என் மலர்
உள்ளூர் செய்திகள்
- தங்களது ஆட்சியில் 52 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்பட்டதாக அதிமுக தெரிவித்தது.
- போராட்டத்தில் பாஜக, அமமுக, கொங்கு இளைஞர் பேரவை, புரட்சி பாரதம் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
கல்லூரி மாணவரகள் 10 லட்சம் பேருக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ப்ளஸ் 1, ப்ளஸ் 2 மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்க வலியுறுத்தி சென்னையில் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திமுக ஆட்சியில் மாணவர்களின் வாக்குகளைப் பெறுவதற்காக லேப்டாப் வழங்குவதால் அதிமுகவினர் புகார் அளித்துள்ளனர்.
தங்களது ஆட்சியில் 52 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்பட்டதாக அதிமுக தெரிவித்தது.
இந்த போராட்டத்தில் பாஜக, அமமுக, கொங்கு இளைஞர் பேரவை, புரட்சி பாரதம் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இதற்கிடையே, இலவச லேப்டாப் திட்டத்தால் பயன்பெற்றவர்களுடன் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடினார்.
இது ஒரு பக்கம் இருக்க, மதுரையில் மாநகராட்சியில் ரூ.200 கோடி ஊழல் எனக் கூறி அதிமுக போராட்டம் நடத்தியது.
- நீர்வரத்து சீரானவுடன் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
- அருவியில் குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் ஆழியார் வனத்துறை சோதனை சாவடியுடன் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
ஆனைமலை:
கோவை மாவட்டம் ஆழியார் அருகே கவியருவி உள்ளது.
இந்த அருவிக்கு கோவை மாவட்டம் மட்டுமின்றி வெளிமாவட்டங்களில் இருந்தும் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள்.
விடுமுறை நாட்களில் கவியருவியில் கூட்டம் அலைமோதும். சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்தினருடன் கவியருவியில் குளித்து மகிழ்ந்து செல்வர்.
இந்த நிலையில் ஆனைமலை சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதி உள்ள வால்பாறை கவர்கல், காடம்பாறை போன்ற பகுதிகளிலும் இரவு முதல் அதிக அளவில் மழை பெய்தது.
இந்த மழை காரணமாக ஆழியார் கவியருவில் திடீரென இன்று அதிகாலை காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அத்துடன் தண்ணீர் செந்நிறமாக ஆர்ப்பரித்து கொட்டியது.
தொடர்ந்து அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி அருவிக்கு செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.
நீர்வரத்து சீரானவுடன் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனால் அருவியில் குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் ஆழியார் வனத்துறை சோதனை சாவடியுடன் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
தற்போது மழை பெய்து கொண்டிருப்பதால், வால்பாறை செல்லும் சுற்றுலா பயணிகள் மலைப்பாதையில் அதிக கவனத்துடன் செல்ல வேண்டும். ஆங்காங்கே மலைகளில் இருந்து அருவி போல் நீர் வந்து கொண்டிருப்பதால் அவற்றுக்கு அருகே நின்று புகைப்படம் மற்றும் செல்பி எடுக்கக் கூடாது எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உடுமலை சுற்றுவட்டார பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு பலத்த மழை பெய்தது. இந்த மழை காரணமாக திருமூர்த்திமலை மலைமேலுள்ள பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அடிவாரத்தில் அமைந்துள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் அருகில் செல்லும் தோணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கோவில் வளாகத்தை வெள்ளம் சூழ்ந்து செல்கின்றது. இதனால் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை.
தொடர் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
- நிதிஆயோக் வெளியிட்டிருக்கும் இலக்குகளில் தமிழ்நாடு முதல் இடத்தில் இருக்கிறது.
- காலநிலை மாற்றச் சவால்களையும் எதிர்த்து, தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!
