என் மலர்
நீங்கள் தேடியது "மருது அழகுராஜ்"
- மருது அழகுராஜ் எடப்பாடி பழனிசாமி தரப்பில் சேர்ந்து ஆதரவு தெரிவித்து வந்தார்.
- அ.தி.மு.க.விலிருந்து விலகிய மருது அழகுராஜ் தி.மு.க.வில் இணைந்துள்ளார்.
நமது அம்மா நாளிதழின் முன்னாள் ஆசிரியராக இருந்தவர் மருது அழகுராஜ். இவர் அ.தி.மு.க.வின் தீவிரப் பேச்சாளர் ஆவார்.
அ.தி.மு.க.வில் உட்கட்சி மோதல் ஏற்படவே எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் இரு தரப்பினராகப் பிரிந்தனர். அப்போது மருது அழகுராஜ் எடப்பாடி பழனிசாமி தரப்பில் சேர்ந்து ஆதரவு தெரிவித்து வந்தார்.
இந்த நிலையில், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகளால் அவர் சமீப காலமாக அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அ.தி.மு.க.விலிருந்து விலகிய மருது அழகுராஜ் தி.மு.க.வில் தன்னை இணைத்துக்கொண்டார்.
இந்த நிலையில் மருது அழகுராஜூக்கு தி.மு.க. செய்தித் தொடர்பாளர் துணைத் தலைவராக தி.மு.க. தலைமை நியமித்துள்ளது.
- ஜெயலலிதா காலத்தில் இருந்தே அ.தி.மு.க.வில் இருந்து வருபவர் மருது அழகுராஜ்.
- அவர் விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய இருப்பதாகக் கூறப்படுகிறது.
சென்னை:
ஜெயலலிதா காலத்தில் இருந்தே அ.தி.மு.க.வில் இருக்கும் மருது அழகுராஜ் தற்போது ஓ.பி.எஸ். அணியில் இருக்கிறார்.
இதற்கிடையே, கடந்த சில நாளாக விஜயைப் புகழ்ந்து வரும் மருது அழகுராஜ் விரைவில் ஓ.பி.எஸ். அணியில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய இருப்பதாகக் கூறப்படுகிறது.
சமீபத்தில், ஒரு தலைமையும் ஒரு தலைமுறையும் அரசியலுக்கு வருகிறது. அதுதான் 2026ஐ தீர்மானிக்கப் போகிறது என விஜய் புகைப்படத்துடன் மருது அழகுராஜ் பகிர்ந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில், மருது அழகுராஜ் இன்று வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதளத்தில், 'தி.மு.க. இழந்து வரும் மக்கள் ஆதரவையும், அ.தி.மு.க. இழந்து வரும் தொண்டர்கள் அபிமானத்தையும் த.வெ.க. தலைவர் விஜய்யின் சுற்றுப்பயணம் மொத்தமாக அள்ளிக் கொண்டு போகப்போகிறது. 2ம் ஆண்டின் நீட்சியில், 2026-ம் ஆண்டு ஆட்சியில்' என பதிவிட்டுள்ளார்.






