏற்பட்டது இல்லை, கர்ப்பிணிகளுக்கும் ஏற்பட்டது கிடையாது.
கிரகணத்தின்போது கர்ப்பிணி பெண்கள் வெளியே வருவது, அதனால் கர்ப்பம் பாதிக்கப்படுவது என்பது தவறான கண்ணோட்டம் தான். இதற்கு எந்த விதமான விஞ்ஞான ரீதியான அடிப்படையும் இல்லை. இதை நினைத்து யாரும் பயப்பட வேண்டியதில்லை.
என்னிடம் சிகிச்சைக்கு வந்த ஒரு கர்ப்பிணி பெண், 'டாக்டர்... கிரகணத்தை கவனிக்காமல் நான் சிகிச்சைக்கு வந்து விட்டேன். எனது குழந்தைக்கு ஏதாவது ஆகிவிடுமோ?' என்று கேட்டார். கிரகணம் பற்றிய அவர்களின் பய உணர்வு தான் பிரச்சினைகளை உருவாக்கும். சூரிய கிரகணமும், சந்திர கிரகணமும் கர்ப்பத்துக்கு கண்டிப்பாக எந்தவித பாதிப்பையும் உருவாக்காது.

கர்ப்பிணி பெண்கள் 'ஹேர் டை' பயன்படுத்தலாமா?
தற்காலத்தில் பெண்கள் கேட்கிற ஒரு முக்கியமான விஷயம், 'டாக்டர்... நான் கர்ப்பமாக இருக்கும்போது 'ஹேர் டை' பயன்படுத்தலாமா?' என்பார்கள். குறிப்பாக வயது அதிகமாக இருக்கும் பெண்கள் கர்ப்பமான பிறகு எங்களிடம் பரிசோதனைக்கு வருவார்கள். அவர்கள் கர்ப்ப காலத்தின்போது 'ஹேர் டை' போடுவதில்லை, ஆனால் ஹேர் டை போடலாமா என்று கேட்கிறார்கள்.
அவர்களின் குடும்பத்தில் உள்ளவர்கள், அந்த கர்ப்பிணிகளிடம், 'நீ ஹேர் டை போடக்கூடாது, ஹேர் டை போட்டால் குழந்தைக்கு பிரச்சினை வரும், குழந்தை வயிற்றிலே இறந்துவிடும் அல்லது குழந்தை குறைபாடுகளுடன் பிறக்கும்' என்று பயமுறுத்துகிறார்கள். இது சரியா, தவறா என்று பார்த்தால், பல ஹேர் டைகளில் இருக்கிற சில ரசாயனங்கள் சில நேரங்களில் கர்ப்பிணி பெண்களின் உடலில் சேரலாம். அவை ரத்தத்தில் கலந்தால் சில நேரங்களில் குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்.
அந்த வகையில் ஒரு பெண் கர்ப்பம் அடைந்தவுடன் முதல் 3 மாதங்களுக்கு 'ஹேர் டை' பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. அதன்பிறகு அவர்கள் 'ஹேர் டை' போடுவதால் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படுவது குறைவாகிறது. எனவே கர்ப்ப காலத்தில் 'ஹேர் டை' பயன்படுத்துவது என்பது தவறு என்கிற கருத்து கிடையாது. கர்ப்பிணிகள் 3 மாதங்களுக்கு பிறகு கண்டிப்பாக 'ஹேர் டை' போடலாம்.
கர்ப்பிணிகளுக்கு இதுபோல இன்னும் பல விஷயங்களில் ஏராளமான சந்தேகங்கள் இருக்கிறது. அதாவது, உடற்பயிற்சி செய்யலாமா? 2 மடங்கு சாப்பிட வேண்டுமா? அடிக்கடி வரும் வயிற்றுவலி, எப்படி படுத்து தூங்க வேண்டும்? தாம்பத்திய உறவு கொள்ளலாமா? காபி குடிக்கலாமா என்பது போன்ற சந்தேகங்கள் ஏற்படுகிறது. அந்த சந்தேகங்களுக்கான விளக்கங்களை அடுத்த வாரம் பார்க்கலாம்.
- கிட்டத்தட்ட 160 அடிக்கு மேலாக பெரும் பள்ளம் ஏற்பட்டது.
- பள்ளத்தில் வாகனங்கள் மட்டுமில்லாமல் மின் கம்பங்களும் சாய்ந்து விழுந்தன.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள சாலையில் திடீரென ஏற்பட்ட பெரிய பள்ளத்தில் கார்கள் விழுந்தது நொறுங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விபத்து தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கிட்டத்தட்ட 160 அடிக்கு மேலாக பெரும் பள்ளம் ஏற்பட்டது. இந்த பள்ளத்தில் வாகனங்கள் மட்டுமில்லாமல் மின் கம்பங்களும் சாய்ந்து விழுந்தன. ஆனால் நல்வாய்ப்பாக இந்த விபத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.