சென்னை:
தமிழ்நாடு காலநிலை மாற்றத்திற்கான ஆட்சி மன்ற குழுவின் 3-வது கூட்டம் சென்னை தலைமைச் செயலக 10-வது மாடி கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமை தாங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
காலநிலை மாற்றத்தின் விளைவுகளை இப்போது கண்கூடாக பார்த்து கொண்டு இருக்கிறோம். இப்போது கூட, 'டிட்வா புயல்' எப்படிப்பட்ட கோர தாண்டவத்தை ஆடியது. அதனால் இலங்கை உள்ளிட்ட நாடுகள் எப்படி பாதிக்கப்பட்டது என்று பார்த்தோம். நம்முடைய அரசு தொடர்ந்து மேற்கொண்டு வந்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால், பெரியளவில் பாதிப்புகள் ஏற்படாமல் தமிழ்நாட்டை காப்பாற்றி இருக்கிறோம். எப்போதோ ஒருமுறை, புயல்-வெள்ளங்களை எதிர்கொண்ட காலத்தை எல்லாம் நாம் கடந்து விட்டோம். அதை உணர்ந்து தான் 3 ஆண்டுகளுக்கு முன்பே இந்த பேரிடர்களுக்கேற்ற தடுப்பு மற்றும் தகவமைப்பு உட்கட்டமைப்புகளை தொடங்கிவிட்டோம்.
காலநிலை மாற்ற ஆட்சி மன்றக்குழு, பசுமைத் தமிழ் நாடு இயக்கம், தமிழ்நாடு ஈரநில இயக்கம், தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம், தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம் என்று நாம் முன் கூட்டியே நிறைய செய்து கொண்டிருக்கிறோம். இதனால், இந்தியாவிற்கே வழிகாட்டும் நிலையில் தமிழ்நாடு இருக்கிறது.
கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில், ரூ.24 கோடி மதிப்பீட்டில் காலநிலைக் கல்வியறிவு முன்னெடுப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டோம். அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் திறமைமிகு 4 ஆயிரம் பள்ளி ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்கள். மிக விரைவில், காலநிலைக் கல்வியறிவு குறித்த பயிற்சிகள் வழங்கப்பட இருக்கிறது.
அதுமட்டுமல்லாமல், பள்ளி மாணவர்களுக்கு, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்த ஆண்டுக்கு இரண்டு முறை, மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம் மூலமாக, நடத்தப்படும் ஒரு நாள் கோடைக்கால மற்றும் குளிர்கால சிறப்பு முகாம்களை 2 நாள் முகாம்களாக பள்ளிக் கல்வித்துறை மூலமாக நடத்த ஏற்பாடு செய்தி ருக்கிறோம்.
மேலும், கூல் ரூபிங் திட்டத்தை, தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தின் 2025-26-ம் ஆண்டிற்கான செயல்திட்டத்தில் சேர்த்திருக்கிறோம். அம்பத்தூரில் இருக்கும் பெருந்தலைவர் காமராஜர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வகுப்பறைகளில், கூல் ரூபிங் எனப்படும் அதிக வெப்ப பிரதிபலிப்புமிக்க வெள்ளைப் பூச்சுகள் பூசப்பட்டிருக்கிறது. இதன் மூலமாக வகுப்பறைகளில் வெப்ப அளவினை கணக்கி டக்கூடிய சென்சார்கள் வைத்து கண்காணித்ததில், அறை வெப்ப நிலை 1.5 டிகிரி முதல் 3 டிகிரி வரை குறைந்திருக்கிறது. இதுகுறித்த அறிக்கையின் அடிப் படையில், இந்தத் திட்டத்தை தமிழ்நாட்டில் இருக்கும் 297 பசுமைப் பள்ளிகளிலும் செயல்படுத்த இருக்கிறோம்.
கடலோர வாழ்விடங்களை, இயற்கை சார்ந்த தீர்வுகள் மூலம் மறு சீரமைக்கும் திட்டத்தின்கீழ், தொடர்ச்சியாக அலையாத்தி மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது. இதன் ரிசல்ட் என்ன தெரியுமா? தமிழ்நாட்டில் 4500 ஹெக்டேர் பரப்பளவுக்கு இருந்த அலையாத்திக் காடுகள், 9 ஆயிரம் ஹெக்டேராக, அதாவது, இரண்டு மடங்காக அதிகரித்திருக்கிறது.
