என் மலர்
சென்னை
- பொன்.ராதாகிருஷ்ணனுக்கு தென்காசி, பரமக்குடி, மேட்டுப்பாளையம், பழனி ஆகிய 4 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
- மொத்தம் உள்ள 234 தொகுதிகளும் 72 நிர்வாகிகளுக்கு பங்கிட்டு ஒதுக்கப்பட்டுள்ளன.
சென்னை:
தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன.
தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜ.க. இணைந்து தேசிய ஜனநாயக கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணியில் அ.ம.மு.க., இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள பா.ஜ.க. முழு வீச்சில் தயாராகி வருகிறது. அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும் பா.ஜ.க. பிரசார பணிகளை வியூகம் அமைத்து முன் னெடுத்து உள்ளன.
கட்சியின் முக்கிய தலைவர்கள் சுற்றுப்பயணம் செய்து பிரசாரங்களை மேற்கொள்ள ஒவ்வொரு வருக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தேர்தலை சந்திக்க ஒவ்வொரு தொகுதியையும் தயார் செய்யும் வகையில் தமிழ்நாடு பா.ஜ.க. சார்பில் தொடர் சுற்றுப்பயணம் செய்வதற்கு பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்கள். அதில் 2 முதல் 7 சட்டசபை தொகுதிகள் ஒவ்வொருவருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் மத்திய மந்திரி எல்.முருகன் திருப்பரங்குன்றம், ராதாபுரம், வால்பாறை, திருப்பூர் வடக்கு, உதகமண்டலம் ஆகிய 5 தொகுதிகளுக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வானதி சீனிவாசனுக்கு திருப்பூர் தெற்கு, குன்னூர், கோவை தெற்கு ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது. தமிழிசை சவுந்தரராஜனுக்கு கும்மிடிப்பூண்டி, மயிலாப்பூர், நாங்குனேரி, பொள்ளாச்சி, கிள்ளியூர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அண்ணாமலை-சிங்காநல்லூர், மதுரை தெற்கு, காரைக்குடி, ஸ்ரீவைகுண்டம், விருகம்பாக்கம், பத்மநாபபுரம் ஆகிய 6 தொகுதிகளுக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முதுகுளத்தூர், விளவன்கோடு, திருப்பத்தூர் சிவகங்கை, உடுமலைப்பேட்டை ஆகிய தொகுதிகளுக்கு எச்.ராஜாவும் எழும்பூர், ராசிபுரம், பர மத்திவேலூர் தொகுதிகளுக்கு வி.பி.துரைசாமியும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளார்கள்.
பொன்.ராதாகிருஷ்ணனுக்கு தென்காசி, பரமக்குடி, மேட்டுப்பாளையம், பழனி ஆகிய 4 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
மொத்தம் உள்ள 234 தொகுதிகளும் 72 நிர்வாகிகளுக்கு பங்கிட்டு ஒதுக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள பா.ஜ.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் தமிழ்நாட்டு வளர்ச்சியில் அனைவரும் பங்கெடுப்போம். மக்களிடம் இருந்து மக்களுக்காகஎன்ற கோஷத்தோடு மக்களிடம் நேரடியாக கருத்து கேட்கும் பிரசார பயணத்தை இன்று தொடங்குகிறது.
இதன் தொடக்க விழா இன்று அமைந்தகரை அய்யாவு மகாலில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடக்கிறது. மத்திய மந்திரி எல்.முருகன் இந்த கருத்து கேட்பு வாகனத்தை தொடங்கி வைக்கிறார். மேலிட பொறுப்பாளர்கள் சுதாகர் ரெட்டி, அரவிந்த் மேனன் மற்றும் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு உறுப்பினர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இந்த வாகனம் தமிழ்நாடு முழுவதும் செல்லும். ஒவ்வொரு பகுதியிலும் என்னென்ன தேவைகள்? மக்களின் எதிர்பார்ப்பு என்ன? என்பதை கேட்டறிந்து அதன் அடிப்படையில் பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை தயார் செய்ய திட்டமிட்டுள்ளது.
