என் மலர்
தலைப்புச்செய்திகள்
- சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தனது 25-வது படமாக பராசக்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
- ரவி மோகன் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தனது 25-வது படமாக பராசக்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஆகாஷ் பாஸ்கரனின் Dawn Pictures தயாரிக்கிறது.
இந்த படத்தில் அதர்வா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நாயகியாக ஸ்ரீலீலா நடிக்கிறார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். ரவி மோகன் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார்.
சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகி வருகிறது.
சமீபத்தில் வெளியான படத்தின் டைட்டில் டீசர் வீடியோ மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இணையத்தில் வைரலானது. இப்படம் இந்தி திணிப்பு போராட்டத்தை மையமாக வைத்து உருவாகி வரும் திரைப்படமாகும்.
இன்று காலையில் சுதா கொங்கரா அவரது இன்ஸ்டா பக்கத்தில் படம் குறித்த சில புகைப்படங்களை வெளியிட்டார். அதில் மதுரை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளது என அதர்வா, ரவி மோகன் ஆகியோர் உடன் செல்ஃபி எடுத்து அதனை பதிவிட்டுள்ளார்.
தற்பொழுது மற்றொரு புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் அதில் சுதா கொங்கரா, அதர்வா மற்றும் ரவி மோகன் சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறார்கள். முதல் புகைப்படத்தில் ரவி மோகன் மேஜையில் உணவில்லை இரண்டாம் புகைப்படத்தில் தட்டில் உணவுடன் இருக்கிறார். இந்த புகைப்படத்திற்கு தலைப்பாக " தான் பராசக்தி திரைப்படத்திற்காக எப்படி சாப்பிடாமல் பட்டினி கிடந்து உடலை வறுத்திக் கொண்டு நடிக்கிறேன் என்பது முதல் புகைப்படத்தில் ரவி மோகன் கூறுகிறார் ஆனால் அவருக்கு தெரியாமல் அவர் சாப்பிடும் போது இந்த இரண்டாவது புகைப்படத்தை எடுத்தேன்" என பதிவிட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கொள்கை மீது விருப்பம் உள்ளவர்கள் எனது கட்சியில் பயணிப்பார்கள்.
- மொழி குறித்த புரிதல் பா.ஜ.க.விற்கு கிடையாது.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை அடுத்த திமிரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் இன்று நடந்தது.
இதில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தற்போது தனியார் பள்ளிகளில் தமிழை எடுத்து விட்டார்கள். அங்கு இந்தி கற்பிக்கப்படுகிறது. இதனால் அந்த பள்ளிகளில் தங்களது பிள்ளைகளை சேர்க்கின்றனர். தமிழ் படித்தால் பிச்சை தான் எடுக்க வேண்டும் என்ற நிலையை உருவாக்கி எங்களை வீழ்த்த நினைக்கிறார்கள்.
ஏற்கனவே தமிழகத்தில் மும்மொழி கொள்கை வந்துவிட்டது. அதனை வெவ்வேறு வழிகளில் செயல்படுத்தி வருகிறார்கள். அதனை எதிர்ப்பதில் அரசுக்கு உறுதி கிடையாது. என்னைத் தாண்டி இந்தியை திணியுங்கள் பார்க்கலாம்.
மக்களின் வாழ்க்கையை பறிப்பதற்காக முதல்வர் மருந்தகம் கொண்டுவரப்பட்டுள்ளது. தேர்தல் வரும்போதுதான் அது தேவைப்படுகிறதா ஏன் இதுவரை மக்களுக்கு நோய் வரவே இல்லையா.
கொள்கை மீது விருப்பம் உள்ளவர்கள் எனது கட்சியில் பயணிப்பார்கள். முரண்பாடு உள்ளவர்கள் மாறி செல்கின்றனர். செல்வது அவர்கள் சொந்த விருப்பம்.
எந்த இலையும் உதிரும்போது அமைதியாக விழாது. வெளியே போகிறவர்கள் நான் நன்றாக செயல்படுகிறேன் என்று சொல்லி விட்டுப் போக மாட்டார்கள். யார் கையிலும் காலிலும் விழுந்து தக்க வைக்க வேண்டிய அவசியம் நாம் தமிழர் கட்சிக்கு இல்லை.