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் பெண்களின் பங்குதான் அளப்பரியது.
அதனால்தான், 100 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு, காலநிலை மாற்றம் மற்றும் நெகிழி ஒழிப்புப் பரப்புரையையும் மேற்கொள்ள, 100 இ-ஆட்டோக்கள் வழங்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டின் மொத்த பசுமை இல்ல வாயு வெளியேற்றம் போக்குவரத்துத் துறையின் பங்கு 12 சதவீதத்தில் இருந்து 19 சதவீதமாக உயர்ந்திருக்கிறது என்று ஆய்வறிக்கைகளில் தெரிய வந்திருக்கிறது. அதுவும், கடந்த 2005 முதல் 2019-க்கு இடைப்பட்ட காலத்தில், இது 3 மடங்கு அதிகரித்திருக்கிறது.
சென்னை போன்ற மெட்ரோ சிட்டியில் போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து வருகிறது. மக்கள் அதிகமாக பொது போக்குவரத்தை பயன்படுத்துவது தான் இதைக் குறைக்க சிறந்த வழி! அதை ஊக்குவிப்பதற்காகதான், எம்.டி.சி. மூலமாக, முதற்கட்டமாக 120 மின்சாரப் பஸ்களை பயன்பாட்டிற்கு கொண்டு வந்திருக்கிறோம். மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது. அதனால், மேலும் 600 மின்சாரப் பஸ்களை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்போகிறோம். இதனால், நெரிசல் குறையும், காற்று மாசு குறையும், எல்லோருடைய நேரமும் மிச்சமாகும்.
வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு இவ்வளவும் செய்திருப்பதால்தான், ஒன்றிய அரசே நமக்கு சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள். நிதிஆயோக் வெளியிட்டிருக்கும் இலக்குகளில் தமிழ்நாடு முதல் இடத்தில் இருக்கிறது.
"நம்முடைய அரசுக்கு வளர்ச்சி ஒரு கண் என்றால், சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாப்பது மற்றொரு கண்" புவி வெப்பமயமாதலைப் பொறுத்தவரை, தமிழ்நாடு 2070-ம் ஆண்டிற்கு முன்பே, 'நெட் ஜீரோ' இலக்கை அடைய வேண்டும்! நம்முடைய அரசு வருவதற்கு முன்பு, இதற்கான நிதி ஒதுக்கீடும் மிகவும் குறைவாகதான் இருந்தது. ஆனால், திராவிட மாடல் அரசில் ரூ.500 கோடி வரை இதற்காக ஒதுக்கி இருக்கிறோம்.
நமது மாநிலத்தை பாதித்த பேரிடர்களுக்கான நிவாரண நிதியாக தமிழ்நாடு அரசு கேட்டதில் வெறும் 17 விழுக்காடுதான் ஒன்றிய அரசு விடுவித்திருக்கிறது. நாம் கேட்டது 24 ஆயிரத்து ரூ.679 கோடி. அவர்கள் வழங்கியது வெறும் ரூ.4 ஆயிரத்து 136 கோடி மட்டும்தான்!
எத்தனையோ சவால்களை எதிர்கொண்டு தமிழ்நாடு போராடியிருக்கிறது! வென்றிருக்கிறது! நாட்டிற்கே வழிகாட்டி இருக்கிறது! அதுபோல், இந்த காலநிலை மாற்றச் சவால்களையும் எதிர்த்து, தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!
இவ்வாறு அவர் பேசினார்.
- சாதிவாரி கணக்கெடுப்பு என்பது சாதி பிரச்சனை கிடையாது. சமூகநீதி பிரச்சனை.
- தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி பா.ம.க. 36 ஆண்டு காலமாக கோரிக்கை வைத்து வருகிறது.
தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி பாமக அன்புமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னை எழும்பூரில் பா.ம.க. தலைவர் அன்புமணி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ம.க. தொண்டர்கள், நிர்வாகிகள் கலந்துகொண்டுள்ளனர்.
