என் மலர்
உள்ளூர் செய்திகள்
- சாதாரண மருந்துகள் எடுத்து 24 மணி நேரத்துக்குள் குறையாவிட்டால் மருத்துவரை கட்டாயம் அணுக வேண்டும்.
- நோய் தாக்கியவர்கள் இருமும் போதும், தும்மும் போதும் வெளியேறும் நீர் திவலைகள் மூலம் காய்ச்சல் பரவும்.
சென்னை:
பருவ கால மாற்றத்தால் ஒவ்வொரு கால கட்டத்தில் ஒவ்வொரு பகுதியில் காய்ச்சல் பரவுவது வழக்கமாகி விட்டது. கேரளாவில் ஜூன், ஜூலை மாதங்களில் பரவலாக காணப்படுகிறது.
சென்னையில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் அதிக அளவில் பரவுகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தொடங்கி ஏப்ரல் வரை நீடித்தது. இந்த ஆண்டும் காய்ச்சல் மற்றும் சுவாச சம்பந்தமான வைரஸ் தொற்றுக்கள் பரவி வருகின்றன. சாதாரண சளி, காய்ச்சல், இருமல் என்ற அறிகுறிகளுடன் வரும் பலருக்கு டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருப்பதும் தெரியவந்து உள்ளது.
இன்புளூயன்சா வகை காய்ச்சல் அனைத்து தரப்பு மக்களையும் பாதித்து வரும் நிலையில் டெங்கு பாதிப்பும் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
தினசரி 60 முதல் 70 பேர் வரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதாக சுகாதாரத்துறை கூறுகிறது. இந்த ஆண்டில் இதுவரை 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். இதுவரை 7 பேர் உயிரிழந்து உள்ளார்கள்.
வரும் காலங்களில் டெங்கு காய்ச்சல் இன்னும் அதிகரிக்கும் என்பதால் இந்த ஆண்டு இறுதிக்குள் 20 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்படலாம் என்று கணித்து உள்ளார்கள்.
இன்புளூயன்சா மற்றும் டெங்கு காய்ச்சலுக்கு பொதுவான அறிகுறிகளாக காய்ச்சல், இருமல், தொண்டை வலி, மூக்கு ஒழுகுதல், உடல்வலி, சோர்வு காணப்படும்.
சாதாரண மருந்துகள் எடுத்து 24 மணி நேரத்துக்குள் குறையாவிட்டால் மருத்துவரை கட்டாயம் அணுக வேண்டும். நோய் தாக்கியவர்கள் இருமும் போதும், தும்மும் போதும் வெளியேறும் நீர் திவலைகள் மூலம் காய்ச்சல் பரவும். எனவே தும்மும் போதும், இருமும் போதும் வாய், மூக்கை மூடிக்கொள்ள வேண்டும். அடிக்கடி கைகளை கழுவ வேண்டும். காய்ச்சல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். திரவ நிலை உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.
பொதுமக்கள் தங்கள் வீடுகளின் அருகில் உள்ள தேவையற்ற பொருட்களை அகற்ற வேண்டும். மேலும் வீட்டில் உள்ள 'பிரிட்ஜ்' பின்பக்கம் தண்ணீர் வடிந்து தேங்கக்கூடிய தொட்டியை வாரத்தில் ஒரு முறையாவது தூய்மை செய்ய வேண்டும்.
மொட்டை மாடியில் மழைநீர் தேங்கக் கூடிய வகையிலான பொருள்கள் இருந்தால் உடனடியாக அகற்ற வேண்டும். அப்போதுதான் 'ஏடிஸ்' கொசு பரவலைத் தடுக்க முடியும். 'ஏடிஸ்' வகை கொசுக்கள் உற்பத்தியைத் தடுப்பது மக்களிடையே உள்ள பொறுப்பு என்று சுகாதாரத்துறை கூறி உள்ளது.
- ரெயில் நிலைய வடிவமைப்பானது மேலே இருந்து பார்க்கும்போது ஒரு பிளஸ் அடையாளமாக தெரிகிறது.
- 6-வது முதல் 8-வது மாடி வரை மெட்ரோ ரெயில் அலுவலகம், சில்லறை விற்பனை நிலையங்கள் இடம்பெறும்.
சென்னை:
சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் பணிகள் நடந்து வருகிறது. இதில் மாதவரம் முதல் சிப்காட் வரை 3-வது வழித்தடத்திலும், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை 5-வது வழித்தடத்திலும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த திட்டத்தில் சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கும் பொதுமக்கள் செல்லும் வகையில் சோழிங்கநல்லூரில் உயர்மட்ட மெட்ரோ ரெயில் நிலையம் அமைக்கப்பட உள்ளது.
