என் மலர்
இந்தியா
- முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 270 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- அடுத்து ஆடிய இந்தியா 39.5 ஓவரில் 271 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
விசாகப்பட்டினம்:
இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான 3வது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 47.5 ஓவரில் 270 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் டி காக் சிறப்பாக ஆடி சதமடித்து 106 ரன்னில் அவுட்டானார். கேப்டன் பவுமா 48 ரன்னில் வெளியேறினார்.
இந்தியா சார்பில் குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 271 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா ஜோடி முதலில் நிதானமாக ஆடியது. அதன்பின் இருவரும் அதிரடியில் இறங்கினர்.
முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 155 ரன்கள் சேர்த்த நிலையில் ரோகித் சர்மா 75 ரன்னில் அவுட்டானார். அடுத்து விராட் கோலியுடன் ஜெய்ஸ்வால் இணைந்தார். பொறுப்புடன் ஆடிய ஜெய்ஸ்வால் சதமடித்து அசத்தினார். அவர் 111 பந்துகளில் சதமடித்தார்.
விராட் கோலி ஜெய்ஸ்வாலுக்கு ஒத்துழைப்பு கொடுத்தார். சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். அவர் 40 பந்தில் அரை சதம் கடந்தார்.
இறுதியில், இந்திய அணி 39.5 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என இந்தியா கைப்பற்றி அசத்தியது. ஜெய்ஸ்வால் 116 ரன்னும், விராட் கோலி 65 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
- டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது.
- அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 270 ரன்கள் எடுத்தது.
விசாகப்பட்டினம்:
இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான 3வது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது.
முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 270 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் டி காக் சதமடித்தார்.
இந்தியா சார்பில் குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 271 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா ஜோடி முதலில் நிதானமாக ஆடியது. அதன்பின் இருவரும் அதிரடியில் இறங்கினர்.
முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 155 ரன்கள் சேர்த்த நிலையில் ரோகித் சர்மா 75 ரன்னில் அவுட்டானார். அடுத்து விராட் கோலியுடன் ஜெய்ஸ்வால் இணைந்தார்.
இந்நிலையில், பொறுப்புடன் ஆடிய ஜெய்ஸ்வால் சதமடித்து அசத்தினார். அவர் 111 பந்துகளில் சதமடித்தார். இதில் ஒரு சிக்சரும், 10 பவுண்டரிகளும் அடங்கும். இது அவரது முதல் சதமாகும்.
- அதிபர் டிரம்பின் நெருங்கிய நண்பரான செர்ஜியோ கோர் இந்தியாவின் புதிய தூதராக பொறுப்பேற்றார்.
- இந்தியாவுடனான நட்பை தொடர்ந்து நீடிப்பதற்கான முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது.
புதுடெல்லி:
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றபிறகு இந்தியா உள்பட பல்வேறு நாடுகளின் இறக்குமதி பொருட்களுக்கு கடும் வரி விதித்தார். ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கி வருவதால் மொத்தம் 50 சதவீதம் வரி விதிக்கப்பட்டது. ஆனால் அமெரிக்காவின் இந்த மிரட்டலுக்கு இந்தியா பணியவில்லை.
தொடர்ந்து இந்தியா ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. இதனால் இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தக உறவில் விரிசல் ஏற்பட்டது.
இதற்கிடையே, இந்தியா உடனான நட்பை தொடர்ந்து நீடிப்பதற்கான முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது. பிரதமர் மோடி தனது சிறந்த நண்பர் என டிரம்ப் சொல்லி வருகிறார். இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்வதற்கான சூழ்நிலை உருவாகி உள்ளது.