தமிழகத்தில் பள்ளி மாணவிகள் பாலியல் தொல்லைக்கு ஆளாவது குறித்து அப்பா (முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்) தான் பதில் சொல்ல வேண்டும். இன்றைய முதல்வர் ஒரு பிராண்டாக பார்க்கப்படுகிறார். அரசுக்காக அவர் திராவிட மாடல் என்ற பெயரில் ஆட்சிக்காக நடித்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
2026 தேர்தலுக்கு இன்னும் நேரம் இருக்கிறது. அதற்குள் அவசரப்பட வேண்டிய அவசியம் இல்லை.
எங்களுக்கு கூட்டணி அவசியம் இல்லை. எல்லாத்தையும் சொல்ல முடியாது கொஞ்சம் ரகசியம் வையுங்கள்.
மொழி குறித்த புரிதல் பா.ஜ.க.விற்கு கிடையாது.
புதிய கல்விக் கொள்கையை ஏற்காததால் கல்வித்துறைக்கு நிதி வழங்கப்படவில்லை என்பது சரியல்ல. நிதியைக் கூட கேட்டு பெற முடியாமல் 40 பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்துக் கொண்டு என்ன செய்கிறீர்கள்.
அரசு ஊழியர்கள் நாள்தோறும் ஒவ்வொரு கோரிக்கைகளை முன்வைத்து போராடும் சூழல் உள்ளது. அவர்கள் அரசு அழைத்து பேசினாலும் தங்களது போராட்டத்தில் உறுதியாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- டெல்லியில் 2021-ம் ஆண்டு நவம்பர் 17-ந்தேதி புதிய மதுபான கொள்கை அமல்படுத்தப்பட்டது.
- மதுபான கொள்கையில் முறைகேடு நடந்ததாக கூறி துணை நிலை கவர்னர் அதை ரத்து செய்தார்.
டெல்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் இருந்த போது 2021-ம் ஆண்டு நவம்பர் 17-ந்தேதி புதிய மதுபான கொள்கை அமல்படுத்தப்பட்டது. இந்த மதுபான கொள்கையில் முறைகேடு நடந்ததாக கூறி துணை நிலை கவர்னர் அதை ரத்து செய்தார்.
டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா உள்ளிட்டோர் கைதாகி ஜாமீனில் விடுதலை ஆனார்கள்.
இந்நிலையில் டெல்லியில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு மதுபான கொள்கை முறைகேடு குறித்த தலைமை கணக்கு தணிக்கையாளர் (சி.ஏ.ஜி) அறிக்கை டெல்லி சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
பாஜக முதல்வர் ரேகா குப்தா இதை தாக்கல் செய்தார். சி.ஏ.ஜி. அறிக்கையில் மதுபான கொள்கையால் ரூ.2000 கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டதாக ஆம் ஆத்மி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
முன்னதாக சபாநாயகர் விஜேந்தர் குப்தா கூறும் போது, 2017-2018க்கு பிறகு சி.ஏ.ஜி. அறிக்கை சட்டசபையில் தாக்கல் செய்யப்படவில்லை. முந்தைய ஆம் ஆத்மி அரசு அரசியல் அமைப்பை மீறியுள்ளது என்று தெரிவித்தார்.
- இந்திராகாந்தி படுகொலைக்குப் பின் சீக்கியர்களுக்கு எதிராக நாடுமுழுவதும் வன்முறை வெடித்தது.
- டெல்லியில் மட்டும் 2,100 சீக்கியர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர்.
புதுடெல்லி:
இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கடந்த 31-10-1984 அன்று டெல்லியில் உள்ள தனது வீட்டில் சீக்கிய பாதுகாவலர்களால் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.
இந்தப் படுகொலைக்குப் பிறகு சீக்கியர்களுக்கு எதிராக நாடுமுழுவதும் வன்முறை வெறியாட்டங்கள் நடந்தன. இதில் 2,800 சீக்கியர்கள் பலியாகினர். டெல்லியில் மட்டும் 2,100 சீக்கியர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர்.
சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தின்போது சரஸ்வதி விஹார் பகுதியில் 2 பேர் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. சஜ்ஜன் குமார் குற்றவாளி என டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தண்டனை விவரங்கள் பிறகு அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்தது.
இந்நிலையில், சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட காங்கிரஸ் முன்னாள் எம்.பி.யான சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து டெல்லி ஐகோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது.
- உயர்மட்ட குழுவின் கீழ், பள்ளி மாணவர்களின் பாதுகாப்புக்கான ஆலோசனை குழு அமைக்க வேண்டும்.
- ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களின் பாதுகாப்புக்கான நடவடிக்கைகளை எடுப்பதோடு, குழு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.
மதுரை:
தேனி மாவட்டத்தை சேர்ந்த சப்னா, ஐகோர்ட்டு மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், "உயர்மட்ட குழுவின் கீழ், பள்ளி மாணவர்களின் பாதுகாப்புக்கான ஆலோசனை குழு அமைக்க வேண்டும். இந்த குழு ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களின் பாதுகாப்புக்கான நடவடிக்கைகளை எடுப்பதோடு, அது தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.
இது தொடர்பாக கடந்த 2021-ல் தமிழக அரசு அரசாணை பிறப்பித்து அதன் தொடர்பான வழிகாட்டுதல்களையும் பிறப்பித்தது. இருப்பனும் பள்ளிகளில் பள்ளி மாணவர்களுக்கான பாதுகாப்பு அறிவுரை குழு முறையாக இயங்குவதில்லை.
ஆகவே அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர்களுக்கான பாதுகாப்பு அறிவுரை குழுமம் சரியாக இயங்கி பள்ளி மாணவர்களிடையே பாலியல் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்த உத்தரவிட வேண்டும்" என அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நிஷா பானு, ஸ்ரீமதி அமர்வு, "அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் பாதுகாப்பு அறிவுரை குழு அமைக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்த நிலை அறிக்கையை தமிழக அரசுத்தரப்பில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
- பணம் படைத்தவர்களுக்கு ஒரு நீதி, ஏழை எளியவர்களுக்கு ஒரு நீதி என்ற தி.மு.க.வின் சாயம் வெளுக்கத் தொடங்கிவிட்டது.
- பெயிண்ட் டப்பாவுடன் சுற்றி வரும் உங்கள் கட்சியினருக்கு, இந்தி எது ஆங்கிலம் எது என்பதை, உங்கள் அறிக்கை விளக்க மறந்து போனது உள்ளபடி வருத்தமே.
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கருப்பு பெயிண்ட் டப்பாவுடன் சுற்றி வரும் கழகக் கண்மணிகளுக்கு கடிதம் ஒன்று எழுதியிருப்பதாக அறிந்தேன்.
அதில் அவர், நாம் எந்த மொழிக்கும் எதிரியில்லை. யார் எந்த மொழியைக் கற்பதற்கும் தடையாக நிற்பதில்லை என்று தெரிவித்திருக்கிறார்.
சிபிஎஸ்இ மற்றும் மெட்ரிகுலேஷன் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் மும்மொழி கற்கும் வாய்ப்பு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மறுக்கப்படுவது ஏன் என்ற கேள்விக்கு, இதுவரை பதில் அளிக்க மறுத்து வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
மும்மொழி கற்கத் தடை இல்லை, ஆனால் நீங்கள் கற்கவேண்டும் என்றால் தி.மு.க.வினர் நடத்தும் சிபிஎஸ்இ அல்லது மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் உங்கள் குழந்தைகளைச் சேர்த்துவிடுங்கள் என்கிறாரா மு.க.ஸ்டாலின்?
உங்கள் போலி நாடகங்களை தமிழக மக்கள் இனியும் நம்பப்போவதில்லை. பணம் படைத்தவர்களுக்கு ஒரு நீதி, ஏழை எளியவர்களுக்கு ஒரு நீதி என்ற தி.மு.க.வின் சாயம் வெளுக்கத் தொடங்கிவிட்டது.
மேலும், பெயிண்ட் டப்பாவுடன் சுற்றி வரும் உங்கள் கட்சியினருக்கு, இந்தி எது ஆங்கிலம் எது என்பதை, உங்கள் அறிக்கை விளக்க மறந்து போனது உள்ளபடி வருத்தமே என்று தெரிவித்துள்ளார்.
- இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி.
- பார்வையாளர்கள் எண்ணிக்கையில் புதிய சாதனை.
சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டி துபாயில் நேற்று முன்தினம் நடைபெற்றது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.
இந்தப் போட்டியில் தோல்வி அடைந்ததால் பாகிஸ்தான் அணி தொடரில் இருந்தே வெளியேறி உள்ளது. இந்த நிலையில், இந்தியா பாகிஸ்தான் அணிகள் போட்டியின் போது ஆன்லைன் பார்வையாளர்கள் எண்ணிக்கையில் புதிய சாதனை படைக்கப்பட்டது.
