என் மலர்
தலைப்புச்செய்திகள்
- இந்தியாவில் 7 மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
- அந்த மாநிலங்கள் எதுவும் அதிகாரிகள் குழுவை அமைத்து அதன் அறிக்கை அடிப்படையில் முடிவெடுக்கவில்லை.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்த ஸ்ரீதர் குழு அறிக்கையை வெளியிட தமிழக அரசு மறுத்திருக்கிறது. அதற்காக தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள காரணம், தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்த தி.மு.க. அரசுக்கு எள்ளளவும் விருப்பம் இல்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளது. இது கண்டிக்கத்தக்கது.
அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு விரும்பினால், மார்ச் மாதம் ஒன்றாம் தேதியிலிருந்தோ, புதிய நிதியாண்டின் தொடக்கமான ஏப்ரல் ஒன்றாம் தேதியிலிருந்தோ செயல்படுத்த முடியும். அதற்காக எந்த ஆய்வும் தேவையில்லை. யாருடைய பரிந்துரையும் தேவையில்லை. இவ்வளவுக்குப் பிறகும் குழு அமைத்து பரிந்துரை பெற்றுத்தான் பழைய ஓய்வூதியத்தை வழங்க வேண்டும் என்று அரசு நினைத்தால், ஸ்ரீதர் குழு அறிக்கை மீது ஒரு மணி நேரத்தில் முடி வெடுத்து செயல்படுத்தலாம்.
ஆனால், அந்த எண்ணம் தமிழக அரசுக்கு இல்லை. மாறாக, ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களை ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணம் இருப்பதால் தான் இத்தகைய முரண்பட்ட அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. அரசின் இந்த ஏமாற்று நாடகம் எடுபடாது.
இன்றைய நிலையில், இந்தியாவில் ராஜஸ்தான், மேற்கு வங்கம், ஜார்கண்ட், சத்தீஷ்கார், பஞ்சாப், கர்நாடகம், இமாலயப் பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த மாநிலங்கள் எதுவும் அதிகாரிகள் குழுவை அமைத்து அதன் அறிக்கை அடிப்படையில் முடிவெடுக்கவில்லை. எனவே, குழு நாடகங்களை நடத்துவதைத் தவிர்த்து, தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத்தை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- நிகழ்ச்சியில் மனித உருவ ரோபோ அங்கு கூடியிருந்தவர்களில் சிலரை நோக்கி முன்னேறி தாக்க முயற்சிக்கிறது.
- பாதிக்கப்பட்டு அந்த ரோபோ இவ்வாறு நடந்துகொண்டதாக கூறபடுகிறது.
சீனாவில் மக்கள் கூடியிருந்த நிகழ்வு ஒன்றில் செயற்கை நுண்ணறிவால் (ஏஐ) கட்டுப்படுத்தப்படும் ரோபோ தாக்குதல் நடந்த முயன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்ட வீடியோ ஒன்றில், நிகழ்ச்சியில் மனித உருவ ரோபோ அங்கு கூடியிருந்தவர்களில் சிலரை நோக்கி முன்னேறி தாக்க முயற்சிக்கிறது.
மென்பொருள் கோளாறால் ரோபோ அவர்களை நோக்கி முன்னேறிச் சென்று அவர்களில் சிலரைத் தாக்க முயற்சிப்பதை வீடியோ காட்டுகிறது. இதில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.
இருப்பினும் சிந்திக்கும் திறனுடைய ஏஐ தொழில்நுட்பம் மனிதர்களுக்குவருங்காலங்களில் அச்சுறுத்தலாக அமையும் என்ற பரவலான கூற்றை இந்த சம்பவம் எடுத்துக்காட்டுகிறது என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
- பிரீத்தி ஜிந்தா தனது தனது சமூக ஊடக கணக்குகளை பாஜகவுக்கு விற்றுவிட்டார் என கேரளா காங்கிரஸ் குற்றச்சாட்டு
- யாரும் எனக்காக எந்த கடனையும் தள்ளுபடி செய்யவில்லை என பிரீத்தி ஜிந்தா விளக்கம்
பாலிவுட் நடிகையும் பஞ்சாப் கிங்ஸ் அணியின் இணை உரிமையாளரான பிரீத்தி ஜிந்தா சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருப்பவர்.
