என் மலர்
இந்தியா
- ஆசிய கோப்பை போட்டியின்போது இந்திய வீரர்கள் பாகிஸ்தானுக்கு வீரர்களுடன் கைக்குலுக்க மறுப்பு.
- பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தொடரில் இருந்து விலகப்போவதாக மிரட்டல் விடுத்தது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் இடையிலான உறவில் கடும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியா- பாகிஸ்தான் போட்டியின்போது பாகிஸ்தான் வீரர்களுடன் இந்திய வீரர்கள் கைக்குலுக்க மறுத்துவிட்டனர். இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு கடும் ஆட்சேபனை தெரிவித்தது.
சூப்பர் 4 சுற்றின்போது பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவுக்கு எதிராக ஸ்லெட்ஜிங் என்ற பெயரில் சிந்தூர் ஆபரேஷன் நடவடிக்கையின்போது இந்திய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது என சைகை காட்டினர். இதனால் இருநாட்டு கிரிக்கெட் போர்டுகளும் ஐசிசி-யில் புகார் அளித்துள்ளன.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி எம்.பி. சசி தரூர் இது தொடர்பாக கூறுகையில் "அரசியல் டென்சனில் இருந்து கிரிக்கெட் ஸ்பிரிட் எப்போதும் தனித்து இருக்க வேண்டும். கார்கில் போரின்போது 1999 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. அப்போது வீரர்கள் கைக்குலுக்கினர். இரு தரப்பினரிடமிருந்தும் பழிவாங்கும் சைகைகள் விளையாட்டு மனப்பான்மையின்மையை வெளிப்படுத்துகிறது" என்றார்.
- போதை மறுவாழ் மையத்தில் குறைந்த அளவு உணவு வழங்கப்பட்டதால் கடுங்கோபம் அடைந்துள்ளார்.
- கொஞ்சம் காய்கறி, சப்பாத்தி, பிஸ்கட் போன்றவைகளை மட்டுமே வழங்கியுள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஹாபூர் என்ற இடத்தில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் 35 வயதான சச்சின் என்பரை உறவினர் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
இவருக்கு குறைந்த அளவு உணவே வழங்கப்பட்டதாக தெரிகிறது. ஒருநாள் முழுவதும் குறைந்த அளவு காய்கறிகள், சில சப்பாத்திகள் மட்டுமே வழங்கியுள்ளனர். மேலும், வீட்டில் இருந்து உறவினர்கள் உணவு கொண்டு வந்தால், கண்ணில் காட்டமாட்டார்களாம். சில நேரங்களில் ஒரேயோரு பிஸ்கட் மட்டுமே வழங்குவார்களாம்.
இதனால் கோபம் அடைந்த சச்சின் ஸ்பூன், டூத் பிரஷ், பேனா போன்றவற்றை கழிவறைக்கு எடுத்துச் சென்று, அங்குவைத்து இரண்டு மூன்ற தூண்டுகளாக உடைத்து சாப்பிட்டுள்ளார். சில நேரம் உள்ளே செல்லவில்லை என்றால், தண்ணீர் குடித்து விழுங்குவாராம்.
இதனால் ஒரு கட்டத்திற்குப் பிறகு வயிறு வலியால் துடித்துள்ளா். அவரை மருத்துவமனையில் சேர்த்து பரிசோதனை நடத்தும்போது, வயிற்றுக்குள் ஸ்டீல் ஸ்பூன், டூத்பிரஷ் போன்றவை இருந்தது தெரியவந்துள்ளது. மருத்துவர்கள் அதை அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர்.
- பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து சிந்து நதி நீர் சிஸ்டத்தை இந்தியா சஸ்பெண்ட் செய்தது.
- இந்தியாவுக்கான நீரை வேறு வழிகளில் பயன்படுத்த மத்திய அரசு ஆலோசனை.
