என் மலர்
நீங்கள் தேடியது "பண மோடி"
- பணத்தை மர்ம நபரின் கணக்கில் இருந்து மீட்டெடுக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
- டிஜிட்டல் கைது என கூறும் அவர்களிடம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் மங்களூருவை சேர்ந்த ஓய்வு பெற்ற பெண் ஊழியர் லெனி பிரபு. இவருடைய செல்போன் எண்ணுக்கு மிஸ்டு கால் வந்தது.
இதையடுத்து லெனி பிரபு அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டார். அதில் பேசிய நபர், தான் சட்ட அமலாக்க அதிகாரி. உங்களது பெயரில் சீனாவிற்கு அனுப்பப்பட்ட ஒரு பார்சலில் 150 கிராம் எம்.டி.எம்.ஏ. போதை பொருள் இருப்பதாக கூறினார்.
அந்த பார்சலை கோர்ட்டில் ஒப்படைத்தால் 75 ஆண்டுகளுக்கு மேலான சிறைத்தண்டனை விதிக்கப்படும். தண்டனையில் இருந்து தப்பிக்க உங்களுக்கு தடையில்லா சான்றிதழை பெற என்னால் உதவ முடியும். அதுவரை உங்களை டிஜிட்டல் கைது செய்துள்ளதாகவும், உங்களை விடுவிக்க வேண்டும் என்றால் பணம் கொடுக்குமாறு மிரட்டினார்.
இதனால் பயந்த லெனி பிரபு முதலில் ரூ.55 லட்சத்தை அந்த நபரின் கணக்கிற்கு அனுப்பினார். மொத்தம் ரூ.3.09 கோடி பல பரிவர்த்தனைகள் மூலம் அனுப்பினார்.
இதை அறிந்த அக்கம், பக்கத்தினர் டிஜிட்டல் கைது என்பது மோசடி. உங்களை ஏமாற்றி சைபர் கிரைம் மோசடி கும்பல் பணத்தை பறித்துள்ளனர் என தெரிவிக்கவே அதிர்ச்சி அடைந்த லெனி பிரபு மங்களூரு சைபர் எக்னாமிக் அண்ட் நார்கோடிக்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் மர்ம நபர் மீது வழக்குப்பதிவு செய்து திருடப்பட்ட பணத்தை மர்ம நபரின் கணக்கில் இருந்து மீட்டெடுக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
சைபர் மோசடி குற்றவாளிகள் பெரும்பாலும் சி.பி.ஐ. அதிகாரிகள், வருமான வரி அதிகாரிகள் அல்லது சுங்க அதிகாரிகள் என்று காட்டிக் கொண்டு செல்போன் அழைப்புகள் மூலம் தொடர்பு கொள்வார்கள். டிஜிட்டல் கைது என கூறும் அவர்களிடம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
- ஆண்கள், பெண்கள் என தனி, தனி கவுண்டர்கள் அமைக்கப்பட்டு இருந்தன.
- சிகிச்சைக்காக வந்தவர்களுக்கு அவர்களது தலையில் ஒரு விதமான எண்ணெய்யை தடவி விட்டனர்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் பழைய நகரத்தில் கும்பல் ஒன்று சமூக வலைதளம், துண்டு பிரசுரங்கள் மூலம் விளம்பரம் செய்தனர்.
அதில் குலி குதுப் ஷாஹி மைதானத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழுக்கை தலையில் முடி வளர வைக்க சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்கு தலையில் மொட்டை அடித்துக் கொண்டு வரவேண்டும் என தெரிவித்தனர்.
டெல்லியை சேர்ந்த சல்மான் டெல்லி வாலா தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் காலை குலி குதுப் ஷாஹி மைதானத்திற்கு வந்தனர். விளம்பரத்தைக் கண்ட ஆண்கள், பெண்கள் என 6 ஆயிரம் பேர் மைதானத்தில் குவிந்தனர்.
ஆண்கள், பெண்கள் என தனி, தனி கவுண்டர்கள் அமைக்கப்பட்டு இருந்தன.
சிகிச்சைக்காக வந்த ஆண்கள், பெண்கள் அனைவரும் மொட்டை அடித்துக் கொண்டு வரிசையில் காத்திருந்தனர். அவர்களிடம் பதிவு கட்டணமாக ரூ.700 எண்ணெய் கட்டணமாக ரூ.600 வசூலிக்கப்பட்டது.
சிகிச்சைக்காக வந்தவர்களுக்கு அவர்களது தலையில் ஒரு விதமான எண்ணெய்யை தடவி விட்டனர்.
இந்த எண்ணெயை 15 நாட்களுக்கு ஒரு முறை என மூன்று மாதங்களுக்கு தடவி வந்தால் அடர்த்தியான முடி வளரும் என உத்தரவாதம் அளித்தனர். இதனை நம்பி பணத்தை கட்டிய பொதுமக்கள் தலையில் எண்ணெய் தடவி விட்டு சென்றனர்.
சிகிச்சை அளித்து முடிந்ததும் சல்மான் குழுவினர் அவசர அவசரமாக டெல்லி புறப்பட்டு சென்று விட்டனர்.