இந்நிலையில், பிரீத்தி ஜிந்தா தனது ரூ.18 கோடி வங்கிக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்காக தனது சமூக ஊடக கணக்குகளை பாஜகவுக்கு விற்றுவிட்டார் என்று கேரளா காங்கிரஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
கேரளா காங்கிரசின் குற்றச்சாட்டை பிரீத்தி ஜிந்தா மறுத்துள்ளார்.
இது தொடர்பான அவரின் எக்ஸ் பதிவில், "எனது சமூக ஊடக கணக்குகளை நான் தான் பயன்படுத்தி வருகிறான். அடிப்படையே இல்லாத பொய் தகவல்களை பரப்புவதற்கு உங்களுக்கு வெட்கமா இல்லையா? யாரும் எனக்காக எந்த கடனையும் தள்ளுபடி செய்யவில்லை. ஒரு அரசியல் கட்சி என்னுடைய பெயர் மற்றும் படத்தை பயன்படுத்தி போலியான செய்திகளை பரப்புவதை கண்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். 10 ஆண்டுகளுக்கு முன்பே நீங்கள் குறிப்பிட்டுள்ள கடனை நான் திருப்பி செலுத்தி விட்டேன்" என்று பதிவிட்டுள்ளார்.
இதனையடுத்து பிரீத்தி ஜிந்தா மறுப்பு செய்திக்கு விளக்கம் கேட்டு கேரளா காங்கிரஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
அந்த பதிவில், "பிரபலங்கள் தங்கள் சமூக ஊடக கணக்குகளை ஐடி பிரிவிடம் ஒப்படைத்து நிர்வகிப்பதை போல் அல்லாமல் உங்கள் சமூக ஊடக கணக்குகளை நீங்களே நிர்வகிக்கிறீர்கள் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறோம்.
உங்கள் கடன் நிலை குறித்து தெளிவுபடுத்தியதற்கு நன்றி. நாங்கள் ஏதேனும் தவறுகள் செய்திருந்தால் அதை ஏற்றுக்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம். ஊடகங்கள் தெரிவித்த செய்திகளை தான் நாங்கள் பகிர்ந்தோம்.
ஊடகங்கள் வெளியிட்ட செய்தியின்படி, ரிசர்வ் வங்கியில் நடக்கும் ஊழல்கள் குறித்து நியூ இந்தியா கூட்டுறவு வங்கியின் முன்னாள் ஊழியர்கள், 2020 ஜனவரியில் கடிதம் எழுதி எச்சரித்தனர். அந்த கடிதத்தில் உங்கள் பெயருடன் மேலும் பலர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
அதில், பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தாவின் ரூ.18 கோடி கடன் திரும்பப் பெறுவதற்கான நடைமுறைகள் இல்லாமல் தள்ளுபடி செய்யப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நாங்கள் சேமிப்பை இழந்த பொதுமக்கள் பக்கம் நிற்கிறோம். இந்த தகவல்கள் தவறாக இருந்தால், அதற்கான ஆதாரத்துடன் சேமிப்பை இழந்த மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுங்கள் என்று கேட்டுக் கொள்கிறோம்" என்று பதிவிட்டுள்ளது.
- இன்னும் இரண்டு வீரர்கள் மட்டுமே அவருக்கு மேலே இருக்கிறார்கள்.
- உடல் தகுதி அடிப்படையில் அவர் சிறப்பாகவே இருக்கிறார் என்றார்.
சிட்னி:
சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி சிறப்பாக ஆடி சதமடித்து அசத்தினார். இது அவரது 51-வது சதமாகும். இந்தப் போட்டியில் விராட் கோலி 14,000 ரன்கள் கடந்து அசத்தியுள்ளார். இதன்மூலம் ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் குவித்தவர்கள் வரிசையில் விராட் கோலி மூன்றாவது இடத்தில் உள்ளார்.
இந்நிலையில், ரிக்கி பாண்டிங் விராட் கோலியின் ஆட்டம் மற்றும் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பது குறித்து பேசியதாவது:
விராட் கோலியை விட ஒருநாள் போட்டிக்கான சிறந்த வீரரை நான் பார்த்ததே இல்லை. அவர் இப்போது ஒருநாள் போட்டிகளில் என்னை முந்தி இருக்கிறார்.
