என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிஜிட்டல் பணம்"

    • பணத்தை மர்ம நபரின் கணக்கில் இருந்து மீட்டெடுக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
    • டிஜிட்டல் கைது என கூறும் அவர்களிடம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் மங்களூருவை சேர்ந்த ஓய்வு பெற்ற பெண் ஊழியர் லெனி பிரபு. இவருடைய செல்போன் எண்ணுக்கு மிஸ்டு கால் வந்தது.

    இதையடுத்து லெனி பிரபு அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டார். அதில் பேசிய நபர், தான் சட்ட அமலாக்க அதிகாரி. உங்களது பெயரில் சீனாவிற்கு அனுப்பப்பட்ட ஒரு பார்சலில் 150 கிராம் எம்.டி.எம்.ஏ. போதை பொருள் இருப்பதாக கூறினார்.

    அந்த பார்சலை கோர்ட்டில் ஒப்படைத்தால் 75 ஆண்டுகளுக்கு மேலான சிறைத்தண்டனை விதிக்கப்படும். தண்டனையில் இருந்து தப்பிக்க உங்களுக்கு தடையில்லா சான்றிதழை பெற என்னால் உதவ முடியும். அதுவரை உங்களை டிஜிட்டல் கைது செய்துள்ளதாகவும், உங்களை விடுவிக்க வேண்டும் என்றால் பணம் கொடுக்குமாறு மிரட்டினார்.

    இதனால் பயந்த லெனி பிரபு முதலில் ரூ.55 லட்சத்தை அந்த நபரின் கணக்கிற்கு அனுப்பினார். மொத்தம் ரூ.3.09 கோடி பல பரிவர்த்தனைகள் மூலம் அனுப்பினார்.

    இதை அறிந்த அக்கம், பக்கத்தினர் டிஜிட்டல் கைது என்பது மோசடி. உங்களை ஏமாற்றி சைபர் கிரைம் மோசடி கும்பல் பணத்தை பறித்துள்ளனர் என தெரிவிக்கவே அதிர்ச்சி அடைந்த லெனி பிரபு மங்களூரு சைபர் எக்னாமிக் அண்ட் நார்கோடிக்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் மர்ம நபர் மீது வழக்குப்பதிவு செய்து திருடப்பட்ட பணத்தை மர்ம நபரின் கணக்கில் இருந்து மீட்டெடுக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

    சைபர் மோசடி குற்றவாளிகள் பெரும்பாலும் சி.பி.ஐ. அதிகாரிகள், வருமான வரி அதிகாரிகள் அல்லது சுங்க அதிகாரிகள் என்று காட்டிக் கொண்டு செல்போன் அழைப்புகள் மூலம் தொடர்பு கொள்வார்கள். டிஜிட்டல் கைது என கூறும் அவர்களிடம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

    • பெண்களுக்கு தங்கத்தின் மீது தனிப்பட்ட ஈடுபாடு உண்டு.
    • உலக அளவிலும் தங்கத்துக்கு அதிக மதிப்பு உள்ளது.

    இந்திய பெண்களுக்கு தங்கத்தின் மீது தனிப்பட்ட ஈடுபாடு உண்டு. உலக அளவிலும் தங்கத்துக்கு அதிக மதிப்பு உள்ளது. தங்கத்தின் மீதான சேமிப்பு என்பது ஒரு குடும்பத்தில் பெண் குழந்தை பிறந்ததில் இருந்தே தொடங்கி விடுகிறது. தங்கம். பல இந்திய குடும்பங்களின் அவசரகால நிதியாகவே செயல்படுகிறது. அனைத்து துறைகளும் தொடர்ந்து டிஜிட்டல் மய மாகிவரும் வேளையில், தங்கமும் அந்த வரிசையில் சேர்ந்துள்ளது. 'டிஜிட்டல் தங்கம்' குறித்து தெரிந்து கொள்வோம்.

    டிஜிட்டல் தங்கம்:

    டிஜிட்டல் தங்கம் என்பது தங்கத்தின் விலையுடன் தொடர்புடைய மதிப்பைக் கொண்டிருக்கும். உலோகமாக இல்லாமல் தங்கத்தை டிஜிட்டல் முறையில் பரிமாற்றம் செய்து கொள்ளவும். சேமித்து வைத்திருக்கவும் முடியும். இதன்படி தங்கத்தை சேமிப்பது மற்றும் பாதுகாப்பது போன்ற செயல்பாடுகள் இல்லாமல், அதன் மதிப்பை நீங்கள் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

     வாங்கும் வழி:

    ஆன்லைன் தரகர்கள், வங்கிகள் மற்றும் சிறப்பு தங்க விற்பனையாளர்கள் உள்பட பல வணிக நிறுவனங்கள் மூலம், டிஜிட்டல் தங்கத்தை வாங்க முடியும். இணையவழி பரிவர்த்தனை செயலிகள் மூலமாக இ-வாலட்களில் இருந்தும் டிஜிட்டல் தங்கத்தை வாங்கலாம். இதை உலோக தங்கமாக மாற்றிக்கொள்ளவும் முடியும்.