அதன்படி இந்த போட்டியை ஜியோ ஹாட் ஸ்டாரில் மொத்தம் 60.2 கோடி போ் ஒரே நேரத்தில் பாா்த்துள்ளனா். போட்டியின் முதல் பந்து வீசப்படும்போது 6.8 கோடியாக இருந்த பாா்வையாளா்கள் எண்ணிக்கை நேரம் செல்லச் செல்ல உயா்ந்தது. பாகிஸ்தான் ஆட்டம் முடியும்போது 32.2 கோடியாக இருந்த எண்ணிக்கை இந்தியாவின் இன்னிங்ஸ் தொடங்கும்போது 36.2 கோடியாக அதிகரித்தது.
இறுதியில் இந்தியாவின் வெற்றித் தருணத்தில் 60.2 கோடி பாா்வைகளை பெற்று ஆன்லைனில் புதிய சாதனை படைத்தது.
- இயக்குநர்கள் பிரம்மா மற்றும் எம். அனுசரண் இயக்கத்தில் உருவாகியுள்ளது 'சுழல்- தி வோர்டெக்ஸ்'
- இந்த வெப் தொடர் வருகிற 28ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.
விக்ரம் வேதா படத்தின் இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரியின் சொந்த பட தயாரிப்பு நிறுவனமான வால் வாட்சர் பிலிம்ஸ் சார்பில் தயாரான முதல் வெப் தொடர் 'சுழல்- தி வோர்டெக்ஸ்'. இயக்குநர்கள் பிரம்மா மற்றும் எம். அனுசரண் இயக்கத்தில் உருவான இந்த வெப் தொடரில் கதிர், சந்தானபாரதி, பிரேம், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி, நிவேதா சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இந்த வெப் தொடருக்கு, சாம் சி.எஸ். இசையமைத்திருந்தார். அமேசான் பிரைமில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான இந்த வெப் தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த வெப் தொடரின் இரண்டாம் பாகமாக சுழல் 2 தி வோர்டெக்ஸ் தொடர் உருவாகியுள்ளது. இத்தொடரின் டிரெய்லர் அண்மையில் வெளியானது.
இந்த வெப் தொடர் வருகிற 28ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. இந்த தொடர் பல்வேறு கதாபாத்திரங்கள் மற்றும் அவற்றுக்குள் நடக்கும் சம்பவங்களை தழுவிய கதையம்சம் கொண்டிருக்கும் என்று தெரிகிறது.
இந்நிலையில் இந்த தொடரில் இடம் பெற்றுள்ள ஆடியோ ஜூக்பாக்ஸ் ஆல்பத்தை வெளியிட்டுள்ளனர். இதில் மொத்தம் 9 பாடல்களும் 9 மியூசிக் டிராகுகளும் இடம் பெற்றுள்ளது. தொடருக்கான எதிர்ப்பார்ப்பு மக்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்
- சிறுமிக்கு நீதி வழங்குவதாகவும், அவளுக்கு வேலை வாங்கித் தருவதாகவும் உறுதியளித்துள்ளார்.
- வெளியே சொன்னால் அவற்றை இணையத்தில் பதிவேற்றி வைரலாக்கிவிடுவேன் என்றும் கான்ஸ்டபிள் சிறுமியை மிரட்டியுள்ளார்.
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி நீதி கேட்டு காவல் நிலையத்திற்கு வந்த இடத்தில் போலீசும் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவின் பொம்மனஹள்ளி பகுதியில் 17 வயது சிறுமி வசித்து வந்தார். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்த விக்கி என்ற திருமணமான நபர் கடந்த வருடம் மே மாதம் முதல் சிறுமியை திருமணம் செய்துகொள்வதாக மயக்கி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததோடு அடித்து துன்புறுத்தியுள்ளார்.
மன உளைச்சலுக்கு ஆளான சிறுமி தனது தாயிடம் இந்த சம்பவம் குறித்து தெரிவித்தார். அதைத் தொடர்ந்து தாய் பொம்மனஹள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணிபுரியும் காவலர் அருண் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி வழங்குவதாகவும், வேலை வாங்கித் தருவதாகவும் உறுதியளித்துள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பரில், கான்ஸ்டபிள் அருண், சிறுமியை ஒரு ஹோட்டலுக்கு அழைத்து, போதைப்பொருள் கலந்த மதுவை குடிக்க வைத்தார். பின்னர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
சிறுமியின் அந்தரங்க வீடியோக்கள் தன்னிடம் இருப்பதாகவும், இதைப்பற்றி வெளியே சொன்னால் அவற்றை இணையத்தில் பதிவேற்றி வைரலாக்கிவிடுவேன் என்றும் கான்ஸ்டபிள் சிறுமியை மிரட்டியுள்ளார்.
