என் மலர்
தலைப்புச்செய்திகள்
- சாலை பாதுகாப்பு விதிகளை மேம்படுத்தக் கோரி 2012-ல் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
- இந்த வழக்கின் மீதான விசாரணை 13 ஆண்டாக நிலுவையில் இருந்தது.
புதுடெல்லி:
சாலை பாதுகாப்பு விதிகளை மேம்படுத்தக் கோரி கோவையைச் சேர்ந்த டாக்டர் ஒருவர் கடந்த 2012-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கின் விசாரனை கடந்த 13 ஆண்டுகளாக நடந்து வந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சாலை விபத்துகளைக் குறைக்க புதிய பாதுகாப்பு விதிகளை 6 மாதங்களில் உருவாக்க வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
13 ஆண்டாக நிலுவையில் இருந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது குற்ப்பிடத்தக்கது.
- கடந்த ஜூன் மாதம் 6.3 சதவீதமாக இருக்கும் என கணித்திருந்தது.
- தற்போது 6.5 சதவீதமாக அதிகரிக்கும் எனக் குறிப்பிட்டுள்ளது.
2026 நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 6.3 சதவீதமாக இருக்கும் என கடந்த ஜூன் மாதம் உலக வங்கி கணித்திருந்தது. தற்போது 6.5 சதவீதமாக இருக்கும் எனக் கணித்துள்ளது.
உலகின் மிகவும் வேமாக வளர்ந்து வரும் முக்கியமான பொருளாதார நாடாக இந்தியா தொடர்ந்து இருப்பதாக தெரிவித்துள்ளது. வலுவான நுகர்வோர் வளர்ச்சி, மேம்பட்ட வேளாண்மை உற்பத்தி, கிராமப்புற ஊதிய வளர்ச்சி ஆகியவை இதற்கு முக்கிய காரணம் என உலக வங்கி தெரிவித்துள்ளது.
வங்கதேசத்தின் வளர்ச்சி 4.8 சதவீதமாகவும், பூடானின் வளர்ச்சி 7.3 சதவீதமாகவும், மாலத்தீவின் வளர்ச்சி 3.9 சதவீதமாகவும், நேபாளத்தின் வளர்ச்சி 2.1 சதவீதமாகவும் இருக்கும் என கணித்துள்ளது.
- அமெரிக்காவை சேர்ந்த 3 பேருக்கு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
- குவாண்டம் கணினிக்கான சிப் தொடர்பான கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது
2025ம் ஆண்டு நோபல் பரிசுக்கான அறிவிப்புகள் வெளியானது. இதில், முதலில் மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்காவை சேர்ந்த மேரி இ பிரன்கோவ், ஃபிரெட் ராம்ஸ்டெல், ஜப்பானை சேர்ந்த ஷிமோன் சகாகுச்சி ஆகிய 3 பேருக்கு மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று 2025ம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது..
அதன்படி, அமெரிக்காவை சேர்ந்த ஜான் கிளார்க், மைக்கேல் எச். டெவோரெட், ஜான் எம். மார்டினிஸ் ஆகிய 3 பேருக்கு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
குவாண்டம் கணினிக்கான சிப் தொடர்பான கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு 3 பேருக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது.
- அரோரா சின்கிளேரை இன்ஸ்டாகிராமில் 1892 பேர் ரூ.390 பணம் செலுத்தி சப்ஸ்கிரைப் செய்துள்ளனர்.
- இவர்களுக்கு மட்டும் பிரத்யேகமான புகைப்படம் வீடியோக்களை அரோரா வெளியிட்டு வந்துள்ளார்.
நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 9 அக்டோபர் 5 ஆம் தேதி அன்று தொடங்கியது. முதல் நாளில் போட்டியாளர்களின் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.
போட்டியாளர்கள் அறிமுக நிகழ்ச்சியில் ஒவ்வொருவரையாக விஜய் சேதுபதி அழைத்து அறிமுகம் செய்து பிரம்மாண்ட வீட்டிற்குள் அனுப்பி வைத்தார்.
