search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "thanjavur big temple"

    • தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்றது.
    • சித்திரை திருவிழா 18 நாட்கள் நடைபெறும்.

    தஞ்சாவூா்:

    தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்றது. கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்வதுடன் உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. பெரிய கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    ஆண்டு தோறும் பெரிய கோவிலில் சித்திரை திருவிழா, சதயவிழா, ஆஷாட நவராத்திரி விழா உள்ளிட்ட பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. இதில் சித்திரை திருவிழா பிரசித்தி பெற்றது. ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் சித்திரை திருவிழா 18 நாட்கள் நடைபெறும்.

    அதன்படி இந்த ஆண்டு சித்திரை திருவிழாவுக்கான பந்தக்கால் முகூர்த்தம் இன்று காலை நடைபெற்றது. இதையொட்டி பெரியநாயகி அம்மன் சன்னதி வளாகத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    அதன் பின்னர் பந்தக்காலுக்கு பால், தயிர், மஞ்சள் மற்றும் வாசனை திரவியங்களை கொண்டு அபிசேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து தமிழில் தேவாரம், திருமுறைகள் பாடி பந்தக்கால் நடப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    இதில் அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் கவிதா, செயல் அலுவலர்கள் மாதவன், மணிகண்டன் மற்றும் சிவாச்சாரியார்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர். சித்திரை திருவிழாவுக்கான கொடியேற்றம் ஏப்ரல் மாதம் 6-ந்தேதி ஏற்றப்படுகிறது. அன்றிலிருந்து தொடர்ந்து 18 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    ஏப்ரல் 18-ந் தேதி பஞ்சமூர்த்தி புறப்பாடு நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஏப்ரல் 20-ந் தேதி நடைபெறுகிறது. 23-ந் தேதி கொடி இறக்கத்துடன் சித்திரை திருவிழா நிறைவுபெறும்.

    • திருமணம் நடக்க வேண்டி பதிவு செய்தவர்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
    • பக்தர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.

    உலகம் போற்றும் தஞ்சை மாநகரின் சிறப்புக்கு தனிப்பெரும் காரணமாக பெரியகோவில் திகழ்கிறது. மாமன்னன் ராஜராஜசோழனால் வானளாவிய உயர்ந்த விமானத்துடன் எழுப்பப்பட்ட பெரியகோவிலில் பெரியநாயகி சமேத பெருவுடையார் எழுந்தருளியுள்ளார். தஞ்சை பெரியகோவிலில் ஆண்டுதோறும் பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு திருக்கல்யாணம் பெரியகோவிலில் நேற்று இரவு நடந்தது.

    முன்னதாக பழங்கள், குங்குமம், மஞ்சள்கிழங்கு, திருமாங்கல்ய சரடு, வளையல், சீப்பு, குங்குமசிமிழ், கண்ணாடி, ரிப்பன், இனிப்பு வகைகள், பூக்கள், வெற்றிலைபாக்கு, சீவல் போன்ற சீர்வரிசை பொருட்களை பக்தர்கள் தாம்பூலத்திலும், மூங்கில் கூடையிலும் வைத்து பெரியகோவில் வளாகத்தில் உள்ள சொக்கநாதர் சன்னதியில் இருந்து மாலை 6 மணிக்கு ஊர்வலமாக புறப்பட்டு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெறும் நடராஜர் மண்டபம் அருகே போடப்பட்டிருந்த பந்தலை சென்றடைந்தனர்.

    பின்னர் சிவாச்சாரியார்கள் வேத, மந்திரங்கள் முழங்க மாப்பிள்ளை அழைப்பு, மாலை மாற்றுதல், ஊஞ்சல் உற்சவம் உள்பட சம்பிரதாய சடங்குகள் நடைபெற்றன. தொடர்ந்து மேள, தாளங்கள் முழங்க பெருவுடையாரிடம் இருந்து திருமாங்கல்யத்தை சிவாச்சாரியார் எடுத்து பெரியநாயகி அம்மனுக்கு அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து பெருவுடையார்- பெரியநாயகி அம்மன் திருக்கல்யாண கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். பின்னர் மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இந்த திருக்கல்யாணத்தில் பங்கேற்றால் திருமண பாக்கியம், தம்பதியர் ஒற்றுமை, குழந்தை பாக்கியம், மாங்கல்யபலம் ஆகியவை நடைபெறும் என்பது பக்தர்களின் ஐதீகம். இதனால் ஏராளமான பக்தர்கள் திருக்கல்யாணத்தில் கலந்து கொண்டனர். திருமணம் நடக்க வேண்டி பதிவு செய்தவர்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. திருக்கல்யாணத்திற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை, அரண்மனை தேவஸ்தான ஊழியர்கள் செய்து இருந்தனர்.