அதிபர் டிரம்பின் நெருங்கிய நண்பரான செர்ஜியோ கோர் இந்தியாவின் புதிய தூதரக பொறுப்பேற்றுள்ளார். அவர் பதவி ஏற்ற விழாவில் பேசிய அதிபர் டிரம்ப் இந்திய இறக்குமதி பொருட்களுக்கு வரி குறைக்கப்படும் என சூசகமாக தெரிவித்தார். அவரின் இந்த கருத்து இந்தியாவுடனான வர்த்தக முன்னேற்றத்திற்கான ஒரு படிக்கல்லாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்தியா- அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை டிசம்பர் 10ம் தேதி முதல் டெல்லியில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
- ரோகித் சர்மா இதுவரை 505 போட்டிகளில் விளையாடி 20,000 ரன்களைக் கடந்துள்ளார்.
- இதுவரை 4 வீரர்கள் மட்டுமே 20,000 சர்வதேச ரன்களைக் கடந்துள்ளனர்.
விசாகப்பட்டினம்:
விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெறும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் 20,000 ரன்களைக் கடந்த 4-வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.
ரோகித் சர்மா தான் விளையாடிய கடைசி 5 ஒருநாள் போட்டிகளில் மூன்று அரைசதங்கள் மற்றும் ஒரு சதம் அடித்து இருக்கிறார்.
சர்வதேச கிரிக்கெட்டில் (டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என அனைத்தும் சேர்த்து) ரோகித் சர்மா இதுவரை 505 போட்டிகளில் விளையாடி 20,000 ரன்களைக் குவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை 4 வீரர்கள் மட்டுமே 20,000 சர்வதேச ரன்களைக் கடந்துள்ளனர்.
அந்த பட்டியல்:
சச்சின் டெண்டுல்கர்-34,357 ரன்கள்
விராட் கோலி-27,910 ரன்கள்
ராகுல் டிராவிட்-24,208 ரன்கள்
ரோகித் சர்மா-20000 ரன்கள்
- திருவாரூர் மாவட்ட நீதிமன்றத்தின் விசாரணைக்கு வந்தது.
- 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவாரூர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவு.
ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு எதிராக போராடியபோது பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியதாக வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று திருவாரூர் மாவட்ட நீதிமன்றத்தின் விசாரணைக்கு வந்தது.
இந்நியைலில், அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவாரூர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- சில இடங்களுக்கு செல்ல வேண்டிய விமானங்கள் பல மணி நேரம் தாமதமாக புறப்பட்டன.
- விமானங்கள் ரத்து செய்ய்யப்பட்டதால் பயணிகள் கடுமையாக பாதிப்பு அடைந்தனர்.
புதுடெல்லி
இண்டிகோ விமான நிறுவனம் கடந்த 3 நாளாக விமான சேவைகளை நிறைவேற்றுவதில் சொதப்பி வருகிறது. மத்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் பிறப்பித்த புது விதிகளை காரணம் காட்டி, பல்வேறு விமான சேவைகளை இண்டிகோ நிறுவனம் ரத்து செய்தது. நேற்றும்கூட ஏராளமான விமான சேவைகளை ரத்து செய்தது.
உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் அனைத்து இண்டிகோ விமான சேவைகளை ரத்துசெய்தது. சில இடங்களுக்கு செல்ல வேண்டிய விமானங்கள் பல மணி நேரம் தாமதமாக புறப்பட்டன. இதனால் பயணிகள் கடுமையாக பாதிப்பு அடைந்தனர்.
இந்நிலையில், இண்டிகோ நிறுவனம் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ரத்து செய்யப்பட்ட இண்டிகோ விமானங்களில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்த பயணிகளுக்கு விமான கட்டணம் தானாகவே திருப்பிச் செலுத்தப்படும் என அந்நிறுவனம் அறிவித்தது. டிசம்பர் 5 முதல் 15ம் தேதி வரை பயணிகள் டிக்கெட் ரத்து செய்தல் அல்லது வேறு தேதிகளுக்கு மாற்றுதல் உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளுக்கும் எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படாது. பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்துக்கு வருந்துகிறோம் என பதிவிட்டுள்ளது.
- நாஞ்சில் சம்பத் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக்கொண்டார்.
