என் மலர்
உள்ளூர் செய்திகள்
- மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலை வனப்பகுதியில் கனமழை கொட்டியது.
- பாபநாசம் அணை நீர்மட்டம் 81 அடியாக உள்ளது.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று பகலில் கடுமையான வெயில் வாட்டி வதைத்தது. மதியத்திற்கு பிறகு வானில் கருமேக கூட்டங்கள் திரண்டு குளிர்ந்த காற்று வீச தொடங்கிய நிலையில், மாலையில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது.
மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலை வனப்பகுதியில் கனமழை கொட்டியது. அதிகபட்சமாக காக்காச்சியில் 5 சென்டிமீட்டரும், ஊத்து மற்றும் நாலுமுக்கு எஸ்டேட்டில் 4 சென்டி மீட்டரும் மழை பெய்தது. மாவட்டத்தில் நாங்குநேரி,
ராதாபுரம், சேரன்மகா தேவி, களக்காடு, மூலைக்கரைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மாநகரில் பாளையங்கோட்டையில் 18½ மில்லிமீட்டர் மழை பதிவாகி இருந்தது. டவுன், பேட்டை, சந்திப்பு, பாளையங்கோட்டை உள்ளிட்ட மாநகரின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அணைகளை பொறுத்தவரை 118 அடி கொண்ட மணிமுத்தாறு அணையில் நீர் இருப்பு 91½ அடியாக உள்ளது. பாபநாசம் அணை பகுதியில் 2 மில்லிமீட்டரும், சேர்வலாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் 9 மில்லி மீட்டரும் மழை பதிவாகி இருந்தது. பாபநாசம் அணை நீர்மட்டம் 81 அடியாக உள்ளது.
தென்காசி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று பிற்பகலில் தொடங்கி இரவு வரையிலும் கனமழை பெய்தது. குறிப்பாக கருப்பாநதி, குண்டாறு, அடவிநயினார் அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு சற்று நீர்வரத்து அதிகரித்தது. அதிகபட்சமாக குண்டாறில் 28 மில்லி மீட்டரும், அடவி நயினாரில் 17 மில்லி மீட்டரும், கருப்பா நதியில் 21 மில்லிமீட்டரும் மழை பெய்தது.
மாவட்டத்தில் ஆலங்குளம், கடையம் சுற்றுவட்டார பகுதிகளில் மாலையில் சில மணி நேரம் விட்டு விட்டு சாரல் மழை அடித்தது. குற்றாலம் நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்தது. இதனால் தென்காசி, செங்கோட்டை, ஆய்குடி, சிவகிரி சுற்று வட்டாரத்தில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. செங்கோட்டையில் அதிகபட்சமாக 3 சென்டி மீட்டர் மழை பெய்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கயத்தாறு சுற்றுவட்டாரத்தில் இரவில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சில கிராமங்களில் இடி-மின்னலுடன் மழை பெய்தது. இதனால் அந்த பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதிகபட்சமாக கயத்தாறில் 9 சென்டிமீட்டரும், கடம்பூரில் 7 சென்டிமீட்டரும் மழை பெய்தது. எட்டயபுரம், ஓட்டப்பிடாரம், மணியாச்சி மற்றும் வேடநத்தம் பகுதிக ளிலும் பரவலாக மழை பெய்தது.
- சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்காக மார்ச் 1-ந்தேதி பிரதமர் மோடி தமிழ்நாடு வருகிறார்.
- பிரதமர் மோடி தமிழ்நாடு வந்து சென்ற பின்னரே அ.தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
சென்னை அமைந்தகரையில் நடைபெற்ற பா.ஜ.க. பணிமனை திறப்பு விழாவில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்காக மார்ச் 1-ந்தேதி பிரதமர் மோடி தமிழ்நாடு வருகிறார்.
* பிரதமர் மோடி தமிழ்நாடு வந்து சென்ற பின்னரே அ.தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
* பிரதமரின் தமிழக வருகைக்கு பின்னர் எடப்பாடி பழனிசாமியிடம் கலந்து பேசி அதன்பின் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
* தமிழ்நாட்டில் வெகு விரைவில் தேசிய ஜனநாயகக்கூட்டணி ஆட்சி மலரும்.
* எம்.ஜி.ஆர். வழியில் மக்களுக்கான கட்சியாக பா.ஜ.க. செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.
* பா.ஜ.க. கட்சியில் இருந்து அமைச்சர்கள் வருவார்கள்.
மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் நாளை தமிழகம் வர உள்ளதாகவும், நாளை அ.தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடக்கும் என்று வெளியான தகவலுக்கு அவர் மறுப்பு தெரிவித்தார்.
சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற India Today கருத்தரங்கில் பேசிய எடப்பாடி பழனிசாமி, "NDA கூட்டணியில், ஆட்சியில் பங்கு என்ற பிரச்சனையே இல்லை. கூட்டணியில் இருப்போரும் அவ்வாறு கேட்கவில்லை" என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது
- மாவட்டக் கழக நிர்வாகிகள், தோழர்கள் யாரும் எவ்வித ஊடக விவாதங்களிலும் பங்கேற்கக் கூடாது.
- நிர்வாகிகள் விவாதங்களில் பங்கேற்பதோ, நேர்காணல் வழங்குவதோ கூடாது.
த.வெ.க. பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தலைமைக் கழகத்தின் அனுமதியின்றி, கழக மாநில மற்றும் மாவட்டக் கழக நிர்வாகிகள், தோழர்கள் யாரும் எவ்வித ஊடக விவாதங்களிலும் பங்கேற்கக் கூடாது.
பொதுவெளியில் நடத்தப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விவாதங்கள், நேரடிப் பேட்டிகள் மற்றும் யூடியூப் (YouTube) உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கு நேர்காணல் வழங்குவது உள்ளிட்டவை குறித்து, தலைமைக் கழகத்தின் முன்அனுமதி கண்டிப்பாகப் பெற வேண்டும்.
முன்அனுமதி பெறாமல், எந்தவிதமான மாநில அல்லது தேசிய ஊடகத் தளங்களிலும், விவாதங்களிலும் பங்கேற்பதோ அல்லது நேர்காணல் வழங்குவதோ கூடாது என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தனியார் பால் விலை உயர்ந்து உள்ளதால் அதனைப் பயன்படுத்திய பொதுமக்கள் ஆவின் பாலுக்கு மாறி வருகிறார்கள்.
- தனியார் பால் விலையை விட ஆவின் பால் விலை லிட்டருக்கு 18 ரூபாய் குறைவாக உள்ளது.
சென்னை:
தமிழ்நாட்டில் பால் விற்பனை செய்யும் தனியார் நிறுவனங்கள் பால் விலையை உயர்த்தி உள்ளன. ஆரோக்கியா நிறுவனம் கடந்த 21-ந்தேதி பால் மற்றும் தயிர் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தியது.
அதைத் தொடர்ந்து மற்ற தனியார் பால் நிறுவனங்களும் விலையை உயர்த்தி உள்ளன. டோட்லா, ஜெர்சி உள்ளிட்ட நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு பால் விலையை உயர்த்தி வருகின்றன.
கொழுப்பு சத்து செறிவூட்டப்பட்ட பால் ஒரு லிட்டர் 76 ரூபாயிலிருந்து 78 ரூபாய் ஆகவும், டீ ஸ்பெஷல் பால் 68-ல் இருந்து 70 ஆகவும் நிலைப்படுத்தப்பட்ட பால் 66 ரூபாயில் இருந்து 68 ஆகவும் சமன்படுத்தப்பட்ட பால் 60 ரூபாயில் இருந்து 62 ஆகவும் இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் 48 ரூபாயில் இருந்து 50 ஆகவும் உயர்ந்துள்ளது.
இதே போல தயிர் ஒரு கிலோ ரூ. 74-ல் இருந்து 76 ஆகவும் 450 கிராம் தயிர் ரூ. 38-ல் இருந்து ரூ.40 ஆகவும் இரு முறை சமன்படுத்தப்பட்ட தயிர் ஒரு கிலோ ரூ. 70-ல் இருந்து 72 ஆகவும் உயர்ந்துள்ளது.
தனியார் பால் விலை உயர்ந்து உள்ளதால் அதனைப் பயன்படுத்திய பொதுமக்கள் ஆவின் பாலுக்கு மாறி வருகிறார்கள். தனியார் பால் விலையை விட ஆவின் பால் விலை லிட்டருக்கு 18 ரூபாய் குறைவாக உள்ளது. அரை லிட்டருக்கு 10 ரூபாய் குறைவாக இருப்பதால் பெரும்பாலானவர்கள் ஆவின் பால் வாங்குவதில் ஆர்வமாக உள்ளனர். இதனால் ஆவின் பாலுக்கு தற்போது கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடைகளில் வந்தவுடன் உடனே விற்று தீர்ந்து விடுகின்றன.