    தஞ்சை பெரியகோவிலில் உள்ள வராகி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி பெருவிழா தொடங்கியது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் நடந்தது.
    தஞ்சை பெரியகோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இது உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. இந்த கோவிலுக்கு இந்தியா மட்டும் அல்லாது வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். இந்த கோவிலில் பெருவுடையார், பெரியநாயகி அம்மன், வராகி அம்மன், முருகன், விநாயகர், நடராஜர், தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட பல்வேறு சன்னதிகள் உள்ளன. இதில் வராகி அம்மனுக்கு ஆண்டு தோறும் ஆஷாட நவராத்திரி பெருவிழா 11 நாட்கள் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு ஆஷாட நவராத்திரி பெருவிழா நேற்று தொடங்கியது.

    கணபதிஹோமத்துடன் விழா தொடங்கியது. பின்னர் சிறப்பு யாகமும் நடத்தப்பட்டது. யாகம் முடிந்ததும் வராகி அம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், பழங்கள் மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. மாலையில் வராகி அம்மனுக்கு இனிப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழா நாட்களில் தினமும் காலையில் யாகமும், மாலையில் அம்மனுக்கு அலங்காரமும் நடைபெறுகிறது. இன்று (வெள்ளிக்கிழமை) 2-ம் நாள் அம்மனுக்கு மஞ்சள் அலங்காரமும், நாளை (சனிக்கிழமை) 3-வது நாள் குங்கும அலங்காரமும், 4-வது நாள் சந்தன அலங்காரமும், 5-வது நாள் தேங்காய்ப்பூ அலங்காரமும், 6-வது நாள் மாதுளை அலங்காரமும், 7-வது நாள் நவதானிய அலங்காரமும், 8-வது நாள் வெண்ணெய் அலங்காரமும், 9-வது நாள் கனிவகை அலங்காரமும், 10-வது நாள் காய்கறி அலங்காரமும், 11-வது நாள் புஷ்ப அலங்காரமும் நடைபெறுகிறது.

    கடைசி நாள் அன்று மாலை அம்மன் திருவீதி உலாவும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜாபோன்ஸ்லே, உதவி ஆணையர் பரணிதரன், கண்காணிப்பாளர்கள் தமிழ்ச்செல்வி, சுரேஷ், செயல் அலுவலர் மாதவன் மற்றும் ஆஷாட நவராத்திரி விழாக்குழுவினர் செய்திருந்தனர். 
    தஞ்சை பெரியகோவிலில் பெருவுடையார் - பெரியநாயகி அம்மன் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    மாமன்னன் முதலாம் ராஜராஜசோழனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தஞ்சை பெரியகோவில் இன்றைக்கும் தமிழர்களின் பெருமைகளை பறைசாற்றி கொண்டிருக்கிறது. பெரியகோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு திருக்கல்யாணம் தஞ்சை பெரியகோவிலில் நேற்று இரவு நடந்தது.

    முன்னதாக பழங்கள், குங்குமம், மஞ்சள்கிழங்கு, மஞ்சள் திருமாங்கல்ய சரடு, வளையல், சீப்பு, குங்குமசிமிழ், கண்ணாடி, ரிப்பன், இனிப்பு, பூ, வெற்றிலைபாக்கு, சீவல், ஜாக்கெட் பிட் போன்ற சீர்வரிசை பொருட்களை ஏராளமான பக்தர்கள் மூங்கில் கூடையில் வைத்து பெரியகோவில் வளாகத்தில் ஊர்வலமாக வந்து திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெறும் நடராஜர் மண்டபத்தை வந்தடைந்தனர்.