இந்தியா- பாகிஸ்தான் இடையிலான சிந்து நதி நீர் பகிர்வு ஒப்பந்தம் 1960ஆம் ஆண்டு ஏற்பட்டது. அதனடிப்படையில் சிந்து நதி நீர் பாகிஸ்தானுக்கு பகிரப்பட்டு வந்தது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. இதனால் பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்தியது. இந்தியாவும் தக்க பதிலடி கொடுத்தது. இரு நாடுகளுக்கும் இடையில் போர் பதற்றம் நிலவியதால், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா சஸ்பெண்டு செய்துள்ளது.
இந்த நிலையில் 2029 மக்களவை தேர்தலுக்கு முன்னதாக, சிந்து நதி நீர் அமைப்பில் (பல ஆறுகள் இணைந்தது) உள்ள ஆறுகளின் நீரை வடஇந்திய மாநிலங்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்கென ஒரு திட்டத்தை உருவாக்க மத்திய அரசு முயற்சி செய்துள்ளது. இதற்கான ஆய்வு கூட்டம் மூத்த அமைச்சர்களிடையே நடைபெற்றுள்ளது. பீஸ் நதியை சிந்து நதியுடன் இணைப்பது தொடர்பான முழு திட்ட அறிக்கை (detailed project report) தயாரிக்கப்பட இருப்பது குறித்து குறிப்பிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பியன் நதியை 14 கி.மீ. சுரங்கம் மூலம் சிந்து நதியுடன் இணைக்க திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அறிக்கை தயாரிக்க எல்&டி நிறுவனத்திடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது அடுத்த வருடத்திற்குள் தயாராகும் எனக் கூறப்படுகிறது.
சிந்து நதி நீரை 113 கி.மீ. கால்வாய் மூலம் வடமாநிலங்களுக்கு கொண்டு வருவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு தண்ணீரம், ரத்தமும் ஒன்றாக பயணிக்க முடியாது என மத்திய அரசு திட்டவட்டாக தெரிவித்தது. அதில் இருந்த சிந்து நதி நீரில் இந்தியாவுக்கான பகிர்வை எப்படி பயன்படுத்தலாம் என மத்திய அரசு தொடர்ந்த யோசனை செய்து வந்தது.
இந்த திட்டத்தில் 14 கி.மீ. தூரம் சுரங்கம் அமைப்பதுதான் மிகப்பெரிய சவாலாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இதுபோன்ற சுரங்கம் அமைக்க மலைப்பாறைகள் குறித்த முழு ஆய்வு அவசியம். பாறைகள் பலவீனமாக இருந்தால், சுரங்கத்தில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. DPR அறிக்கை பெற்ற பிறகு கட்டுமான பணி தொடங்கும் எனத் தெரிகிறது.
இந்த சுரங்கப்பாதை ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் உள்ள உஜ் பல்நோக்கு திட்டத்துடன் இணைக்கப்படும், இது ராவியின் துணை நதியான உஜ் நதியிலிருந்து பீஸ் படுகைக்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டமாகும்.
- இந்த வகை ஏவுகணை 2,000 கி.மீ. வரை பாயக்கூடிய திறன் கொண்டது.
- ஏவுகணைக்கு ரயில் அடிப்படையிலான மொபைல் லாஞ்சர் வடிவமைக்கப்பட்டு சோதிக்கப்பட்டது.
நாட்டிலேயே முதல்முறையாக ரெயிலில் இருந்து ஏவப்பட்ட அக்னி பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் (டிஆர்டிஓ) 2,000 கி.மீ. வரை பாயக்கூடிய இந்த வகை ஏவுகணைக்கு ரயில் அடிப்படையிலான மொபைல் லாஞ்சர் வடிவமைக்கப்பட்டு சோதிக்கப்பட்டது.
'அக்னி பிரைம்' ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதற்காக அதிகாரிகளுக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்தார்.
- உத்தரபிரதேசத்தின் மதுராவுக்கு செல்ல ரெயிலில் பயணம் மேற்கொண்டார்.
