என் மலர்
உள்ளூர் செய்திகள்
- குழந்தை கண்ணெதிரே தன்னுடைய தகப்பன் உயிரிழந்தது மிகமிக கொடுமையானது.
- தமிழ்நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் காயமடைந்து இருக்கிறார்கள்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப்பயணிகள் பலியாகினர். இந்த சம்பவத்திற்கு சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.
இதையடுத்து பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு சட்டசபையில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. சட்டசபை உறுப்பினர்கள் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,
* பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் இரக்கமற்ற செயல்.
* குழந்தை கண்ணெதிரே தன்னுடைய தகப்பன் உயிரிழந்தது மிகமிக கொடுமையானது.
* தமிழ்நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் காயமடைந்து இருக்கிறார்கள்.
* இறந்து கிடக்கும் கணவர் அருகில் மனைவி அமர்ந்து அழும் காட்சி மனதை வாட்டியது.
* பயங்கரவாதிகளின் இரக்கமற்ற செயலை ஒருபோதும் ஏற்க முடியாது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.
- மெகா கூட்டணியை அமைப்பதற்கு எடப்பாடி பழனிசாமி திட்டம்.
- நாளை மறுநாள் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கும் எடப்பாடி பழனிசாமி ஏற்பாடு
சென்னை:
தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலை சந்திப்பதற்கு அனைத்து கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன.
தி.மு.க. தலைமையிலான கூட்டணியை வீழ்த்தி ஆட்சியில் அமர வேண்டும் என்பதில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக உள்ளார். இதற்காக பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. மீண்டும் கூட்டணி அமைத்துள்ளது.
இந்த கூட்டணியில் பா.ம..க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளையும் சேர்ப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணியை அமைப்பதற்கு எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு காயை நகர்த்தி வருகிறார்.
சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் அவர் அடுத்தடுத்து ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு இன்று இரவு சைவ அசைவ உணவுகளுடன் இரவு விருந்து அளிக்கிறார்.
இதைத் தொடர்ந்து நாளையும், நாளை மறுநாளும் கட்சி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. நாளை மாலை 4.30 மணி அளவில் அ.தி.மு.க. பூத் கமிட்டி பொறுப்பாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.
அ.தி.மு.க. சார்பில் மாநில அளவிலான நிர்வாகிகள் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று ஆய்வுக் கூட்டங்களை நடத்தி பூத் கமிட்டி பொறுப் பாளர்கள் போட்டிருப்பதை உறுதி செய்து எடப்பாடி பழனிசாமியிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதன்படி ஒவ்வொரு பூத்துக்கும் 45 வயதுக்குட்பட்ட 9 பேர் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களை கண்காணிப்பதற்காக 100-க்கும் மேற்பட்ட பொது கமிட்டி பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
மாநில அளவிலான நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் இந்த பூத் கமிட்டி பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். தேர்தல் நேரத்தில் அனைத்து பூத்களிலும் மிகுந்த கவனத்தோடு செயல்படுவதற்கான அறிவுரைகள் அவர்கள் மூலமாக பூத் கமிட்டியின் நிர்வாகிகளுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் தான் எடப்பாடி பழனிசாமி நாளை பூத்தமிட்டி பொறுப்பாளர்களுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபடு கிறார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பூத் கமிட்டி பொறுப்பாளர்களுக்கு சட்டமன்றதேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக பல்வேறு முக்கிய ஆலோசனைகளையும் கருத்துக்களையும் தெரிவிக்க உள்ளார். பூத் கமிட்டி நிர்வாகிகளை எப்படி ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும்? என்பது பற்றி இந்த கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து நாளை மறுநாள் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கும் எடப்பாடி பழனி சாமி ஏற்பாடு செய்திருப்ப தன் மூலம் சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு அவர் தீவிரமாக தயாராகி இருப்பது தெரியவந்து உள்ளது.
மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திலும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தப்பட உள்ளது. எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணம் தொடர்பா கவும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
- ஜம்முவில் மோசமான சூழ்நிலை நிலவுவதற்கு இது எடுத்துக்காட்டு.
- பயங்கரவாத அமைப்புகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப்பயணிகள் பலியாகினர். இந்த சம்பவத்திற்கு சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
* பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலாப்பயணிகள் பலியானதாக வந்த செய்தி பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
* தாக்குதலுக்கு பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஜம்முவில் மோசமான சூழ்நிலை நிலவுவதற்கு இது எடுத்துக்காட்டு.
