என் மலர்tooltip icon

    இந்தியா

    • இந்த வழக்கால் எனது தொழில், வாழ்க்கை பெரிய அளவில் பாதிக்கப்பட்டு விட்டது.
    • எனக்கு உறுதுணையாக இருந்த திரையுலகினர், நண்பர்கள், ரசிகர்களுக்கு நன்றி.

    கேரளாவில் பிரபல நடிகையை பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவத்தில், நடிகர் திலீப் மீதான வழக்கில் இன்று எர்ணாகுளம் கோர்ட் தீர்ப்பு அளித்தது.

    நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் நடிகர் திலீப் குற்றவாளி இல்லை என்றும் திலீப் மீதான எந்த குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை என்றும் கோர்ட் தெரிவித்தது.

    இந்த வழக்கில் A1 - A6 என 6 பேரும் குற்றவாளிகள். அவர்களுக்கு தரப்பட்ட ஜாமினை ரத்து செய்து உடனடியாக சிறையில் அடைக்க வேண்டும். இந்த வழக்கில் திலீப் A8 என்பதால் அவரை விடுவித்து உத்தரவிட்டது. 6 பேருக்கான தண்டனை விவரங்கள் வருகிற 12-ந்தேதி அறிக்கப்படுகிறது.

    எர்ணாகுளம் கோர்ட் அளித்த தீர்ப்பையடுத்து, நடிகர் திலீப் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது,

    இந்த வழக்கால் எனது தொழில், வாழ்க்கை பெரிய அளவில் பாதிக்கப்பட்டு விட்டது. நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கை வைத்து எனது தொழில் வாழ்க்கையை அழிக்க சதி நடந்தது. எனக்கு உறுதுணையாக இருந்த திரையுலகினர், நண்பர்கள், ரசிகர்களுக்கு நன்றி என்று கூறினார்.

    இந்த வழக்கில் சுமார் 80 நாட்கள் திலீப் சிறையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • நடிகர் திலீப் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • இந்த வழக்கில் சாட்சிகளிடம் 4½ ஆண்டு விசாரணை நடந்தது.

    கொச்சியில் கடந்த 2017-ம் ஆண்டு ஒரு நடிகை காரில் சென்ற போது, ஒரு கும்பல் பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் எர்ணாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில் பெரும்பாவூரை சேர்ந்த பல்சர் சுனில் என்கிற சுனில் குமார் என்பவர் உள்பட சிலர் அந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.

    அவரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் மலையாள பிரபல நடிகர் திலீப்-க்கும், நடிகைக்கும் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, திலீப் சதி திட்டம் தீட்டி நடிகைக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து கடந்த 10.7.2017 அன்று நடிகர் திலீப்பை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் அங்கமாலி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஆலுவா கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்த வழக்கில் நடிகர் திலீப் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை 8.10.2018 அன்று எர்ணாகுளம் முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் தொடங்கியது. இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க கோரி நடிகர் திலீப் கடந்த 2018-ம் ஆண்டு கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இந்த வழக்கில் சாட்சிகளிடம் 4½ ஆண்டு விசாரணை நடந்தது.

    நடிகையை பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவத்தில், நடிகர் திலீப் மீதான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று எர்ணாகுளம் கோர்ட்டு அறிவித்து இருந்தது.

    இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை எர்ணாகுளம் கோர்ட் இன்று வழங்கியது. தீர்ப்பில்,

    நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் நடிகர் திலீப் குற்றவாளி இல்லை. திலீப் மீதான எந்த குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை.

    6 நபர்களை குற்றவாளிகள் என அறிவித்தது. அவர்களுக்கு தரப்பட்ட ஜாமினை ரத்து செய்து உடனடியாக சிறையில் அடைக்க உத்தரவிட்டது.

    இந்த வழக்கில் திலீப் A8 என்பதால் விடுவித்து உத்தரவிட்டது. A1 - A6 என 6 பேர் குற்றவாளிகள் என உத்தரவிட்டது.