இன்னும் இரண்டு வீரர்கள் மட்டுமே அவருக்கு மேலே இருக்கிறார்கள். நிச்சயமாக அவர் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன் குவித்த வீரராக தனது பெயரை பார்க்க விரும்புவார்.
உடல் தகுதி அடிப்படையில் அவர் சிறப்பாகவே இருக்கிறார். அதற்காக கடினமான உழைப்பை செலுத்துகிறார்.
சச்சின் டெண்டுல்கரின் சாதனையை அவரால் முறியடிக்க முடியுமா என யோசித்துப் பார்ப்பது நமக்கு விசித்திரமான உணர்வை ஏற்படுத்துகிறது.
விராட் கோலி இத்தனை ஆண்டுகள் சிறப்பாக ஆடியும் இன்னும் சச்சினின் சாதனையை நெருங்குவதற்கு அவர் 4,000 ரன்களை குவிக்க வேண்டும்.
இது சச்சின் எந்த அளவுக்கு சிறப்பாக ஆடி இருக்கிறார் என்பதை நமக்கு காட்டுகிறது. எத்தனை ஆண்டுகள் சச்சின் இந்த விளையாட்டை விளையாடி இருக்கிறார் என்பதை நாம் இதன்மூலம் புரிந்து கொள்ளலாம். ஆனால், விராட் கோலி போன்ற ஒருவர் இந்த சாதனையை முறியடிக்க மாட்டார் என நாம் ஒதுக்கித் தள்ளி விட முடியாது.
விராட் கோலியிடம் பசி இருந்தால், நிச்சயமாக அவர் சச்சின் சாதனையை முறியடிக்க மாட்டார் என என்னால் சொல்ல முடியாது என தெரிவித்தார்.
- தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி.
- ஹிட் 3 படத்தை பிரபல இயக்குநர் சைலேஷ் கொலானு இயக்குகிறார்.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. கடைசியாக இவர் நடிப்பில் வெளியான படம் 'சூர்யாவின் சனிக்கிழமை' படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.
இதைத் தொடர்ந்து 'கோர்ட்' மற்றும் 'ஹிட் 3' ஆகிய 2 படங்களில் நானி நடித்து வருகிறார். ஹிட் 3 படத்தை பிரபல இயக்குநர் சைலேஷ் கொலானு இயக்குகிறார்.
பிரசாந்தி திபிர்னேனி தயாரிப்பில் உருவாகும் இப்படம் வரும் மே மாதம் 1 ஆம் தேதி திரைக்கு வருகிறது. ரத்தம் தெறிக்கும் கிரைம் ஜானரில் உருவாகியுள்ள ஹிட் 3 படத்தின் டீசரை படக்குழு அண்மையில் வெளியிட்டது. டீசர் மிகவும் ஆக்ஷன் காட்சிகளால் நிறைந்திருந்தது. பெரும் வரவேற்பை பெற்ற இந்த டீசர் தற்பொழுது 21 மில்லியன் பார்வைகளை பெற்று யூடியூப் டிரெண்டடிங்கில் உள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தான் விஷம் குடித்து விட்டதாகவும், வீட்டில் உள்ள கியாஸ் சிலிண்டரை திறந்து வைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
- அபானின் காதலி பசானா கல்லூரியில் படித்து வந்தார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடந்த படுகொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் பேருமலை பகுதியை சேர்ந்தவர் அபான் (23). இவர் நேற்று இரவு வெஞ்ஞாரமூடு காவல் நிலையத்திற்குச் சென்றார். தனது தாய், சகோதரன், காதலி உள்பட 6 பேரை தான் கொலை செய்துவிட்டதாக அபான் கூறினார்.
பேருமலையில் 3 பேரையும், சுள்ளாளத்தில் 2 பேரையும், பாங்கோட்டில் ஒருவரையும் சுத்தியலால் அடித்துக் கொன்றுவிட்டதாக கூறினார். மேலும், தான் விஷம் குடித்து விட்டதாகவும், வீட்டில் உள்ள கியாஸ் சிலிண்டரை திறந்து வைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதை கேட்டு அதிர்ந்த போலீசார் அவரை மருத்துவமனையில் சேர்ந்தவிட்டு அவர் கூறிய இடங்களுக்கு சென்று 5 பேர் கொல்லப்பட்டதை உறுதி செய்தனர். அபானுடைய தாய் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டார்.
