என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சித்திரை திருவிழா கொடியேற்றம்"

    • இன்று மாலை பஞ்ச மூர்த்திகள் படிச்சட்டத்தில் புறப்பாடு நடக்கிறது.
    • விழாவின் கடைசி நாளான 10-ந் தேதி தீர்த்தவாரி.

    தஞ்சாவூர்:

    உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவில் மாமன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. கட்டிட கலையில் சிறந்து விளங்கும் இக்கோவிலுக்கு தினமும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

    மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா 18 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா இன்று (புதன்கிழமை) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    முன்னதாக சந்திரசேகரர், பஞ்சமூர்த்திளுடன் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினார். தொடர்ந்து, கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று, மங்கள வாத்தியங்கள் முழங்க கொடியேற்றம் நடந்தது.

    முன்னதாக பஞ்சமூர்த்திகளுக்கு கொடிமரம் முன்பு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, கோவில் வளாகத்தில் பல்லக்கில் எடுத்து வந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    விழாவின் முதல் நாளான இன்று மாலை 6.30 மணியளவில் பஞ்ச மூர்த்திகள் படிச்சட்டத்தில் புறப்பாடு நடக்கிறது. தொடர்ந்து, கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    2-ம் நாளான நாளை (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு மேல் பல்லக்கில் விநாயகர் புறப்பாடு நடைபெறுகிறது. மாலை 6.30 மணிக்கு சிம்ம வாகனத்தில் விநாயகர் புறப்பாடு நடக்கிறது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் காலை, மாலை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் அடுத்த மாதம் (மே) 7-ந்தேதி நடைபெற உள்ளது.

    விழாவின் கடைசி நாளான 10-ந் தேதி தீர்த்தவாரி விழாவும், மாலையில் வெள்ளி ரிஷப வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடைபெறுகிறது. அன்றைய தினம் மாலையில் கொடியிறக்கத்துடன் விழா முடிவடைகிறது.

    • சித்திரை திருவிழாவையொட்டி மலையடி வாரம் பத்ரகாளியம்மன் கோவில் மற்றும் அபிராமி அம்மன் கோவிலில் கொடியேற்றம் நடைபெற்றது.
    • வருகிற மே 2-ந்தேதி திருக்கல்யாணமும், 3-ந்தேதி திருத்தேரோட்டமும் நடைபெற உள்ளது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மலையடி வாரம் பத்ரகாளியம்மன் கோவில் சித்திரை திருவிழாவையொட்டி கடந்த வெள்ளிக்கிழமை கணபதி ஹோமம், இரவு சாமி சாட்டுதல் நடை பெற்றது. நேற்று காலை பானக்கம் பாலாபிஷேகம், இரவு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. இன்று காலை 9 மணிக்கு மேல் கொடி யேற்றம் நடைபெற்றது.

    இதில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அர்ச்சகர்கள் கோவில் கொடியேற்றினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நாளை காலை பூச்சொரிதலும், பூத்தட்டு ஊர்வலமும் நடைபெறுகிறது. 25-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை காலையில் பாலாபிஷேகமும், இரவில் சிறப்பு அலங்காரமும் நடைபெறுகிறது.

    28-ந்தேதி கரகம் ஜோடித்து மின்அலங்கார ரதத்தில் அம்மன் வீதிஉலா வருகிறார். 29-ந்தேதி பால்குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக வந்து பத்ரகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்கின்றனர். மாலையில் சிறப்பு அலங்காரம் நடைபெறும். 30-ந்தேதி காலை பொங்கல் வைத்தல், மாவிளக்கு போடுதல், இரவு வில்லிசை நடைபெறுகிறது.

    மே 1-ந்தேதி மாலை அழகு போட்டு நகர்வலம், அக்னிசட்டி எடுத்து பூக்குழி இறங்குதல் நடைபெறுகிறது. 2-ந்தேதி முளைப்பாரி ஊர்வலம், கரகம் விடுதல் மற்றும் இரவு 8 மணிக்கு கொடியிறக்கம் நடைபெற உள்ளது.

    3-ந்தேதி மஞ்சள் நீராட்டுவிழா, 4-ந்தேதி மதியம் 12 மணிக்கு அன்னதானம் நடைபெறுகிறது. மாலையில் ஊஞ்சல் மண்டகப்படி, அதனைதொடர்ந்து 5-ந்தேதி மாலை தெப்பத்திருவிழா மற்றும் கோட்டைக்குளத்தில் தேரோட்டம் நடைபெறு கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை நிறுவனத்தலைவரும், பரம்பரை அறங்காவலரு மான பாண்டி மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர். இதேபோல் திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலிலும் சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற மே 2-ந்தேதி திருக்கல்யாணமும், 3-ந்தேதி திருத்தேரோட்டமும் நடைபெற உள்ளது.

    ×