- பொதுச் செயலாளர் என்.ஆனந்த் அவர்களுடன் இணைந்து தன்னுடையப் பணிகளை மேற்கொள்வார்.
தமிழக வெற்றிக் கழகத்தில் நேற்று இணைந்த நாஞ்சில் சம்பத்திற்கு பொறுப்பு வழங்கி விஜய் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, நாஞ்சில் சம்பத்திற்கு தவெகவின் பரப்புரைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழகத்தின் மூத்த அரசியல்வாதிகளுள் ஒருவர், சிறந்த பேச்சாளர், அனைவரிடத்திலும் இனிமையாகப் பழகக் கூடியவர். அண்ணன் நாஞ்சில் சம்பத் அவர்கள், தம்மைத் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக்கொண்டுள்ளார்.
மக்களுக்கான அரசியலில் நம்மோடு பயணிக்க இருக்கும் அவரை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அண்ணன் நாஞ்சில் சம்பத் அவர்கள், கழகத்தின் பரப்புரைச் செயலாளர் (Campaign Secretary) பொறுப்பில் நியமிக்கப்படுகிறார் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவர், பொதுச் செயலாளர் என்.ஆனந்த் அவர்களுடன் இணைந்து தன்னுடையப் பணிகளை மேற்கொள்வார். கழக நிர்வாகிகளும் தோழர்களும் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கி, மக்கள் பணியாற்றிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- சூடான் மற்றும் நைஜீரியா நாட்டைச்சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- சென்னை மாநகர போலீசார் போதை பொருட்களை தடுப்பதற்கு தொடர் நடவடிக்கை.
சென்னையில் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவின் நடவடிக்கையால் வானகரம் பகுதியில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்த வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களோடு தொடர்பில் இருந்த சூடான் மற்றும் நைஜீரியா நாட்டைச்சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
அதன்படி, இதுவரை போதைப்பொருள் வழக்குகளில் 29 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கமிஷனர் அருண் உத்தரவின் பேரில் சென்னை மாநகர போலீசார் போதை பொருட்களை தடுப்பதற்கு தொடர் நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
- தற்போது உற்பத்தி செலவு, பணியாளர்கள் சம்பளம் என செலவு அதிகரித்து உள்ளது.
- பனியன் ஆடைகளை வாங்கும் வியாபாரிகள் சிலர் அதற்கான தொகையை சரிவர கொடுப்பதில்லை.
திருப்பூர்:
திருப்பூரில் தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்க (சைமா) கலந்துரையாடல் கூட்டம் சங்க அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் சிறுகுறு தொழில்களில் ஜாப் ஒர்க்கிற்கான பணத்தை 45 நாட்களுக்குள் வழங்க மத்திய அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது.
அதேபோல் ரீடெய்லர்களும் பணத்தை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மத்திய அரசிடம் வலியுறுத்த முடிவு செய்யப்பட்டது.
மேலும் தற்போது உற்பத்தி செலவு, பணியாளர்கள் சம்பளம் என செலவு அதிகரித்து உள்ளது. மேலும் பனியன் ஆடைகளின் விலையை உயர்த்தி 2 ஆண்டுகளுக்கு மேல் ஆவதால் 3 சதவீதம் முதல் 5 சதவீதம் வரை விலையை உயர்த்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
பனியன் ஆடைகளை வாங்கும் வியாபாரிகள் சிலர் அதற்கான தொகையை சரிவர கொடுப்பதில்லை. அவர்களை பிளாக் லிஸ்ட்டில் (கருப்பு பட்டியல்) கொண்டு வருவது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.
- இந்தியா கூட்டணியை யாரும் சிதைக்கவும் முடியாது, உடைக்கவும் முடியாது.
- அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சார்பில் 5 பேர் குழு அமைத்துள்ளது.