- மகாராஜா எக்ஸ்பிரஸ் ரெயில் அமைப்பில், ஜனாதிபதி சூட், டீலக்ஸ் சூட்கள், உணவகங்கள், ஓய்வறைகள் உள்ளிட்ட 12 பெட்டிகள் இருக்கும்.
இந்திய ரெயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தால் மகாராஜா எக்ஸ்பிரஸ் சொகுசு ரெயில் சுற்றுலா பயணிகளுக்காக இயக்கப்படுகிறது. இது உலகின் மிக ஆடம்பரமான ரெயில்களில் ஒன்றாகும்.
இந்த நிலையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று மகாராஜா எக்ஸ்பிரஸ் சொகுசு சிறப்பு ரெயிலில் பயணம் செய்தார். அவர் டெல்லியில் இருந்து உத்தரபிரதேசத்தின் மதுராவுக்கு செல்ல இந்த ரெயிலில் பயணம் மேற்கொண்டார். ஜனாதிபதி மற்றும் அவரது ஊழியர்களுக்கான ஜனாதிபதி அறை, டீலக்ஸ் அறைகள், உணவகங்கள், ஓய்வறைகளைக் கொண்ட பெட்டிகள் சொகுசு ரெயிலில் உள்ளன.
இன்று காலை 8 மணிக்கு திரவுபதி முர்மு பயணம் செய்த மகாராஜா எக்ஸ்பிரஸ் ரெயில் டெல்லியில் உள்ள சப்தர்ஜங் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டது. இந்த ரெயில் உத்தரபிரதேசத்தின் பிருந்தாவன் சாலை ரெயில் நிலையத்தை காலை 10 மணிக்கு சென்றடைந்தது.
பிருந்தாவனத்தில் உள்ள ஸ்ரீபாங்கே பிகாரி கோவில், நிதிவன்-குப்ஜ கிருஷ்ணா கோவில் ஆகியவற்றில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தரிசனம் மற்றும் பூஜை செய்தார். பின்னர் அவர் மதுராவில் உள்ள கிருஷ்ணர் கோவிலில் வழிபடுகிறார். அதன்பின் மாலையில் அந்த சிறப்பு ரெயிலில் டெல்லிக்கு புறப்படுகிறார்.
இதுதொடர்பாக ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறும்போது, மகாராஜா எக்ஸ்பிரஸ் ரெயில் அமைப்பில், ஜனாதிபதி சூட், டீலக்ஸ் சூட்கள், உணவகங்கள், ஓய்வறைகள் உள்ளிட்ட 12 பெட்டிகள் இருக்கும். மூத்த ரெயில்வே ஊழியர்களுக்காக 2 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது. தடையற்ற சேவைகளை உறுதி செய்வதற்காக 2 என்ஜின்கள் இருக்கும். ஒரு என்ஜின் இயங்கும் அதே வேளையில், மற்றொரு என்ஜின் தொழில்நுட்ப சிக்கல்களை சரிசெய்ய உடன் பயணிக்கும் என்றார். ஜனாதிபதியின் இந்த பயணத்தை தொடர்ந்து ரெயில் நிலைய மேலாளர்கள், ரெயில்வே பாதுகாப்புப் படை மற்றும் பிற ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்கள் பிறப்பிக்கப்பட்டன.
கடந்த 2023-ம் ஆண்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு சிறப்பு ரெயில் மூலம் ஒடிசாவின் புவனேஸ்வரில் இருந்து தனது சொந்த ஊரான ராய்ரங்பூருக்குப் பயணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்தியா போன்ற ஒரு நாடு யாரையும் சார்ந்து இருப்பது இனி ஏற்றுக் கொள்ள முடியாதது.
- இந்தியாவின் பொருளாதாரம் வலுவடையும் போது மக்கள் மீதான வரிச்சுமை மேலும் குறையும்.