விபத்து நடந்த இடத்தில் மீட்புப்பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. சாலைக்கு அடியில் இருந்த சுத்திகரிப்பு குழாய்கள் வெடித்ததால் இந்த பெரும் பள்ளம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
- தான் அதிபராக பதவி ஏற்ற பிறகு 7 போர்களை நிறுத்தி உள்ளேன் என்றார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.
- இந்தியா-பாகிஸ்தான் சண்டையும் என்னால் தான் தீர்க்கப்பட்டது என தொடர்ந்து சொல்லி வருகிறார்.
பாரிஸ்:
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தான் அதிபராக பதவி ஏற்ற பிறகு 7 போர்களை நிறுத்தி உள்ளேன். இந்தியா-பாகிஸ்தான் சண்டையும் என்னால் தான் தீர்க்கப்பட்டது என தொடர்ந்து சொல்லி வருகிறார். நேற்று நடந்த ஐ.நா.சபை கூட்டத்திலும் அவர் இதே கருத்தை வலியுறுத்தினார். ஆனால் இந்தியா இதனை நிராகரித்துள்ளது.
இதற்கிடையே, 7 போர்களை நிறுத்திய தனக்கு நோபல் பரிசு வழங்கவேண்டும் என அதிபர் டிரம்ப் தனது ஆசையை வெளிப்படுத்தி உள்ளார்.
இந்நிலையில், பிரான்சு அதிபர் இமானுவேல் மேக்ரான் கூறியதாவது:
காசா போரை முடிவுக்கு கொண்டு வந்தால் மட்டுமே டிரம்ப் அமைதிக்கான நோபல் பரிசை வெல்ல முடியும்.
இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்கும் அதிகாரம் அமெரிக்காவுக்கு மட்டுமே உள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் ஏதாவது செய்யக்கூடிய நபராக டிரம்ப் இருக்கிறார்.
காசாவில் இஸ்ரேல் அரசு தனது ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த அமெரிக்கா அழுத்தம் கொடுக்க வேண்டும்.
அமெரிக்கா இஸ்ரேல் மீது அதிக செல்வாக்கைக் கொண்டுள்ளது.
காசா மோதலை நடத்த அனுமதிக்கும் ஆயுதங்களை இஸ்ரேலுக்கு நாங்கள் வழங்குவதில்லை.
நாங்கள் ஒருபோதும் செயலற்றவர்களாக இருக்கமாட்டோம். எப்போதும் பிரான்சின் நலன்களைப் பாதுகாப்போம் என தெரிவித்தார்.
- படிப்புதான் நமக்கு கடைசி வரை துணை நிற்கும்.
- கவர்ச்சியான சொற்களை சொல்லி பின்னுக்கு இழுத்துக் கொண்டு போகக் கூடிய ஒரு சூழ்நிலையை சிலர் ஏற்படுத்தி கொண்டிருக்கிறார்கள்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் மாணவ-மாணவிகளுக்கு மடிக்கணினி, தையல் எந்திரம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
கொளத்தூர் தொகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு விட்டு அனிதா அச்சீவர்ஸ் நிகழ்ச்சிக்கு வந்தவுடன் என்னுடைய களைப்பெல்லாம் போய் உற்சாகம் வரக்கூடிய நிகழ்ச்சியாக அமைந்து உள்ளது.
உங்கள் முகத்தில் தோன்றக் கூடிய மகிழ்ச்சியை பார்க்கும்போது இன்னும் நான் என்னுடைய கடமையை வேகமாக நிறைவேற்றிட வேண்டும்.

இங்கே கூட அனிதா அச்சீவர்ஸ் மூலம் பலன் பெற்றிருக்கக்கூடிய 2 சகோதரிகள் பேசுகிறபோது குறிப்பிட்டு சொன்னார்கள்.
இன்னும் செய்ய வேண்டும். மாணவர்களாகிய நாங்கள் எதிர்பார்க்கக்கூடிய பணிகளை நீங்கள் நிறைவேற்றி கொண்டிருக்கிறீர்கள். இருந்தாலும் நீங்கள் இன்னும் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதனால் நிச்சயமாக உறுதியாக சொல்கிறேன். என்னுடைய உடலில் உயிர் இருக்கிற வரையிலே, தலைவர் கலைஞர் கற்றுத் தந்திருக்கக் கூடிய அந்த உழைப்பு எனது உதிரத்திலே இருக்கிற வரையில் நிச்சயமாக, உறுதியாக, நான் என்னுடைய கடமையை நிறைவேற்றுவேன். நீங்கள் யாரும் கவலைப்பட வேண்டாம்.
என்னமோ தெரியவில்லை. கொளத்தூர் தொகுதிக்கு வந்துவிட்டால் இப்படியெல்லாம் பேசத் தோன்றுகிறது.