    • கண்ணூர், பிராங்பேர்ட் மற்றும் லண்டன் ஆகிய இடங்களில் இருந்து ஐதராபாத் வந்த விமானங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாக இ-மெயில் வந்தது.
    • வெடிகுண்டு தடுப்பு பிரிவு மற்றும் மோப்பநாய் பிரிவு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட விமானங்களில் படிப்படியாக சோதனைகளைத் நடத்தினர்.

    திருப்பதி:

    ஐதராபாத் ஷம்ஷாபாத் விமான நிலையத்தில் 3 சர்வதேச விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

    கண்ணூர், பிராங்பேர்ட் மற்றும் லண்டன் ஆகிய இடங்களில் இருந்து ஐதராபாத் வந்த விமானங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாக இ-மெயில் வந்ததை அடுத்து அதிகாரிகள் உடனடியாக எச்சரிக்கப்பட்டனர்.

    3 விமானங்களும் ஐதராபாத் விமான நிலையத்தில் தரையிறங்கிய வுடன், அதிகாரிகள் அவசர சோதனைகளை மேற்கொண்டனர்.

    வெடிகுண்டு தடுப்பு பிரிவு மற்றும் மோப்பநாய் பிரிவு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட விமானங்களில் படிப்படியாக சோதனைகளைத் நடத்தினர்.

    பயணிகளின் பொருட்கள், கேபின் பைகள் மற்றும் சரக்கு பெட்டிகள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டன.

    மேலும், இந்த மிரட்டல் மின்னஞ்சல்களை அனுப்பியவர்கள் யார் என்பது குறித்து சைபர் கிரைம் துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.

    • சாலைக்கு டொனால்ட் டிரம்ப் அவென்யூ' என்று பெயரிடப்படும் என்று தெலுங்கானா அரசு தகவல்
    • பசுமை வழிச் சாலைக்கு மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா பெயரை சூட்ட அரசு முடிவு

    ஐதராபாத்தில் உள்ள அமெரிக்க துணை தூதரகம் அமைந்துள்ள சாலை ஒன்றுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பெயரை சூட்ட தெலங்கானா அரசு முடிவு செய்துள்ளது. அதாவது அந்த சாலைக்கு டொனால்ட் டிரம்ப் அவென்யூ' என்று பெயரிடப்படும் என்று தெலுங்கானா அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    மேலும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் அமைக்கப்பட உள்ள RRR எனப்படும் பசுமை வழிச் சாலைக்கு மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா பெயரை சூட்ட அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

    இது தொடர்பாக தகவல் தெரிவிக்க மத்திய வெளியுறவு அமைச்சகத்திற்கும், அமெரிக்க தூதரகத்திற்கும் தெலுங்கானா அரசு கடிதம் எழுதவுள்ளது.

    இந்த ஆண்டின் தொடக்கத்தில், டெல்லியில் நடைபெற்ற USISPF மாநாட்டில் பேசிய தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, "ஐதராபாத்தில் உள்ள முக்கிய சாலைகளுக்கு முன்னணி உலகளாவிய நிறுவனங்கள் மற்றும் தலைவர்கள் பெயரைச் சூட்ட வேண்டும் தெரிவித்தார்.

    குறிப்பாக கூகிள் மற்றும் கூகிள் மேப்ஸின் உலகளாவிய தாக்கத்தையும் பங்களிப்பையும் அங்கீகரிக்கும் வகையில் ஒரு முக்கிய பகுதிக்கு 'கூகிள் ஸ்ட்ரீட்' என்று பெயரிடப்படும் என்றும் மைக்ரோசாப்ட் மற்றும் விப்ரோ பெயரும் சாலைகளுக்கு வைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நாட்டின் தேசியப் பாடலான வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு இன்று கொண்டாடப்படுகிறது.
    • பிரதமர் மோடி இன்று 10 மணி நேர சிறப்பு விவாதத்தை தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்

    பரபரப்பான அரசியல் சூழலில் பாராளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் கடந்த 1 ஆம் தேதி தொடங்கியது. வருகிற 19-ந் தேதி வரை இந்த கூட்டம் நடைபெறுகிறது.

    SIR குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் சில நாட்களுக்கு பாராளுமன்றம் முடங்கியது. திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் அனல் பறக்கும் விவாதம் நடைபெற்றது.