புதுவையிலும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பா.ஜ.க. சார்பில் மக்களி டம் கருத்துக் கேட்டு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது. இதற்காகப் படிவம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த படிவத்தை மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா புதுவை கடற்கரை காந்தி திடல் அருகே இன்று மாலை வெளியிடுகிறார்.
உங்களின் விருப்பம், எங்களின் வாக்குறுதி எனும் தலைப்பில் இந்த படிவம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த படிவத்தில் கருத்து தெரிவிப்பவரின் பெயர், தொகுதி, தொலைபேசி எண் உட்பட விவரங்கள் அடங்கியிருக்கும். இந்தப் படிவத்தில் இருந்து வரும் கருத்துகளின் அடிப்படை யில்தான் தேர்தல் வாக்குறுதி அமையும் என கூறப்படுகிறது.

- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.
- வள்ளுவர் சாலை, கோத்தாரி நகர், மவுண்ட் பூந்தமல்லி சாலை, கிருஷ்ணவேணி நகர்.
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (31.01.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,
ராமாபுரம்: மணப்பாக்கம், முகலிவாக்கம், கொளப்பாக்கம், ஜெய் பாலாஜி நகர், வெங்கடேஸ்வரா நகர், வள்ளுவர் சாலை, கோத்தாரி நகர், மவுண்ட் பூந்தமல்லி சாலை, கிருஷ்ணவேணி நகர், சிஆர்ஆர் புரம், ராமமூர்த்தி அவென்யூ, மேக்ஸ்வொர்த் நகர், ஏஜிஎஸ் காலனி, ஐபிஎஸ் காலனி, அம்பேத்கர் நகர், எம்ஜிஆர் நகர்.
திருமுல்லைவாயல்: போத்தூர், பொக்கிஷம் பூமி நகர், கன்னடபாளையம், சிவா கார்டன், செல்லி அம்மன் நகர், லட்சுமி நகர், ஆர்.கே.ஜே.வள்ளி வேல் நகர், தாய் நகர்.
புழல்: சேந்திரம்பாக்கம், தீயபாக்கம், கொசப்பூர், தியாகை விவாதசி நகர், கானம் பாளையம், வெங்கடேஷ்வரா நகர், ஏவி டைல்ஸ், பெரியார் நகர், நாகாத்தம்மன் கோவில்.
அலமாதி: கீழ்கொண்டையூர், அரக்கம்பாக்கம், கர்லப்பாக்கம், தாமரைப்பாக்கம், கதவூர், வேளச்சேரி, பாண்டேஸ்வரம், காரணை, புதுக்குப்பம், வாணியன் சத்திரம், அயிலச்சேரி, குருவாயில், பூச்சியாத்திபேடு, கொடுவள்ளி, ரெட் ஹில்ஸ் சாலை, பால்பண்ணை ரோடு, வேல் டெக் ரோடு, கொள்ளுமேடு ரோடு.
பொன்னேரி: தேர்வாய்கண்டிகை மற்றும் சிப்காட், கோபால் ரெட்டி கண்டிகை, பொல்லனூர், புதுநகர், கரடிபுதூர், புதூர், என்.எம்.கண்டிகை, கண்ணன்கோட்டை, பஞ்சாலை, அமரம்பேடு, அக்கரகாரம், தாணிப்பூண்டி, பெரியபுலியூர் சிறுவாடா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
- சென்னை கலைவாணர் அரங்கத்தில் பிப்ரவரி 13ம் தேதி அன்று விழா நடைபெறுகிறது.
- 2014-2022ம் ஆண்டுகளுக்கான சின்னத்திரை விருதுகளையும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
2016-2022ம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், 2014-2022ம் ஆண்டுகளுக்கான சின்னத்திரை விருதுகளையும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் பிப்ரவரி 13ம் தேதி அன்று நடைபெறும் விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார்.