கொலைகளை செய்த அபானுடைய குடும்பம் பேருமலை பகுதியை சேர்ந்தது. இவரது தந்தை ரஹீம். தாய் ஷெமி. இளைய சகோதரன் அப்சான் (வயது 13). தந்தை ரஹீம் அரபு நாடு ஒன்றில் கார் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.
அபான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அங்கு சென்று தந்தைக்கு தொழிலில் உதவியாக இருந்தார். கொரானாவுக்கு பின் அபான் கேரளா திரும்பி வந்தார். ரஹீம் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே மகன் அபான் தனியாக தொழில் தொடங்க திட்டமிட்டுள்ளார்.
அபானின் 88 வயது பாட்டி சல்மாபீவி பாங்கோட்டில் வசித்து வந்தார். அபானின் சித்தப்பா லத்தீப், சித்தி ஷாகிதாஇருவரும் சுள்ளாளத் பகுதியில் வசித்து வந்தனர். அபானின் காதலி பசானா கல்லூரியில் படித்து வந்தார்.
அபானின் தந்தைக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அபான் தனியாக தொழில் தொடங்கவும் நினைத்துள்ளார். மேலும், அபான் தனது காதலி பசானாவுக்கு கடந்த சில நாட்களுக்குமுன் புதிய வீடு ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார். இதனால் அபான் குடும்பத்தில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதை சமாளித்து புதிதாக தொழில் தொடங்க தனது பாட்டி மற்றும் சித்தப்பாவிடம் பணம் கேட்டுள்ளார் அபான்.
ஆனால் பணம் தர மறுத்த அவர்கள், காதலிக்கு வீடு வாங்கி கொடுத்ததையும் கண்டித்துள்ளனர். இதனால் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. தொடர் அழுத்தத்தில் இருந்த அபான் நேற்று மாலை சுத்தியலை எடுத்துக்கொண்டு அனைவரையும் கொலை செய்ய தனது பைக்கில் கிளம்பியுள்ளார்.

முதலில் பாங்கோட்டில் உள்ள பாட்டி சல்மாபீவியின் வீட்டிற்கு சென்று அவரை சுத்தியலால் அடித்து கொலை செய்தார். அடுத்து சுள்ளாளத் பகுதியில் உள்ள சித்தப்பா வீட்டிற்கு சித்தப்பா லத்தீப், சித்தி ஷாகிதாவையும் சுத்தியலால் அடித்துக் கொன்றார்.
அடுத்ததாக காதலி பசானாவின் வீட்டிற்கு சென்ற அபான் அவரை பைக்கில் அழைத்துக்கொண்டு தனது வீட்டிற்கு வந்துள்ளார்.
ஆத்திரம் அடங்காத அப்சாம் வீட்டில் தயார் தாயார் ஷெமி, தம்பி அப்சானை சுத்தியலால் தாக்கினார். மாடி அறைக்கு சென்று காதலி பசானாவையும் சுத்தியலால் அடித்தார். தம்பியும், காதலியும் ரத்த வெள்ளியதில் உயிரிழக்க, தாயார் படுகாயங்களுடன் மயங்கினார்.
அனைவரும் உயிரிழந்ததாக நினைத்து வீட்டில் கியாஸ் சிலிண்டரை திறந்து விட்டுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொள்ள விஷம் அருந்தியுள்ளார். அதன்பின் ஆட்டோவில் வெஞ்ஞாரமூடு போலீஸ் நிலையத்திற்கு சென்று சரணடைந்துள்ளார்.
அப்சான் வீட்டுக்கு வந்த போலீசார் தயார் ஷெமியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வெவ்வேறு இடங்களில் இருந்த மற்ற ஐவரின் உடல்கள் மீட்கப்பட்டன. விஷம் குடித்து தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள அப்சான் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவரிடம் விசாரணை நடந்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
- இந்தியா, சீனா, துருக்கி நாடுகள் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்கின்றன.
- உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் 3-வது ஆண்டில் மட்டும் இந்தியா 49 பில்லியன் யூரோவிற்கு இறக்குமதி செய்துள்ளது.
ரஷியா கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது படையெடுத்தது. பின்னர் இது மிகப்பெரிய போராக வெடித்தது. முதலில் ரஷியா எல்லை அருகில் உள்ள உக்ரைனின் ஏராளமான பகுதிகளை பிடித்தது. பின்னர் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியால் உக்ரைன் ரஷியாவுக்கு பதிலடி கொடுத்தது. இதனால் ரஷியா பெரும்பாலான இடங்களில் இருந்து வெளியேறியது. தற்போது டிரோன் மூலமாக தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றன.