* தாக்குதலில் தமிழர்கள் சிலர் பாதிக்கப்பட்டதாக தகவல் வந்த உடனேயே அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்ய உத்தரவிட்டேன்.
* காஷ்மீர் அரசுடன் இணைந்து பணியாற்றி பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய உதவி செய்யுமாறு உத்தரவிட்டுள்ளேன்.
* அப்பாவி மக்கள் மீதான தாக்குதலுக்கு இந்திய ஜனநாயகத்தில் இடமில்லை.
* பயங்கரவாத அமைப்புகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.
* பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து மாநிலம் திரும்ப நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன்.
* காஷ்மீருக்கு சென்று பணிகளை மேற்கொள்ள புதுக்கோட்டை கூடுதல் ஆட்சியர் அப்தாம் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு சட்டசபையில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியதையடுத்து சட்டசபை உறுப்பினர்கள் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.
- இன்று மாலை பஞ்ச மூர்த்திகள் படிச்சட்டத்தில் புறப்பாடு நடக்கிறது.
- விழாவின் கடைசி நாளான 10-ந் தேதி தீர்த்தவாரி.
தஞ்சாவூர்:
உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவில் மாமன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. கட்டிட கலையில் சிறந்து விளங்கும் இக்கோவிலுக்கு தினமும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா 18 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா இன்று (புதன்கிழமை) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக சந்திரசேகரர், பஞ்சமூர்த்திளுடன் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினார். தொடர்ந்து, கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று, மங்கள வாத்தியங்கள் முழங்க கொடியேற்றம் நடந்தது.
முன்னதாக பஞ்சமூர்த்திகளுக்கு கொடிமரம் முன்பு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, கோவில் வளாகத்தில் பல்லக்கில் எடுத்து வந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
விழாவின் முதல் நாளான இன்று மாலை 6.30 மணியளவில் பஞ்ச மூர்த்திகள் படிச்சட்டத்தில் புறப்பாடு நடக்கிறது. தொடர்ந்து, கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
2-ம் நாளான நாளை (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு மேல் பல்லக்கில் விநாயகர் புறப்பாடு நடைபெறுகிறது. மாலை 6.30 மணிக்கு சிம்ம வாகனத்தில் விநாயகர் புறப்பாடு நடக்கிறது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் காலை, மாலை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் அடுத்த மாதம் (மே) 7-ந்தேதி நடைபெற உள்ளது.
விழாவின் கடைசி நாளான 10-ந் தேதி தீர்த்தவாரி விழாவும், மாலையில் வெள்ளி ரிஷப வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடைபெறுகிறது. அன்றைய தினம் மாலையில் கொடியிறக்கத்துடன் விழா முடிவடைகிறது.
- சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள புது வியூகம்.
- எம்.எல்.ஏ.க்களுடன் அமர்ந்து எடப்பாடி பழனிசாமியும் உணவு அருந்துகிறார்.
சென்னை:
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள தயாராகியுள்ள அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சியினரை உற்சாகத்தோடு வைத்திருப்பதற்கான நடவடிக்கைகளிலும் இறங்கி உள்ளார்.
இதன்படி இன்று இரவு சென்னை அடையாறு பசுமைவழிச் சாலையில் உள்ள தனது இல்லத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவருக்கும் இரவு விருந்துக்கு அவர் ஏற்பாடு செய்திருக்கிறார். இந்த விருந்தில் 7 வகையான அசைவ உணவுகள் பரிமாறப்படுகிறது.

மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி, சிக்கன் 65, மீன் வறுவல், மட்டன் சுக்கா, முட்டை, இறால் தொக்கு ஆகியவை பரிமாறப்படுகிறது. அதே நேரத்தில் அசைவ சாப்பாட்டை விரும்பாதவர்கள், சைவ உணவை அருந்தும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சைவ உணவில் இட்லி, தோசை, இடியாப்பம், சப்பாத்தி, ஆகியவற்றுடன் சாதம் சாம்பார், ரசம், பொரியல், அவியல் போன்றவையும் இடம் பெற்று இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது தொடர்பாக ஒவ்வொரு எம்.எல்.ஏ.க்களையும் தொலைபேசியில் அழைத்து நீங்கள் சைவமா? அசைவமா? என கேட்டு, அதற்கேற்ப உணவு வகைகள் தயார் செய்யப்பட்டு உள்ளன.