இந்த ரெயில் நிலையம் 2 வழித்தட மெட்ரோ ரெயில்களும் சந்திக்கும் இடமாகவும், ஒரு ரெயிலில் இருந்து இன்னொரு ரெயிலுக்கு மாறும் இடமாகவும் திகழ்கிறது. மேலும் இந்த மெட்ரோ ரெயில் நிலையம் தனித்துவமான வடிவமைப்பை கொண்டதாகவும், பல சுவாரசியமான அம்சங்கள் கொண்டதாகவும் அமைய உள்ளது.
இந்த ரெயில் நிலையத்தின் நுழைவாயிலுக்கு அருகில் 8 மாடிகளை கொண்ட கட்டிடம் கட்டப்பட உள்ளது. இந்த கட்டிடம் வழியாக மெட்ரோ ரெயில்கள் செல்ல உள்ளன.
இதுகுறித்து மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-
சோழிங்கநல்லூரில் அமைய உள்ள 8 மாடி கட்டிடம் வழியாக மெட்ரோ ரெயில்கள் செல்ல உள்ளன. மாதவரம்- சோழிங்கநல்லூர் இடையேயான ரெயில்கள் மேல் நடைமேடையிலும், மாதவரம் - சிப்காட் இடையேயான மெட்ரோ ரெயில்கள் கீழ் நடைமேடையிலும் செல்லும். இதில் முதல் மட்டத்தில் ஒரு பிளாசா கட்டப்பட உள்ளது. 3-வது மட்டத்தில் மாதவரம் - சிப்காட் ரெயிலுக்கான நடைமேடையும், 4-வது மட்டத்தில் மாதவரம் - சோழிங்கநல்லூர் ரெயிலுக்கான நடைமேடையும் அமைய உள்ளது.
இந்த ரெயில் நிலைய வடிவமைப்பானது மேலே இருந்து பார்க்கும்போது ஒரு பிளஸ் அடையாளமாக தெரிகிறது. இதில் 2 வழித்தடங்களும் குறுக்காக கடப்பது போல் காணப்படுகிறது. பயணிகள் ஒரு வழித்தடத்தில் இருந்து இன்னொரு வழித்தடத்திற்கு மாறக்கூடிய வகையில் வசதி செய்யப்பட்டு உள்ளது.
சாலையில் இருந்து 28.8 மீட்டர் உயரத்தில் 5-வது வழித்தட ரெயிலுக்கான நடைபாதையும், அதற்கு கீழே சாலையில் இருந்து 21.8 மீட்டர் உயரத்தில் 3-வது வழித்தட ரெயிலுக்கான நடைபாதையும் கட்டப்படுகிறது. 8 மாடி கட்டிடத்தில், முதல் தளம் வாகன நிறுத்துமிடமாக பயன்படுத்தப்படுகிறது. ரெயில் 5-வது மாடி வழியாக செல்லும். 6-வது முதல் 8-வது மாடி வரை மெட்ரோ ரெயில் அலுவலகம், சில்லறை விற்பனை நிலையங்கள் இடம்பெறும்.
சோழிங்கநல்லூருக்கு அருகில் தற்போது கட்டப்பட்டு வரும் துரைப்பாக்கம் ரெயில் நிலையமும், சோழிங்கநல்லூரை போன்ற அம்சங்களை கொண்டிருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
- அக்டோபர் 5ந்தேதி எமது வரலாற்றில் ஒரு சிறப்பான நாள்.
- இன்றைய தலைமுறைக்கு பொருத்தமாக, சமகால சிக்கல்களுக்கு இணைத்து விளக்க வேண்டும்.
சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் வள்ளலாரின் 202-வது பிறந்த நாளையொட்டி, சமரச சுத்த சன்மார்க்க இளைஞர்கள் கருத்தரங்கம் இன்று நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் சுமார் 300 இளைஞர்கள் பங்கேற்றனர்.
கருத்தரங்கை தொடங்கி வைத்து ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-
நாளை மிக, மிக முக்கியமான நாள். அக்டோபர் 5ந்தேதி எமது வரலாற்றில் ஒரு சிறப்பான நாள். ஏனெனில் அந்த நாளில் தான் தெய்வீகம் இந்த மண்ணில் அவதரித்தது. நாம் அவரை சுவாமி வள்ளலார் என்று அறிந்திருக்கிறோம்.