மின் உற்பத்தி நிலையங்கள், ஆயுத கிடங்குகள், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் போன்ற கட்டமைப்புகளை குறிவைத்து இரு நாடுகள் டிரோன் தாக்குதல் நடத்தி வருகின்றன. இரு நாடுகளுக்கு இடையிலான போர் தொடங்கி 3-வது வருடம் முடிவடைந்து, 4-வது வருடமாக நீடித்து வருகிறது. 4-வது வருடம் தொடங்குவதையொட்டி உக்ரைன் மீது ரஷியா 250-க்கும் அதிகமான டிரோன்கள் மூலும் தாக்குதல் நடத்தியது.
உக்ரைன் மீது ரஷியா படையெடுத்ததால் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ரஷியாவுக்கு எதிராக பொருளாதார தடைகள் விதித்தன. ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யக்கூடாது எனத் தெரிவித்தன.
ஐரோப்பிய நாடுகள் ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தியது. ஆனால் இந்தியா, சீனா, துருக்கி நாடுகள் அமெரிக்காவின் மிரட்டலை நிராகரித்து ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் அதிக அளவில் இறக்குமதி செய்தனர். இதற்கு முக்கிய காரணம் மிகவும் மலிவாக விலையில் ரஷியா கச்சா எண்ணெய் வழங்கியதுதான்.
இதனால் இந்தியாவின் மொத்த கச்சாய் எண்ணெய் இறக்குமதி ரஷியாவில் இருந்து 1 சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்து வந்த நிலையில் 40 சதவீதம் வரைக்கு அதிகரித்துள்ளது.
உக்ரைன்- ரஷியா இடையே போர் நடைபெற்று வரும் 3-வது வருடத்தில் (2024) இந்தியா 49 பில்லியன் யூரோ அளவிற்கு ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துள்ளது.
சீனா 78 பில்லியன் யூரோ அளவிற்கும், துருக்கி 34 பில்லியன் அளவிற்கும் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துள்ளது.
இந்தியா மற்றும் துருக்கியில் உள்ள சுத்திகரிப்பு நிலையங்கள் ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து அதை சுத்திகரித்து பெட்ரோல் மற்றும் டீசலாக ஜி7 அமைப்பில் உள்ள நாடுகளுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்துள்ளன. இந்தியா மற்றும் துருக்கியில் இருந்து 18 பில்லியன் யூரோ அளவிற்கு பெட்ரோல், டீசல் போன்றவற்றை இறக்குமதி செய்துள்ளன.
- ஜெயலலிதா காலத்தில் இருந்தே அ.தி.மு.க.வில் இருந்து வருபவர் மருது அழகுராஜ்.
- அவர் விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய இருப்பதாகக் கூறப்படுகிறது.
சென்னை:
ஜெயலலிதா காலத்தில் இருந்தே அ.தி.மு.க.வில் இருக்கும் மருது அழகுராஜ் தற்போது ஓ.பி.எஸ். அணியில் இருக்கிறார்.
இதற்கிடையே, கடந்த சில நாளாக விஜயைப் புகழ்ந்து வரும் மருது அழகுராஜ் விரைவில் ஓ.பி.எஸ். அணியில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய இருப்பதாகக் கூறப்படுகிறது.
சமீபத்தில், ஒரு தலைமையும் ஒரு தலைமுறையும் அரசியலுக்கு வருகிறது. அதுதான் 2026ஐ தீர்மானிக்கப் போகிறது என விஜய் புகைப்படத்துடன் மருது அழகுராஜ் பகிர்ந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில், மருது அழகுராஜ் இன்று வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதளத்தில், 'தி.மு.க. இழந்து வரும் மக்கள் ஆதரவையும், அ.தி.மு.க. இழந்து வரும் தொண்டர்கள் அபிமானத்தையும் த.வெ.க. தலைவர் விஜய்யின் சுற்றுப்பயணம் மொத்தமாக அள்ளிக் கொண்டு போகப்போகிறது. 2ம் ஆண்டின் நீட்சியில், 2026-ம் ஆண்டு ஆட்சியில்' என பதிவிட்டுள்ளார்.