தனியார் பால் விலை உயர்வுக்கு தமிழ்நாட்டில் பால் உற்பத்தி குறைந்தது காரணம் என்று கூறப்படுகிறது. இதனால் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து அதிக விலை கொடுத்து தனியார் நிறுவனங்கள் பாலை கொள்முதல் செய்கின்றன. இதன் காரணமாக பால் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
தனியார் பால் நிறுவனங்கள் பால் விவசாயி ளிடம் இருந்து அதிக விலை கொடுத்து பாலை வாங்குவதால் விலையை உயர்த்தி உள்ளனர் என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நல சங்க மாநில தலைவர் பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறும் போது, பால் உற்பத்தியில் ஆவின் நிறுவனம் கவனம் செலுத்தவில்லை. கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே பால் உற்பத்தி குறைந்துவிட்டது. இது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். தனியார் நிறுவனங்கள் பால் முகவர்களுக்கான கமிஷன் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்றார்.
- திருவான்மியூரில் இருந்து உத்தண்டி வரை நான்கு வழித்தட சாலை மேம்பாலம் தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் மூலம் அமைக்கப்படும்.
- ரூ.2100 கோடி மதிப்பீட்டில் சாலை மேம்பாலம் அமைக்கும் பணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட 2025–2026 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், சென்னையில் பெருகிவரும் போக்குவரத்து நெரிசலை கையாளும் விதமாக சென்னை நகரின் கிழக்கு கடற்கரைச் சாலையில் திருவான்மியூரில் இருந்து உத்தண்டி வரை நான்கு வழித்தட சாலை மேம்பாலம் தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் (TANSHA) மூலம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், திருவான்மியூர்-உத்தண்டி வரையிலான சாலை மேம்பால பணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் மூலம் கிழக்கு கடற்கரை சாலையில் திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை, சுமார் 13.30 கி.மீ. நீளத்திற்கு ரூ.2100 கோடி மதிப்பீட்டில் சாலை மேம்பாலம் அமைக்கும் பணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
- சுமன் பால் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
- 6 பேருக்கு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னை சவுகார்பேட்டையில் சாய் வாக்ஸ் என்ற நகைப்பட்டறையில் சிலிண்டர் கேஸ் கசிவு ஏற்பட்டு வெடித்து விபத்துக்குள்ளானது.
இதில், படுகாயமடைந்த நகைப்பட்டறை உரிமையாளர் சுமன் பால் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும், நகைப்பட்டறை ஊழியர்கள் அரவிந்த், சூரஜ், ஆனந்த், இந்திரஜித் உள்ளிட்ட 6 பேருக்கு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- நல்லகண்ணு நேற்று பிற்பகல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
- பொதுமக்கள், தொண்டர்கள், அரசியல் தலைவர்கள், திரையுலகினர் என அனைவரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சுதந்திர போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணு (101) வயது மூப்பின் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று பிற்பகல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவரது மறைவு தமிழ்நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையில் இருந்து அவரது உடல் சென்னை தியாகராயர் நகரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு இறுதி மரியாதைக்காக வைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள், தொண்டர்கள், அரசியல் தலைவர்கள், திரையுலகினர் என அனைவரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை தி.நகர் சிபிஐ அலுவலகமான பாலன் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நல்லகண்ணு உடலுக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, நடிகர் ரஜினிகாந்த் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
- வெள்ளி விலையில் மாற்றமில்லை.
- ஒரு கிராம் வெள்ளி 295 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை தினந்தோறும் உயர்ந்து புதிய உச்சத்தில் விற்பனையாகிறது. இதனால் தங்கம் வாங்க நினைப்போருக்கு பெரும் அதிர்ச்சி அளித்து வருகிறது. அந்த வகையில் வார தொடக்க நாளான திங்கட்கிழமை சவரனுக்கு 1,440 ரூபாய், செவ்வாய்கிழமை 240 ரூபாய், நேற்று சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,19,440-க்கு விற்பனையானது.
இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.14,920-க்கும் சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.1,19,360-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 295 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
25-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,440
24-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,120
23-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,18,880
22-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,17,440
21-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,17,440
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
25-02-2026- ஒரு கிராம் ரூ.295
24-02-2026- ஒரு கிராம் ரூ.290
23-02-2026- ஒரு கிராம் ரூ.300
22-02-2026- ஒரு கிராம் ரூ.290
21-02-2026- ஒரு கிராம் ரூ.290
- பாடத்தில் இல்லாத கேள்வி கேட்கப்பட்டால் இமெயிலில் புகார் அளிக்கலாம்.
- வினா எண்ணுடன் தவறை தெளிவாக குறிப்பிட வேண்டும்.
தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள 10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாளில் தவறு இருந்தால் இமெயிலில் புகார் அளிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
வினாத்தாளில் தவறு, பாடத்தில் இல்லாத கேள்வி கேட்கப்பட்டால் இமெயிலில் புகார் அளிக்கலாம் என தேர்வு இயக்ககம் அறிவித்துள்ளது.
அதன்படி, dgequestionpaperqueries@gmail.com என்ற இமெயிலில் மாணவர்கள், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வினாத்தாள் தவறு குறித்து புகாரளிக்கும்போது வினா எண்ணுடன் தவறை தெளிவாக குறிப்பிட வேண்டும் எனவும் தேர்வுகள் இயக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழக அரசியல் மற்றும் சமூக நீதி வரலாற்றில் ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.
- அரசியல் நேர்மைக்கும், பொதுநலத்திற்குமான அர்ப்பணிப்புக்கும் அவர் ஒரு எடுத்துக்காட்டு.
கன்னியாகுமரி:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மறைவுக்கு கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மக்கள் இயக்கங்களின் முன்னோடி, எளிமையின் உருவகமாக வாழ்ந்த மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் ஆர். நல்லகண்ணு அவர்களின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். தமிழக அரசியல் மற்றும் சமூக நீதி வரலாற்றில் ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.
வாழ்நாள் முழுவதும் விவசாயிகள், தொழிலாளர்கள், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக ஓய்வின்றி போராடிய அவர், அதிகாரத்தில் அல்ல, மக்களின் இதயங்களில் தங்கிய தலைவர். அரசியல் என்பது அதிகாரம் மட்டுமல்ல, அது மனிதநேயப் பொறுப்பு என்பதை தனது வாழ்வால் நிரூபித்தவர்.
எளிமையான வாழ்க்கை, தெளிவான கொள்கை, உறுதியான நிலைப்பாடு, இவை அனைத்தும் நல்லகண்ணு அவர்களின் அடையாளங்கள். அரசியல் நேர்மைக்கும், பொதுநலத்திற்குமான அர்ப்பணிப்புக்கும் அவர் ஒரு எடுத்துக்காட்டு.
அவரது மறைவு குடும்பத்தினருக்கும், கட்சித் தோழர்களுக்கும் மட்டுமல்ல, சமூகநீதியை நம்பும் ஒவ்வொருவருக்கும் பேரிழப்பு.
அவரது சேவைகளை நினைவு கூர்ந்து, அவரது இலட்சியங்களை முன்னெடுத்து செல்லுவது தான் அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும். அவரது சேவைகளுக்கு முன் சிரம் தாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.
- ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று 700 கனஅடியாக வந்தது.
- சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.
ஒகேனக்கல்:
கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து கடந்த ஒரு வாரமாக குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று 700 கனஅடியாக வந்தது. இன்றும் அதே அளவு தண்ணீர் நீடித்து வந்தது.
மெயின் அருவி, சினி பால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் குறைந்த அளவே தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
இதனால் சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.
மேலும் அவர்கள் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாறைகளுக்கு நடுவே விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர். பின்னர் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.
சுற்றுலா பயணிகள் மீன் சாப்பாடு வாங்கி கொண்டு பூங்காவில் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.
நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- மகளிருக்கு மாதந்தோறும் ரூ. 1000 உரிமைத்தொகை யை தமிழக அரசு வழங்குகிறது.
- அத்தியாவாசிய பொருளின் விலை பெரும் அளவில் உயர்ந்துள்ளது.
அரூர்:
தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த எச்.தொட்டம்பட்டியில் பா.ஜ.க. தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மாநில துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் பேசியதாவது:-
தமிழகத்தில் கடந்த 2021-இல் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து மாநிலம் முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களின் புழக்கம் அதிகரித்துள்ளன. இளம்வயது சிறார்கள் கூட போதைப்பொருள்களை பயன்படுத்தும் சூழல் உள்ளது. மகளிருக்கு மாதந்தோறும் ரூ. 1000 உரிமைத்தொகை யை தமிழக அரசு வழங்குகிறது.
ஆனால், அத்தியாவாசிய பொருளின் விலை பெரும் அளவில் உயர்ந்துள்ளது. அதாவது ஒரு குடும்பத்திற்கு ரூ. 50 ஆயிரம் அளவுக்கு கூடுதல் செலவு அதிகரித்துள்ளது.
எனவே, தமிழகத்தில் 2026-இல் நடைபெறும் சட்டபேரவைத் தேர்தலில் ஏழை, எளியோர் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என்றார்.