நாளை அவர் அவதரித்ததற்கான 202வது ஆண்டு விழா. நாம் இங்கு கூடியிருப்பதன் நோக்கம் – அவரின் போதனைகள், அவரின் வாழ்க்கை, அவரின் பணிகள் குறித்து பேசவும், பகிரவும், கொண்டாடவும் ஆகும். இங்கு மாணவர்கள் அதிகமாக இருப்பதை நான் புரிந்து கொள்கிறேன்.
நான் உங்களை வலியுறுத்த விரும்புவது– வள்ளலாரின் போதனைகளை மட்டும் அல்லாமல், அவர் ஏன், எப்போது, எந்த சூழலில் அவதரித்தார் என்பதைப் புரிந்து கொள்ளும் பொருட்டும் ஆராயுங்கள். அந்தப் பின்னணி, அந்தக் கால சூழலை நன்றாக அறிந்தால், அவர் சொன்னது எதற்காக, எவ்வாறு வாழ வேண்டும் என்பதையும் தெளிவாக புரிந்துகொள்ள முடியும்.
உலகம் இன்று சந்திக்கும் 3 முக்கிய பிரச்சினைகள்– வறுமை, சூழல் , போர் இவைகளுக்கான பதில் வள்ளலாரின் போதனையில் உள்ளது. ஆனால் அதை இன்றைய காலத்திற்கு ஏற்ற மொழியிலும் வடிவிலும் நாம் முன்வைக்க வேண்டும். அவரின் போதனைகள் சில தொகுப்புகளில் இருந்தாலும், அவை விதைகள் போன்றவை. ஒவ்வொரு விதையும் பெரும் மரமாக வளரக்கூடியது. அதை இன்றைய தலைமுறைக்கு பொருத்தமாக, சமகால சிக்கல்களுக்கு இணைத்து விளக்க வேண்டும்.
வள்ளலார் எல்லா உயிர்களையும் நேசிக்க கற்று தந்தார். அவரது சிந்தனைகளை இளைஞர்கள் பின்பற்ற வேண்டும். அப்போது தான் சமூக பாகுபாடு இல்லாமல், வறுமை இல்லாமல், இயற்கையோடு சண்டை இல்லாமல், ஒற்றுமையோடு வாழ முடியும். அதுவே வள்ளலாருக்கு செய்யும் உண்மையான அஞ்சலியும், நம் வாழ்க்கையின் பணி ஆகும். நண்பர்களே, நீங்கள் இன்று இங்கு வந்திருப்பது உங்கள் அர்ப்பணிப்பைக் காட்டுகிறது. இதை முன் னோக்கி கொண்டு செல்வீர்கள் என நான் நம்புகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
- கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜய் வீட்டிலேயே முடங்கி கிடக்காமல் வெளியே வரவேண்டும்.
- சம்பவம் நடந்து 7 நாட்கள் ஆகியும் இன்னும் அவர் வெளியில் வராமல் இருப்பது அரசியல் தலைவருக்கு நல்லது அல்ல.
சென்னை:
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள புதிய தமிழகம் கட்சி தலைமை அலுவலகத்தில் அந்த கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
விஜய்யை கைது செய்ய வேண்டும் என்று சில பேர் கூறிக் கொண்டிருக்கிறார்கள், இது நடந்தது எப்படி என்பதை கண்டுபிடிக்க வேண்டுமே தவிர, அவர் மீது ஒட்டுமொத்தமாக குற்றம் சாட்டக் கூடாது.
இந்த சம்பவத்தை வைத்து விஜய்யை அரசியலில் இருந்து வெளியேற்ற வேண்டும் என திட்டமிட்டு காழ்ப்புணர்ச்சியோடு செயல்பட்டு வருகிறார்கள். அவரை மொத்தமாக காலி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறார்கள். ஏற்கனவே காவல்துறை விஜய்யின் மாநாடுகளை பார்த்திருக்கிறது. கட்சியை சார்ந்தவர்கள் மட்டுமின்றி அனைவரும் அவரைப் பார்ப்பதற்கு வருவார்கள். அப்படி இருக்கும்போது அவரது பிரசாரத்துக்காக ஒதுக்கப்பட்ட இடம் சரியான தேர்வு இல்லை. இதனை காவல்துறை அவரிடம் அறிவுறுத்தி இருக்க வேண்டும்.
பெரிய வாகனமாக இருந்தபோதிலும் குறுகிய பாதையில் குவிந்திருந்த மக்கள் இடையே நகர்ந்து சென்று கொடுக்கப்பட்ட இடத்தில் தான் நீங்கள் பேச வேண்டும் என்று காவல்துறை சொல்லி வற்புறுத்தி உள்ளே அனுப்பி இருக்கிறார்கள்.