அப்போது பா.ம.க. தலைவர் அன்புமணி கூறியதாவது:
* சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் இருக்க தி.மு.க. அரசு தொடர்ச்சியாக 3 பொய்களை சொல்லி வருகிறது.
* பொய் 1 - சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு தான் நடத்த வேண்டும்.
* பொய் 2 - தமிழகம் நடத்தினாலும் கோர்ட் தள்ளுபடி செய்து விடும்.
* பொய் 3 - சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என தி.மு.க அரசு கூறி வருகிறது.
* தமிழ்நாடு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் தி.மு.க. அரசு சமூக நீதியை குழிதோண்டி புதைத்துவிட்டது.
* சாதியின் பெயரால் அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்ட சமுதாயங்களுக்கு சமூகநீதி கிடைக்க சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம்.
* சாதிவாரி கணக்கெடுப்பு என்பது சாதி பிரச்சனை கிடையாது. சமூகநீதி பிரச்சனை.
* 1931-ம் ஆண்டில் இந்தியாவின் மக்கள்தொகை 28 கோடி. தற்போதைய மக்கள்தொகை 146 கோடி.
* இன்றைக்கும் ஆங்கிலேயர் காலத்து புள்ளி விவரங்களை வைத்து இடஒதுக்கீடு கொடுப்பதா?
* தொழில்நுட்பம் வளர்ந்த இந்த காலகட்டத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை எளிதாக நடத்திவிட முடியும்.
* தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி பா.ம.க. 36 ஆண்டு காலமாக கோரிக்கை வைத்து வருகிறது.
* தி.மு.க.வின் பொய்கள் இனியும் எடுபடாது. இன்னும் சில மாதங்களில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு சமூகநீதி நிலைநாட்டப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 19-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
- அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
19-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
23-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதனிடையே, நாளை முதல் 21-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை ஒரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், ஒட்டியும், குறைந்தபட்ச கு வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்று முதல் 19-ந்தேதி வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- மாநில அரசு தனது கடமையை நிறைவேற்றுவதில் தவறி விட்டது.
- மலை உச்சியில் விளக்கேற்றுவது இந்து மதத்தின் ஒரு முக்கிய சடங்காகும்.
மதுரை:
திருப்பரங்குன்றத்தில் உள்ள மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த வழக்கு மதுரை ஐகோர்ட்டின் டிவிசன் பெஞ்சில் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்பாக விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கு இன்று அதே நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது தனி நீதிபதியின் உத்தரவுக்கு ஆதரவாக தாக்கல் செய்த இடையீட்டு மனுதாரர்கள் சார்பில் தெலுங்கானாவின் முன்னாள் அரசு வக்கீல் எஸ். ஸ்ரீராம் ஆஜராகி வாதாடி வருகிறார். அதன் விவரம் வருமாறு:-
தனி நீதிபதியின் உத்தரவை நிறைவேற்றும்பட்சத்தில் பொது அமைதி பாதிக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர், மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் தரப்பில் தெரிவிக்கப்படுவது தனி நீதிபதி உத்தரவை அவமதிப்பதாகும். மேலும் திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என நீதிபதி பிறப்பித்த உத்தரவு காரணமாக எந்த பொது அமைதியும் சீர்குலையவில்லை. அரசு கூறுவது ஏற்புடையதல்ல. மேலும் இந்த மேல்முறையீட்டு மனுவுக்கு உரிய ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை. தனி நீதிபதியின் உத்தரவை நிறைவேற்றுவது அரசின் கடமை.
எனவே இந்த உத்தரவை மனசாட்சியுடன் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியலமைப்பு சட்டத்தின் ஒரு அங்கமாக விளங்கும் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை அரசு நிறைவேற்றவில்லை என்பதன் மூலம் அதிகாரிகள் தங்களின் அடிப்படை கடமையை மீறி உள்ளனர். மாநில அரசு தனது கடமையை நிறைவேற்றுவதில் தவறி விட்டது.