சிறந்த நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு ஒரு சவரன் தங்கப்பதக்கம், சான்றிதழ் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், 2016-2022ம் ஆண்டுகளுக்கான சிறந்த இயக்குநர்களுக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சிறந்த இயக்குநர்கள் விருது 2016-லோகேஷ் கனகராஜ், 2017-புஷ்கர் காயத்ரி, 2018- மாரி செல்வராஜ், 2019- பார்த்திபன், 2020- சுதா கொங்கரா, 2021- தா.செ.ஞானவேல், 2022-கவுதம் ராமச்சந்திரன் ஆகியோருக்கு சிறந்த இயக்குனர்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களை உயர்வாக சித்திரிக்கும் படங்களாக அருவி, தர்மதுரை, கனா, பொன் மகள் வந்தாள் படங்களுக்கு சிறப்பு பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களை உயர்வாக சித்தரிக்கும் படங்களாக கமலி ஃபிரம் நடுக்காவேரி, நெற்றிக்கண், அவள் அப்படித்தான்-2க்கு சிறப்பு பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த படங்களுக்கு முதல் பரிசு ரூ.2 லட்சம், 2வது பரிசு ரூ.1 லட்சம், 3வது பரிசு ரூ.75,000, சிறப்பு பரிசு- ரூ.75,000 அறிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களை உயர்வாகச் சித்தரிக்கும் படத்திற்கு சிறப்பு பரிசாக ரூ.1.25 லட்சம் வழங்கப்படும்.
- சென்னை கலைவாணர் அரங்கத்தில் பிப்ரவரி 13ம் தேதி அன்று விழா நடைபெறுகிறது.
- 2014-2022ம் ஆண்டுகளுக்கான சின்னத்திரை விருதுகளையும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
2016-2022ம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், 2014-2022ம் ஆண்டுகளுக்கான சின்னத்திரை விருதுகளையும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் பிப்ரவரி 13ம் தேதி அன்று நடைபெறும் விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார்.
சிறந்த நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு ஒரு சவரன் தங்கப்பதக்கம், சான்றிதழ் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகளில் 2016-2022ம் ஆண்டுகளுக்கான சிறந்த திரைப்படங்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2016ம் ஆண்டு சிறந்த படம்- மாநகரம், 2017- அறம், 2018-பரியேறும் பெருமாள், 2019-அசுரன், 2020- கூழாங்கல், 2021- ஜெய்பீம், 2022- கார்கி ஆகிய படங்கள் சிறந்த படங்களாக தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
- சென்னை கலைவாணர் அரங்கத்தில் பிப்ரவரி 13ம் தேதி அன்று விழா நடைபெறுகிறது.
- 2014-2022ம் ஆண்டுகளுக்கான சின்னத்திரை விருதுகளையும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
2016-2022ம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், 2014-2022ம் ஆண்டுகளுக்கான சின்னத்திரை விருதுகளையும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் பிப்ரவரி 13ம் தேதி அன்று நடைபெறும் விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார்.
சிறந்த நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு ஒரு சவரன் தங்கப்பதக்கம், சான்றிதழ் வழங்கப்படுகிறது.
சிறந்த நடிகர்களுக்கான விருது சூர்யா, தனுஷ், விஜய்சேதுபதி, கார்த்தி, பார்த்திபன், ஆர்யா, விக்ரம் பிரபுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த நடிகைகளுக்கான விருது, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, ஜோதிகா, மஞ்சு வாரியர், அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், லியோ மோல் ஜோஸ், சாய் பல்லவிக்கு சிறந்த நடிகைகளுக்கான தமிழக அரசின் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
- சென்னை கலைவாணர் அரங்கத்தில் பிப்ரவரி 13ம் தேதி அன்று விழா நடைபெறுகிறது.
- 2014-2022ம் ஆண்டுகளுக்கான சின்னத்திரை விருதுகளையும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
2016-2022ம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், 2014-2022ம் ஆண்டுகளுக்கான சின்னத்திரை விருதுகளையும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் பிப்ரவரி 13ம் தேதி அன்று நடைபெறும் விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார்.
சிறந்த நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு ஒரு சவரன் தங்கப்பதக்கம், சான்றிதழ் வழங்கப்படுகிறது.
சிறந்த நடிகர்களுக்கான விருது சூர்யா, தனுஷ், விஜய்சேதுபதி, கார்த்தி, பார்த்திபன், ஆர்யா, விக்ரம் பிரபுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
- பல்கலைக்கழக மானியக் குழு ஒழுங்குமுறை விதிமுறைகள் இன்றைய சூழலுக்கு மிகவும் பொருத்தமானவை, மிகவும் தேவையானவை.