சம்பவம் நடந்த உடனே விஜய்யை காவல்துறையினரே உடனடியாக வெளியேறுங்கள் என்று கூறினார்களா? அல்லது அவரே வெளியேறினாரா என்பது போன்ற விவரங்களும் இந்த விஷயத்தில் வெளிவர வேண்டும்.
இது பற்றி வெளிப்படையாக விசாரணை நடத்த வேண்டும். கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜய் வீட்டிலேயே முடங்கி கிடக்காமல் வெளியே வரவேண்டும். சம்பவம் நடந்து 7 நாட்கள் ஆகியும் இன்னும் அவர் வெளியில் வராமல் இருப்பது அரசியல் தலைவருக்கு நல்லது அல்ல.
தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி கொடுக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் அவர் அரசியலுக்கு வந்து உள்ளார். எனவே அவரை முடித்து கட்டிவிட வேண்டும் என்கிற எண்ணத்தில் செயல்படுவது சரியல்ல. இவ்வாறு அவர் கூறினார்.
- ஏழை பெண்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு இலவசமாக கியாஸ் இணைப்பு வழங்கப்படுகிறது.
- சிலிண்டர் வாங்கும்போது அதற்கு மானியமும் வழங்கப்படுகிறது.
சென்னை:
பொதுத்துறையை சேர்ந்த எண்ணெய் நிறுவனங்கள் வீடுகளுக்கு 14.20 கிலோ எடையில் சமையல் கியாஸ் சிலிண்டர்களை வினியோகம் செய்கின்றன. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, 'பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா' எனப்படும் இலவச கியாஸ் இணைப்பு வழங்கும் திட்டத்தை கடந்த 2016-ம் ஆண்டு மே 1-ந்தேதி தொடங்கியது.
இந்த திட்டத்தின் கீழ் ஏழை பெண்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு இலவசமாக கியாஸ் இணைப்பு வழங்கப்படுகிறது. கியாஸ் அடுப்பு, டெபாசிட் தொகை, ரப்பர் குழாய், ரெகுலேட்டர், முதல் சிலிண்டர் ஆகியவற்றின் செலவை மத்திய அரசு ஏற்கிறது. சிலிண்டர் வாங்கும்போது அதற்கு மானியமும் வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் தமிழகத்தில் 40 லட்சம் பேருக்கு இலவச கியாஸ் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. தற்போது இந்த திட்டத்தின் கீழ் 25 லட்சம் புதிய இலவச கியாஸ் இணைப்புகளை வழங்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதில் 10 சதவீதம் அதாவது, 2½ லட்சம் இணைப்புகள் தமிழகத்திற்கு ஒதுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எண்ணெய் நிறுவனங்களிடம் எழுந்துள்ளது.
இதுகுறித்து பெட்ரோலிய அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், 'புதிதாக இலவசமாக வழங்கப்பட உள்ள 25 லட்சம் கியாஸ் இணைப்புகளில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் எத்தனை இணைப்பு என்று ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. தமிழகத்தில் நகரமயமாக்கல் அதிகம் உள்ளது. எனவே அதற்கு ஏற்ப கியாஸ் இணைப்புகள் ஒதுக்கீடு செய்வதற்கு வாய்ப்புகள் உள்ளன' என்றார்.
- மதுரை மற்றும் டெல்லிக்கு சென்று இருந்த த.வெ.க. வக்கீல் குழு நிர்வாகிகள் இன்று காலை சென்னை திரும்பி இருந்தனர்.
- இன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் விஜய் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுத்து இருப்பதாக தெரியவந்துள்ளது.
சென்னை:
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கடந்த மாதம் 27-ந்தேதி கரூர் அருகே வேலுச்சாமிபுரத்தில் பிரசாரம் செய்த போது கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர்.
நாட்டையே அதிர்ச்சியில் உலுக்கிய இந்த சம்பவத்துக்கு த.வெ.க. தலைவர் விஜய் தான் காரணம் என்று பல்வேறு கட்சிகளும் குற்றம் சுமத்தி வருகின்றன. இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று த.வெ.க. சார்பில் சென்னை ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
த.வெ.க. உள்பட மொத்தம் 7 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. நேற்று அந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் தண்டபாணி, ஜோதிராமன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் சி.பி.ஐ. விசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்தனர்.