மனுதாரரால் பொது அமைதி குலைந்தது என்பது ஒரு சாக்குபோக்கு காரணம். நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றும் முன்னரே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. எனவே இந்த விவகாரத்தில் நீதிபதி தீர்ப்பை நிறைவேற்றக்கூடாது என்பதற்காக சம்பவத்தன்று திருப்பரங் குன்றம் பகுதியில் போலீஸ் குவிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் வாதாடினார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், பொது அமைதி கெடும் என்று அரசு தரப்பு கூறுவதும், அதற்கு மனுதாரர் தரப்பு எதிர்ப்பு தெரிவிப்பதும் மிகைப்படுத்தப்பட்ட ஒன்று என்று கருத்து தெரிவித்தனர். அதன் பின்பு மூத்த வக்கீல் ஸ்ரீராம் தனது வாதத்தை தொடர்ந்து கூறியதாவது:-
மலை உச்சியில் விளக்கேற்றுவது இந்து மதத்தின் ஒரு முக்கிய சடங்காகும். குறிப்பிட்ட இடத்தில்தான் வழிபடும் இந்த உரிமை, அரசியலமைப்புச் சட்டத்தின் 25-வது பிரிவின் கீழ் ஒரு உரிமை அல்ல என்று மாநில அரசு வாதிடுகிறது. ஒருபுறம் இதைச் சொல்லிக்கொண்டே, மறுபுறம் இந்த உத்தரவு பொது ஒழுங்கிற்கு எதிரானது என்றும் வாதிட்டு வருகின்றனர். இது ஏற்கத்தக்கது அல்ல.
1996-ம் ஆண்டு நீதிபதி கனகராஜ் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் தான் தர்காவின் அருகில் 15 மீட்டர் தூரத்தில் உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது.
ஆனால் இந்த விவகாரத்தை இரு மதத்திற்கு இடையே ஏற்படும் பிரச்சனை என்பது போல் திசை திருப்பி விட்டுள்ளனர். தனி நீதிபதி தனது கருத்தை தீர்ப்பில் திணித்து உள்ளார் என எதிர்த்தரப்பினர் வாதாடுவது ஏற்புடையதல்ல.
எனவே கோவில் நிர்வாகத்தின் உரிமையை நிலைநாட்டுவதற்காகவே மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்று தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்து உள்ளார் என்றார்
அதற்கு நீதிபதிகள், தீப தூணில் தான் தீபம் ஏற்ற வேண்டும் என்று உத்தரவு உள்ளதா? என கேட்டனர். அதற்கு வக்கீல் ஸ்ரீராம் கூறுகையில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டியது கோவில் நிர்வாகம், மதுரை மாவட்ட கலெக்டரின் கடமை.
இவ்வாறு மனுதாரர் தரப்பில் வாதாடப்பட்டது தொடர்ந்து விசாரணை நடந்தது.
- வறுமையை ஒழித்த சாதனைக்குத் தண்டனையாக தமிழ்நாட்டில் நூறு நாள் வேலைத்திட்டமே நின்றுபோகும் ஆபத்தை எதிர்நோக்கி உள்ளோம்.
- உங்கள் தலைவி அம்மையார் ஜெயலலிதா அவர்கள் இதற்கு ஒப்புக்கொண்டிருப்பாரா?
சென்னை:
தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
பச்சைத்துண்டு போட்டுக்கொண்டு பச்சைத் துரோகம் செய்பவருக்கு, மீண்டும் விவசாயிகள் கண்ணில் தெரியவில்லையா?
கிராமப்புற ஏழை மக்களின் வயிற்றிலேயே அடிக்கும் #VBGRAMG குறித்து எதிர்க்கட்சி அ.தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன?
#ThreeFarmLaws, #CAA போல இதிலும் அமித்ஷாவுக்கு ஆமாம் சாமி போட்டு ஆதரவு தரப்போகிறாரா திருவாளர் பழனிசாமி?
#MGNREGA-வில் காந்தியடிகளின் பெயரை அகற்றிவிட்டு, சொன்னால் வாய் சுளுக்கிக் கொள்ளும்படி இந்தியில் பெயரிட்டிருக்கிறார்கள். இந்தித் திணிப்பை எதிர்த்து வென்ற பேரறிஞர் அண்ணாவின் பெயரைக் கட்சியின் பெயரில் வைத்துக்கொண்டு, இதை எதிர்க்கக் கூடவா தயக்கம்?