இந்த இரவு விருந்தின் போது எம்.எல்.ஏ.க்களுடன் அமர்ந்து எடப்பாடி பழனிசாமியும் உணவு அருந்துகிறார்.
அப்போது சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தங்களது தொகுதி மக்களிடம் சென்று அவர்களது பிரச்சனைகளை கேட்டு தெரிந்து கொண்டு அதற்கேற்ப வேகமாக செயல்பட வேண்டும் என்பது போன்ற அறிவுரைகளை எடப்பாடி பழனிசாமி வழங்க உள்ளார். எடப்பாடி பழனிசாமி அளிக்க உள்ள இந்த இரவு விருந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
- சூறைக்காற்றுடன் பலத்த மழை கொட்டியது.
- கோடை மழையால் மக்கள் மகிழ்ச்சி
நெல்லை:
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையிலும், கடந்த 2 நாட்களாக மாலை நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவி வருகிறது.
நெல்லையை பொறுத்த வரை நேற்று 2-வது நாளாக மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மாநகரில் நேற்று மாலையில் தொடங்கி சுமார் 1 மணி நேரம் பயங்கர இடி-மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. மேலும் சூறைக்காற்றும் வீசியது.
சில இடங்களில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மாநகரில் பாளை சமாதான புரம், கே.டி.சி. நகர், வண்ணார்பேட்டை, சந்திப்பு, புதிய பஸ் நிலையம், பெருமாள்புரம் பகுதிகளில் பரவலாக பெய்த கோடை மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மணிமுத்தாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கனமழை கொட்டித்தீர்த்தது. கன்னடியன் கால்வாய் பகுதியை ஒட்டிய கிராமங்க ளிலும் கனமழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 31.20 மில்லிமீட்டரும், மணிமுத்தாறு மற்றும் மூலைக்கரைப்பட்டி யில் தலா 16 மில்லிமீட்டரும் மழை பெய்தது.
அம்பை சுற்றுவட்டா ரத்தில் நேற்று மாலையில் இடி-மின்னலுடன் பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சுமார் 1 மணி நேரம் பெய்த மழையால் சில இடங்களில் மின்தடை ஏற்பட்டாலும் உடனடியாக சீரமைக்கப்பட்டு மின்வினியோகம் மீண்டும் வழங்கப்பட்டது.
களக்காடு சுற்றுவட்டாரத்தில் பெய்த கோடை மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அங்கு 9.40 மில்லிமீட்டர் மழை பெய்தது. 1 மணி நேரம் கொட்டி தீர்த்த மழையினால் தெருக்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் குளம் போல் தண்ணீர் தேங்கியது.
மூலைக்கரைப்பட்டி தங்கம் நகரில் மின்னல் தாக்கியது. இதனால் வீடுகளில் இருந்த மின் மீட்டர்கள், டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற மின் சாதனங்கள் கருகின. 50-க்கும் மேற்பட்ட மின் சாதனங்கள் சேதமடைந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர். அத்துடன் அங்குள்ள சுடலை மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான பால் விற்பனை கடையில் மின்னல் தாக்கியதில் வயர்கள் கருகி தீ பற்றியது.
இதனைத் தொடர்ந்து கடும் புகைமூட்டம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீயினால் கடையில் இருந்த பொருட்கள் நாசம் அடைந்தன. மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. மின் சாதனங்கள் கருகியதால் பொதுமக்கள் பாதிப்படைந்து ள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலும் நேற்று மாலையில் இடி-மின்னலுடன் கனமழை கொட்டியது. குறிப்பாக விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. திருச்செந்தூர், காயல்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. அதிகபட்சமாக விளாத்திகுளத்தில் 23 மில்லிமீட்டர் மழை பெய்தது.
தூத்துக்குடி-திருச்செந்தூர் ரோடு செல்சினி காலனி அருணா நகர் பகுதியில் நேற்று மாலையில் மழை பெய்தபோது வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்த மீனாட்சி(வயது 60) என்பவர் மீது பயங்கரமாக இடியுடன் கூடிய மின்னல் தாக்கியதில் உயிரிழந்தார்.