    இந்த முறையில் தங்கம் வாங்குவதற்காக தனிப்பட்ட பண சேமிப்போ, குறிப்பிட்ட நேரமோ ஒதுக்க வேண்டிய அவசியம் இல்லை. உங்களிடம் குறைந்த அளவு பணம் இருந்தாலும், அதற்கு ஏற்ற அளவிலான தங்கத்தை வாங்க முடியும்.

    டிஜிட்டல் தங்கத்தின் செயல்பாடு:

    தங்கத்தின் விலை குறையும் நேரத்தில் டிஜிட்டல் தங்கத்தை வாங்கி, தங்க விலை உயரும் சமயத்தில் அதை எளிதாக விற்றுவிடலாம். டிஜிட்டல் தங்கம் வாங்கி 24 மணிநேரம் கழித்து மட்டுமே அதை விற்பனை செய்ய முடியும். டிஜிட்டல் தங்கத்தை 'சேப்லாக்' என்ற இணைய பெட்டகம் மூலம் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும். ஆனால் அதற்கான சேவை கட்டணம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.

     சிறப்பம்சம்:

    உலோகமாக கையில் வைத்திருக்கும் தங்கத்தை விற்பதற்கும். அடகு வைப்பதற்கும் காலதாமதம் ஆகக்கூடும். ஆனால், டிஜிட்டல் தங்கத்தை, நிதி நெருக்கடி உண்டாகும் சமயத்தில் எளிதாக விற்க முடியும். டிஜிட்டல் தங்கம் குறித்த பாதுகாப்பு என்பது நம்பகத்தன்மையானதாக இருக்கும். பரிசாக அளிக்க டிஜிட்டல் தங்கம் சிறந்த வழியாகும்.

    கவனிக்க வேண்டியவை:

    டிஜிட்டல் தங்க முதலீடு எவ்வித வட்டியையும் உருவாக்காது. இதில் முதலீடு செய்வதற்கு குறிப்பிட்ட அளவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் தங்கத்தை குறுகிய காலத்துக்கு மட்டுமே. அவற்றுக்கான பாதுகாப்பு பெட்டகளில் சேமித்து வைக்க முடியும். இதை உலோக தங்கமாக மாற்றும்போது. இடைத்தரகு நிறுவனங்களுக்கு சேவை கட்டணம் செலுத்த வேண்டும்.

    டிஜிட்டல் தங்கத்தை, உலோக தங்கமாக மட்டுமே பெற முடியும். பணமாக திரும்ப பெற முடியாது. இவை அனைத்தையும் கவனத்தில் கொண்டு, நிதி ஆலோசகர்களின் ஆலோசனை பெற்ற பின்னர் டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்வது சிறந்தது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மதுபாட்டில்களுக்கு கூடுதல் விலை வசூலிப்பதை தடுக்க உதவும் என்று அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
    • சென்னையில் பல கடைகளில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை வசதி இல்லை,

    சென்னை:

    டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண டாஸ்மாக் கடைகளில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை வசதி ஏற்படுத்த வேண்டும் என மது பிரியர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    அதன் பேரில் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட எல்லையில் உள்ள 132 டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில் வாங்குபவர்களிடம் பே.டி.எம். கியூஆர் கோடு மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனை முறையில் பணம் வசூலிக்கப்படுகிறது. இதற்கு மதுப்பிரியர்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. இது மதுபாட்டில்களுக்கு கூடுதல் விலை வசூலிப்பதை தடுக்க உதவும் என்று அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.


    இதேபோல் சென்னையில் உள்ள டாஸ்மாக் கடைகளிலும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய சென்னை மண்டலத்தில் சுமார் 1000 டாஸ்மாக் கடைகள் உள்ளன. ஆனால் சென்னையில் பல கடைகளில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை வசதி இல்லை என்று மதுப்பிரியர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

    தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மதுக்கடைகளில் மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பது தடுக்கப்படும் என்று நம்பி இருந்தோம். ஆனால் சென்னையில் பல கடைகளில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறை இருந்தும் அதை நடைமுறைப்படுத்தவில்லை. எனவே மதுபாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதை தடுக்க சென்னையில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறை நடைமுறைப்படுத்தப்படுகிறதா? என்பது தொடர்பாக அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    ×