என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • 3 கார்களில் கட்சியினருடன் வந்த எச்.ராஜாவை இளையான்குடி போலீசார் தடுத்து நிறுத்தினர்.
    • எச்.ராஜா இளையான்குடி காவல் ஆய்வாளர் மணிகண்டனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    ராமநாதபுரம் பரமக்குடிக்கு பாஜக நிர்வாகி நினைவஞ்சலிக்கு சென்ற எச்.ராஜாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

    3 கார்களில் கட்சியினருடன் வந்த எச்.ராஜாவை இளையான்குடி போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    இதனால் ஆத்திரமடைந்த எச்.ராஜா இளையான்குடி காவல் ஆய்வாளர் மணிகண்டனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    அப்போது, நாங்கள் என்ன பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தர்களா ? எதற்கு எங்களை தடுக்குறீர்கள் என்று எச்.ராஜா ஆவேசமாக கூறினார்.

    இதைதொடர்ந்து, போக்குவரத்து பாதிக்கப்பட்டதை அடுத்து எச்.ராஜாவை செல்ல போலீசார் அனுமதித்தனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • சிம்பொனியை அரங்கேற்றம் செய்து இளையராஜா மற்றொரு சாதனையைப் படைத்தார்.
    • பிரதமர் மோடியை சந்தித்து இசைஞானி இளையராஜா வாழ்த்துப் பெற்றார்.

    இசைஞானி இளையராஜா தனது நீண்ட இசைப்பயணத்தில் சுமார் ஆயிரம் திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை படைத்துள்ளார்.

    மேற்கத்திய இசை மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவரான இளையராஜா மொசார்ட் உள்ளிட்ட மேற்கத்திய இசை ஜாம்பவான்களின் சிம்பொனி இசைக் கூறுகளை தனது பாடல்களில் பயன்படுத்தி பாமர மக்களும் அவற்றை ரசிக்கும் வகையில் மெட்டுகளை அமைத்தார். அவரது இசையால் பல திரைப்படங்கள் வெற்றிப் படங்களாக மாறியுள்ளன. அவரது பாடல்கள் அனைத்தும் இன்றைய தலைமுறையையும் கவரும் வகையில் அமைந்துள்ளன.

    சமீபத்தில் லண்டனில் 'வேலியண்ட்' (Valiant) சிம்பொனியை அரங்கேற்றம் செய்து இளையராஜா மற்றொரு சாதனையைப் படைத்தார்.

    இந்நிலையில், லண்டனில் 'சிம்பொனி' இசையை அரங்கேற்றம் செய்து சென்னை திரும்பியுள்ள இளையராஜாவை நேரில் சந்தித்து நடிகர் சிவகுமார் வாழ்த்து தெரிவித்துள்ளார்;

    சிவகுமார் உடன் அவரது மகனும் நடிகருமான சூர்யா மற்றும் மகள் பிருந்தா ஆகியோர் இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர். 

    • அவர் என்னை அல்ல, என் வேலையை மணந்தார்.
    • அவன் தனது தந்தையைப் போல மாறுவதை நான் விரும்பவில்லை

    டெல்லியில் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் PGT நுண்கலை ஆசிரியராகப் பணியாற்றி வந்தவர் அன்விதா சர்மா (29 வயது). இவர் கடந்த 2019 இல் கௌரவ் கௌசிக் என்வரை மணந்தார். கௌசிக் தனியார் மருத்துவமனை ஒன்றில் டாக்டராக உள்ளார். இவர்களுக்கு நான்கு வயது மகன் உள்ளான்.  

    இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 16) அன்விதா சர்மா, 'சமைத்துவிட்டேன், சாப்பிடுங்கள் கௌரவ்' என கணவருக்கு மெசேஜ் அனுப்பிவிட்டுதனது வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது தற்கொலைக்கான காரணம் குறித்து தனது பெற்றோருக்கும், சகோதரருக்கும் அன்விதா நீண்ட வாட்சப் குறிப்பு ஒன்றை அனுப்பினார். அதில் தனது கணவன், மாமியார் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார்.