மேலும் நெடுஞ்சாலைகளில் அரசியல் கூட்டங்கள் நடத்த கூடாது என்று உத்தரவிட்டனர். அதோடு த.வெ.க. தலைவர் விஜய்யை கண்டித்து பல்வேறு கருத்துக்களையும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
அதோடு கூடுதல் இழப்பீடு கோரி மனுதாக்கல் செய்யலாம் என்றும் அந்த மனுவுக்கு தமிழக அரசும், விஜய்யும் 2 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த வழக்குகளின் விசாரணையை தொடர்ந்து த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், துணை பொதுச்செயலாளர் நிர்மல்குமார் ஆகியோர் முன்ஜாமின் கேட்டு தாக்கல் செய்து இருந்த மனுக்களை நீதிபதிகள் ஆய்வு செய்தனர். பிறகு நீதிபதிகள் அவர்கள் இருவருக்கும் முன்ஜாமின் வழங்க மறுத்து மனுக்களை தள்ளுபடி செய்தனர்.
இது தொடர்பாக நீதிபதிகள் கூறுகையில், "கரூர் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் என்ற வகையில் அவர்கள் இருவரும் பொறுப்பு ஏற்க வேண்டும். காவல்துறை அனுமதி வழங்கிய நேரத்தை மீறியுள்ளனர். எனவே மனுதாரர்கள் கோரிக்கையை ஏற்க முடியாது" என்று தெரிவித்தனர்.
இதற்கிடையே கரூர் சம்பவம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தினேஷ் என்பவர் தாக்கல் செய்த மனு மீது நீதிபதி செந்தில்குமார் நேற்று பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தார். அவர் வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு விசாரணை குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டார்.
அது போல த.வெ.க. நிர்வாகி ஆதவ் அர்ஜூனா வன்முறையை தூண்டும் வகையில் எக்ஸ் தளத்தில் கருத்து பதிவிட்டது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு மீது நீதிபதி செந்தில் குமார் வெளியிட்ட உத்தரவில், "ஆதவ் அர்ஜூனா மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
சென்னை ஐகோர்ட் மற்றும் மதுரை கிளை நீதிபதிகளின் இந்த அதிரடி உத்தரவுகள் விஜய்க்கும், தமிழக வெற்றிக் கழகத்துக்கும் ஏற்பட்ட பின்னடைவாக கருதப்படுகிறது.
இதையடுத்து த.வெ.க. தலைவர் விஜய் இன்று சென்னையில் தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். வக்கீல் பிரிவினரையும் அவர் அழைத்து இருந்தார். மதுரை மற்றும் டெல்லிக்கு சென்று இருந்த த.வெ.க. வக்கீல் குழு நிர்வாகிகள் இன்று காலை சென்னை திரும்பி இருந்தனர்.
அவர்களுடன் விஜய் அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி ஆலோசனை நடத்தினார். ஐகோர்ட் தெரிவித்துள்ள கருத்துக்களின் அடிப்படையில் எந்தெந்த விஷயங்களில் பதில் அளிப்பது என்றும் நீண்ட நேரம் ஆய்வு செய்யப்பட்டது.
சென்னை ஐகோர்ட் மற்றும் மதுரை ஐகோர்ட் கிளையில் தெரிவிக்கப்பட்டு உள்ள உத்தரவுகளின்படி செயல்படும் பட்சத்தில் அது த.வெ.க.வுக்கு எதிராக அமைந்து விடும் என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கரூர் நெரிசல் சம்பவத்துக்கு சி.பி.ஐ. விசாரணை கோரி சுப்ரீம் கோர்ட்டை அணுக கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மற்றும் டெல்லியில் உள்ள மூத்த சட்ட வல்லுனர்களுடன் விஜய் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யும் பட்சத்தில் அது கட்சி வளர்ச்சிக்கும், எதிர்கால திட்டங்களுக்கும் உதவியாக இருக்குமா? என்றும் கேட்டறிந்தார்.
இன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் விஜய் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுத்து இருப்பதாக தெரியவந்துள்ளது. குறிப்பாக சுப்ரீம் கோர்டை அணுகுவது பற்றி அவர் ஆலோசித்து வருகிறார். ஓரிரு நாளில் இது தொடர்பான தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை மறுநாள் (திங்கட்கிழமை) விஜய் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனுதாக்கல் செய்யப்படக் கூடும் என்று தெரிகிறது.
இதற்கிடையே புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா ஆகியோர் கைது செய்யப்பட்டால் அது தொடர்பாக அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கவும் இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
- கரூர் விவகாரத்துக்கு தி.மு.க காரணம் என யாரும் சொல்லவில்லை.
- கள்ளக்குறிச்சி சம்பவத்தின் போது அன்றைய சூழல் வேறு, இன்றைய சூழல் வேறு.