புதியம்புத்தூர், ஓட்டப்பிடாரம் பகுதிகளில் ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மதிய நேரம் மக்கள் வெளியில் நடமாடுவதையே தவிர்த்து வந்தனர். இந்நிலையில் நேற்று மதியம் திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலையில் மேகம் திரண்டு பலத்த காற்றுடன் மழை பெய்தது.
புதியம்புத்தூர், ஓட்டப்பிடாரம், சாமி நத்தம், சில்லாநத்தம், ஜம்புலிங்கபுரம், ராஜாவின் கோவில், தட்டப்பாறை ஆகிய கிராமங்களில் இடி-மின்னலுடன் மிதமான மழை பெய்தது. தட்டப்பாறையில் இடி-மின்னல் தாக்கி பசுமாடு இறந்தது. இந்த மழையால் வெயிலின் தாக்கம் குறைந்து பொதுமக்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
ஏற்கனவே கோடை மழையால் பாதிக்கப்பட்டு வந்த உப்பு உற்பத்தி, கடந்த சில நாட்களாக இயல்பு நிலைக்கு திரும்பி வந்தது. பல உப்பளங்களில் பாத்திகளை தயார் செய்து உப்பு உற்பத்திக்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர். இந்நிலையில் நேற்று திடீரென பெய்த மழையால் மீண்டும் உப்பு உற்பத்தி பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
- விடுதிகள், லாட்ஜ்களில் அதிரடி சோதனை.
- பொதுமக்கள் கூடும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு.
கோவை:
ஜம்மு-காஷ்மீரில் உள்ள பகல்ஹாம் தீவிரவாதிகள் நடத்திய பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளிலும் நேற்றிரவு முதல் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர்.
மாநகரில் போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில் 1000 போலீசாரும், புறநகரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உத்தரவின் பேரில் 1000 போலீசார் என மாவட்டம் முழுவதும் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மாநகரில் உள்ள கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் முன்பு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் நிலையம், கடைவீதிகள், மால்கள், சினிமா தியேட்டர்கள் உள்ளிட்ட பகுதிகளிலும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு தீவிரப்படு த்தப்பட்டுள்ளது.
மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் போலீசார் வாகனங்களில் அடிக்கடி ரோந்து சென்றும் கண்காணித்து வருகின்றனர். சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிபவர்களை பிடித்து விசாரித்தும் வருகின்றனர். பஸ் நிலையங்களில் நிற்கும் பஸ்களில் ஏறியும் சோதனை மேற்கொண்டனர்.
இதுதவிர கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி மீனாட்சிபுரம், வாளையார் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள சோதனை சாவடிகளிலும் போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சோதனை சாவடிகள் வழியாக வரும் அனைத்து வாகனங்களுமே தீவிர சோதனைக்கு உட்படுத்துகின்றனர். வாகனங்களில் வருபவர்கள் எதற்காக கோவைக்கு வருகின்றனர். அவர்களின் முகவரி, அடையாள அட்டை உள்ளிட்டவற்றை எல்லாம் சோதித்து பார்த்து விட்டு மாவட்டத்திற்குள் அனுமதித்து வருகின்றனர்.
இதேபோல் மாவட்டத்தில் உள்ள விடுதிகள், லாட்ஜ்கள், ஓட்டல்களிலும் போலீசார் அடிக்கடி சென்று சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அப்போது அங்கு உள்ள வருகைப்பதிவேடு உள்ளிட்டவற்றை பார்த்து ஆய்வு செய்தனர். மேலும் யாராவது சந்தேகத்திற்கிடமாக வந்து தங்கியிருந்தால் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.
இதேபோல் கோவை ரெயில் நிலையத்திலும் பாதுகாப்பு பலப்படுத்த ப்பட்டுள்ளது. ரெயில்வே போலீசார் ரெயில் நிலையத்தில் உள்ள நடைமேடைகள், தண்டவா ளங்களில் சோதனை மேற்கொண்டனர்.
ரெயில் நிலையத்திற்கு வந்த பயணிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். பயணிகளின் உடமைகளையும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்யப்பட்டது.
ஈரோடு
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பல்காம் மாவட்டத்தில் நேற்று தீவிரவாதிகள் ஊடு ருவி சுற்றுலா பயணிகளின் மீது கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் 27-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து உளவுத் துறை உஷார் படுத்தப்பட்டு பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், வழிபாட்டுத்தலங்கள் போன்ற பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த எச்சரிக்கை விடுத்திருந்தது. இதன்படி நேற்று இரவு முதல் தமிழகம் முழுவதும் பலத்த பாது காப்பு போடப்பட்டுள்ளது.