    "அவர் என்னை அல்ல, என் வேலையை மணந்தார். நான் என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன், ஆனால் அது ஒருபோதும் போதவில்லை. அவர்கள் மாமியார் மீது மட்டுமே கவனம் செலுத்தும் ஒரு மருமகளை விரும்பினர்.

     

    ஆனால் என் பெற்றோரும் சகோதரரும் எனக்கு அவர்களின் அளவுக்கு சமமாக முக்கியமானவர்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் என் கணவர் செய்தது போல் யாரும் என்னை இவ்வளவு கேலி செய்திருக்க முடியாது.

    நான் செய்த எல்லாவற்றிலும் அவர் தவறுகளைக் கண்டுபிடித்தார். மாமியாரோ, வேலை செய்யும் பணிப்பெண்ணை மட்டுமே விரும்பினார். மகிழ்ச்சியாக இருப்பதுபோல் நடித்து நடித்து சோர்வாக உணர்கிறேன். அவமானங்களை இனியும் தாங்க முடியாது.

    என் கணவரால் எனது வங்கிக் கணக்குகள், காசோலை புத்தகம் மற்றும் அனைத்தையும் அணுக முடியும். தயவுசெய்து என் குழந்தையை மட்டும் கவனித்துக் கொள்ளுங்கள். இந்த உலகில் நான் என் மகனை மிகவும் நேசிக்கிறேன், நீங்கள் அவரை உங்களுடன் வைத்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவன் தனது தந்தையைப் போல மாறுவதை நான் விரும்பவில்லை" என்று அன்விதா தனது பெற்றோருக்கு எழுதியுள்ளார். 

    கோப்புப்படம் 

     

     ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.30 மணியளவில் கௌஷிக் மற்றும் அவர்களது மகன் வெளியே சென்றிருந்தபோது அன்விஷா தூக்கிட்டு தற்கொலை செய்தார். அன்விதாவின் மெசேஜை பார்த்தவுடன், அவரது குடும்பத்தினர் உடனடியாக அன்விதாவைத் தொடர்பு கொள்ள முயன்றனர்.

    ஆனால் அவர்களின் அழைப்புகளுக்கு பதிலளிக்கப்படவில்லை. அவர்கள் கௌஷிக்கிற்கு தகவல் தெரிவித்தனர். அவர் வீடு திரும்பினார், ஆனால் கதவு உள்ளே இருந்து பூட்டப்பட்டிருப்பதைக் கண்டார். வீட்டிற்குள் நுழைய ஜன்னல் கிரில்லை வெட்டினர் . உள்ளே சென்று பார்த்தபோது அன்விதா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார்.

    இந்நிலையில் மகளின் இறப்பு தொடர்பாக அவி அன்விதாவின் தந்தை போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில், திருமணத்திற்குப் பிறகு, அன்விதாவின் கணவர், மாமனார் மற்றும் மாமியார் கூடுதல் வரதட்சணை கேட்டு அவரை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தத் தொடங்கினர்.

    அவளுடைய முழு சம்பளம், காசோலை புத்தகம் மற்றும் ஏடிஎம் கார்டுகளையும் அவர்களே பெற்றுக்கொண்டனர். மார்ச் 16 அன்று, அவர்கள் என் மகளை கடுமையான உடல் மற்றும் மன ரீதியாகவும் துன்புறுத்தினர், இதனால் அவர் தற்கொலைக் குறிப்பு எழுதி, துயரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று குறிப்பிட்டிருந்தார்.

    இந்த புகாரை அடுத்து அன்விதாவின் கணவர் கௌஷிக், மாமனார் மற்றும் மாமியாரை வரதட்சணை கொடுமை உள்ளிட்ட பல்வேறு பிரவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். 

    • ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜாகீர் உசேன் பிஜிலி நெல்லையில் நேற்று வெட்டி படுகொலை
    • இந்த கொலை சம்பவத்தில் 2 பேர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு பாதுகாப்பு அதிகாரியாக இருந்த ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜாகீர் உசேன் பிஜிலி நெல்லையில் நேற்று வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

    பட்டபகலில் நிகழ்ந்த இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இதுதொடர்பாக 2 பேர் கோர்ட்டில் சரண் அடைந்தனர். இந்த கொலை தொடர்பாக டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    நெல்லையில் ஓய்வு பெற்ற எஸ்.ஐ. ஜாஹீர் உசைன் கொலை தொடர்பாக டவுண் காவல் நிலைய ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    மேலும், காவல் உதவி ஆணையராக இருந்த செந்தில்குமார் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது

    • தனது செல்போன் ஆடியோவை லீக் செய்ததாக சாட்டை துரைமுருகன் புகார் அளித்துள்ளார்.
    • ஆளுங்கட்சியுடன் இணைந்து திருச்சி டிஐஜி வருண்குமார் தொடர்ந்து செயல்படுவதாக சாட்டை துரைமுருகன் ஐகோர்ட் கிளையில் முறையீடு

    திருச்சி டிஐஜி வருண் குமார் மீது சாட்டை துரைமுருகன் கொடுத்த புகாரை பெற்று விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் கிளை ஆணை உத்தரவிட்டுள்ளது.

    பொய் வழக்கு பதிந்து கைது செய்ததுடன் தனது 2 செல்போன்களை பறித்ததாக திருச்சி டிஐஜி மீது சாட்டை துரைமுருகன் புகார் அளித்துள்ளார்.

    திருச்சி டிஐஜி வருண் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தனது செல்போன் ஆடியோவை லீக் செய்ததாக சாட்டை துரைமுருகன் புகார் அளித்துள்ளார்.

    ஜாமினில் வெளியான பின்னும் செல்போனை ஒப்படைக்காததால் வழக்கு தொடர்ந்த போது என் செல்போன் ஆடியோ லீக் ஆனது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    திருச்சி டிஐஜி வருண் தனது பள்ளித்தோழரான திருச்சி சூர்யாவின் எக்ஸ் தளத்தில் ஆடியோவை பதிவேற்றம் செய்தார் என்றும் சாட்டை துரைமுருகன் கூறினார்.

    மேலும் மனுவில், "நாதகவை சேர்ந்த இருவரை கைது செய்ததுடன் 20 பெண் காவலர்களை கொண்டு தாக்கி சீமானுக்கு எதிராக வாக்குமூலம் பெற துன்புறுத்தல்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

    ஆளுங்கட்சியுடன் இணைந்து திருச்சி டிஐஜி வருண்குமார் தொடர்ந்து செயல்படுவதாக சாட்டை துரைமுருகன் ஐகோர்ட் கிளையில் முறையீடு செய்துள்ளார்.

    திருச்சி டிஐஜி மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை தலைவர், திருச்சி ஆணையருக்கு மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என மனுவில் குறிப்பிட்டுள்ளது.

    இந்நிலையில், சாட்டை துரைமுருகனின் மனுவை விசாரித்த ஐகோர்ட் கிளை, திருச்சி டிஐஜி வருண் மீதான புகாரை விசாரித்து ஒரு மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதுகுறித்து சாட்டை துரைமுருகன் தனது எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    நாம்தமிழர் கட்சியின் மீதும் ,என் மீதும் காழ்ப்புணர்ச்சியோடு செயல்பட்டு சட்டவிரோத கைது நடவடிக்கை எடுத்து தொடர்ந்து பொதுவெளியில் நாம்தமிழர் கட்சி குறித்து அவதூறு பரப்பும் திருச்சி டிஐஜி வருண்குமார் மீது நான் கொடுத்த புகாரை ஏற்றுக்கொண்டு ஒரு மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்க தமிழக டி.ஜி.பிக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு !

    நீதி வெல்லும் !

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ஓய்வூதிய வயதை மாற்றுவதற்கான எந்தத் திட்டமும் அரசாங்கத்தின் பரிசீலனையில் இல்லை.
    • தேசிய கவுன்சிலின் ஊழியர் தரப்பிலிருந்து முறையான திட்டம் எதுவும் பெறப்படவில்லை.

    புதுடெல்லி:

    மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது தற்போது 60 ஆக உள்ளது. இதில் மாற்றம் செய்யும் திட்டம் மத்திய அரசிடம் உள்ளதா? என மக்களவையில் கேள்வி எழுப்பட்டது.