திட்டத்துக்கான நிபந்தனைகள் எல்லாம் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில்! நிதிக்கு மட்டும் மாநில அரசு பங்களிக்க வேண்டும் என்பதை அதிமுக எந்த எதிர்ப்புமின்றி ஏற்றுக்கொள்கிறதா? உங்கள் தலைவி அம்மையார் ஜெயலலிதா அவர்கள் இதற்கு ஒப்புக்கொண்டிருப்பாரா?
வறுமையை ஒழித்த சாதனைக்குத் தண்டனையாக தமிழ்நாட்டில் நூறு நாள் வேலைத்திட்டமே நின்றுபோகும் ஆபத்தை எதிர்நோக்கி உள்ளோம். இதற்கு, எப்படி முட்டு கொடுக்கப் போகிறார் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர்?
இவ்வளவு குனிந்து கும்பிடு போடும் உங்களது கட்சிக்கு, "அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்" என்ற பெயர் எதற்கு?
நான் கேட்கவில்லை; தமிழ்நாட்டு மக்கள் கேட்கிறார்கள்! என்று கூறியுள்ளார்.
- பைக்காரா, சூட்டிங்மட்டம், தலைகுந்தா போன்ற பகுதிகளில் குளிரின் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்தது.
- கோத்தகிரியில் இருந்து ஊட்டி, குன்னூர் செல்லும் மலைப்பாதையில் கடும் பனிமூட்டத்தை உணர முடிந்தது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 12-ந்தேதி முதல் அனைத்து பகுதிகளிலும் உறைப்பனி கொட்ட தொடங்கியது. இதனால் ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக பனியின் தாக்கம் அதிகளவில் காணப்பட்டது.
இதனால் ஊட்டியின் வெப்பநிலை நேற்று முன்தினம் மைனஸ் ஒரு டிகிரிக்கு கீழ் சென்றது. இதனால் தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா, தலைக்குந்தா, கிளன் மார்க்கன், சூட்டிங் மட்டம், பைக்காரா, சாண்டி நல்லா, அப்பர் பவானி, அவலாஞ்சி போன்ற பகுதிகளில் வெள்ளை நிற கம்பளம் விரித்தாற்போல பனி படர்ந்து காணப்பட்டது.
பகல் நேரங்களில் வெயில் அடித்தபோதிலும் தாழ்வான பகுதிகள், நீர்நிலைகள் மற்றும் நிழல் தரும் பகுதிகளில் கடுங்குளிரை அதிகமாக உணர முடிந்தது.
அதிலும் குறிப்பாக பைக்காரா, சூட்டிங்மட்டம், தலைகுந்தா போன்ற பகுதிகளில் குளிரின் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்தது. எனவே அதிகாலை நேரங்களில் தேயிலை தோட்டம்-மலை காய்கறி தோட்டங்களுக்கு வேலைக்கு செல்பவர்கள் கடும் குளிரால் பாதிக்கப்பட்டனர். பள்ளி செல்லும் குழந்தைகளும் அவதிக்கு உள்ளாகினர்.
பெரும்பாலான தொழிலாளர்கள் குளிரை தாக்குப் பிடிக்க முடியாமல் ஆங்காங்கே உள்ள பகுதிகளில் தீ மூட்டி குளிர்காய்ந்தனர். உறைபனியின் தாக்கம் மேலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நீலகிரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
இதற்கிடையே ஊட்டி, கோத்தகிரி, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் உறை பனியுடன் அவ்வப்போது லேசாக சாரல் மழை பெய்தது. அதே நேரத்தில் குளிரும் குறையவில்லை. இதனால் அங்கு நேற்று காலை அதிகாலை நேரங்களில் அதிகபட்சமாக 21 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகி இருந்தது.
பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் வெம்மை ஆடைகளுடன் வலம் வந்தனர். அனைத்து சாலைகளிலும் மேக மூட்டம் நிலவியதால் சுற்றுலாப் பயணிகள் வாகனங்களை இயக்க முடியாமல் திணறினர்.