இதில், இன்ஸ்டா பிரபலமான அரோரா சின்கிளேர் போட்டியாளராக களமிறங்கியுள்ளார். 'பலூன் அக்கா' என்று நெட்டிசன்களால் அழைக்கப்படும் அரோராவை இன்ஸ்டாகிராமில் 7.5 லட்சத்திற்கும் மேல் பின்தொடர்கின்றனர்.
இந்நிலையில், அரோரா சின்கிளேரை இன்ஸ்டாகிராமில் 1892 பேர் ரூ.390 பணம் செலுத்தி சப்ஸ்கிரைப் செய்துள்ளனர். இவர்களுக்கு மட்டும் பிரத்யேகமான புகைப்படம் வீடியோக்களை அரோரா சின்கிளேர் வெளியிட்டு வந்துள்ளார். இதன்மூலம் அவருக்கு ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட 7 லட்சம் வருமானம் கிடைத்து வந்தது.
இந்நிலையில், அரோரா பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றதால் அவர் அந்த நிகழ்ச்சியை விட்டு வெளியே வரும் வரை அவரது இன்ஸ்டா கணக்கில் இருந்து எதுவும் பதிவிடப்படாது. இதனால் ரூ.390 பணம் போச்சா என்று அரோராவை சப்ஸ்கிரைப் செய்தவர்களை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
- மோடி குஜராத் மாநில முதல்வராக பதவி ஏற்று 24 வருடங்கள் நிறைவடைந்துள்ளது.
- 2014 முதல் பிரதமராக இருந்து வருகிறார்.
இந்திய பிரதமர் மோடி கடந்த 24ஆம் ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் குஜராத் மாநில முதல்வராக பதவி ஏற்றார். அதில் இருந்து தற்போது வரை சுமார் 24 ஆண்டுகள் மக்களுக்கான சேவையாற்றி வருகிறார்.
24 ஆண்டுகளாக முதல்வர் மற்றும் பிரதமர் பதவியில் இருந்து கொண்டு நாட்டுக்கு மக்களுக்கு சேவையாற்றி வருவதை உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில் "முதலில் நாடு என்பது தொலைநோக்குப் பார்வையாகவும், வளர்ந்த இந்தியா என்பது நோக்கமாகவும் இருக்கும்போது, கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் தலைமைத்துவம் எவ்வாறு மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்பதை பிரதமர் மோடி நிரூபித்துள்ளார்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டிற்கும், பொது சேவைக்கும் 24 வருடங்களை அர்ப்பணித்துள்ளார். மக்கள் பிரச்சனைகளை தனது பிரச்சனைகளாக கருதி அவற்றை தீர்த்து வைத்து, சுயநலமின்றி உழைத்து வரும் பிரதமர் மோடி, முதல்வராக பதவி ஏற்ற இந்த நாள் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும்" எனத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி கடந்த 2014ஆம் ஆண்டு இந்திய பிரதமாக பதவி ஏற்றார். அதில் இருந்து 3ஆவது முறையாக பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதிக நாட்கள் பிரதமராக இருந்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
பிரதமராக பதவி ஏற்பதற்கு முன்னதாக, 12 1/2 வருடங்கள் குஜராத் மாநில முதல்வராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஏ.சி. மின்சார ரெயில் இயக்கப்படும் கால அட்டவணையும் பயணிகள் கூட்டம் இல்லாததற்கு காரணம் என்று குற்றச்சாட்டுகின்றனர்.
- அதிக கட்டணம் வசூலிப்பதால் பயணிகள் ஏ.சி. ரெயிலை புறக்கணித்து வருவதாக கூறப்படுகிறது.
சென்னை:
தெற்கு ரெயில்வே மூலம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சென்னையில் ஏ.சி. மின்சார ரெயில் இயக்கப்பட்டது. கடற்கரை- தாம்பரம், செங்கல்பட்டு வழித்தடத்தில் இந்த ரெயில் தற்போது இயக்கப்படுகிறது.
தினமும் 8 சேவைகள் இருந்த நிலையில் மே மாதத்தில் 10 சேவைகளாக அதிகரிக்கப்பட்டன.