    இதற்கு மத்திய இணை மந்திரி ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில் வருமாறு:

    ஊழியர்களின் ஓய்வு காரணமாக ஏற்படும் காலியிடங்களை நீக்குவதற்கு அரசாங்கத்திடம் எந்தக் கொள்கையும் இல்லை.

    அரசு ஊழியர்களின் ஓய்வூதிய வயதை மாற்றுவதற்கான எந்தத் திட்டமும் அரசாங்கத்தின் பரிசீலனையில் இல்லை.

    தேசிய கவுன்சிலின் ஊழியர் தரப்பிலிருந்து முறையான திட்டம் எதுவும் பெறப்படவில்லை.

    மத்திய மற்றும் பல்வேறு மாநில அரசுகளின் ஊழியர்களின் ஓய்வூதிய வயது குறித்த விஷயம் மாநிலப் பட்டியலில் வருவதால், அத்தகைய தரவு எதுவும் அரசாங்கத்தில் மையமாகப் பராமரிக்கப்படுவதில்லை என தெரிவித்தார்.

    • ரகானே, டி காக், குர்பாஸ், சுனில் நரைன் ஆகிய நான்கு தொடக்க பேட்ஸ்மேன்களை கொண்டுள்ளது.
    • ஹர்ஷித் ராணா, வரண் சக்ரவர்த்தி பந்து வீச்சில் ஆதிக்கம் செலுத்த வாய்ப்பு.

    ஐபிஎல் 2025 சீசன் டி20 கிரிக்கெட் திருவிழா வருகிற 22ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்குகிறது.

    சாம்பியன் பட்டத்திற்காக கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய 10 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    கொல்கத்தா முதல் ஆட்டத்தில் ஆர்சிபி அணியை எதிர்கொள்கிறது. கடந்த வருடத்தை போன்று இந்த வருடம் ஒரு அணியை மதிப்பிட இயலாது. ஏனென்றால் மெகா ஏலம் நடைபெற்ற பல வீரர்கள் மாறியுள்ளன.

    பேட்ஸ்மேன்கள்

    இந்த நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பேட்டிங், பவுலிங் குறித்து ஒரு பார்வை...

    ரகானே தலைமையில் கொல்கத்தா அணி களம் இறங்க உள்ளது. அந்த அணியில் ரகானே, டி காக், ரஹ்மானுல்லா குர்பாஸ், அங்கிரிஷ் ரகுவன்ஷி, ரோவ்மேன் பொவேல், மணிஷ் பாண்டே, லவ்னித் சிசோடியா, ரிங்கு சிங் ஆகியோர் பேட்ஸ்மேன்களாக உள்ளனர்.

    ஆல்-ரவுண்டர்கள்

    வெங்கடேஷ் அய்யர், அனுகுல் ராய், மொயீன் அலி, ராமன்தீப் சிங், அந்த்ரே ரசல் ஆகியோர் ஆல்ரவுண்டர்களாக உள்ளனர்.

    பந்து வீச்சாளர்கள்

    அன்ரிச் நோர்ஜே, வைபவ் ஆரோரா, மயங்க் மார்கண்டே, ஸ்பென்சர் ஜான்சன், ஹர்ஷித் ராணா, சுனில் நரைன், வருண் சக்ரவர்த்தி, சேத்தன் சக்காரியா ஆகியோர் உள்ளனர்.

    இவர்கள் சமநிலையான ஆடும் லெவன் அணியை தேர்ந்தெடுப்பதுதான் அந்த அணிக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும்.

    தொடக்க வீரர்கள்

    தொடக்க வீரராக ரகானே, குர்பாஸ், டி காக் ஆகிய மூன்று பேர் உள்ளனர். இவர்களுடன் சுனில் நரைன் உள்ளார். இவரை தொடக்க வீரராக களம் இறக்கி பவர் பிளேயில் முடிந்த அளவிற்கு ரன்கள் குவிப்பதுதான் கொல்கத்தா அணியின் நோக்கம். கடந்த பல சீசன்களில் அவர் அதை சரியாக செய்துள்ளார்.