வேலூர்:
வேலூர் மாவட்டம் சேர்க்காடு பகுதியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் முகாமில் அமைச்சர் துரைமுருகன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நீர் நிலைகளை தூர்வாருதல், கரைகளை, பலப்படுத்துதல் கால்வாய்களை தூர்வாருதல் உள்ளிட்ட பணிகள் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் எவ்வளவு மழை வந்தாலும் தாங்கக்கூடிய அளவிற்கு வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக உள்ளோம்.
கரூர் விவகாரத்தில் நீதிபதிகள் சொல்வது தான் மெயின், நீதிபதிகள் உண்மையை சொல்லி உள்ளார்கள்.
கரூர் விவகாரத்துக்கு தி.மு.க காரணம் என யாரும் சொல்லவில்லை.
கள்ளக்குறிச்சி சம்பவத்தின் போது அன்றைய சூழல் வேறு, இன்றைய சூழல் வேறு. 41 பேர் உயிரிழந்தது மிக சாதாரணமானது அல்ல.
விஜயை கைது செய்யும் நிலை வந்தால் கைது பண்ணுவோம். தேவையில்லாத சூழலில் பண்ண மோட்டோம். அனாவசியமாக நாங்க யாரையும் கைது செய்ய மாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பரமத்திவேலூர் தொகுதிக்கு உட்பட்ட பரமத்திவேலூர்-பொத்தனூர் நான்கு ரோடு சந்திப்பிலும் எடப்பாடி பழனிசாமி பேச போலீசில் அனுமதி கேட்கப்பட்டது.
- அனுமதி கேட்ட இடங்களுக்கு போலீசார் அனுமதி தர மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாமக்கல்:
தமிழக முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்து வருகிறார். அதன்படி கடந்த 19-ந்தேதி நாமக்கல் மாவட்டத்திற்கு உட்பட்ட ராசிபுரம் மற்றும் சேந்தமங்கலம் தொகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார்.
அதைத்தொடர்ந்து கடந்த மாதம் 20-ந்தேதி நாமக்கல் மற்றும் பரமத்திவேலூரிலும், 21-ந் தேதி திருச்செங்கோடு மற்றும் குமாரபாளையத்திலும் எடப்பாடி பழனிசாமியின் பிரசாரம் நடக்க இருந்தது. ஆனால் மழை காரணமாக அவரின் சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்பட்டது. அதற்கு பதிலாக அக்டோபர் 5 மற்றும் 6-ந்தேதிகளில் பிரசாரம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை திருச்செங்கோடு தொகுதியில் திருச்செங்கோடு அண்ணாசிலை அருகிலும், அதன்பிறகு குமாரபாளையம் தொகுதியில் ஓலப்பாளையத்தில் உள்ள தியேட்டர் அருகிலும் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்ய போலீசில் அனுமதி கேட்கப்பட்டது. அதேபோல், நாளை மறுநாள் (6-ந்தேதி) மாலையில் நாமக்கல் பழைய பஸ் நிலையம் அருகிலும், அதைத்தொடர்ந்து பரமத்திவேலூர் தொகுதிக்கு உட்பட்ட பரமத்திவேலூர்-பொத்தனூர் நான்கு ரோடு சந்திப்பிலும் எடப்பாடி பழனிசாமி பேச போலீசில் அனுமதி கேட்கப்பட்டது.
இதற்கிடையே அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்ய திருச்செங்கோடு, குமாரபாளையம், நாமக்கல், பரமத்திவேலூர் ஆகிய பகுதிகளில் அனுமதி கேட்ட இடங்களுக்கு போலீசார் அனுமதி தர மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து போலீசாரிடம் கேட்டபோது தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் ஓரங்களில் பொதுக்கூட்டம் நடத்த அரசியல் கட்சிகளுக்கு கோர்ட் அனுமதி கொடுக்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.
அதன் அடிப்படையில் அவர்கள் கேட்ட இடங்களுக்கு அனுமதி கொடுக்க முடியாது என்றனர். எனவே எடப்பாடி பழனிசாமி வேறு இடத்தில் பிரசாரம் செய்யவும், பட்டா இடத்தில் 3 ஆயிரம் பேர் பங்கேற்கும் வகையில் கூட்டத்தை நடத்திக்கொள்ளவும் அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் நாளையும், நாளை மறுநாளும் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் செய்ய உள்ள நிலையில் இதுவரை அனுமதி அளிக்கப்படவில்லை.
- கூட்டு முயற்சியில் அனைவரது யோசனைகள், ஆலோசனைகளையும் வரவேற்கிறேன்.