12 பெட்டிகளை கொண்ட ஏ.சி. ரெயிலில் உட்கார்ந்தும் நின்று கொண்டும் மொத்தம் 4,914 பயணிகள் பயணம் செய்ய முடியும். 8 சேவைகள் அடிப்படையில் 100 சதவீத பயன்பாட்டில் 39,312 பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும். 50 சதவீத பயன்பாடாக இருந்தால் 19,656 பேர் செல்ல வேண்டும். 25 சதவீத பயன்பாட்டில் 9828 பேர் பயணிக்க வேண்டும்.
ஆனால் 2,800 பேர் மட்டுமே தினமும் பயணம் செய்துள்ளனர். இது ரெயிலின் மொத்த பயன்பாட்டில் 10 சதவீதம் கூட எட்டவில்லை.
ஏ.சி. மின்சார ரெயிலில் எதிர்பார்த்த கூட்டமும் இல்லை. காலியாகவே ஓடுகின்றன. இதற்கு முக்கிய காரணம் கட்டணம் அதிகமாகும். மேலும் மெட்ரோ ரெயில் சேவையின் பயன்பாடு அதிகரித்து வருவதும் ஒரு முக்கிய காரணமாகும் என்று பயணிகள் தெரிவிக்கின்றனர். இது தவிர ஏ.சி. மின்சார ரெயில் இயக்கப்படும் கால அட்டவணையும் பயணிகள் கூட்டம் இல்லாததற்கு காரணம் என்று குற்றச்சாட்டுகின்றனர்.
காலை மற்றும் மாலை நெரிசல் மிகுந்த வேளையில் ஏ.சி. ரெயில் சரியான நேரத்தில் இயக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. நெரிசல் மிகுந்த கடற்கரை-தாம்பரம்- செங்கல்பட்டு வழித்தடத்தில் அதிக பயணிகளை ஈர்க்கும் திறன் இருந்த போதிலும் மோசமான நிலையே காணப்படுகிறது. ஏ.சி. மின்சார ரெயிலில் 1-5 கி.மீ. ரூ.35-ம், 11-15 கி.மீ.க்கு ரூ.40-ம், 16-25 கி.மீ. ரூ.60-ம், 26-40 கி.மீ.க்கு ரூ.85-ம், 56-60 கி.மீ.க்கு ரூ.105-ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதிக கட்டணம் வசூலிப்பதால் பயணிகள் ஏ.சி. ரெயிலை புறக்கணித்து வருவதாக கூறப்படுகிறது. கட்டணத்தை குறைக்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? தற்போது உள்ள குளறுபடிகளை சரி செய்தால் தான் புறநகர் பயணிகளை கவர முடியும்.
இனி மழைக்காலம் என்பதால் பொதுவாக ஏ.சி. ரெயில் பயணம் குறையும். அவற்றையெல்லாம் கருதி கட்டணத்தை குறைக்க பரிசீலிக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்துகின்றனர்.
- மொத்தம் 31 நடிகர்கள் இந்த ஒன்றுகூடலில் கலந்து கொண்டனர்.
- இந்த ஒன்றுகூடல் 3 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் நடைபெற்றது.
1980களில் தென்னிந்திய சினிமாவில் முன்னனி நட்சத்திரங்களாக திகழ்ந்த நடிகர், நடிகைகள் சந்தித்து கொண்டு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
2024 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டிருந்த இந்த சந்திப்பு, சென்னை வெள்ளம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு தற்போது நடத்தப்பட்டது.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் இந்தி திரைப்படத் துறையைச் சேர்ந்த மொத்தம் 31 நடிகர்கள் இந்த ஒன்றுகூடலில் கலந்து கொண்டனர்.
இதில், தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, பிரபு, சரத்குமார், பாக்யராஜ் உள்ளிட்ட நடிகர்களும் குஷ்பு, ராதா, நதியா, ரேவதி , சுஹாசினி, ரம்யா கிருஷ்ணன், மீனா உள்ளிட்ட நடிகைகளும் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், இந்த ஒன்றுகூடல் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
- ஹோண்டா ADV 350 மாடல் 330 சிசி SOHC 4-வால்வுகள் கொண்ட எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது.