அதன்படி ஈரோடு மாவட் டத்தில் நேற்று இரவு முதல் போலீசார் உஷார் படுத்தப்பட்டு இரவு முதல் காலை வரை விடிய விடிய தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். குறிப்பாக தேசிய நெடுஞ்சாலை பகுதியில் வாகன சோதனையை தீவிர படுத்தினர்.
ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள சோதனைச் சாவடி, லட்சுமி நகர் சோதனை சாவடி, தாளவாடி அடுத்த காரை பள்ளம் சோதனை சாவடி என மாவட்டம் முழுவதும் உள்ள சோதனை சாவடிகளில் போலீசார் இரவு நேரங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாநகர பகுதியில் உள்ள கோவில்கள், மசூ திகள், கிறிஸ்தவ தேவால யங்கள் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட் டிருந்தது. இதேபோல் ஈரோடு பஸ் நிலையம், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீ சார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இதேபோல் வ.உ.சி காய்கறி மார்க்கெட் பகுதியிலும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். மேலும் ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோவில், பெருமாள் கோவில், மகிமாலீஸ்வரர் கோவில், பெரிய மாரியம்மன் கோவில், திண்டல் முருகன் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஈரோடு ரெயில் நிலை யத்தில் நேற்று இரவு முதல் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். ஈரோடு ரெயில்வே நுழைவு பகுதியில் ரெயில்வே போலீசார் பயணிகளின் உடமைகளை மெட்டல் டிடெக்டர் கருவிகள் கொண்டு சோதனை செய்தனர். மோப்பநாய் பவானி வரவழைக்கப்பட்டு ஒவ்வொரு நடைமேடையாக சென்றது.
ரெயில் நிலையத்தில் தேவையின்றி சுற்றி திரிந்த நபர்களை போலீசார் பிடித்து எச்சரித்து அனுப்பி வைத்தனர். ரெயில் நிலைய பார்சல் பகுதி, டிக்கெட் கவுண்டர் பகுதி ரெயில்வே பணிமனை பகுதி என அனைத்து இடங்களிலும் போலீசார் தீவிரமாக சோதனை செய்தனர்.
இதைப்போல் விடுதிகளையும் போலீசார் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர். இதேபோல் சமூக வலைதளங்களையும் போலீசார் கண்காணிக்கின்றனர்.
இதேபோல் பஸ் நிலையம், சந்தை, பொதுமக்கள் கூடும் கடைவீதிகள் ஆகிய வற்றில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மதுரை
ஜம்முகாஷ்மீர் மாநிலம் பஹல்காலம் எனும் இடத்தில் சுற்றுலா சென்ற பயணிகள் மீது தீவிர வாதிகள் கொலைவெறி தாக்குதல் நடத்தினர். துப்பாக்கியால் கண் மூடித்தனமாக சுட்டதில் 26 பயணிகள் பலியானார்கள். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
தீவிரவாத தாக்குதலை யடுத்து நாடு முழுவதும் முக்கிய இடங்களில் பாது காப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்திலும் உளவுத்துறையினர் உஷார்படுத்தப்பட்டு பல்வேறு அமைப்புகள், சந்தேகப்படும் நபர்களை கண்காணித்து வருகின்றனர்.
மேலும் டி.ஜி.பி. உத்தரவுப்படி கோவில்கள், மசூதிகள், தேவலாயம், விமானம், ரெயில் நிலை யங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
அதன்படி மதுரை மாநகரிலும் முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். உலக பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று வழக்கத்தை விட கூடுதல் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர். 5 நுழைவு வாயில்களில் பக்தர்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே கோவிலுக்குள் அனும திக்கப்பட்டனர்.
இதேபோல் மதுரை ரெயில் நிலையத்தில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். விமான நிலையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டனர். நகரின் முக்கிய இடங்களில், பஸ் நிலையங்கள், வணிக வளாகங்கள் என பெரும்பாலான பகுதிகளில் 1,200 போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
- தங்கம் விலை நேற்று அதிகரித்து காணப்பட்டது.
- வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.