இதை தாயிடம் சிறுமி தற்போது கூறிய நிலையில், தாயார் அளித்த புகாரின் அடிப்படையில், பொம்மனஹள்ளி காவல் நிலையத்தில் பணியாற்றும் கான்ஸ்டபிள் அருண் மற்றும் பக்கத்துக்கு வீட்டுகாரர் விக்கி ஆகியோரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.
- பெரிய ஆரூடம் தெரிந்தவர் எஸ்.ஏ.சி.
- எனக்கு இந்தக் கதையே புதிதாக இருந்தது.
நீதிகேட்டுப் போராடும் ஒரு நாயின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள 'கூரன் ' திரைப்படத்தைப் பார்த்த திரையுலகினர் பலரும் பாராட்டி வருகிறார்கள். நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் படத்தைப் பார்த்துவிட்டு, பேசும்போது, "எப்போதும் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும் மிகப்பெரிய இயக்குநர் எஸ்.ஏ.சி. அவர்கள். அவர் எவ்வளவு பெரிய இயக்குநர் என்பது உலகத்திற்கே தெரியும்.
அவர் திரைக்கதையில் ஒரு மன்னர். அவர் செய்த மிகச் சிறந்த திரைக்கதை இளைய தளபதி விஜய். 1992ல் நாளைய தீர்ப்பு என்கிற படத்தில் தனது மகனை அறிமுகப்படுத்தினார். அவரது மகன் 26-வது வருடத்தில் என்ன தீர்ப்பு எழுதுவது என்று யோசித்துக் கொண்டிருக்கிறார். அவ்வளவு பெரிய ஆரூடம் தெரிந்தவர் எஸ்.ஏ.சி.
அவர் ஒரு சிறந்த நடிகராக இந்த 'கூரன்' படம் பார்த்தபோது எனக்குத் தெரிந்தது. இதற்கு முன்பு அவர் நடித்த சில படங்களை நான் பார்த்து இருந்தாலும் இதில் நடித்திருந்த அவரது பாத்திரம் சிறப்பாக இருந்தது.
நான் இந்த 'கூரன்' படம் பார்க்கும் முன்பு கதையைக் கேட்டு விட்டுத்தான் சென்றேன். இதில் ஒரு நாய் தனது குட்டிக்காகத் தனக்கு வழக்காடுவதற்காக ஒரு வழக்கறிஞரைப் போய் பார்க்கிறது. அந்த வழக்கறிஞர் தான் எஸ்.ஏ.சி. அவர்கள். எனக்கு இந்தக் கதையே புதிதாக இருந்தது.
இந்த நாய் தனது உணர்வை எப்படி வெளிப்படுத்தும்? அதற்காக இவர் எப்படி வழக்காடுவார்? இந்த ஆர்வத்தோடு தான் நான் படம் பார்த்தேன். படத்தில் அது கொஞ்சமும் குறையாமல் இருந்தது. இந்தப் படத்தின் இயக்குநர் நிதின் வேமுபதி. இது அவருக்கு முதல் படம். ஆனால் முதல் படம் என்று தெரியாத அளவிற்கு அழகாகத் திரைக்கதை அமைத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் வழக்கமான பாதையை விட்டுவிட்டுப் புதிதாகச் சிந்திக்க வேண்டும் என்று நினைப்பவன் நான். அந்த வகையில் அமைந்துள்ள இந்தப் படத்தில் பெரிய பலமாக இருப்பது நடிக்காத அந்த நாய். இயல்பாக இருக்கிற அதன் உணர்வுகளைப் படம் பிடித்து, சரியாகப் பயன்படுத்தி உள்ளார்கள்.
அதன் பிறகு படத்தில் பிடித்தது மிகச் சிறப்பாக நடித்து இருக்கும் எஸ்.ஏ.சி. அவர்கள். அவர் தான் இந்தப் படத்தின் கதாநாயகன். அவர் நடித்திருக்கும் காட்சிகள், பேசி இருக்கும் வசனங்களுக்குப் பல இடங்களில் கைத்தட்டல் கிடைக்கும். இந்தப் படம் வணிக ரீதியாக பெரிய வெற்றி பெறுவதற்கான வாய்ப்புள்ள படம் என்று நினைக்கிறேன்.
