என் மலர்
இந்தியா

மக்களின் வாழ்க்கையில் தலைமைத்துவம் எவ்வாறு மாற்றத்தை கொண்டு வர முடியும் என்பதை பிரதமர் மோடி நிரூபித்துள்ளார்: அமித் ஷா
- மோடி குஜராத் மாநில முதல்வராக பதவி ஏற்று 24 வருடங்கள் நிறைவடைந்துள்ளது.
- 2014 முதல் பிரதமராக இருந்து வருகிறார்.
இந்திய பிரதமர் மோடி கடந்த 24ஆம் ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் குஜராத் மாநில முதல்வராக பதவி ஏற்றார். அதில் இருந்து தற்போது வரை சுமார் 24 ஆண்டுகள் மக்களுக்கான சேவையாற்றி வருகிறார்.
24 ஆண்டுகளாக முதல்வர் மற்றும் பிரதமர் பதவியில் இருந்து கொண்டு நாட்டுக்கு மக்களுக்கு சேவையாற்றி வருவதை உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில் "முதலில் நாடு என்பது தொலைநோக்குப் பார்வையாகவும், வளர்ந்த இந்தியா என்பது நோக்கமாகவும் இருக்கும்போது, கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் தலைமைத்துவம் எவ்வாறு மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்பதை பிரதமர் மோடி நிரூபித்துள்ளார்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டிற்கும், பொது சேவைக்கும் 24 வருடங்களை அர்ப்பணித்துள்ளார். மக்கள் பிரச்சனைகளை தனது பிரச்சனைகளாக கருதி அவற்றை தீர்த்து வைத்து, சுயநலமின்றி உழைத்து வரும் பிரதமர் மோடி, முதல்வராக பதவி ஏற்ற இந்த நாள் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும்" எனத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி கடந்த 2014ஆம் ஆண்டு இந்திய பிரதமாக பதவி ஏற்றார். அதில் இருந்து 3ஆவது முறையாக பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதிக நாட்கள் பிரதமராக இருந்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
பிரதமராக பதவி ஏற்பதற்கு முன்னதாக, 12 1/2 வருடங்கள் குஜராத் மாநில முதல்வராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