    இந்நிலையில், நாட்டின் தேசியப் பாடலான வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு இன்று கொண்டாடப்படுவதால் அதன் வரலாறு குறித்த விவாதம் பாராளுமன்றத்தில் நடைபெறுகிறது.

    'வந்தே மாதரம்' இயற்றப்பட்டதன் 150வது அண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மக்களவையில் பிரதமர் மோடி இன்று 10 மணி நேர சிறப்பு விவாதத்தை தொடங்கி வைத்து உரையாற்ற உள்ளார்

    இதன் மூலம் வந்தே மாதரம் பாடல் குறித்து பல்வேறு முக்கியமான, அறியப்படாத தகவல்கள் தெரியவரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வந்தே மாதரம் பாடலில் இருந்து முக்கிய வரிகள் கடந்த1937-ம் ஆண்டு நீக்கப்பட்டதே இந்தியாவின் பிரிவினைக்கு காரணம் என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்த முழு விவாதத்திற்கும் மொத்தம் 10 மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
    • வாக்கு மோசடி மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்தின் நமபகத்தன்மை குறித்த பிரச்சினையை எழுப்புவார்

    வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு திருத்தம் குறித்த முக்கியமான விவாதம் செவ்வாய்க்கிழமை மக்களவையில் நடைபெற உள்ளது. எதிர்க்கட்சிகள் கோரிய விவாதத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமை தாங்குவார்.

    இந்த விவாதத்தில் ராகுல் தலைமையின்கீழ் காங்கிரஸ் தலைவர்கள் வேணுகோபால், மணீஷ் திவாரி, வர்ஷா கெய்க்வாட், முஹம்மது ஜாவேத், உஜ்வல் ராமன் சிங், இஷா கான் சவுத்ரி, மல்லு ரவி, இம்ரான் மசூத், கோவல் பதி, ஜோதிமணி ஆகியோர் பங்கேற்கின்றனர்.

    இந்த முழு விவாதத்திற்கும் மொத்தம் 10 மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    விவாதத்தின் போது, ராகுல் காந்தி வாக்கு மோசடி மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்தின் நமபகத்தன்மை குறித்த பிரச்சினையை எழுப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தத்தின் போது வாக்குச் சாவடி நிலை அதிகாரிகள் மீது சுமத்தப்படும் அழுத்தம் குறித்தும் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    • கழிவுகள் எரிப்பு சம்பவங்களின் எண்ணிக்கை 80-90 சதவீதம் குறைந்துள்ளதாக அறிக்கை கூறியுள்ளது.
    • முதல் 10 பட்டியலில் உள்ள அனைத்து நகரங்களும் முந்தைய ஆண்டை விட அதிக PM2.5 அளவைப் பதிவு செய்துள்ளன.

    எரிசக்தி மற்றும் தூய்மையான காற்று ஆராய்ச்சி மையத்தின் (CREA) அறிக்கை வெளியாகி உள்ளது.

    அதில், நவம்பர் மாதத்தில் நாட்டின் மிகவும் மாசுபட்ட நகரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது.

    அதன்படி மிகவும் மாசுபட்ட நகரங்களின் முதல் 10 பட்டியலில் உத்தரப் பிரதேசத்தின் காஜியாபாத் முதலிடத்திலும், அதைத் தொடர்ந்து நொய்டா, பகதூர்கர், டெல்லி, ஹாபூர், கிரேட்டர் நொய்டா, பாக்பத், சோனிபட், மீரட் மற்றும் ரோஹ்தக் ஆகிய நகரங்கள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.

    டெல்லியில் காற்று மாசுபாட்டிற்கு பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகியவை முன்னர் குற்றம் சாட்டப்பட்டன. இருப்பினும், கடந்த நான்கு ஆண்டுகளில் இந்த மாநிலங்களில் கழிவுகள் எரிப்பு சம்பவங்களின் எண்ணிக்கை 80-90 சதவீதம் குறைந்துள்ளதாக அறிக்கை கூறியுள்ளது.

    காற்று தர கண்காணிப்பு நிலையங்களிலிருந்து PM2.5 தொடர்பான தரவுகளின் அடிப்படையில் CREA தனது நவம்பர் 2025 அறிக்கையைத் தயாரித்துள்ளது.