    ரகானே தொடக்க வீரராக களம் இறங்கினால் பவர் பிளேயை சரியாக பயன்படுத்திக் கொள்வார். மிடில் ஆர்டர் வரிசையில் களம் இறக்கப்படுவாரா? என்பது ஆடும்போதுதான் தெரியும்.

    டி காக் தொடக்க வீரராக களம் இறங்கக்கூடியவர். இவர் விக்கெட் கீப்பர் பணியையும் செய்வதால் குர்பாஸ், டி காக் ஆகிய இரண்டு வெளிநாட்டு வீரர்களில் ஒருவர்தான் ஆடும் லெவனில் இடம் பிடிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் இரவரிடையே கடும் போட்டி நிலவும்.

    ஒருவேளை ரகானே தொடக்க வீரராக களம் இறக்கப்பட்டால், சுனில் நரைன் கடைநிலை வீரரான களம் இறங்குவார்.

    மிடில் ஆர்டர் வரிசை

    மிடில் ஆர்டர் வரிசையில் துணைக் கேப்டன் வெங்கடேஷ் அய்யர், அங்கிரிஷ் ரகுவன்ஷி, மணிஷ் பாண்டே, ரிங்கு சிங், ராமன்தீப் சிங், ஆந்த்ரே ரஸல் என ஒரு பட்டாளத்தை கொண்டுள்ளது. அவர்களுக்கு மிடில் ஆர்டரில் எந்த சிரமும் இருக்க வாய்ப்பில்லை.

    வேகப்பந்து வீச்சு

    இந்திய வேகப்பந்து வீச்சில் ஹர்ஷித் ராணா, வைபவ் ஆரோரா, சக்காரியா ஆகியோரில் ஹர்ஷித் ராணா, வைபவ் ஆரோரா ஆடும் லெவனில் இடம் பிடிக்க அதிக வாய்ப்பு உள்ளது. ஹர்ஷித் ராணா ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடியதால் இந்திய அணியில் இடம் பிடித்தார். இந்திய அணியிலும் சிறப்பான விளையாடினார். இதனால் அவருக்கு கூடுதல் அனுபவம் ஏற்பட்டிருக்கும். விக்கெட் வீழ்த்தும் திறன் அவருக்கு உள்ளது. வைபவ் ஆரோராவும் நல்லவிதமாக உள்ளார்.

    அன்ரிச் நோர்ஜே, ஸ்பென்சர் ஜான்சன் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். இவர்களுடன் ஆல்-ரவுண்டர் அந்த்ரே ரசல் உள்ளார்.

    இதனால் மூன்று முதன்மை வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கும். இவர்களுடன் தேவைப்பட்டால் ஆந்த்ரே லஸல், வெங்கடேஷ் அய்யராலும் பந்து வீச முடியும். வெங்கடேஷ் அய்யர் மிதவேக பந்து வீச்சாளர் ஆவார்.

    சுழற்பந்து வீச்சு

    சுழற்பந்து வீச்சில் மிஸ்ட்ரி ஸ்பின்னர் என அழைக்கப்படும் சுனில் நரைன், வருண் சக்ரவர்த்தியை கொண்டுள்ளது.

    இதனால் மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள், இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் கூடுதலாக இரண்டு ஆல்-ரவுண்டர் பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்க இருப்பதால், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மிக சமநிலை கொண்ட அணியாக திகழும் என்பதில் எந்த ஐயம் இல்லை..

    ஆனால், பந்து வீச்சாளர்கள் அளவிற்கு பேட்ஸ்மேன்கள் அணிக்கு கைக்கொடுப்பார்களா? என்பது சற்று சந்தேகம்தான்.

    இதனால் நடப்பு சாம்பியமான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தொடர்ந்து 2-வது முறையாக கோப்பையை வெல்ல ஆர்வமாக களம் இறங்கும்.

    • இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் மகிந்த ராஜபக்ச.
    • இவருக்கு அளித்த பாதுகாப்புப் படை எண்ணிக்கையை 60 ஆகக் குறைத்தது இலங்கை அரசு.

    கொழும்பு:

    இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் மகிந்த ராஜபக்ச.