சென்னை:
தங்கம் விலை தினமும் பேசப்படக்கூடிய ஒரு சொல்லாக மாறிவிட்டது. ஒவ்வொரு நாளும் 'கிடுகிடு'வென தங்கம் விலை உயர்ந்து கொண்டே வந்து, புதிய உச்சத்தை பதிவு செய்து வருகிறது.
அதிலும் கடந்த 9-ந்தேதியில் இருந்து ராக்கெட் வேகத்தில் விலை ஏறி வருகிறது. கடந்த 13-ந்தேதி ஒரு சவரன் ரூ.70 ஆயிரம் என்ற உச்சத்தை கடந்து இவ்வளவு விலையா? என அப்போது பேசப்பட்டது. அதன் பிறகு 2 நாட்களுக்கு விலை குறைந்து அனைவரும் சற்று மூச்சுவிட்ட நிலையில், மீண்டும் 16-ந்தேதியில் இருந்து உயரத் தொடங்கியது.
இந்த முறை ராக்கெட் வேகத்தைவிட 'ஜெட்' வேகத்தில் விலை எகிறி வருகிறது. இதன் விளைவால் கடந்த 17-ந்தேதி ஒரு சவரன் ரூ.71 ஆயிரம், 21-ந்தேதி ரூ.72 ஆயிரம் என்ற இதுவரை இல்லாத உச்சத்தையும் தாண்டியிருந்தது.
இதன் தொடர்ச்சியாக தங்கம் விலை நேற்றும் அதிகரித்து காணப்பட்டது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 15-க்கும், ஒரு சவரன் ரூ.72 ஆயிரத்து 120-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.275-ம், சவரனுக்கு ரூ.2 ஆயிரத்து 200-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 290-க்கும், ஒரு சவரன் ரூ.74 ஆயிரத்து 320-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,200 குறைந்து ரூ.72 ஆயிரத்து 120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.275 குறைந்து ரூ.9,015-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. வெள்ளி ஒரு கிராமுக்கு ரூ.111-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
22-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,320
21-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,120
20-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,560
19-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,560
18-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,560
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
22-04-2025- ஒரு கிராம் ரூ.111
21-04-2025- ஒரு கிராம் ரூ.111
20-04-2025- ஒரு கிராம் ரூ.110
19-04-2025- ஒரு கிராம் ரூ.110
18-04-2025- ஒரு கிராம் ரூ.110
- தமிழ்நாட்டு சகோதரர்கள் உட்பட அப்பாவி உயிர்களைப் பலிகொண்டது குறித்து ஆழ்ந்த வேதனை அடைகிறேன்.
- கோழைத்தனமான மற்றும் இழிவான வன்முறைச் செயலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
சென்னை:
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள், சுற்றுலாப்பயணிகள் மீது நடத்திய தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. பகல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய இந்த கொடூர தாக்குதலில் 26 பேர் பலியாகியுள்ளனர். இதில் வெளிநாட்டு பயணிகளும் அடங்குவர் என்று சொல்லப்படுகிறது. மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர். ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற கொடூர தாக்குதலுக்கு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், இந்த சம்பவத்திற்கு தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
ஜம்மு-காஷ்மீரின் பகல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல், நமது தமிழ்நாட்டு சகோதரர்கள் உட்பட அப்பாவி உயிர்களைப் பலிகொண்டது குறித்து ஆழ்ந்த வேதனை அடைகிறேன். இந்த கோழைத்தனமான மற்றும் இழிவான வன்முறைச் செயலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது மனமார்ந்த இரங்கலையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனைகளையும் செய்கிறேன் என தெரிவித்துள்ளார் .
- சுற்றுலாவிற்கு சென்றிருந்த பொது மக்கள் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
- தமிழ்நாட்டைச் சேர்ந்த சிலர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.
சென்னை:
காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாதிக்கப்பட்டோருக்கு உதவ அவசர எண்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் 24 மணி நேரமும் இயங்கும் சிறப்பு உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஜம்மு-காஷ்மீர் ஆனந்த்நாக் மாவட்டத்தில் பைசரான் பள்ளத்தாக்குப் பகுதியில் சுற்றுலாவிற்கு சென்றிருந்த பொது மக்கள் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிலர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இத்தகவலை கேள்விப்பட்டவுடன், பயங்கரவாதிகளால் தாக்குதலுக்கு உள்ளான தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை பாதுகாக்கும் முகமாக முதற்கட்டமாக அவர்களுக்கு தொடர்பு கொள்ள ஏதுவாக புது டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் சிறப்பு உதவி மையம் தொடங்க உத்தரவிட்டுள்ளார்கள். அதனடிப்படையில் உதவி மையம் தொடங்கப்பட்டு, 011-24193300 (தொலைபேசி), 9289516712 (மொபைல் மற்றும் வாட்ஸ்-அப்) என்ற எண்ணில் தொடர்பு கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
24 மணி நேரமும் செயல்படும் உதவி மையம் அப்பகுதி மக்களின் தேவைகளை அறிந்து உடனுக்குடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளும். இதற்காக புதுடெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல ஆணையாளர் (Resident Commissioner) அனைத்து நடவடிக்கைகளையும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள உத்திரவிடப்பட்டுள்ளது.