- பிரேக்கிங்கிற்கு முன்பக்கத்தில் 256mm டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 240mm டிஸ்க் வழங்கப்பட்டுள்ளது.
ஹோண்டா நிறுவனம் ADV 350-இன் புதிய மாடலை ஐரோப்பாவில் வெளியிட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் முதன்முதலில் 2022 ஆம் ஆண்டு ஐரோப்பிய சந்தைக்கு வந்தது. புதிய அப்டேட் செய்த பிறகும் இந்த மாடலின் இயந்திர மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் அப்படியே உள்ளன. இருப்பினும், ADV 350 இப்போது மூன்று புதிய வண்ணங்கள் மற்றும் புதுப்பிக்கப்பட்ட கிராபிக்ஸ் உடன் வருகிறது.
ஹோண்டா ADV 350 மாடல் 330 சிசி SOHC 4-வால்வுகள் கொண்ட எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இது 30 hp பவர் மற்றும் 31.5 Nm நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த ஸ்கூட்டரின் பவர் யூனிட் ஒரு அண்டர்போன் சேஸிக்குள் அமர்ந்திருக்கிறது. இது USD முன்பக்க ஃபோர்க்குகள் மற்றும் டூயல் ஷாக் அப்சார்பர்களை கொண்டிருக்கிறது.

பிரேக்கிங்கிற்கு முன்பக்கத்தில் 256mm டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 240mm டிஸ்க் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் முன்புறத்தில் 15-இன்ச் சக்கரம் பின்புறம் 14-இன்ச் சக்கரத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. மேக்ஸி ஸ்கூட்டரில் 11.7 லிட்டர் ஃபியூவல் டேன்க் உள்ளது.
அப்டேட் செய்யப்பட்ட ஹோண்டா ADV 350 பிரீ-லோடு அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஸ்பிரிங்ஸ், ஹோண்டா ரோட்-சின்க் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டியுடன் 5-இன்ச் TFT ஸ்கிரீன், மற்றும் ஆட்டோ-கேன்சலிங் இண்டிகேட்டர்கள் போன்ற அம்சங்களைப் பெற்றுள்ளது.
- சிந்துபூந்துறை பகுதியில் தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலக்கப்படுவதை கண்டித்து அன்புமணி தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
- தாமிரபரணி ஆற்றை காப்பாற்ற முடியாமல் போனால் அது வெட்கக்கேடு.
நெல்லை சிந்துபூந்துறை பகுதியில் தாமிரபரணியில் கழிவுநீர் கலக்கும் பகுதியை பா.ம.க. தலைவர் அன்புமணி ஆய்வு செய்தார்.
சிந்துபூந்துறை பகுதியில் தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலக்கப்படுவதை கண்டித்து அன்புமணி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. மக்களுடனான கலந்துரையாடலுக்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில் நதிக்கரையில் அப்பகுதி பொதுமக்கள் இணைந்து போராட்டம் நடத்தினர்.
அப்போது அன்புமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
* தாமிரபரணி ஆற்றில் நாள்தோறும் 200 டன் திடக்கழிவுகள் கலக்கின்றன.
* நீதிபதிகள் நேரில் வந்து ஆய்வு செய்த போதிலும் இன்னும் அதே நிலை தொடர்கிறது.
* தாமிரபரணி ஆற்றை காப்பாற்ற முடியாமல் போனால் அது வெட்கக்கேடு.
* தாமிரபரணியை கூவம் ஆக்கி விடாதீர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஸ்மார்ட்போன் 6.78 இன்ச் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 பிராசஸர் கொண்டிருக்கும் என்பதை நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
- இந்த பிராசஸர் TSMC-இன் 3nm (N3P) செயல்முறையைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய 15 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில், சீன சந்தையில் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் அக்டோபர் மாதத்திலேயே அறிமுகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
விற்பனையில் சிறந்து விளங்கிய ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷனாக உருவாகி இருக்கும் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன், ஒன்பிளஸ் நிறுவனம் இதுவரை வெளியிட்ட மாடல்களில் மிகப்பெரிய பேட்டரி கொண்டிருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதனுடன், இந்த ஸ்மார்ட்போனில் வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் வழங்கப்படும் என்று தெரிகிறது.