ஏற்கனவே இந்த குழுவினர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உப்பலில் இதே போல் விளம்பரம் செய்து பொதுமக்களிடம் பணத்தை வசூலித்துக் கொண்டு ஏமாற்றி சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து உப்பல் போலீசில் புகார் செய்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அதற்குள் கும்பல் தலைமறைவாகி விட்டனர்.
சதுரங்க வேட்டை சினிமா பாணியில் நடந்த இந்த சம்பவம் ஐதராபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- பணம் கேட்டு தொந்தரவு கொடுத்ததால் திவ்ய பிரியாவின் வீட்டிற்கு சென்று ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
துறையூர்:
திருச்சி மாவட்டம் துறையூர் நியூ ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்தவர் திவ்யப்பிரியா (வயது31). இவர் சேலம் மாவட்டம் தம்மம்பட்டி பகுதியில் கால்நடை ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.
துறையூர் அசோக் நகரை சேர்ந்தவர் மகிசுகந்த் (31). இவர்கள் இருவரும் பள்ளிக் காலம் முதல் நண்பர்களாக பழகி வந்தனர்.
இந்நிலையில் மகிசுகந்த் தான் வெளிநாடு செல்ல இருப்பதாகவும், அதனால் பணம் கொடுத்து உதவுமாறும் திவ்ய பிரியாவிடம் கேட்டார்.
இதனை தொடர்ந்து அவர் ரூ. 1 லட்சத்து இருபதாயிரம் ரொக்கப் பணம் மற்றும் சுமார் ரூ.5 லட்சத்து 50ஆயிரம் மதிப்புள்ள தங்க நகைகளை மகிசுகந்திடம் கொடுத்துள்ளார்.
பின்னர் வெளிநாடு சென்ற மகிசுகந்த் அங்கு தங்கி பணி புரியாமல் சில நாட்களிலேயே இந்தியா திரும்பினார்.
இதனை தொடர்ந்து கொடுத்த பணத்தை திவ்யப்பிரியா, மகி சுகந்திடம் கேட்டார்.
ஆனால் அவர் கொடுக்க மறுத்தார். மேலும் பணம் கேட்டு தொந்தரவு கொடுத்ததால் திவ்ய பிரியாவின் வீட்டிற்கு சென்று ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட திவ்யபிரியா துறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் பணத்தைப் பெற்றுக் கொண்டு ஏமாற்றியதோடு, ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்த மகி சுகந்தின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதனை அறிந்த அவர் தலைமறைவானார். போலீசார் அவரை வலைவீசி தேடி வருகின்றனர். துறையூரில் பெண் அதிகாரியிடம் நட்பாக பழகிய வாலிபர் நகை, பணத்தை மோசடி செய்து தலைமறைவான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜபாளையம் அருகே உள்ள சங்கரபாண்டியபுரத்தைச் சேர்ந்தவர் முத்து கலசலிங்கம் (வயது45). இவர் அதே பகுதியில் பேண்டேஜ் ரக துணியை உற்பத்தி செய்யும் மில் நடத்தி வருகிறார்.
கடந்த ஆண்டு இவரிடம் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியை சேர்ந்த புத்தேஷ்ஷர்சா என்ற வியாபாரி பல தவணைகளில் ரூ.7 லட்சத்து 8 ஆயிரத்து 350 மதிப்புள்ள பேண்டேஜ் துணிகளை வாங்கினார்.
ஆனால் அதற்கான பணத்தை திருப்பித்தரவில்லை. பலமுறை கேட்டும் முத்துகலசலிங்கத்துக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் பார்த்திபன் விசாரணை நடத்தி ரூ.7 லட்சம் மோசடி செய்த வடமாநில வியாபாரி மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்.
அன்னூர் அருகே உள்ள நாகமாபுதூரைச் சேர்ந்தவர் சின்னச்சாமி. இவரது மனைவி ராஜம்மாள் (வயது 52).
இவர் தனது பேரனின் மருத்துவ படிப்புக்காக மகன் மற்றும் மருமகன் பெயரில் உள்ள சொத்துக்களை அடமானம் வைத்து கடன் பெற முயற்சி செய்து வந்தார்.
அப்போது கோவையை சேர்ந்த தன்ராஜ், ஜெசிந்தா மேரி ஆகிய 2 பேர் ராஜம்மாளை தொடர்பு கொண்டனர். தன்ராஜ் வங்கியில் வேலை செய்வதாக கூறிய அவர்கள் வங்கியில் கடன் பெற்றுத் தருவதாக தெரிவித்துள்ளனர்.
இதை நம்பிய ராஜம்மாள் கோவை வங்கிக்கு சென்று அசல் பத்திரம் மற்றும் கடன் பெற தேவையான ஆவணங்களை கொடுத்து கையெழுத்து போட்டுள்ளார்.
அப்போது சில வாரங்களில் ரூ.50 லட்சம் ராஜம்மாள் கணக்கில் வந்துவிடும் என தெரிவித்து உள்ளனர். பல மாதங்கள் ஓடி விட்டன. பணம் வங்கி கணக்கில் வரவில்லை.
ஆனால் வங்கியில் இருந்து ரூ.50 லட்சத்துக்கு வட்டி செலுத்த வேண்டும் என ராஜம்மாளுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜம்மாள் அன்னூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் தன்ராஜ் மற்றும் ஜெசிந்தா மேரி மீது மோசடி உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரனை செய்து வருகிறார்கள்.