- ஒவ்வொரு உயிரும் விலை மதிப்பில்லாதது.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
கரூர் துயரம் குறித்து மாண்பமை உயர்நீதிமன்றம் கூறியுள்ள கருத்துகள், வழிகாட்டுதல்கள் அனைத்தையும் தமிழ்நாடு அரசு மிகத் தீவிரமாக கவனத்தில் கொண்டு செயலாற்றி வருகிறது.
கரூரில் நடந்த துயரத்தால் நாம் அனைவருமே நெஞ்சம் கலங்கிப் போயிருக்கிறோம். தம் அன்புக்குரியோரை இழந்து தவிக்கும் ஒவ்வொரு குடும்பத்தின் கண்ணீரையும் கண்டு தவிக்கிறேன்.
மாண்பமை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) தனது விசாரணையைத் தொடங்கும். இதன் மூலம், முழு உண்மையையும் வெளிக்கொண்டு வருவோம் என்று மாநிலத்தின் முதலமைச்சராக மக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன். அனைத்து மட்டங்களிலும் பொறுப்பு உறுதிசெய்யப்படும்.
பலவற்றிலும் இந்தியாவுக்கே முன்னோடியான தமிழ்நாடு, கூட்ட நெரிசல் விபத்துகளைத் தவிர்ப்பதிலும் நாட்டுக்கு வழிகாட்டும். மாநிலம் முழுவதும் துறைசார் வல்லுநர்கள், அரசியல் கட்சியினர், செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என அனைவரோடும் கலந்தாலோசித்து ஒரு முழுமையான 'நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை (SOP) வடிவமைப்போம். தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவும் பின்பற்றத்தக்க மாடலாக இது அமையும்.
துடைக்க முடியாத இந்தத் துயரச் சம்பவத்தின் பின்னணியில் அரசியல் நோக்கோடு ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டாமல் ஒரு நீண்டகாலத் தீர்வை நோக்கிப் பயணிப்போம். இந்தக் கூட்டு முயற்சியில் அனைவரது யோசனைகள், ஆலோசனைகளையும் வரவேற்கிறேன். ஒவ்வொரு உயிரும் விலைமதிப்பில்லாதது. நம் மக்களின் இன்னுயிரைக் காக்கவும், இனி இப்படி ஒரு பெருந்துயரம் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் எங்குமே நிகழாமல் தடுக்கவும் ஒன்றிணைவோம்! என்று கூறியுள்ளார்.
- பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன் சம்பவ இடத்தையும் நேரில் பார்வையிட்டார்.
- த.வெ.க. தரப்பினர் மீதும் குற்றச்சாட்டுகளை தெரிவித்தார்.
கோவை:
தமிழக பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை இன்று காலை கோவையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றார்.
டெல்லியில் அவர் பா.ஜ.க. தேசிய தலைவர்கள் மற்றும் மத்திய மந்திரிகளை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார். தமிழக அரசியல் நிலவரங்கள் மற்றும் கரூர் சம்பவம் குறித்து அவர் பேச உள்ளதாக கூறப்படுகிறது.
கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியான சம்பவம் நடந்தபோது அண்ணாமலை, இலங்கையில் சுற்றுப்ப யணம் மேற்கொண்டு இருந்தார்.
தகவல் அறிந்து அவர் உடனடியாக இலங்கையில் இருந்து கரூர் திரும்பினார். பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன் சம்பவ இடத்தையும் நேரில் பார்வையிட்டார்.
உரிய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படாததே கூட்ட நெரிசலுக்கு காரணம் என தமிழக அரசு மீது அண்ணாமலை குற்றம்சாட்டி இருந்தார். மேலும் த.வெ.க. தரப்பினர் மீதும் குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். மேலும் கரூர் வருகை தந்த பா.ஜ.க. விசாரணை குழுவுடனும் அண்ணாமலை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இந்தநிலையில் அண்ணாமலை திடீரென டெல்லி செல்வது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
- தலைமறைவாக உள்ள நிலையில் அவர்களின் முன்ஜாமீன் மனுக்களை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.
- கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
கரூர்:
கரூரில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அரசியல் கட்சிகள் நடத்தும் ரோடு ஷோவுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க கோரியும், அதுவரை எந்த அரசியல் கட்சிகளுக்கும் ரோடு ஷோ நடத்த அனுமதி அளிக்கக்கூடாது என உத்தரவிட கோரியும் சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த தினேஷ் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என். செந்தில்குமார் கரூர் கூட்ட நெரிசல் பலி தொடர்பான வழக்கை விசாரிக்க வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. அஸ்ராகர்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து உத்தரவிட்டார். இந்த குழுவிடம் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கரூர் போலீசார் ஒப்படைக்க வேண்டும் எனவும் கூறினார்.