- சமூகநீதியை பாதுகாக்கும் நோக்குடன் மத்திய அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்திருப்பது வருத்தம் அளிக்கிறது.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
உயர்கல்வி நிறுவனங்களில் சாதி அடிப்படையிலான பாகுபாடுகளுக்கு முடிவு கட்டும் வகையில் பல்கலைக்கழக மானியக்குழு வகுத்து செயல்படுத்தியுள்ள 2026-ஆம் ஆண்டின் பல்கலைக்கழக மானியக் குழு ( உயர்கல்வி நிறுவனங்களில் சமத்துவத்தை மேம்படுத்துதல் ) ஒழுங்குமுறை விதிமுறைகளுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருக்கிறது. சமூகநீதியை பாதுகாக்கும் நோக்குடன் மத்திய அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்திருப்பது வருத்தம் அளிக்கிறது.
பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து வகையான உயர்கல்வி நிறுவனங்களிலும் சாதி அடிப்படையில் பாகுபாடுகள் நிலவுவதாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்தும், ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர் ரோகித் வெமுலா சாதி அடிப்படையிலான சீண்டல்களின் காரணமாக தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்தும், 2012-ஆம் ஆண்டில் பல்கலைக்கழக மானியக் குழு வகுத்த விதிகளின் போதாமை குறித்து உச்சநீதிமன்றம் எழுப்பிய வினாக்களின் அடிப்படையில் இந்த ஒழுங்குமுறை விதிகள் வகுக்கப்பட்டு அண்மையில் நடைமுறைப்படுத்தப்பட்டன.
இந்த விதிகளின்படி ஒவ்வொரு உயர்கல்வி நிறுவனத்திலும் சாதியப் பாகுபாடுகள் குறித்த புகார்களை விசாரிக்க சமத்துவக் குழுக்கள் அமைக்கப்படுவதும், அந்தக் குழுக்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியலினத்தவர், பழங்குடியினர் ஆகிய சமூகங்களின் பிரதிநிதிகள் இடம்பெற வேண்டியதும் கட்டாயம் ஆகும். இது பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களை சாதிய பாகுபாட்டில் இருந்து பாதுகாப்பதற்கான நடைமுறை தானே தவிர வேறு எந்த சமூகங்களுக்கும் எதிரான செயல் அல்ல.
ஒரு வகையில் பார்த்தால் இந்த விதிகள் வகுக்கப்படுவதற்கு முன்னோடி நான் தான். 2004--&09 ஆண்டு காலத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக நான் பதவி வகித்த போது, தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஆய்வுக்காக சென்ற போது அங்கு பயிலும் பட்டியலின, பழங்குடியின மாணவர்கள் தங்களுக்கு சாதிய அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுவதாக என்னிடம் புகார் தெரிவித்தனர். எய்ம்ஸ் வளாகத்தில் உள்ள விடுதிகள், உணவகங்கள், விளையாட்டுகள், விடைத்தாள் மதிப்பீடுகள் உள்ளிட்ட அனைத்து நிலைகளிலும் தங்களுக்கு பாகுபாடு இழைக்கப்படுவதாக என்னிடம் குற்றஞ்சாட்டினார்கள்.
அதைத் தொடர்ந்து அப்போது பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவராக இருந்த பட்டியலினத்தைச் சேர்ந்த பேராசிரியர் சுக்தேவ் தோரட் தலைமையில் குழு அமைத்து சாதிய அடிப்படையில் மாணவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைக் களைய மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி கேட்டுக்கொண்டேன். அதன்படியே தோரட் குழு அளித்த அறிக்கையை செயல்படுத்தவும் ஆணையிட்டேன்.
உயர்கல்வி நிறுவனங்களில் சாதியப் பாகுபாடுகள் நிலவுவது உண்மை. பல்கலைக்கழக மானியக்குழு நடைமுறைப் படுத்தியுள்ள விதிகளின் மூலம் பாகுபாடுகளை களைய முடியும் என்பதும் உண்மை. அந்த விதிகளுக்கு எதிராக சிலர் வழக்குத் தொடர்ந்திருக்கிறார்கள் என்பதற்காகவே விதிகளுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டிய தேவை இல்லை.
