என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "electronic goods"

    • தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 16 சதவீதம் அதிகரித்துள்ளது.
    • தமிழ்நாட்டில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

    சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * தமிழ்நாடு அரசு கடந்த 3 ஆண்டுகளாக மாநில வளர்ச்சியில் சாதனை படைத்து வருகிறது.

    * தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 16 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த வளர்ச்சியில் உற்பத்தி துறைக்கு பெரும் பங்கு உள்ளது.

    * தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் மாநிலத்தின் வளர்ச்சி அதிகரித்துள்ளது.

    * கடந்த 4 ஆண்டுகளில் 1.016 புரிந்துணர்வு ஒப்பந்தக்கள் கையெழுத்தாகி உள்ளது.

    * முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் ரூ.11.40 லட்சம் கோடி முதலீடுகள் தமிழ்நாட்டிற்கு ஈர்க்கப்பட்டுள்ளது.

    * தமிழ்நாட்டில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

    * மின்னணு பொருட்கள் ஏற்றுமதி 7 மடங்கு அதிகரித்துள்ளது.

    * உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை 47% அளவிற்கு உயர்ந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இலங்கையில் இருந்து வந்த பயணியிடம் விலை உயர்ந்த கற்கள் பறிமுதல்.
    • கடத்தலில் ஈடுபட்ட மூன்று பேரை கைது செய்து அதிகாரிகள் விசாரணை.

    சென்னை விமான நிலையத்தில் தங்கம் உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்படுவது குறித்து விமான நிலைய சுங்க இலாகா முதன்மை கமிஷனர் உதய் பாஸ்கருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் சுங்க இலாகா அதிகாரிகள் விமான பயணிகளை கண்காணித்தனர்.

    அப்போது துபாயில் இருந்து வந்த சென்னை திருவல்லிகேணியை சேர்ந்த ரகீம் (வயது 30), ஆலந்தூரை சேர்ந்த முகமது ஆசீப் (32) ஆகியோரை சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். பின்னர் 2 பேரையும் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர்.

    அப்போது 2 பேரும் உள்ளாடைக்குள் மறைத்து வைத்து ரூ. 59 லட்சத்து 70 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 281 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவர்களிடம் இருந்த ரூ. 4 லட்சத்தி 86 ஆயிரம் மதிப்புள்ள எலக்ட்ரானிக் பொருட்களையும் கைப்பற்றினார். 



    இதேபோல் இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து வந்த தங்கராஜா (37) என்பவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவரிடம் இருந்த ரூ. 23 லட்சத்தி 13 ஆயிரம் மதிப்புள்ள 1706.05 கேரட் விலையுர்ந்த கற்களை அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.

    இந்த அதிரடி சோதனை மூலம் மொத்தம் ரூ. 87 லட்சத்து 69 ஆயிரம் மதிப்புள்ள தங்கம், விலையுர்ந்த கற்கள் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் பறிமுதல் செய்யபட்டுள்ளன. கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.At Chennai Airport Rs.59.70 lakh worth of gold seized

    ×