ஏற்கனவே இந்த வழக்கினை முதலில் கரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் விசாரணை நடத்தினர். பின்னர் விசாரணை அதிகாரி மாற்றப்பட்டு கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரேமானந்தன் நியமிக்கப்பட்டார்.
இந்த வழக்கில் கரூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றி கழக செயலாளர் மதியழகன், மத்திய மாவட்ட நிர்வாகி மாசி பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சம்பவம் நடந்த பகுதியில் பதிவான சி.சி.டி.வி. பதிவுகளை போலீசார் கைப்பற்றினர். மேலும் காயமடைந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.
தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், துணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இவர்கள் தலைமறைவாக உள்ள நிலையில் அவர்களின் முன்ஜாமீன் மனுக்களை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.
இந்த நிலையில் ஐகோர்ட்டு உத்தரவின்படி சிறப்பு புலனாய்வு குழு இன்று விசாரணையை தொடங்கியது. இந்த சிறப்பு புலனாய்வு குழுவில் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விமலா, சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. சியாமளாதேவி ஆகியோர் இடம்பெற்று உள்ளனர். அது மட்டுமில்லாமல் கூடுதல் துணை போலீஸ் சூப்பரண்டுகள், துணைபோலீஸ் சூப்பிரண்டுகளும் சிறப்பு புலனாய்வு குழுவில் இடம் பெற இருக்கிறார்கள்.
ஐ.ஜி.அஸ்ராகார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவினர் இன்று கரூர் வந்தனர். முதல்கட்டமாக குழுவினர் சம்பவம் நடந்த கரூர் வேலுச்சாமி புறம் பகுதியை பார்வையிடுகிறார்கள். அதன் பின்னர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரிடம் தனித்தனியாக விசாரணை நடத்துகிறார்கள். காவல்துறையால் கைப்பற்றப்பட்ட சி.சி.டி.வி. பதிவுகள், டிரோன் பட காட்சிகள் ஆகியவற்றை ஆய்வுக்கு உட்படுத்தி விசாரணையை தீவிர படுத்த உள்ளனர்.
முன்னதாக வழக்கின் அத்தனை ஆவணங்களையும் கரூர் போலீசார் இன்று சிறப்பு புலனாய்வு குழு தலைமை அதிகாரி அஸ்ராகர்க்கிடம் ஒப்படைத்தனர். சிறப்பு புலனாய்வு குழு விசாரணை அறிக்கையின் அடிப்படையில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் உள்ளிட்டோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்தது.
அவர் சம்பவம் நடந்த கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். பின்னர் உயிரிழந்த 10-க்கும் மேற்பட்ட குடும்பத்தினரை சந்தித்து குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தினார். இந்த விசாரணையை 3 மாதங்களுக்குள் முடிக்க அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் சிறப்பு புலானாய்வு குழுவும் விசாரணையை தொடங்கி உள்ளதால் கரூரில் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. சம்பவம் நடந்த வேலுச்சாமிபுரம், காயம் அடைந்தவர்கள் அரசு மருத்துவமனை, உயிரிழந்தோரின் கிராமங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
- ‘மரங்களின் மாநாடு’, அதனை தொடர்ந்து கடந்த மாதம் 27-ந்தேதி தருமபுரியில் ‘மலைகளின் மாநாடு’ஆகியவற்றை நடத்தினார்.
- தஞ்சையில் தண்ணீர் மாநாட்டை நடத்தப்போவதாக சீமான் தெரிவித்து இருந்தார்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகஸ்ட் மாதம் 30-ந்தேதி திருத்தணி அருகே 'மரங்களின் மாநாடு', அதனை தொடர்ந்து கடந்த மாதம் 27-ந்தேதி தருமபுரியில் 'மலைகளின் மாநாடு'ஆகியவற்றை நடத்தினார்.
இதனை தொடர்ந்து, தூத்துக்குடியில் கடல் மாநாடு, தஞ்சையில் தண்ணீர் மாநாட்டை நடத்தப்போவதாக சீமான் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள அமலி நகர் மீனவ கிராமத்திற்கு சீமான் சென்றிருந்தார். அங்கு மீனவர்களுடன் கலந்துரையாடிய அவர், கடல் மாநாடு நடத்த மீனவர்களோடு கடலுக்குள் சென்று ஆய்வு மேற்கொண்டார்.