அதுமட்டுமின்றி, 2012-ஆம் ஆண்டில் வகுக்கப்பட்ட பல்கலைக்கழக மானியக் குழுவின் ஒழுங்குமுறை விதிகள் போதுமானவையாக இல்லை என்று உச்சநீதிமன்றம் கூறியதன் அடிப்படையில் தான் இப்போதைய விதிகள் வகுக்கப்பட்டன. அவ்வாறு இருக்கும் போது, இப்போதைய விதிகளை கிடப்பில் போட்டுவிட்டு, 2012-&ஆம் ஆண்டின் விதிகளை மறு உத்தரவு வரும் வரை செயல்படுத்த வேண்டும் என்று கூறுவதும் நியாயமல்ல.
பல்கலைக்கழக மானியக் குழு ( உயர்கல்வி நிறுவனங்களில் சமத்துவத்தை மேம்படுத்துதல்) ஒழுங்குமுறை விதிமுறைகள் இன்றைய சூழலுக்கு மிகவும் பொருத்தமானவை, மிகவும் தேவையானவை. இந்த உண்மையை உச்ச நீதிமன்றத்தில் போதிய தரவுகளுடன் எடுத்துக் கூறி பல்கலைக்கழக மானியக் குழுவின் ஒழுங்குமுறை விதிகளுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை விரைந்து அகற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் தமிழ்நாடு அறிவுசார் நகரம் அமைக்க அடிக்கல்!
- நம் திராவிட மாடல் வானத்தை நோக்கிப் போடும் ஏணி இது.
இனிவரும் காலம், அறிவால் உலகை வெல்லும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கான காலம் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் தமிழ்நாடு அறிவுசார் நகரம் அமைக்க அடிக்கல்!
உயர்கல்வி, R&D, தொழில்நுட்பம், தொழில்முனைவு ஆகியவை ஒருங்கிணையும் நிலப்பரப்பாக TamilNaduKnowledgeCity அமையும். நம் DravidianModel வானத்தை நோக்கிப் போடும் ஏணி இது!
மேலும், @Cambridge_Uni, IIT-M, மெல்பர்ன் பல்கலைக்கழகம்,
@Adobe முதலியவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் & விருப்பக் கடிதங்களும் இந்தியா சர்வதேசக் கல்வி மாநாட்டில் கையெழுத்தாகின.
இனி வரும் காலம், அறிவால் உலகை வெல்லும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கான காலம்!
வெல்வோம் ஒன்றாக!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றனர்.
- ரெயில் மறுமார்க்கமாக தூத்துக்குடியில் இருந்து தாம்பரத்திற்கு வருகிற 1-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) இயக்கப்பட உள்ளது.
முருகப்பெருமானின் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கிய விழாக்களில் தைப்பூச திருவிழாவும் ஒன்றாகும்.
இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா வருகிற 1-ந்தேதி நடைபெறுகிறது. தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, கடந்த சில நாட்களாக பல்லாயிரக்கணக்கான முருக பக்தர்கள் திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக சென்று வருகின்றனர்.
ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றனர்.
இந்நிலையில் பக்தர்கள் வசதிக்காக சென்னையில் இருந்து சிறப்பு ரெயில் ஒன்று இயக்கிட வேண்டும் என்ற ரெயில் பயணிகளின் கோரிக்கையை ஏற்று தென்னக ரெயில்வே சார்பில் சிறப்பு ரெயில் இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, நாளை மறு நாள்(சனிக்கிழமை) சென்னை தாம்பரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரெயில் மறுமார்க்கமாக தூத்துக்குடியில் இருந்து தாம்பரத்திற்கு வருகிற 1-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) இயக்கப்பட உள்ளது.
இந்த ரெயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி வழியாக தூத்துக்குடி வந்தடைகிறது.