கோத்தகிரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடும் பனிப்பொழிவு காணப்படுவதால் அந்த பகுதியில் அதிகாலை நேரங்களில் கடுங்குளிரும், பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்தும் காணப்பட்டது.
கோத்தகிரியில் இருந்து ஊட்டி, குன்னூர் செல்லும் மலைப்பாதையில் கடும் பனிமூட்டத்தை உணர முடிந்தது. இதனால் அந்த வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் பகல் நேரங்களிலும் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி மெதுவாக பயணித்தன.
இருப்பினும் சாலையோர வியாபாரிகள், மலைத்தோட்ட காய்கறி விவசாயிகள் மற்றும் மாலை நேரத்தில் பணிக்கு சென்று வீடு திரும்புவோர், பள்ளி-கல்லூரி மாணவர்கள் கடுங்குளிரிலும் அன்றாட பணிகளை மேற்கொண்டனர்.
- பல்வேறு கட்டுப்பாடுகள், நிபந்தனைகளை த.வெ.க. நிர்வாகிகள் ஏற்றதை தொடர்ந்து போலீஸ் அனுமதி.
- விஜய் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள பிரசார வாகனத்தின் மீது நின்று பேச உள்ளார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே சுங்கச்சாவடி சரளையில் விஜயபுரி அம்மன் கோவில் திடலில் நாளை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்துடன் இணைந்து செங்கோட்டையன் மற்றும் நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
பொதுக்கூட்டத்திற்கு இந்து சமய அறநிலைத்துறை, போலீஸ் சார்பில் விதிக்கப்பட்ட பல்வேறு கட்டுப்பாடுகள், நிபந்தனைகளை த.வெ.க. நிர்வாகிகள் ஏற்றதை தொடர்ந்து போலீஸ் அனுமதி அளிக்கப்பட்டது.
இதற்காக விஜய் நாளை காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்து அங்கிருந்து கார் மூலம் நேரடியாக பிரசாரம் நடைபெறும் இடத்திற்கு வருகிறார். காலை 11 மணிக்கு கூட்டம் தொடங்குகிறது. விஜய் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள பிரசார வாகனத்தின் மீது நின்று பேச உள்ளார்.
இந்நிலையில், ஈரோடு விஜயமங்கலம் பகுதியில் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில்," விஜயின் பிரச்சாரத்திற்கு வருபவர்களுக்கு கியூ ஆர் கோட், பாஸ் தேவையில்லை.
விஜயின் பிரச்சாரத்திற்கு யார் வேண்ஐமானாலும் வரலாம் பொதுமக்கள் தாங்களாகவே பங்கேற்கலாம், சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன" என்றார்.
- தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 16 சதவீதம் அதிகரித்துள்ளது.
- தமிழ்நாட்டில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* தமிழ்நாடு அரசு கடந்த 3 ஆண்டுகளாக மாநில வளர்ச்சியில் சாதனை படைத்து வருகிறது.
* தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 16 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த வளர்ச்சியில் உற்பத்தி துறைக்கு பெரும் பங்கு உள்ளது.
* தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் மாநிலத்தின் வளர்ச்சி அதிகரித்துள்ளது.
* கடந்த 4 ஆண்டுகளில் 1.016 புரிந்துணர்வு ஒப்பந்தக்கள் கையெழுத்தாகி உள்ளது.
* முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் ரூ.11.40 லட்சம் கோடி முதலீடுகள் தமிழ்நாட்டிற்கு ஈர்க்கப்பட்டுள்ளது.
* தமிழ்நாட்டில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
* மின்னணு பொருட்கள் ஏற்றுமதி 7 மடங்கு அதிகரித்துள்ளது.
* உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை 47% அளவிற்கு உயர்ந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- சீனிவாசா பெருமாள் சன்னதியில் தரிசனம் செய்த பின்னர் சொர்ண லட்சுமிக்கு அபிஷேகம் செய்தார்.