புதிய ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் நவம்பர் 13ஆம் தேதி சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி இருந்தது. எனினும், இதுபற்றி ஒன்பிளஸ் தரப்பில் இதுவரை இந்த தகவல் உறுதிப்படுத்தவில்லை.
ஒன்பிளஸ் 15 பேட்டரி விவரங்கள்:
டிப்ஸ்டர் பால்ட் பாண்டா வெளியிட்டுள்ள தகவல்களின் படி , ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனில் 7,300mAh பேட்டரி வழங்கப்படும். இத்துடன் 120W வயர்டு சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த சாதனம் ரிவர்ஸ் சார்ஜிங்கை ஆதரிக்குமா, இல்லையா என்பது குறித்து எந்த விவரங்களும் வெளியாகவில்லை.
பேட்டரியைத் தவிர, வரவிருக்கும் ஒன்பிளஸ் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் பிற அம்சங்களையும் டிப்ஸ்டர் பகிர்ந்துள்ளார். அதில் இந்த ஸ்மார்ட்போன் 6.78 இன்ச் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 பிராசஸர் கொண்டிருக்கும் என்பதை நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த பிராசஸர் TSMC-இன் 3nm (N3P) செயல்முறையைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது.
ஒன்பிளஸ் போனில் உள்ள மிகப்பெரிய பேட்டரியைத் தவிர, இது முந்தைய தலைமுறைகளின் 120Hz பேனல்களிலிருந்து 165Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே கொண்டிருக்கும். மேம்படுத்தப்பட்ட டிஸ்ப்ளே தொழில்நுட்பம் போன்களில் கேம்களை விளையாடும்போது அதிக ஃபிரேம் வீதங்களை ஆதரிக்கும் என்று நிறுவனம் கூறுகிறது.
சீன சந்தையில் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 16 சார்ந்த கலர்ஓஎஸ் 16 உடன் வரும் என்றும், மற்ற சந்தைகளில் ஆக்சிஜன் ஓஎஸ் 16 உடன் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
- புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- கனமழை பெய்யும் போது 40 கி.மீ. வேகத்தில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தென்மேற்கு வங்கக்கடலில் தமிழக கடலோர பகுதிகளுக்கு அப்பால் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன்காரணமாக தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதன்படி, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, திருச்சி, சேலம், தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யலாம்.
நாளை நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருப்பதூர் மாவட்டங்களிலும், நாளை மறுநாள் திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மாவட்டங்களில் கனமழை பெய்யும் போது 40 கி.மீ. வேகத்தில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும். புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கரூர் விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கிறது.
- கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அரசியல் செய்கின்றன.
சென்னை:
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* விஜய் மீது எங்களுக்கு எந்த வன்மமும் இல்லை.
* விஜயை கைது செய்ய வேண்டும், சிறையிலடைக்க வேண்டும் என வலியுறுத்தவில்லை.
* கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு விஜய் தார்மீக பொறுப்பேற்க வேண்டும்.
* கரூரில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்.
* கரூர் விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கிறது.
* கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அரசியல் செய்கின்றன.
* விஜயை கையில் எடுக்க பா.ஜ.க. முயற்சிகளை மேற்கொள்கிறது.
* பொறுப்புடன் வந்த முதலமைச்சருக்கு விஜய் நன்றி தெரிவித்திருக்க வேண்டும்.
* சதிகார, சூழ்ச்சிகார அரசியல் சக்திகளிடம் சிக்கினால் அவர் இதுபோன்ற பல நெருக்கடிகளை சந்திக்க நேரும்.
* விஜய் சுதந்திரமாக சிந்தித்து செயல்பட வேண்டுமென்பது தான் என் வேண்டுகோள்.
* உச்சநீதிமன்றத்திலும் சனாதன சக்திகளின் கொட்டம் தலைவிரித்து ஆடுகிறது என்றார்.






