என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொது போக்குவரத்து"

    • நிதிஆயோக் வெளியிட்டிருக்கும் இலக்குகளில் தமிழ்நாடு முதல் இடத்தில் இருக்கிறது.
    • காலநிலை மாற்றச் சவால்களையும் எதிர்த்து, தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!

    சென்னை:

    தமிழ்நாடு காலநிலை மாற்றத்திற்கான ஆட்சி மன்ற குழுவின் 3-வது கூட்டம் சென்னை தலைமைச் செயலக 10-வது மாடி கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமை தாங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    காலநிலை மாற்றத்தின் விளைவுகளை இப்போது கண்கூடாக பார்த்து கொண்டு இருக்கிறோம். இப்போது கூட, 'டிட்வா புயல்' எப்படிப்பட்ட கோர தாண்டவத்தை ஆடியது. அதனால் இலங்கை உள்ளிட்ட நாடுகள் எப்படி பாதிக்கப்பட்டது என்று பார்த்தோம். நம்முடைய அரசு தொடர்ந்து மேற்கொண்டு வந்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால், பெரியளவில் பாதிப்புகள் ஏற்படாமல் தமிழ்நாட்டை காப்பாற்றி இருக்கிறோம். எப்போதோ ஒருமுறை, புயல்-வெள்ளங்களை எதிர்கொண்ட காலத்தை எல்லாம் நாம் கடந்து விட்டோம். அதை உணர்ந்து தான் 3 ஆண்டுகளுக்கு முன்பே இந்த பேரிடர்களுக்கேற்ற தடுப்பு மற்றும் தகவமைப்பு உட்கட்டமைப்புகளை தொடங்கிவிட்டோம்.

    காலநிலை மாற்ற ஆட்சி மன்றக்குழு, பசுமைத் தமிழ் நாடு இயக்கம், தமிழ்நாடு ஈரநில இயக்கம், தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம், தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம் என்று நாம் முன் கூட்டியே நிறைய செய்து கொண்டிருக்கிறோம். இதனால், இந்தியாவிற்கே வழிகாட்டும் நிலையில் தமிழ்நாடு இருக்கிறது.

    கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில், ரூ.24 கோடி மதிப்பீட்டில் காலநிலைக் கல்வியறிவு முன்னெடுப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டோம். அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் திறமைமிகு 4 ஆயிரம் பள்ளி ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்கள். மிக விரைவில், காலநிலைக் கல்வியறிவு குறித்த பயிற்சிகள் வழங்கப்பட இருக்கிறது.

    அதுமட்டுமல்லாமல், பள்ளி மாணவர்களுக்கு, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்த ஆண்டுக்கு இரண்டு முறை, மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம் மூலமாக, நடத்தப்படும் ஒரு நாள் கோடைக்கால மற்றும் குளிர்கால சிறப்பு முகாம்களை 2 நாள் முகாம்களாக பள்ளிக் கல்வித்துறை மூலமாக நடத்த ஏற்பாடு செய்தி ருக்கிறோம்.

    மேலும், கூல் ரூபிங் திட்டத்தை, தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தின் 2025-26-ம் ஆண்டிற்கான செயல்திட்டத்தில் சேர்த்திருக்கிறோம். அம்பத்தூரில் இருக்கும் பெருந்தலைவர் காமராஜர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வகுப்பறைகளில், கூல் ரூபிங் எனப்படும் அதிக வெப்ப பிரதிபலிப்புமிக்க வெள்ளைப் பூச்சுகள் பூசப்பட்டிருக்கிறது. இதன் மூலமாக வகுப்பறைகளில் வெப்ப அளவினை கணக்கி டக்கூடிய சென்சார்கள் வைத்து கண்காணித்ததில், அறை வெப்ப நிலை 1.5 டிகிரி முதல் 3 டிகிரி வரை குறைந்திருக்கிறது. இதுகுறித்த அறிக்கையின் அடிப் படையில், இந்தத் திட்டத்தை தமிழ்நாட்டில் இருக்கும் 297 பசுமைப் பள்ளிகளிலும் செயல்படுத்த இருக்கிறோம்.

    கடலோர வாழ்விடங்களை, இயற்கை சார்ந்த தீர்வுகள் மூலம் மறு சீரமைக்கும் திட்டத்தின்கீழ், தொடர்ச்சியாக அலையாத்தி மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது. இதன் ரிசல்ட் என்ன தெரியுமா? தமிழ்நாட்டில் 4500 ஹெக்டேர் பரப்பளவுக்கு இருந்த அலையாத்திக் காடுகள், 9 ஆயிரம் ஹெக்டேராக, அதாவது, இரண்டு மடங்காக அதிகரித்திருக்கிறது.

    காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் பெண்களின் பங்குதான் அளப்பரியது.

    அதனால்தான், 100 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு, காலநிலை மாற்றம் மற்றும் நெகிழி ஒழிப்புப் பரப்புரையையும் மேற்கொள்ள, 100 இ-ஆட்டோக்கள் வழங்கப்பட்டிருக்கிறது.