    பின்னர் சிவாச்சாரியார்கள் வேத, மந்திரங்கள் முழங்க மாப்பிள்ளை அழைப்பு உள்பட சம்பிரதாய சடங்குகள் நடைபெற்றன. தொடர்ந்து மேள, தாளங்கள் முழங்க பெருவுடையாரிடம் இருந்து திருமாங்கல்யத்தை சிவாச்சாரியார் எடுத்து பெரியநாயகி அம்மனுக்கு அணிவித்தார். இதையடுத்து பெருவுடையார்- பெரியநாயகி அம்மன் திருக்கல்யாண கோலத்தில் காட்சி அளித்தனர். திருக்கல்யாணத்தில் பங்கேற்ற அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். 
    தஞ்சை பெரியகோவிலில் கோபுர சீரமைப்பு பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களை கதண்டு வண்டுகள் கடித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. #Thanjavurbigtemple
    தஞ்சாவூர்:

    தஞ்சையில் கடந்த 5-ந் தேதி மாலை இடியுடன் மழை பெய்தது. இதில் தஞ்சை பெரிய கோவிலில் உள்ள கேரளாந்தகன் கோபுரத்தில் மின்னல் தாக்கியது. இதில் ஒரு யாளி சிற்பம் உடைந்து சேதமாகி கீழே விழுந்தது. இது பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதைத்தொடர்ந்து தொல்லியல் துறை சார்பில் கோபுரத்தை சீரமைக்கும் பணி இன்று தொடங்கியது. அங்கு சாரம் கட்டப்பட்டு அதில் தொழிலாளர்கள் ஏறிச்சென்று பணிகளை மேற்கொண்டனர். அப்போது அந்த கோபுரத்தில் கூடுகட்டி இருந்த கதண்டு வண்டுகள் கலைந்து வந்து தொழிலாளர்களை கடித்தது. இதில் 2 தொழிலாளர்கள் மயக்கமடைந்தனர். மேலும் வண்டுகள் கீழே பறந்து வந்து பக்தர்களையும் கடித்தது. இதில் 2 பக்தர்கள் காயமடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கோவிலுக்குள் பக்தர்கள் செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டனர். காயமடைந்த 4 பேரும் 108 ஆம்புலன்சு மற்றும் ஆட்டோக்களில் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    கதண்டு கடித்ததால் காயமடைந்த பக்தரை ஆட்டோவில் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்ற காட்சி.

    இந்த நிலையில் தஞ்சை பெரிய கோவிலுக்கு சுற்றுலாவாக வந்த வெளிநாட்டு பயணிகளும், பள்ளி மாணவ- மாணவிகளும், பக்தர்களும் சாமி தரிசனம் செய்ய முடியாமல் வெளியில் காத்திருந்தனர். முன்பக்க கேட் மூடப்பட்டது.

    காலை 10 மணி முதல் பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதுபற்றி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் தஞ்சை தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கதண்டு வண்டுகளை அழிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    அவர்கள் கவச உடை அணிந்து இந்த பணியில் ஈடுபட்டனர். கதண்டுகள் அழிக்கப்பட்டதும் மதியம் 12 மணிக்கு பிறகு பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். #Thanjavurbigtemple
    உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில், பெரியநாயகி அம்மனுக்கு 1,500 கிலோ மலர்களால் பூச்சொரிதல் விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் தனி சன்னதியில் பெரியநாயகி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் மழை வேண்டியும், உலக நன்மைக்காவும் பெரியநாயகி அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடத்தப்படும்.

    இந்த ஆண்டிற்கான பூச்சொரிதல் விழா நேற்று நடந்தது. இதையொட்டி தஞ்சை பெரிய கோவில் வளாகத்தில் உள்ள நால்வர் மண்டபத்தில் இருந்து பக்தர்கள் பூக்கூடைகளை கையில் ஏந்தியபடி ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர். இந்த ஊர்வலம் கோவிலை வலம் வந்து பெரியநாயகி அம்மன் சன்னதியை சென்றடைந்தது.

    பின்னர் பக்தர்களால் வழங்கப்பட்ட முல்லை, ரோஜா, தாழம், மகிழம், தாமரை, அல்லி, செம்பருத்தி, கனகாம்பரம், வெட்டிவேர், அரளி உள்ளிட்ட 51 வகையான மலர்களால் பெரியநாயகி அம்மனுக்கு பூச்சொரிதல் நடைபெற்றது. பக்தர்கள் வழங்கிய மலர்களின் எடை 1,500 கிலோ ஆகும். இதையடுத்து அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். 
    ×