- முதலமைச்சர் ரங்கசாமி த.வெ.க. ஆண்டு விழாவில் பங்கேற்கலாம் என்ற தகவல் வெளியானது.
- த.வெ.க. கட்சி மாநாடு சிறக்க வாழ்த்து தெரிவிக்கிறேன் என பதில் அளித்தார்.
புதுச்சேரி:
நடிகர் விஜயின் த.வெ.க. கட்சியின் ஆண்டு விழா நாளை மகாபலிபுரத்தில் நடக்கிறது.
இதில் பங்கேற்க புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து முதலமைச்சர் ரங்கசாமி த.வெ.க. ஆண்டு விழாவில் பங்கேற்கலாம் என்ற தகவல் வெளியானது.
இதுகுறித்து புதுச்சேரி சட்டசபையில் முதலமைச்சர் ரங்கசாமியிடம் த.வெ.க. கட்சியின் ஆண்டு விழாவில் பங்கேற்கிறீர்களா? என நிருபர்கள் கேட்டதற்கு அவர்கள் மாநாடு நடத்துகிறார்கள். த.வெ.க. கட்சி மாநாடு சிறக்க வாழ்த்து தெரிவிக்கிறேன் என பதில் அளித்தார்.
இதன் மூலம் த.வெ.க. ஆண்டு விழாவில் முதலமைச்சர ரங்கசாமி பங்கேற்க மாட்டார் என தெரிகிறது.
- எம்.எஸ்.தோனிக்கு சமீபத்தில் 1230 கிராம் எடையுள்ள 4 பேட்கள் டெலிவரி செய்யப்பட்டது.
- முன்னதாக எம்.எஸ்.தோனி 1250 முதல் 1300 கிராம் வரை எடையுள்ள பேட்டை பயன்படுத்தி வந்தார்.
18-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மார்ச் 22-ந்தேதி தொடங்கி மே 25-ந்தேதி வரை நடக்கிறது. 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடக்க ஆட்டத்தில் மும்பையை சந்திக்கிறது. மார்ச் 23-ம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் இந்த ஆட்டம் நடக்கிறது.
இந்த ஐ.பி.எல். சீசனில் 43 வயதான எம்.எஸ்.தோனி எடை குறைந்த பேட்டை பயன் படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனது மட்டையின் எடையை சுமார் 10 முதல் 20 கிராம் வரை அவர் குறைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவருக்கு சமீபத்தில் 1230 கிராம் எடையுள்ள 4 பேட்கள் டெலிவரி செய்யப்பட்டது. கடந்த ஐபிஎல் சீசன் வரை எம்.எஸ்.தோனி 1250 முதல் 1300 கிராம் வரை எடையுள்ள பேட்டை பயன்படுத்தி வந்தார்.
இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன் டோனி ஆவார். 2 உலக கோப்பை மற்றும் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபியை வென்றுக் கொடுத்தார். ஐ.பி.எல்.லில் அவர் தலைமையில் சி.எஸ்.கே. 5 கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.
- சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தனது 25-வது படமாக பராசக்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
- ரவி மோகன் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தனது 25-வது படமாக பராசக்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஆகாஷ் பாஸ்கரனின் Dawn Pictures தயாரிக்கிறது.
இந்த படத்தில் அதர்வா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நாயகியாக ஸ்ரீலீலா நடிக்கிறார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். ரவி மோகன் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார்.
சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகி வருகிறது.
சமீபத்தில் வெளியான படத்தின் டைட்டில் டீசர் வீடியோ மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இணையத்தில் வைரலானது. இப்படம் இந்தி திணிப்பு போராட்டத்தை மையமாக வைத்து உருவாகி வரும் திரைப்படமாகும்.
இன்று காலையில் சுதா கொங்கரா அவரது இன்ஸ்டா பக்கத்தில் படம் குறித்த சில புகைப்படங்களை வெளியிட்டார். அதில் மதுரை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளது என அதர்வா, ரவி மோகன் ஆகியோர் உடன் செல்ஃபி எடுத்து அதனை பதிவிட்டுள்ளார்.
