search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சொந்த வாகனங்கள் போன்று பொது போக்குவரத்தையும் தூய்மையாக பராமரிக்க வேண்டும்- மு.க.ஸ்டாலின்
    X

    சொந்த வாகனங்கள் போன்று பொது போக்குவரத்தையும் தூய்மையாக பராமரிக்க வேண்டும்- மு.க.ஸ்டாலின்

    • முதற்கட்டமாக இன்று 100 புதிய பேருந்துகளைத் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
    • எஞ்சியுள்ள பேருந்துகள் அடுத்த இரண்டு மாதங்களில் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும்.

    சென்னை பல்லவன் இல்லத்தில் இருந்து ரூ.37.98 கோடி மதிப்பிலான 100 புதிய BS6 ரக பேருந்துகளின் இயக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சிவசங்கர், சேகர்பாபு, மேயர் பிரியா, துறையின் செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    அதிகரித்து வரும் போக்குவரத்துத் தேவைக்கேற்ப புதிதாக 1,000 பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் எனக் கடந்த 19.10.2022 அன்று சட்டப்பேரவையில் 110-விதியின்கீழ் அறிவித்தேன்.

    அதன்படி, ரூ.634.99 கோடி மதிப்பீட்டில் புதிதாக 1,666 BSVI பேருந்துகளைக் கொள்முதல் செய்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் முதற்கட்டமாக இன்று 100 புதிய பேருந்துகளைத் தொடங்கி வைத்தேன்.

    எஞ்சியுள்ள பேருந்துகள் அடுத்த இரண்டு மாதங்களில் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும்.

    பொதுமக்கள் தங்கள் வீட்டின் சொந்த வாகனங்களில் பயணிப்பதைப் போன்று பொதுப் போக்குவரத்துகளைத் தூய்மையாகப் பராமரிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×