    முதல் 10 பட்டியலில் உள்ள அனைத்து நகரங்களும் முந்தைய ஆண்டை விட அதிக PM2.5 அளவைப் பதிவு செய்துள்ளன.

    நாடு முழுவதும் காற்றின் தரத்தில் குறிப்பிடத்தக்க சரிவை இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. 

    • இந்த மாத இறுதியில் தனிக்கட்சி தொடங்க போவதாகவும் அறிவித்தார்.
    • 1992 இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டு அங்கு தற்போது ரூ.1,800 கோடி செலவில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது

    மேற்கு வங்காள மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.

    அங்குள்ள பரத்பூர் தொகுதி திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஹூமாயூன் கபீர். இவர் முர்ஷிதாபாத்தில் பாபர் மசூதி பாணியிலான மசூதி கட்ட அழைப்பு விடுத்தார்.

    இதைதொடர்ந்து அவரை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 'சஸ்பெண்டு' செய்தது. இதனால் அவர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய போவதாகவும், இந்த மாத இறுதியில் தனிக்கட்சி தொடங்க போவதாகவும் அறிவித்தார்.

    இந்த நிலையில் ஏற்கனவே அறிவித்தவாறு ஹூமாயின் கபீர் மேற்குவங்காளத்தில் பாபர் மசூதிக்கான அடிக்கல் நாட்டு விழாவை தொடங்கினார். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

    இந்நிலையில் யோகி ஆதித்யநாத் ஆட்சி செய்யும் உத்தரப் பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌரியா எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

    செய்தியாளர்களிடம் பேசிய கேசவ் பிரசாத் மௌரியா, "மசூதி கட்டுவதற்கு எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. இருப்பினும், பாபரின் பெயரில் யாராவது மசூதி கட்டினால், அதை எதிர்ப்பது மட்டுமல்லாமல், அது உடனடியாக இடிக்கப்படுவதை உறுதி செய்வோம்" என்று மிரட்டல் விடுத்தார்.

    முன்னதாக உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் இந்து அமைப்பினரால் 1992 இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டு அங்கு தற்போது ரூ.1,800 கோடி செலவில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

    • பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்.
    • லடாக்கில் உள்ள தர்புக்-ஷியோக்-தௌலத் பேக் ஓல்டி சாலையில் உள்ள KM-120 போஸ்டுக்கு அருகில் இந்த நினைவுச்சின்னம் அமைந்துள்ளது.

    ஜூன் 15, 2020இல் எல்லைப்பகுதியான லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர்.

    இந்திய வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். இதன் பின் இரு நாட்டு உறவுகளிலும் விரிசல், அண்மையில் ஷாங்காய் உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மோடியின் சீன பயணத்தின் மூலம் சரியானது.

    இந்நிலையில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்த லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் ஒரு போர் நினைவுச்சின்னத்தை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார்.

    இது உலகின் மிக உயரமான இடத்தில் அமைந்துள்ள போர் நினைவுச்சின்னம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

    உலகின் மிகக் கடினமான பூஜ்ஜியத்திற்கும் குறைவான வெப்பநிலை, குறைந்த ஆக்ஸிஜன் அளவு கொண்ட இயற்கை சூழலில் அமைந்துள்ள இராணுவப் மண்டலங்களில் ஒன்றான லடாக்கில் உள்ள தர்புக்-ஷியோக்-தௌலத் பேக் ஓல்டி சாலையில் உள்ள KM-120 போஸ்டுக்கு அருகில் இந்த நினைவுச்சின்னம் அமைந்துள்ளது.

    தியாகம் மற்றும் வீரத்தை குறிக்கும் வகையில் சிவப்பு மற்றும் வெள்ளை கிரானைட்டால் கட்டப்பட்ட இந்த நினைவுச்சின்னம்  திரிசூலம் வடிவத்தில் உள்ளது.

    நினைவுச்சின்னத்தைச் சுற்றி, கால்வான் பள்ளத்தாக்கின் பாதுகாப்பிற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த வீரர்களைக் குறிக்கும் 20 வெண்கல சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.