பிரதமர் மோடி இன்று உத்தரபிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவில் நடந்த உத்தரபிரதேச சர்வதேச வர்த்தக கண்காட்சி 2025-யை தொடங்கி வைத்தார். அங்கு அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை மோடி பார்வையிட்டார். இக்கண்காட்சியில் ரஷியாவும் பங்கேற்றது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:-
உலகளவில் பல்வேறு இடையூறுகள் மற்றும் நிச்சயமற்ற தன்மைகள் இருந்தபோதிலும் இந்தியாவின் வளர்ச்சி சிறப்பாக இருந்து வருகிறது. எந்த தடைகளும் நம்மை தடுக்கவில்லை.
இந்தியா போன்ற ஒரு நாடு யாரையும் சார்ந்து இருப்பது இனி ஏற்றுக் கொள்ள முடியாதது.
சுயசார்பு இந்தியா திட்டத்தில் அரசு கவனம் செலுத்துகிறது. சிப் முதல் கப்பல் வரை அனைத்தும் இந்தியாவில் தயாரிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். நாடு சுயசார்புடையதாக மாற வேண்டும், ஒவ்வொரு தயாரிப்பும் இந்தியாவில் தயாரிக்கப்பட வேண்டும்.
நமது ஆயுத படைகள் மற்ற நாடுகளைச் சார்ந்திருப்பதைக் குறைக்க விரும்புகின்றன. இந்தியாவில் ஒரு துடிப்பான பாதுகாப்பு த் துறையை நாங்கள் உருவாக்கி வருகிறோம். ரஷியாவுடன் இணைந்து உத்தரபிரதேசத்தில் உள்ள தொழிற்சாலையில் ஏ.கே-203 துப்பாக்கிகளின் உற்பத்தி விரைவில் தொடங்கப்படும். ஒவ்வொன்றும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது என்ற அடையாளத்தைக் கொண்ட சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கி வருகிறோம்.
அடுத்த தலைமுறை ஜி.எஸ்.டி வரி சீர்திருத்தங்கள் ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கான வரிகளை கணிசமாகக் குறைத்துள்ளன. இந்த சீர்திருத்தங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு புதிய சிறகுகளை வழங்க உள்ளன. இந்தியாவின் பொருளாதாரம் வலுவடையும் போது மக்கள் மீதான வரிச்சுமை மேலும் குறையும்.
2014-ம் ஆண்டுக்கு முந்தைய தோல்விகளை மறைக்க, காங்கிரசும் அதன் கூட்டணிக் கட்சிகளும் மக்களிடம் பொய் சொல்கின்றன. இந்திய மக்களின் வருமானத்தையும் சேமிப்பையும் அதிகரித்துள்ளோம். அத்துடன் நாங்கள் நிறுத்தப் போவதில்லை. நமது பொருளாதாரத்தை வலுப்படுத்துவதைத் தொடர்ந்து, வரிகளை குறைப்பதைத் தொடர்வோம். ஜி.எஸ்.டி சீர்திருத்தங்களின் செயல்முறை வரும் நாட்களிலும் தொடரும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
- ஒரு தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியரும், கிரிக்கெட் பயிற்சியாளருமாக இருப்பவர் ஏபிவி மேத்யூ.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ஏபிவி மேத்யூவை தீவிரமாக தேடி வருகின்றனர்.
கர்நாடகாவில் கடந்த ஆண்டு பாராளுமன்ற தேர்தலை ஒட்டி பரபரப்பான பரப்புரைக்கு மத்தியில் ஹாசன் தொகுதி முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பான ஆயிரக்கணக்கான ஆபாச வீடியோக்கள் இணையதளத்தில் வெளியாகி, நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பின்னர் அவர் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹார ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அவரை மிஞ்சும் வகையில் பெங்களூருவில் மேலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதன் விபரம் வருமாறு;-
பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியரும், கிரிக்கெட் பயிற்சியாளருமாக இருப்பவர் ஏபிவி மேத்யூ. இவர் சில பெண்கள் மற்றும் இளம் பெண்களுடன் அந்தரங்கமாக இருந்த காட்சிகளை வீடியோ எடுத்ததாக பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கொனனகுண்டே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், மேத்யூவிடம் 2500-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இருப்பதாகவும், அவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறியுள்ளார். இதை அறிந்த மேத்யூ தலைமறைவாகி விட்டார். பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண் மகளிர் ஆணையத்திலும் மேத்யூ மீது இது தொடர்பாக புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து கொனனகுண்டே போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ஏபிவி மேத்யூவை தீவிரமாக தேடி வருகின்றனர்.