மொத்தம் 20 பெட்டிகளுடன் இயக்கப்பட உள்ள இந்த ரெயில் நாளை மறுநாள் நள்ளிரவு 11.50 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள்(சனிக்கிழமை) நண்பகல் 11 மணிக்கு தூத்துக்குடி வந்தடைகிறது.
இதேபோல் மறுமார்க்கமாக வருகிற 1-ந்தேதி இரவு 11.55 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்படும் ரெயில் மறுநாள்(2-ந்தேதி) காலை 10 மணிக்கு தாம்பரம் சென்றடைகிறது. இந்த ரெயிலால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- அமெரிக்காவின் பொருளாதாரம் மந்தமான சூழ்நிலைக்கு சென்று கொண்டு இருக்கிறது.
- அமெரிக்க டாலரை அந்நிய செலவாணியாக கொண்டுள்ள நாடுகள் அதன் மதிப்பை தங்கமாக மாற்ற தொடங்கி இருக்கிறார்கள்.
தங்கம் விலை உயர்வுக்கான காரணங்கள் குறித்து தமிழ்நாடு தங்கம் மற்றும் வைரம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் கூறியதாவது:-
உலக நாடுகள் தங்களிடம் உள்ள அந்நிய செலவாணியான அமெரிக்க டாலரை தங்கமாக மாற்ற தொடங்கியதே இந்த விலை உயர்வுக்கு காரணமாகும். தொடர்ந்து தங்கத்தின் விலை உயர்ந்து வருவதற்கு முக்கிய முதல் காரணம்.
அமெரிக்காவின் பல நடவடிக்கைகள் உலக அளவில் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனுடைய தொடக்கமாக அமெரிக்காவின் பொருளாதாரம் மந்தமான சூழ்நிலைக்கு சென்று கொண்டு இருக்கிறது.
ஒரு வேளை அமெரிக்க பொருளாதாரம் மந்தமானால் அமெரிக்க டாலரின் மதிப்பிழப்பு ஏற்படும். ஏற்கனவே அமெரிக்க டாலரை அந்நிய செலவாணியாக கொண்டுள்ள நாடுகள் அதன் மதிப்பை தங்கமாக மாற்ற தொடங்கி இருக்கிறார்கள்.
அதனால் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதுமட்டும் அல்லாமல் சமீபகாலமாக ஈரான் மீது போர் தொடுக்க வேண்டிய நோக்கத்தில் அமெரிக்கா போர்க் கப்பல்கள் சென்று கொண்டு இருக்கின்றன.
அது அங்கு சென்று போர் சூழல் ஏற்பட்டால் இன்னும் பெரிய அளவில் பாதிப்பை உலகளவில் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் உலகப் பொருளாதாரம் பெரிய கேள்விக் குறியை ஏற்படுத்தும் நிலை உருவாகும் எனக் கருதி பெரும்பாலான நாடுகள் அமெரிக்க டாலர்களை தங்கமாக மாற்ற தொடங்கி இருக்கிறார்கள். இது 2-வது முக்கிய காரணமாகும்.
இந்த இரண்டும் ஒரு சேர நடைபெற்று வருவதால் சர்வதேச சந்தையில் தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து வருகிறது. இன்னும் தங்கம் விலை எந்த அளவிற்கு உயரும் என்று கணக்கிட முடியாத அளவிற்கு உயரும். தங்கம் மட்டுமல்ல வெள்ளியின் விலையும் உயரும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- சென்னையில் அடுத்தடுத்த பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களால் தமிழகமே அதிர்ச்சி.
- எந்தக் கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி என்றும் வாய்கூசாமல் பொய்யையே திரும்பத் திரும்பக் கூறி வருகிறார்.
தலைநகர் சென்னையில் அடுத்தடுத்த பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களால் தமிழகமே அதிர்ச்சியில் உள்ளதாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துவிட்டது என்பதற்குச் சான்றாக நாள்தோறும் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
தலைநகர் சென்னையில் அடுத்தடுத்த பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களால் தமிழகமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.