1860 பேருக்கு கண்ணாடி வழங்கி அதிலும் 2 ஆண்டுகளுக்கு முன்னால் தொடங்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு கண் மருத்துவமனையில் தொடர்ந்து வழங்கி இன்றுடன் சேர்த்து 9,123 பேருக்கு கண் கண்ணாடி வழங்கப்பட்டு உள்ளது.
அதே போல் இந்த நிகழ்ச்சியை பொறுத்தவரை 126 மாணவ-மாணவிகளுக்கு லேப்-டாப், 356 பெண்களுக்கு தையல் எந்திரங்களும் வழங்கி இருக்கிறோம்.
உங்களுக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புவது இந்த அகாடமியில் நீங்கள் பெற்றிருக்க கூடிய பயிற்சி ஒரு சிறிய துவக்கம் தான்.
இந்த பயிற்சி உங்களுக்கான வாய்ப்புகளை அடையாளம் காட்டக்கூடிய, ஆனால் அதே பாதையில் வெற்றி நடை போட வேண்டும் என்றால், அதை தொடர்ந்து கற்றுக் கொள்ளக்கூடிய ஆர்வம் குறைந்து விடக் கூடாது.
இன்றைக்கு தகவல் தொழில் நுட்பம் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. மனிதர்களின் வேலைச் சுமையை இந்த வளர்ச்சி வெகுவாக குறைத்து வருகிறது. அதற்கேற்ற மாதிரி நீங்களும் 'அப்-டேட்' ஆகி வர வேண்டும். அதுதான் என்னுடைய விருப்பம்.
இன்றைக்கு இணையம் முழுக்க அறிவுத் தகவல் கொட்டிக் கிடக்கிறது. நல்ல பயனுள்ள தகவல்களை பார்த்து அந்த திறமையை மேலும் மேலும் நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
நிறைய ஆன்லைன் படிப்பு இருக்கிறது. எது உங்களுக்கு வசதியாக இருக்குமோ அதை தேடி படிக்க வேண்டிய, பயிற்சி பெற வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறது.
படித்து விட்டோம். வேலை கிடைத்து விடும் என்று அலட்சியமாக இருந்து விடாதீர்கள். அஞ்சல் வழியில் மேற்படிப்பை தொடருங்கள். படிப்புதான் நமக்கு கடைசி வரை துணை நிற்கும்.
அதுதான் உங்கள் வாழ்க்கையில் உறுதுணையாக இருக்கும். கல்விக்கு இடைஞ்சல் ஏற்படுத்தக்கூடிய, கல்வியினால் பெறப்படும் அறிவை கொச்சைப்படுத்த பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது எண்ணம் நீங்கள் முன்னேற வேண்டும் என்பது கிடையாது. கவர்ச்சியான சொற்களை சொல்லி பின்னுக்கு இழுத்துக் கொண்டு போகக் கூடிய ஒரு சூழ்நிலையை சிலர் ஏற்படுத்தி கொண்டிருக்கிறார்கள்.
எனவே எதிர்காலத்திற்கு என்ன தேவையோ அதை இந்த அரசு செய்யும். உங்களுக்கு திராவிட மாடல் அரசு இருக்கிறது என்பதை நீங்கள் மறந்து விட வேண்டாம்.
அதனால்தான் தமிழ்நாடு முழுவதும் இன்று உறுதிமொழி எடுத்துக் கொண்டு இருக்கிறோம். தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டோம் என்பது நமது ஒற்றுமையை காட்டுகிறது.
எனவே தமிழ்நாட்டின் அடுத்த வளர்ச்சிக்கு அடித்தளமாக இந்த கல்வி நிச்சயமாக இருக்கிறது. எனவே உங்கள் இல்லத்தில் நீங்கள் முன்னேற்றம் காண வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- உலக பணக்காரர்களில் முதல் இடத்தில உள்ளவர் எலான் மஸ்க்.
- எலான் மஸ்க்கிற்கும் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கும் இடையே வார்த்தை மோதல் நடைபெற்றது.
உலக பணக்காரர்களில் முதல் இடத்தில உள்ளவர் எலான் மஸ்க். இவர் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்களையும் மற்றும் எக்ஸ் வலைத்தளத்தையும் நடத்தி வருகிறார்.
அண்மையில் எலான் மஸ்க்கிற்கும் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கும் இடையே நடந்த வார்த்தை மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், எலான் மஸ்க்கின் தந்தை எரால் மஸ்க் (79) மீது ஐந்து குழந்தைகள் மற்றும் வளர்ப்பு குழந்தைகள் சிலருக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்ததுடன், அவை முட்டாள்தனமானவை, ஆதாரமற்றமவை,போலி என்று எரால் மஸ்க் தெரிவித்துள்ளார்.