- ஜனாதிபதி வருகையையொட்டி வேலூரில் டிடோரன்கள் பறக்க தடை செய்யப்பட்டது.
ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று முதல் கர்நாடகா, தமிழ்நாடு, தெலுங்கானா மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்தநிலையில் இன்று காலை திருப்பதி ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு வந்தார். அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் வேலூர் ஸ்ரீபுரம் தங்க கோவிலுக்கு வருகை தந்தார்.
அவரை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, வேலூர் கலெக்டர் சுப்புலெட்சுமி, போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன், மேயர் சுஜாதா ஆகியோர் வரவேற்றனர்.
கோவில் வளாகத்தில் அமைந்துள்ள 1,700 கிலோ வெள்ளியால் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் விநாயகரையும், 70 கிலோ தங்கத்தால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள மகாலட்சுமியையும் தரிசனம் செய்தார்.
சீனிவாசா பெருமாள் சன்னதியில் தரிசனம் செய்த பின்னர் சொர்ண லட்சுமிக்கு அபிஷேகம் செய்தார்.
பின்னர் கோவில் வளாகத்தில் மரக்கன்று நட்டார். சக்தி அம்மாவிடம் ஆசி பெற்றார். தங்க கோவிலை பார்வையிட்டு சாமி தரிசனம் செய்தார்.
ஜனாதிபதி வருகையையொட்டி வேலூரில் டிடோரன்கள் பறக்க தடை செய்யப்பட்டது. வேலூர், அணைக்கட்டு சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
தரிசனம் முடிந்ததும் ஜனாதிபதி மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் திருப்பதிக்கு புறப்பட்டு சென்றார்.
- தமிழக அரசியல் வரலாற்றில் தி.மு.க.வின் உண்மை முகம், கோர முகம், பழிவாங்கும் முகம் என்பதெல்லாம் மக்கள் மத்தியில் தற்போது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.
- தி.மு.க.வின் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கிற ஒத்த கருத்துள்ள அனைவரும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒன்று சேர்ந்து களம் காணவேண்டும்.
மதுரை:
சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் இன்று கூறியதாவது:-
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி 11 மருத்துவக் கல்லூரியை கொண்டு வந்து சரித்திர சாதனை படைத்தார். அதில் பல மருத்துவமனைகளில் கட்டுமான முறைகேடு நடைபெற்றதாக தி.மு.க. வைத்த குற்றச்சாட்டில், துளிகூட முகாந்திரம் இல்லை என நீதியரசர்கள் கூறியதில் தி.மு.க. தற்போது பின்வாங்கியுள்ளது.
ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவ கனவை நினைவாக்கும் வகையில், 11 மருத்துவக் கல்லூரியில் கொண்டு வந்து அதனைத் தொடர்ந்து அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை கொண்டு வந்து அதன் மூலம் ஏழை மாணவர்களின் மருத்துவப் படிப்பை நனவாக்கி, சமூக நீதியை எடப்பாடி பழனிசாமி காத்தார்.
மக்களுக்காக உழைத்து வரும் எடப்பாடி பழனிசாமியை வீழ்த்தி விடலாம் என்று தி.மு.க. நினைத்தால் அதில் தோல்விதான் கிடைக்கும் என்பது தான் தற்போது வந்த மகத்தான தீர்ப்பு மூலம் நமக்கு கிடைத்துள்ளது.
தமிழக அரசியல் வரலாற்றில் தி.மு.க.வின் உண்மை முகம், கோர முகம், பழிவாங்கும் முகம் என்பதெல்லாம் மக்கள் மத்தியில் தற்போது வெட்ட வெளிச்சமாகி உள்ளது. இன்றைக்கு, தி.மு.க.வின் சர்வாதிகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திட, தி.மு.க.வின் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கிற ஒத்த கருத்துள்ள அனைவரும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒன்று சேர்ந்து களம் காணவேண்டும்.
யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே என்பது போல தமிழகத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் ஆட்சிக்கு மகுடம் சூட்ட எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைவரும் ஒன்று கூட வேண்டும் என்றார்.