- லடாக்கில் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
- லே நகரில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்திற்கு தீ வைத்து அதன் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர்.
யூனியன் பிரதேசமாக உள்ள லடாக்கிற்கு தனி மாநில அந்தஸ்து வழங்கவேண்டும், அரசியலமைப்பின் 6-வது அட்டவணையில் சேர்க்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடந்து வருகிறது. இதுதொடர்பாக மத்திய அரசு சார்பில் அடுத்த மாதம் 6-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, லடாக்கில் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. நேற்று காலை முழு அடைப்பு போராட்டம் நடந்தது. அப்போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். போலீசாரின் வாகனங்களுக்கு தீவைத்தனர்.
மத்திய அரசுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் லே நகரில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்திற்கு தீ வைத்து அதன் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.
இதனிடையே, போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை கலைத்தனர். இந்த வன்முறையில் 4 பேர் உயிரிழந்தனர். 80-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இதனையடுத்து போராட்டத்தைக் கட்டுப்படுத்த லேவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. எவ்வித அசம்பாவிதமும் நடக்காமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், லடாக்கில் நிலைமை கட்டுக்குள் இருக்கிறது என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நேற்று மாலை 4 மணியில் இருந்து அங்கு எந்த வன்முறை சம்பவமும் நிகழவில்லை என்றும் வன்முறையைத் தூண்டும் விதமான பழைய வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டாம் எனவும் உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
- சரணடைந்தவர்களில் 21 பெண்கள், ஒரு 17 வயதுச் சிறுவன், மற்றும் 16, 17 வயதுடைய இரண்டு சிறுமிகள் ஆகியோரும் அடங்குவர்
- சரணடைந்த மாவோயிஸ்டுகள் அனைவருக்கும் ஆரம்ப நிதியுதவியாக தலா ரூ. 50,000 வழங்கப்பட்டது.
சத்தீஸ்கரின் தாந்தேவாடா மாவட்டத்தில் நேற்று (புதன்கிழமை) ஒரே நாளில் 71 மாவோயிஸ்டுகள் காவல்துறை அதிகாரிகளிடம் சரணடைந்தனர்.
இதில், 30 மாவோயிஸ்டுகள் மொத்தமாக ரூ. 64 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டிருந்த முக்கிய நபர்கள் ஆவர்.
சரணடைந்தவர்களில் 21 பெண்கள், ஒரு 17 வயதுச் சிறுவன், மற்றும் 16, 17 வயதுடைய இரண்டு சிறுமிகள் ஆகியோரும் அடங்குவர்.
பஸ்தர் சரக காவல்துறை அறிமுகப்படுத்திய மறுவாழ்வுத் திட்டங்களால் ஈர்க்கப்பட்டு இவர்கள் சரணடைந்துள்ளதாக தாந்தேவாடா காவல்துறை கண்காணிப்பாளர் கவுரவ் ராய் தெரிவித்தார்.
சரணடைந்த மாவோயிஸ்டுகள் அனைவருக்கும் ஆரம்ப நிதியுதவியாக தலா ரூ. 50,000 வழங்கப்பட்டது.
நாராயண்பூர் மாவட்டத்தில் திங்களன்று நடந்த மோதலில், மாவோயிஸ்ட் அமைப்பின் முக்கியத் தலைவர்களான ராஜு தாதா மற்றும் கோசா தாதா இருவரும் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- கடந்த 2022 செப்டம்பர் மாதம் நியமிக்கப்பட்டார்.
- ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதில் நீண்டகால அனுபவம் உண்டு
முப்படை தலைமை தளபதி அனில் சவுகானின் பதவிக்காலம் 2026 வரை நீட்டிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
முப்படை தலைமை தளபதியாக இருந்த பிபின் ராவத் டிசம்பர் 2021 இல் உயிரிழந்ததை தொடர்ந்து அந்த பதவிக்கு அனில் சவுகான் கடந்த 2022 செப்டம்பர் மாதம் நியமிக்கப்பட்டார்.
இந்திய இராணுவத்தில் சுமார் 40 ஆண்டுகளாக பணியாற்றி வரும் அனில் சவுகான் பல உயரிய பதக்கங்களை பெற்றுள்ளார். அவருக்கு ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதில் நீண்டகால அனுபவம் உண்டு.
இந்நிலையில் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முப்படைத் தளபதி மற்றும் ராணுவ விவகாரங்கள் துறை செயலாளராக அனில் சௌஹானின் பதவிக்காலம் 2026 மே 30-ஆம் தேதி வரையில் அல்லது மறு உத்தரவு வரும் வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 38,000 பாடல்களைப் பாடி சாதனை புரிந்து அசாம் மக்களின் அன்பை சம்பாதித்தவர் இவர்.
- கமர்குச்சி கிராமத்தில் கர்க்கின் உடல் அரசு மரியாதையுடன் செவ்வாய்க்கிழமை(செப். 23) தகனம் செய்யப்பட்டது.
பிரபல அசாமிய பாடகர் ஜூபின் கார்க் கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி சிங்கப்பூரில் கடலில் ஸ்கூபா டைவிங் செய்தபோது விபத்து ஏற்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
அசாமி, ஹிந்தி மற்றும் வங்காளம் உள்பட பல மொழிகளில் இதுவரை 38,000 பாடல்களைப் பாடி சாதனை புரிந்து அசாம் மக்களின் அன்பை சம்பாதித்தவர் இவர்.
கவுஹாத்தி அருகேயுள்ள கமர்குச்சி கிராமத்தில் கர்க்கின் உடல் அரசு மரியாதையுடன் செவ்வாய்க்கிழமை(செப். 23) தகனம் செய்யப்பட்டது.
மறுபுறம் கார்க்கின் மரணம் விபத்து தானா என்பது குறித்த சந்தேகங்களும் எழுந்து வருகின்றன.
இந்த நிலையில், ஜூபின் கார்க் மரண வழக்கை விசாரிக்க உருவக்கப்பட்டுள்ள விசாரணைக் குழுவுக்கு ஐபிஎஸ் அதிகாரி எம். பி. குப்தா தலைமை வகிப்பார் என்றும், 10 அதிகாரிகள் கொண்ட இந்த குழு விரிவன விசாரணை நடத்தி அறிக்கையை அஸ்ஸாம் அரசிடம் விரைவில் தாக்கல் செய்யும் என்று அம்மநில முதல்வர் ஹிமந்த பிச்வவா சர்மா தெரிவித்தார்.
- தேதி வாரியாக தேர்வுகள் குறித்த விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின்கீழ் நாடு முழுவதிலும் ஆயிரக்கணக்கான பள்ளிகள் மற்றும் வெளிநாடுகளிலும் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
2025-26ம் கல்வியாண்டுக்கான சிபிஎஸ்சி 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான உத்தேச கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி 17ம் தேதி முதல் ஜுலை 15ம் தேதிவரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பாடம், தேதி வாரியாக தேர்வுகள் குறித்த விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது உத்தேச அட்டவணை என்றும், பள்ளிகள் மாணவர்களின் இறுதிப் பட்டியலைச் சமர்ப்பித்த பிறகு இறுதி கால அட்டவணை வெளியிடப்படும் என்றும் CBSE தெரிவித்துள்ளது.
இந்த தேர்வில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுமார் 45 லட்சம் மாணவர்கள் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின்கீழ் நாடு முழுவதிலும் ஆயிரக்கணக்கான பள்ளிகள் மற்றும் வெளிநாடுகளிலும் பள்ளிகள் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.






