என் மலர்tooltip icon

    இந்தியா

    வந்தே மாதரம் பாடல் குறித்து மக்களவையில் இன்று 10 மணி நேர சிறப்பு விவாதம்!
    X

    வந்தே மாதரம் பாடல் குறித்து மக்களவையில் இன்று 10 மணி நேர சிறப்பு விவாதம்!

    • நாட்டின் தேசியப் பாடலான வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு இன்று கொண்டாடப்படுகிறது.
    • பிரதமர் மோடி இன்று 10 மணி நேர சிறப்பு விவாதத்தை தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்

    பரபரப்பான அரசியல் சூழலில் பாராளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் கடந்த 1 ஆம் தேதி தொடங்கியது. வருகிற 19-ந் தேதி வரை இந்த கூட்டம் நடைபெறுகிறது.

    SIR குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் சில நாட்களுக்கு பாராளுமன்றம் முடங்கியது. திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் அனல் பறக்கும் விவாதம் நடைபெற்றது.

    இந்நிலையில், நாட்டின் தேசியப் பாடலான வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு இன்று கொண்டாடப்படுவதால் அதன் வரலாறு குறித்த விவாதம் பாராளுமன்றத்தில் நடைபெறுகிறது.

    'வந்தே மாதரம்' இயற்றப்பட்டதன் 150வது அண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மக்களவையில் பிரதமர் மோடி இன்று 10 மணி நேர சிறப்பு விவாதத்தை தொடங்கி வைத்து உரையாற்ற உள்ளார்

    இதன் மூலம் வந்தே மாதரம் பாடல் குறித்து பல்வேறு முக்கியமான, அறியப்படாத தகவல்கள் தெரியவரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வந்தே மாதரம் பாடலில் இருந்து முக்கிய வரிகள் கடந்த1937-ம் ஆண்டு நீக்கப்பட்டதே இந்தியாவின் பிரிவினைக்கு காரணம் என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×