சென்னை:
பி.ஆர். அம்பேத்கர் 69-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை சத்தியமூர்த்தி பவனில் அவரது படத்திற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அப்போது அவரிடம், காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி த.வெ.க. தலைவர் விஜயை சந்தித்து உள்ளார். ஏற்கனவே காங்கிரஸ், த.வெ.க இடையே கூட்டணி வரலாம் என்று பேசப்படும் நிலையில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. கூட்டணி மாற்றம் தொடர் பாகவும் காங்கிரஸ் யோசிக்கிறதா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, அவர் கூறியதாவது:-
காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி விஜயை சந்தித்து பற்றி எனக்கு தெரியாது. இந்தியா கூட்டணியை யாரும் சிதைக்கவும் முடியாது, உடைக்கவும் முடியாது. இந்தியா கூட்டணி வலிமையாக உள்ளது.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சார்பில் 5 பேர் குழு அமைத்துள்ளது. இந்த குழு தான் திமுகவிடம் பேசியது. அடுத்தகட்டமாக திமுக குழு அமைக்கப்பட்ட பிறகு பேச்சுவார்த்தை தொடரும். இந்த குழு தான் அதிகாரபூர்வமான காங்கிரஸ் பேச்சுவார்த்தை குழு.
கூட்டணி தொடர்பாக புற வாசல் வழியாக காங்கிரஸ் ஒருபோதும் பேசாது. காங்கிரஸ் நேர் வழியில் தான் செல்லும். பிரவீன் சக்கரவர்த்தி விஜயை சந்தித்ததாக, நீங்கள் தான் கூறுகிறீர்கள்.
எனக்கோ, தமிழக காங்கிரஸ் கட்சிக்கோ, எதுவும் தெரியாது. அவர் சந்தித்தது உண்மை என்று தெரியவந்தால் அல்லது அவரே தான் விஜயை சந்தித்ததாக சொன்னாலோ, மேலிடத்துக்கு தகவல் தெரிவிப்போம். அதன் பிறகு நடவடிக்கை எடுப்பது குறித்து மேலிடம் முடிவெடுக்கும்.
ஒரு வேளை அவர் வேறு விஷயமாக கூட விஜயை பார்க்க சென்று இருக்கலாம். அரசியலாக ஏன் பார்க்கிறீர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அயோத்தி இந்தியாவில் தானே இருக்கிறது.
- சனாதன தர்மத்தை அழிப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகளில் ஈடுபடுகிறார்களா?
தமிழ்நாடு அயோத்தி போல மாறுவதில் தவறில்லை என பேசிய நயினார் நாகேந்திரனுக்கு திமுக எம்பி கன
பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்," திருப்பரங்குன்றம் அயோத்தியாக மாறுவதில் தவறில்லை. அயோத்தி இந்தியாவில் தானே இருக்கிறது.
தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி ராமனின் ஆட்சியாக இருக்கும். திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற எந்த இஸ்லாமியரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
சனாதன தர்மத்தை அழிப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகளில் ஈடுபடுகிறார்களா? என்று அவர் கேள்வி எழுப்பினார்.
நயினார் நாகேந்திரனின் இந்த கருத்துக்கு திமுக எம்பி கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து கனிமொழி தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?
கடந்த தேர்தலில் ஆர்.எஸ்.எஸ் - பாஜகவைப் படுதோல்வி அடையச் செய்து, மக்கள் தூக்கியெறிந்த ஃபைசாபாத் தொகுதியில் உள்ள அயோத்தியைப் போலவா?
கவலை வேண்டாம்! அப்படி தான் தமிழ்நாடு பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டத்தில் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக பலி போடுகிறார்கள்.
- எங்கள் கூட்டணிக்கு இன்னும் பல கட்சிகள் வரும். வலிமையாக மாறும்.