    இந்த போர் நினைவு வளாகத்தில் கல்வான் மோதல், லடாக்கின் இராணுவ வரலாறு அகியவற்றை காட்சிப்படுத்தும் ஒரு அருங்காட்சியகம் மற்றும் டிஜிட்டல் கேலரி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. 

    • இசை நடனத்துடன் கொண்டாட்டங்கள் நடந்து கொண்டிருந்தது.
    • முன்னா கானின் மகன் ஷஹாத் (17) படுகாயமடைந்தார்.

    உத்தர பிரதேசத்தின் எட்டா மாவட்டத்தில் உள்ள உமை ஆசாத்நகர் கிராமத்தில் சனிக்கிழமை இரவு திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டத்தின் போது துப்பாக்கி தவறுதலாக சுட்டதில் இரண்டு சிறுவர்கள் கொல்லப்பட்டனர்.

    இசை நடனத்துடன் கொண்டாட்டங்கள் நடந்து கொண்டிருந்தபோது துப்பாக்கி வெடித்தது.இதில் அசாதுதீனின் மகன் சுஹைல் (12) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். முன்னா கானின் மகன் ஷஹாத் (17) படுகாயமடைந்தார். அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவரும் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். 

    துப்பாக்கியால் சுட்டுக் கொண்டாடும் போது இந்த சம்பவம் நடந்ததாக சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்த கூடுதல் எஸ்பி ஸ்வேதாம்ப பாண்டே தெரிவித்தார். ஆனால் சரியான காரணம் மற்றும் யார் துப்பாக்கிச் சூடு நடத்தினர் என்பது விசாரணைக்குப் பிறகுதான் உறுதிப்படுத்தப்பட முடியும் என்றார். 

    • நடந்து முடிந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்த ஐக்கிய ஜனதா தளம் வெற்றி பெற்றது.
    • லண்டனில் உள்ள உலக சாதனை புத்தகத்தில் நிதிஷ் குமார் இடம்பிடித்து உள்ளார்.

    நடந்து முடிந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்த ஐக்கிய ஜனதா தளம் வெற்றி பெற்றது.

    இதைத்தொடர்ந்து ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் 10வது முறையாக பீகார் முதல்வராக பதவியேற்றார். கடந்த 2005 இல் 20 வருடங்களாக அவர் அந்த பதவியில் நீடித்து வருகிறார்.

    இந்நிலையில் லண்டனில் உள்ள உலக சாதனை புத்தகத்தில் நிதிஷ் குமார் இடம்பிடித்து உள்ளார்.

    சுதந்திர இந்தியாவின் ஒரு மாநில முதல்வராக 10வது முறையாக பதவியேற்ற ஒரே நபர் என்ற பெருமையை பெற்றுள்ளதாக அங்கீகரித்து, நிதிஷ் குமார பெயர் உலக சாதனை புத்தகத்தில் சேர்க்கப்பட்டு உள்ளார் என ஐக்கிய ஜனதா தளம் தேசிய செயல் தலைவர் சஞ்சய்குமார் ஜா இந்த தகவலை பகிர்ந்துள்ளார்.

    நிதிஷ் குமார் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏவாக அல்லாமல் எம்எல்சியாக நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

    • இதனால் பக்தர்கள் பீதியில் அங்கிருந்து ஓடத் தொடங்கியதால் குழப்பம் ஏற்பட்டது.
    • தகவலறிந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர்.

    பக்தர்கள் வருகையை ஒட்டி சபரிமலை அய்யப்பன் கோவில் சன்னிதானத்தில் உள்ள மரங்களில் மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில் இன்று காலை 8.20 மணிக்கு அவ்வாறு அலங்காரம் செய்யப்பட்ட ஆலமரத்தில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் பீதியில் அங்கிருந்து சிதறி ஓடத் தொடங்கியதால் குழப்பம் ஏற்பட்டது.

    தகவலறிந்து  தீயணைப்பு வீரர்கள் மற்றும் சன்னிதான தீயணைப்பு படை கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து தீயை பரவ விடாமல் துரிதமாக செயல்பட்டு அணைத்தனர். இந்த சம்பவத்தால் சற்று நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

    ×