வீட்டில் நம் எல்லோருக்கும் குழந்தைகள் பிடிக்கும். குழந்தைகளுக்குச் செல்லப் பிராணிகளைப் பிடிக்கும். குழந்தைகளுக்குச் செல்லப் பிராணிகள் பிடிப்பது போல் இந்தப் படம் எல்லோருக்கும் பிடிக்கும். எஸ்.ஏ.சி. அவர்கள் எப்போதும் தொடர்ந்து ஓடிக் கொண்டே இருப்பவர்; வெற்றி பெற நினைப்பவர். அவருக்கு எனது வாழ்த்துக்கள்! "இவ்வாறு பார்த்திபன் பாராட்டிக் கூறியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் கதாநாயகனாக சந்தீப் கிஷன் நடிக்கிறார்.
- இசையை எஸ்.தமன் மேற்கொள்கிறார்.
நல்ல கதையம்சம் கொண்ட படங்களை பிரம்மாண்டமாகத் தயாரிப்பதில் பெயர் பெற்ற லைகா புரொடக்ஷன்ஸ் புதிய திறமைகளை ஊக்குவிப்பதன் மூலம் திரைப்படத் துறையில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. லைகா தயாரிப்பில் நடிகர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் புதிய படம் ஊடகங்களிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. படத்தின் மோஷன் போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் மகிழ்வுடன் நேற்று வெளியிட்டது.
இப்படத்தின் கதாநாயகனாக சந்தீப் கிஷன் நடிக்கிறார். இசையை எஸ்.தமன் மேற்கொள்கிறார். ஒரு பான் இந்தியன் திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது. ஆனால் திரைப்படத்தின் அறிவிப்பு வந்ததில் இருந்து வேற் எந்த ஒரு தக்வலும் வெளிவராததால் லைக்கா நிறுவனம் இப்படத்தை கைவிட்டுவிட்டது என்ற செய்திகள் இணையத்தில் பரவின.
ஆனால் இதுக்குறித்து நமக்கு கிடைத்த தகவலின்படி லைக்கா நிறுவனம் ஜேசன் சஞ்சய் திரைப்படத்தை தயாரித்து வருகிறது. படத்தின் சில பகுதிகள் படமாக்கப்பட்டுவிட்டதாகவும். அடுத்த கட்ட படப்பிடிப்பு பணிகள் இலங்கையில் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. நடிகர்களின் ஸ்கெடியுலை பொறுத்து முடிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளனர். படத்தை பற்றிய கூடுதல் தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்
- 8 பாராளுமன்ற இடங்கள் குறைவதால், நமது பிரதிநிதித்துவம் குறையும்.
- 39 பாராளுமன்ற தொகுதிகளை குறைக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை இன்று கூடியது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய முக்கிய அறிவிப்புகள் தொடர்பாக கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் விவரித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* மக்கள்தொகை குறைவாக உள்ள காரணத்தினால் பாராளுமன்ற தொகுதியை குறைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
* தமிழகத்தில் ஏற்கனவே உள்ள 39 தொகுதியில் இருந்து 8-ஐ குறைத்து 31 ஆக மாற்ற உள்ளனர்.
* 39 பாராளுமன்ற தொகுதிகளை குறைக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
* எண்ணிக்கையை பற்றிய கவலை மட்டுமல்ல, இது மாநிலங்களின் உரிமை தொடர்பான பிரச்சனை.
* மிகப்பெரிய உரிமை மீட்பு போராட்டம் நடத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
* தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தென்னிந்தியாவின் தலைக்கு மேல் கத்தி தொங்குகிறது.
* 8 பாராளுமன்ற இடங்கள் குறைவதால், நமது பிரதிநிதித்துவம் குறையும்.
* தொகுதி மறு சீரமைப்பு தொடர்பாக 5-ந்தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும்.
* மார்ச் 5-ந்தேதி நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் அரசியல் கடந்து அனைவரும் கலந்துகொள்ள வேண்டும்.
* தேர்தல் ஆணையத்தில் பதிவு பெற்ற அனைத்து கட்சிகளுக்கும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.