    தமிழ்நாட்டின் மொத்த பசுமை இல்ல வாயு வெளியேற்றம் போக்குவரத்துத் துறையின் பங்கு 12 சதவீதத்தில் இருந்து 19 சதவீதமாக உயர்ந்திருக்கிறது என்று ஆய்வறிக்கைகளில் தெரிய வந்திருக்கிறது. அதுவும், கடந்த 2005 முதல் 2019-க்கு இடைப்பட்ட காலத்தில், இது 3 மடங்கு அதிகரித்திருக்கிறது.

    சென்னை போன்ற மெட்ரோ சிட்டியில் போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து வருகிறது. மக்கள் அதிகமாக பொது போக்குவரத்தை பயன்படுத்துவது தான் இதைக் குறைக்க சிறந்த வழி! அதை ஊக்குவிப்பதற்காகதான், எம்.டி.சி. மூலமாக, முதற்கட்டமாக 120 மின்சாரப் பஸ்களை பயன்பாட்டிற்கு கொண்டு வந்திருக்கிறோம். மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது. அதனால், மேலும் 600 மின்சாரப் பஸ்களை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்போகிறோம். இதனால், நெரிசல் குறையும், காற்று மாசு குறையும், எல்லோருடைய நேரமும் மிச்சமாகும்.

    வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு இவ்வளவும் செய்திருப்பதால்தான், ஒன்றிய அரசே நமக்கு சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள். நிதிஆயோக் வெளியிட்டிருக்கும் இலக்குகளில் தமிழ்நாடு முதல் இடத்தில் இருக்கிறது.

    "நம்முடைய அரசுக்கு வளர்ச்சி ஒரு கண் என்றால், சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாப்பது மற்றொரு கண்" புவி வெப்பமயமாதலைப் பொறுத்தவரை, தமிழ்நாடு 2070-ம் ஆண்டிற்கு முன்பே, 'நெட் ஜீரோ' இலக்கை அடைய வேண்டும்! நம்முடைய அரசு வருவதற்கு முன்பு, இதற்கான நிதி ஒதுக்கீடும் மிகவும் குறைவாகதான் இருந்தது. ஆனால், திராவிட மாடல் அரசில் ரூ.500 கோடி வரை இதற்காக ஒதுக்கி இருக்கிறோம்.

    நமது மாநிலத்தை பாதித்த பேரிடர்களுக்கான நிவாரண நிதியாக தமிழ்நாடு அரசு கேட்டதில் வெறும் 17 விழுக்காடுதான் ஒன்றிய அரசு விடுவித்திருக்கிறது. நாம் கேட்டது 24 ஆயிரத்து ரூ.679 கோடி. அவர்கள் வழங்கியது வெறும் ரூ.4 ஆயிரத்து 136 கோடி மட்டும்தான்!

    எத்தனையோ சவால்களை எதிர்கொண்டு தமிழ்நாடு போராடியிருக்கிறது! வென்றிருக்கிறது! நாட்டிற்கே வழிகாட்டி இருக்கிறது! அதுபோல், இந்த காலநிலை மாற்றச் சவால்களையும் எதிர்த்து, தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!

    இவ்வாறு அவர் பேசினார்.

    • சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.
    • மின்சார பேருந்துகளுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால், மேலும் 600 மின்சாரப் பேருந்துகளை பயன்பாட்டுக்கு கொண்டு வர உள்ளோம்.

    சென்னையில் நடைபெறும் தமிழ்நாடு காலநிலை மாற்றத்திற்கான ஆட்சி மன்றக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.

    * மக்கள் அதிகளவில் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவதுதான் நெரிசலைக் குறைக்க சிறந்த வழி.

    * பொது போக்குவரத்தை பயன்படுத்துவதை ஊக்குவிக்கதான் 120 மின்சாரப் பேருந்துகளை கொண்டு வந்துள்ளோம்.

    * மின்சார பேருந்துகளுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால், மேலும் 600 மின்சாரப் பேருந்துகளை பயன்பாட்டுக்கு கொண்டு வர உள்ளோம். இதனால் நெரிசலும் மாசும் குறையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முதற்கட்டமாக இன்று 100 புதிய பேருந்துகளைத் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
    • எஞ்சியுள்ள பேருந்துகள் அடுத்த இரண்டு மாதங்களில் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும்.

    சென்னை பல்லவன் இல்லத்தில் இருந்து ரூ.37.98 கோடி மதிப்பிலான 100 புதிய BS6 ரக பேருந்துகளின் இயக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சிவசங்கர், சேகர்பாபு, மேயர் பிரியா, துறையின் செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    அதிகரித்து வரும் போக்குவரத்துத் தேவைக்கேற்ப புதிதாக 1,000 பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் எனக் கடந்த 19.10.2022 அன்று சட்டப்பேரவையில் 110-விதியின்கீழ் அறிவித்தேன்.

    அதன்படி, ரூ.634.99 கோடி மதிப்பீட்டில் புதிதாக 1,666 BSVI பேருந்துகளைக் கொள்முதல் செய்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் முதற்கட்டமாக இன்று 100 புதிய பேருந்துகளைத் தொடங்கி வைத்தேன்.

    எஞ்சியுள்ள பேருந்துகள் அடுத்த இரண்டு மாதங்களில் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும்.

    பொதுமக்கள் தங்கள் வீட்டின் சொந்த வாகனங்களில் பயணிப்பதைப் போன்று பொதுப் போக்குவரத்துகளைத் தூய்மையாகப் பராமரிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×