மேலும் புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அப்தாப் ரசூலை நேரடியாக ஜம்மு-காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதிக்குச் சென்று ஒருங்கிணைப்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ளவும் தேவையான மருத்துவ வசதிகளை வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பணம் கேட்டு தொந்தரவு கொடுத்ததால் திவ்ய பிரியாவின் வீட்டிற்கு சென்று ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
துறையூர்:
திருச்சி மாவட்டம் துறையூர் நியூ ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்தவர் திவ்யப்பிரியா (வயது31). இவர் சேலம் மாவட்டம் தம்மம்பட்டி பகுதியில் கால்நடை ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.
துறையூர் அசோக் நகரை சேர்ந்தவர் மகிசுகந்த் (31). இவர்கள் இருவரும் பள்ளிக் காலம் முதல் நண்பர்களாக பழகி வந்தனர்.
இந்நிலையில் மகிசுகந்த் தான் வெளிநாடு செல்ல இருப்பதாகவும், அதனால் பணம் கொடுத்து உதவுமாறும் திவ்ய பிரியாவிடம் கேட்டார்.
இதனை தொடர்ந்து அவர் ரூ. 1 லட்சத்து இருபதாயிரம் ரொக்கப் பணம் மற்றும் சுமார் ரூ.5 லட்சத்து 50ஆயிரம் மதிப்புள்ள தங்க நகைகளை மகிசுகந்திடம் கொடுத்துள்ளார்.
பின்னர் வெளிநாடு சென்ற மகிசுகந்த் அங்கு தங்கி பணி புரியாமல் சில நாட்களிலேயே இந்தியா திரும்பினார்.
இதனை தொடர்ந்து கொடுத்த பணத்தை திவ்யப்பிரியா, மகி சுகந்திடம் கேட்டார்.
ஆனால் அவர் கொடுக்க மறுத்தார். மேலும் பணம் கேட்டு தொந்தரவு கொடுத்ததால் திவ்ய பிரியாவின் வீட்டிற்கு சென்று ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட திவ்யபிரியா துறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் பணத்தைப் பெற்றுக் கொண்டு ஏமாற்றியதோடு, ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்த மகி சுகந்தின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதனை அறிந்த அவர் தலைமறைவானார். போலீசார் அவரை வலைவீசி தேடி வருகின்றனர். துறையூரில் பெண் அதிகாரியிடம் நட்பாக பழகிய வாலிபர் நகை, பணத்தை மோசடி செய்து தலைமறைவான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- சுற்றுலாப் பயணிகளின் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் மனசாட்சியை உலுக்கும் காட்டுமிராண்டித்தனமான செயல்.
- உயிரிழந்தவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களும் உள்ளனர் என்பதை அறிந்து மிகுந்த வருத்தம் அடைகிறேன்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 25-க்கும் மேற்பட்ட பயணிகள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. உயிர்ப்பலி குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.
இந்த நிலையில் பயங்கரவாத தாக்குதலுக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதவியில் கூறியிருப்பதாவது:-
ஜம்மு-காஷ்மீர் பஹல்காமில் அப்பாவி சுற்றுலாப் பயணிகளின் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் மனசாட்சியை உலுக்கும் காட்டுமிராண்டித்தனமான செயல். இது கடும் கண்டனத்திற்குரியது. எனது எண்ணங்கள் துயரமடைந்த குடும்பங்களுடன் உள்ளன.
உயிரிழந்தவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களும் உள்ளனர் என்பதை அறிந்து மிகுந்த வருத்தம் அடைகிறேன். காஷ்மீர் அரசுடன் ஒருங்கிணைந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை செய்ய டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.