சென்னை அடையாறு பகுதியில் காவலாளியாக வேலை பார்த்து வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளியும் அவர் மனைவியும் குழந்தையும் படுகொலை செய்யப்பட்ட சம்பவமும், நந்தனத்தில் அரசுக் கல்லூரி கேண்டீனில் பணிபுரிந்த இளம்பெண் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவமும் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கின்றன. இச்சம்பவங்கள், கடும் கண்டனத்திற்கு உரியவை.
தமிழ்நாட்டு மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை, பிழைப்புக்காகத் தமிழ்நாட்டை நம்பி வந்தவர்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்ற சூழலைத்தான் இந்தக் கபட நாடகத் திமுக அரசு உருவாக்கி வைத்திருக்கிறது.
கொள்ளை அடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துவதால், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களைத் தடுப்பதிலும், சட்டம் ஒழுங்கைக் காப்பதிலும் இந்த ஆட்சியாளர்கள் கவனம் செலுத்துவதில்லை. இதனால்தான் கல்வி நிறுவனங்களிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் அதிகரிக்கின்றன.
குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டிய அரசு, மெத்தனப் போக்கைக் கடைப்பிடிப்பதால், கொடுங்குற்றங்களில் ஈடுபடச் சமூக விரோதக் கும்பல்களுக்குத் துணிச்சல் வருவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்குத் தண்டனை பெற்றுத் தர உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், முதல்வர் அவர்கள் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு என்றும், எந்தக் கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி என்றும் வாய்கூசாமல் பொய்யையே திரும்பத் திரும்பக் கூறி வருகிறார்.
ஆட்சியின் இறுதிக் கால நாள்களை எண்ணிக்கொண்டிருக்கும் முதல்வர் அவர்கள், இனி இருக்கும் கொஞ்சம் நாள்களிலாவது சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க, தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
மக்களுக்கு எதிரான, மக்களுக்குக் கொஞ்சமும் பாதுகாப்பே இல்லாத, இந்த வெற்று விளம்பர மாடல் ஆட்சிக்கு முடிவுரை எழுதத் தமிழக மக்கள் தயாராகிவிட்டார்கள்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- பொம்மை முதல்வர் மு.க.ஸ்டாலின் வேடிக்கை பார்த்து வருவது வெட்கக்கேடானது.
- அக்கறையற்ற அமைச்சரின் பேச்சு வேதனைக்குரியது மட்டுமல்ல கண்டனத்திற்குரியதும் கூட.
சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் 22 வயது பெண்ணை 5 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இபிஎஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
நந்தனம் அரசுக் கலைக்கல்லூரி வளாகத்தில் உள்ள கேண்டினில் பணிக்கு சேர்ந்த பெண் ஒருவரை, கல்லூரி வளாகத்திலேயே வைத்து கேண்டின் மாஸ்டர் மற்றும் பலர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நெஞ்சை பதற வைக்கிறது.
தமிழ்நாட்டில் நாள்தோறும் கொடுரமான பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை இந்த பொம்மை முதல்வர் மு.க.ஸ்டாலின் வேடிக்கை பார்த்து வருவது வெட்கக்கேடானது.
சென்னையில் நேற்று பீகாரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு அவரும் அவரது கணவரும் குழந்தையும் கொடூரமாக கொல்லப்பட்ட, இந்தியாவை பதைபதைக்க செய்த சம்பவத்தின் பதட்டமே இன்னும் ஓய்வுறாத நிலையில்,
இன்று மீண்டும் ஒரு பெண், அரசுக் கல்லூரியின் கேண்டினில் வைத்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளாரே, என்பது குறித்து கேட்டால் அப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பதே தெரியாது என்கிறார் அமைச்சர் மா.சுப்பிரமணியம் அவர்கள்.
அக்கறையற்ற அமைச்சரின் பேச்சு வேதனைக்குரியது மட்டுமல்ல கண்டனத்திற்குரியதும் கூட.
ஆயிரம் முறை நான் மீண்டும் மீண்டும் கூறிவருவதை போல திமுக ஆட்சியில் தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாக மாறிப்போயுள்ளதையே இந்த தொடர் சம்பவங்கள் அழுத்தமாக நிரூபித்துள்ளது. இனியும் பொம்மை போன்று செயல்படாது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்த விடியா அரசின் முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.