    மகிந்த ராஜபக்சவிற்கு வழங்கப்பட்ட பாதுகாப்புப் படையினர் எண்ணிக்கையை 350-ல் இருந்து 60 ஆகக் குறைத்து இலங்கை அரசு தீர்மானம் நிறைவேற்றியது.

    இதை எதிர்த்து, தனக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பை குறைக்கக் கூடாது என வலியுறுத்தி நீதிமன்றத்தில் மகிந்த ராஜபக்ச மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை மார்ச் 19-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டது.

    இந்நிலையில், மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

    • குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடு, வீடாக சென்று ரேசன் பொருட்கள் வழங்கப்படும் என அறிவித்தார்.
    • ஏழை மக்களுக்கு 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இலவசமாக வழங்கப்படும்.

    புதுச்சேரி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடரின் முதல் நாளில் 2025- 26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து 7-வது நாள் கூட்டம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. வட்டம் தொடங்கியதும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து 9 மாதங்களுக்கு பிறகு பத்திரமாக பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட குழுவிற்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, நியாய விலைக்கடைகள் இல்லாத பகுதிகளில் வாகனங்கள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடு, வீடாக சென்று ரேசன் பொருட்கள் வழங்கப்படும் என அறிவித்தார்.

    மேலும், கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் பேசுகையில், "புதுச்சேரியில் அடுத்த மாதம் 14-ந்தேதி முதல் ஏழை மக்களுக்கு 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இலவசமாக வழங்கப்படும்" என அறிவித்தார்.

    இந்நிலையில், புதுச்சேரியில் மஞ்சள் நிற ரேசன் அட்டை வைத்துள்ள மகளிருக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

    தற்போது சிவப்பு நிற ரேசன் அட்டைதாரர்களுக்கு மட்டும் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே சாதாரண குடும்ப அட்டை வைத்திருக்கும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    மஞ்சள் நிற குடும்ப அட்டை என்பது ஆண்டு குடும்ப வருமானம் ரூ.1,20,000 வரை மட்டுமே பெரும் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    • இனிமேல், பேச்சுவார்த்தைகள் துப்பாக்கிச் சூட்டின் கீழ் மட்டுமே நடைபெறும் என்று நேதன்யாகு தெரிவித்துள்ளார்.
    • 413 பேரின் உடல்கள் கிடைத்துள்ளதாகவும் பல உடல்கள் இன்னும் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளது

    இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் கடந்த மார்ச் 1 ஆம் தேதி முடிவடைந்த நிலையில் நேற்று காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.

    நேற்று இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 400 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 413 பேரின் உடல்கள் கிடைத்துள்ளதாகவும் பல உடல்கள் இன்னும் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளது என்றும் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

     

     

    இந்நிலையில் இந்த தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

    "கடந்த 24 மணி நேரத்தில் ஹமாஸ் எங்கள் கையின் வலிமையை ஏற்கனவே உணர்ந்துள்ளது. இது வெறும் ஆரம்பம் மட்டுமே என்று நான் உங்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன். இஸ்ரேல் ஹமாஸுக்கு எதிராக அதிக பலத்துடன் செயல்படும். இனிமேல், பேச்சுவார்த்தைகள் துப்பாக்கிச் சூட்டின் கீழ் மட்டுமே நடைபெறும் என்று நேதன்யாகு தெரிவித்துள்ளார்.

    கடந்த ஜனவரி மாதம் ஏற்பட்ட அமைதி உடன்படிக்கையின்படி இஸ்ரேலிய பிணையக்கைதிகள் விடுவிக்கப்பட்டு வந்தனர். ஆனால் போர் நிறுத்தம் முடிந்ததும் மேற்கொண்டு அமைதி பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ளது.

    இந்த நிலையில்தான் இஸ்ரேலின் இந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளது. "ஹமாஸ் எங்கள் பணயக்கைதிகளை விடுவிக்க பலமுறை மறுத்ததைத் தொடர்ந்து" இந்த நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டதாக இஸ்ரேல் கூறியிருந்தது.