தற்பொழுது மற்றொரு புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் அதில் சுதா கொங்கரா, அதர்வா மற்றும் ரவி மோகன் சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறார்கள். முதல் புகைப்படத்தில் ரவி மோகன் மேஜையில் உணவில்லை இரண்டாம் புகைப்படத்தில் தட்டில் உணவுடன் இருக்கிறார். இந்த புகைப்படத்திற்கு தலைப்பாக " தான் பராசக்தி திரைப்படத்திற்காக எப்படி சாப்பிடாமல் பட்டினி கிடந்து உடலை வறுத்திக் கொண்டு நடிக்கிறேன் என்பது முதல் புகைப்படத்தில் ரவி மோகன் கூறுகிறார் ஆனால் அவருக்கு தெரியாமல் அவர் சாப்பிடும் போது இந்த இரண்டாவது புகைப்படத்தை எடுத்தேன்" என பதிவிட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கொள்கை மீது விருப்பம் உள்ளவர்கள் எனது கட்சியில் பயணிப்பார்கள்.
- மொழி குறித்த புரிதல் பா.ஜ.க.விற்கு கிடையாது.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை அடுத்த திமிரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் இன்று நடந்தது.
இதில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தற்போது தனியார் பள்ளிகளில் தமிழை எடுத்து விட்டார்கள். அங்கு இந்தி கற்பிக்கப்படுகிறது. இதனால் அந்த பள்ளிகளில் தங்களது பிள்ளைகளை சேர்க்கின்றனர். தமிழ் படித்தால் பிச்சை தான் எடுக்க வேண்டும் என்ற நிலையை உருவாக்கி எங்களை வீழ்த்த நினைக்கிறார்கள்.
ஏற்கனவே தமிழகத்தில் மும்மொழி கொள்கை வந்துவிட்டது. அதனை வெவ்வேறு வழிகளில் செயல்படுத்தி வருகிறார்கள். அதனை எதிர்ப்பதில் அரசுக்கு உறுதி கிடையாது. என்னைத் தாண்டி இந்தியை திணியுங்கள் பார்க்கலாம்.
மக்களின் வாழ்க்கையை பறிப்பதற்காக முதல்வர் மருந்தகம் கொண்டுவரப்பட்டுள்ளது. தேர்தல் வரும்போதுதான் அது தேவைப்படுகிறதா ஏன் இதுவரை மக்களுக்கு நோய் வரவே இல்லையா.
கொள்கை மீது விருப்பம் உள்ளவர்கள் எனது கட்சியில் பயணிப்பார்கள். முரண்பாடு உள்ளவர்கள் மாறி செல்கின்றனர். செல்வது அவர்கள் சொந்த விருப்பம்.
எந்த இலையும் உதிரும்போது அமைதியாக விழாது. வெளியே போகிறவர்கள் நான் நன்றாக செயல்படுகிறேன் என்று சொல்லி விட்டுப் போக மாட்டார்கள். யார் கையிலும் காலிலும் விழுந்து தக்க வைக்க வேண்டிய அவசியம் நாம் தமிழர் கட்சிக்கு இல்லை.
தமிழகத்தில் பள்ளி மாணவிகள் பாலியல் தொல்லைக்கு ஆளாவது குறித்து அப்பா (முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்) தான் பதில் சொல்ல வேண்டும். இன்றைய முதல்வர் ஒரு பிராண்டாக பார்க்கப்படுகிறார். அரசுக்காக அவர் திராவிட மாடல் என்ற பெயரில் ஆட்சிக்காக நடித்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
2026 தேர்தலுக்கு இன்னும் நேரம் இருக்கிறது. அதற்குள் அவசரப்பட வேண்டிய அவசியம் இல்லை.
எங்களுக்கு கூட்டணி அவசியம் இல்லை. எல்லாத்தையும் சொல்ல முடியாது கொஞ்சம் ரகசியம் வையுங்கள்.
மொழி குறித்த புரிதல் பா.ஜ.க.விற்கு கிடையாது.
புதிய கல்விக் கொள்கையை ஏற்காததால் கல்வித்துறைக்கு நிதி வழங்கப்படவில்லை என்பது சரியல்ல. நிதியைக் கூட கேட்டு பெற முடியாமல் 40 பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்துக் கொண்டு என்ன செய்கிறீர்கள்.
அரசு ஊழியர்கள் நாள்தோறும் ஒவ்வொரு கோரிக்கைகளை முன்வைத்து போராடும் சூழல் உள்ளது. அவர்கள் அரசு அழைத்து பேசினாலும் தங்களது போராட்டத்தில் உறுதியாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.