சென்னை:
அம்பேத்கர் நினைவு நாளையொட்டி துறைமுகம் அருகே உள்ள அவரது உருவச் சிலைக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு அவர் கூறியதாவது:-
திருப்பரங்குன்றம் விவகாரத்தை அயோத்தி போல் ஆக்கத் துடிப்பதாக கூறுகிறார்கள். அயோத்தி என்ன இந்தியாவில்தானே இருக்கிறது. இங்கிலாந்திலா இருக்கிறது. அயோத்தி மாதிரி இருந்தாலும் சரி என்னவாக இருந்தாலும் சரி, ராமர் போல் ஆட்சி வர வேண்டும்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தீபத் தூணுக்கு பக்கத்தில் தர்கா இருப்பது ஊருக்கே தெரியும். அங்கு யாரும் செல்ல அனுமதி இல்லை. தீபம் ஏற்றுவதற்கு மட்டும்தான் கோர்ட்டு அனுமதி அளித்தது. அதற்கும் தர்கா தரப்பில் இருந்து யாரும், எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.
அப்படி இருக்கும்போது மதக்கலவரம் எப்படி வரும்? துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும், கனிமொழி எம்.பி.க்கும் என்ன பாதகம் ஏற்படுகிறது. சனாதன தர்மத்தை அளிப்பேன் என்று உதயநிதி ஸ்டாலின் சபதம் போட்டார். அதற்கான ஆரம்பகட்ட வேலையாகத்தான் இதை பார்க்கிறோம்.
அவரது கனவு ஒருபோதும் பலிக்காது. இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் சனாதன தர்மத்தை யாராலும் அழிக்க முடியாது. கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டத்தில் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக பலி போடுகிறார்கள். ஆனால் இந்த திட்டம் பற்றி 2021-ம் ஆண்டு முதல் என்றாவது பட்ஜெட்டில் அறிவித்தது உண்டா?
மத்திய அரசு அறிக்கை கேட்ட பிறகுதான், அறிக்கை தயார் செய்தார்கள். அதுவும் முறையாக இல்லை. ரெயில் பயணத்திற்கும், பஸ் பயணத்திற்கும் 2 நிமிடம் தான் வித்தியாசம் என்று குறிப்பிட்டுள்ளார்கள். அப்படியானால் மெட்ரோ ரெயில் வேண்டாம் என்பதாகத்தானே அர்த்தம்.
ஒரு நிலையம் கட்ட குறைந்தது 20 மீட்டர் இடம் வேண்டும். ஆனால் 10 மீட்டர் அளவுக்கு 3 நிலையங்கள் கட்டுவதற்கு இடம் இருப்பதாக குறிப்பிட்டு உள்ளார்கள். இந்த குறைகளைத்தான் நிவர்த்தி செய்ய மத்திய அரசு கூறியுள்ளது. இதுதான் தி.மு.க. செய்யும் வளர்ச்சி அரசியலா?
தூத்துக்குடி மற்றும் மதுரை விமான நிலையங்கள் சர்வதேச விமான நிலையங்களாக மாற்றப்பட்டு உள்ளது. இது வளர்ச்சியை கொடுக்காதா? நாங்கள் வளர்ச்சிக்கான அரசியல் செய்கிறோம். தி.மு.க. என்ன அரசியல் செய்கிறது என்பதை மக்கள் உணருவார்கள். தேர்தலுக்கு இன்னும் 100 நாட்கள் இருக்கிறது.
எங்கள் கூட்டணிக்கு இன்னும் பல கட்சிகள் வரும். வலிமையாக மாறும். நிச்சயமாக தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம். தி.மு.க. கூட்டணிக்குள்தான் குழப்பம் நிலவுகிறது. காங்கிரசுக்கு அவர்கள் எத்தனை தொகுதிகள் கொடுப்பார்கள். அமைச்சரவையில் இடம் கொடுப்பார்களா? விடுதலை சிறுத்தைகளுக்கு எத்தனை தொகுதிகள் கொடுப்பார்கள்? பேச்சுவார்த்தை தொடங்கட்டும், அப்போது இந்த குழப்பம் வெளிவரும்.
இவ்வாறு அவர் கூறினார்.