    இன்னும் 59 இஸ்ரேலிய பணய கைதிகளை ஹமாஸ் தன்வசம் பிடித்து வைத்துள்ளது. இந்நிலையில் தற்போதைய காசா தாக்குதல் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஹமாஸ், சண்டையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நிரந்தர தீர்வு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கான முயற்சிகளை இஸ்ரேல் தடுக்கிறது. இஸ்ரேலின் தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்காவை அழுத்தம் கொடுக்குமாறு வலியுறுத்தி உள்ளது.

     

    மேலும் மற்றோரு அறிக்கையில், அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்திய முயற்சியில் உருவான போர் நிறுத்த ஒப்பந்தத்தை முறியடிக்க இஸ்ரேல் முடிவு செய்துள்ளது. வன்முறையை மீண்டும் தொடங்கினால் மீதமுள்ள உயிருள்ள பணயக்கைதிகளுக்கு மரண தண்டனை விதிக்க நேரிடும் என ஹமாஸ் எச்சரித்துள்ளது.

    இதற்கிடையே 400 பேரை கொன்ற இந்த தாக்குதல்களைத் தொடங்குவதற்கு முன்பு இஸ்ரேல் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்திடம் ஆலோசித்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

    அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கூறுகையில், மீண்டும் போர் தொடங்குவதற்கு ஹமாஸ் முழுப் பொறுப்பையும் ஏற்கிறது என்று அமெரிக்க செய்தித் தொடர்பாளர் கூறினார். 

    • தொழில்நுட்ப கோளாறு காரணமாக RRB தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு
    • ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், தமிழக இளைஞர்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்.

    நாடு முழுவதும் இன்று நடைபெறவிருந்த ரயில்வே உதவி லோகோ பைலட் தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டதால் தேர்வர்கள் அவதியடைந்தனர். இதனால், தமிழ்நாட்டில் இருந்து தெலங்கானாவுக்கு தேர்வு எழுதச் சென்ற 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேர்வர்கள் விரக்தியடைந்தனர்.

    இந்நிலையில், ரெயில்வேயின் இந்த திடீர் முடிவை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "இளைஞர்களின் நலனில் அக்கறை இல்லாத ரயில்வே துறை. நாட்டில் இளநிலை நீட், யுஜிசி நெட் தேர்வு வினாத்தாள் கசிவால் ஏறத்தாழ 85 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டிருப்பதாக தலைவர் ராகுல்காந்தி அவர்கள் பதிவுசெய்தார். வினாத்தாள் கசிவிற்கு பிறகு, தற்போது உதவி லோகோ பைலட் தேர்வை நடத்தும் ஆர்ஆர்பியானது, தொழில்நுட்ப காரணங்களால் தேர்வை ரத்து செய்திருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது.

    தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் தேர்வு மையம் அமைத்ததிருந்த போதும் மிகுந்த சிரமத்துடன் இன்று தேர்வு எழுத சென்றவர்களை அலைக்கழித்துள்ளது ரயில்வே துறை.

    எதிர்கால கனவுடன் தேர்வு எழுதச் சென்ற இளைஞர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் கனவுகளை சிதைக்கின்றது ஒன்றிய ரயில்வே துறை. இளைஞர்களுக்கு ஏற்பட்டிருக்கிற மனவுளைச்சலுக்கு ஒன்றிய ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ்அவர்கள், இளைஞர்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும். அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும்" என்று பதிவிட்டுள்ளார். 

    • ஐபிஎல் தொடர் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது.
    • 23-ந் தேதி சென்னை- மும்பை அணிகள் சேப்பாக்கத்தில் மோதுகின்றன.

    சென்னை:

    இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் நடைபெற உள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் வருகிற 22ம் தேதி தொடங்குகிறது.

    கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது. இந்த தொடரில் சென்னை அணி தனது தொடக்க ஆட்டத்தில் வரும் 23-ம் தேதி மும்பை அணியை சேப்பாக்கம் மைதானத்தில் சந்திக்கிறது.

    இந்நிலையில் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் செயல்படுவார் என அந்த அணியின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பாண்ட்யாவுக்கு ஒரு போட்டியில் தடை விதிக்கப்பட்டிருப்பதால் அவர் கேப்டனாக செயல்படுவார்.

    கடந்த ஆண்டு மும்பை அணி விளையாடி கடைசி போட்டியில் பந்து வீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் அவருக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    ×