என் மலர்tooltip icon

    ஆசிரியர் தேர்வு

    • கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக எந்தக் கூட்டணியிலும் சேராமல் தனித்து இயங்கி வந்தது டுவென்டி20 கட்சி
    • முன்னாள் எம்.எல்.ஏ ஏ.வி. தாமரக்ஷன் தலைமையிலான ஜனதிபத்ய சம்ரக்ஷண சமிதி பிரிவும் என்.டி.ஏ கூட்டணியில் இணைந்துள்ளது

    கேரளாவின் கிடெக்ஸ் கார்மெண்ட்ஸ் தலைவரும், நிர்வாக இயக்குநருமான சாபு எம். ஜேக்கப் தலைமையிலான 'டுவென்டி 20' கட்சி, அம்மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ளது. நாளை பிரதமர் நரேந்திர மோடி கேரளா மற்றும் தமிழ்நாட்டில் பாஜக தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கவுள்ள நிலையில் இந்த கூட்டணி இறுதியாகி உள்ளது. பாஜக மாநிலத் தலைவர் ராஜீவ் சந்திரசேகருடன் ஜேக்கப் பேச்சுவார்த்தை நடத்தியபிறகு, இந்த முடிவை இருவரும் செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவித்தனர்.

    கேரளாவில் நிலவும் "தவறான நிர்வாகம் மற்றும் ஊழலுக்கு" மாற்றாகவும், மோடி அரசின் வளர்ச்சித் திட்டங்களுடன் இணைந்து "வளர்ந்த கேரளா" என்ற இலக்கை அடையவும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சாபு ஜேக்கப் தெரிவித்துள்ளார். கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக எந்தக் கூட்டணியிலும் சேராமல் தனித்து இயங்கி வந்த டுவென்டி20 கட்சி, முதன்முறையாக ஒரு முன்னணியுடன் கூட்டணி சேர்ந்துள்ளது. இது குறிப்பாக எர்ணாகுளம் மற்றும் மத்திய கேரள மாவட்டங்களில் தேர்தல் களத்தை மாற்றியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    டுவென்டி20 கட்சியுடன் இணைந்து, முன்னாள் எம்.எல்.ஏ ஏ.வி. தாமரக்ஷன் தலைமையிலான ஜனதிபத்ய சம்ரக்ஷண சமிதி பிரிவும் என்.டி.ஏ கூட்டணியில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • தேர்தல் ஆணையத்திற்குக் கழகத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
    • மக்களின் பாதுகாவலர்கள் கையில் இருப்பதுதான் விசில்

    தமிழ்நாடு சட்டசபை தேர்தலை முன்னிட்டு நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு தேர்தல் ஆணையம் 'விசில்' சின்னத்தை ஒதுக்கியுள்ளது. நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சிக்கு மீண்டும் 'பேட்டரி டார்ச்' சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் விசில் சின்னம் ஒதுக்கப்பட்டது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் தவெக தலைவர் விஜய். அதில்,  

    "என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் என் அன்பான வணக்கம்.

    தமிழ்நாடு மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் முதன்மை சக்தியாகத் திகழும் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அரசியல் வரலாற்றின் முதல் வெற்றி அத்தியாயம் தொடங்கியிருக்கிறது. இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் நம் தமிழக வெற்றிக் கழகத்திற்கான தேர்தல் சின்னத்திற்காக நாம் விண்ணப்பித்திருந்த சின்னங்களில் ஒன்றுதான் விசில்.

    தற்போது தேர்தல் ஆணையம் நமக்கு அந்த விசில் சின்னத்தையே ஒதுக்கீடு செய்திருப்பதை பெருமகிழ்ச்சியுடன் உங்களோடு பகிர்ந்துகொள்கிறோம். இதற்காகத் தேர்தல் ஆணையத்திற்குக் கழகத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

    விசில் என்பது மனிதர்களின் ஆனந்த ஆர்ப்பரிப்பின் வெளிப்பாடாக எழும் ஒலி. ஓய்வறியாமல் இலக்கை நோக்கி உழைப்பவர்கள், அவ்விலக்கை அடைந்ததும் குதூகலத்தில் எழுப்பும் பேரொலி. இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமெனில், மக்களின் பாதுகாவலர்கள் கையில் இருப்பதுதான் விசில். அந்த வகையில், விசிலைப் பாதுகாப்பின் அடையாளம் என்றும் குறிப்பிடலாம்.

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, ஆண்கள், பெண்கள் என அனைவரின் உள்ளங்களிலும் உதடுகளிலும் எழும் விசில் ஒலி நேர்மறை நிகழ்வின் குறியீடும் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக வெற்றிக் கழகம் ஈட்டப்போகும் வெற்றியை முன்கூட்டியே கணித்துக் கட்டியம் கூறும் வெகுஜன மக்களுக்கு நெருங்கிய சின்னமான விசில் நமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதே நமக்கான ஊக்கமும் உத்வேகமும் என்பதே இயற்கையும் இறைவனும் நமக்கு அளித்திருக்கும் பரிசு.

    நமது சின்னம் விசில். நல்லவர்கள் சின்னம் விசில். நாடு காப்பவர்கள் சின்னம் விசில். ஊழலை ஒழிக்கும் சின்னம் விசில். ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஒரே சின்னம் விசில். வெற்றிச் சின்னம் விசில். வருகிற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவோம். விசில் போடுவோம். " எனக் குறிப்பிட்டுள்ளார். 

    • இந்தியாவில் நடக்கும் போட்டிகளை வேறு நாட்டிற்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தல்.
    • வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கை ஐசிசி நிராகரித்தது.

    2026 டி-20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகுவதாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

    டாக்காவில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு முடிவெடுக்கப்பட்டதாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

    அரசியல் சூழல் மற்றும் பாதுகாப்பு காரணமாக இந்தியாவில் விளையாடப் போவதில்லை என்று வங்கதேசம் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

    இந்தியாவில் நடக்கும் போட்டிகளை வேறு நாட்டிற்கு மாற்ற வேண்டும் என்று வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கை ஐசிசி நிராகரித்தது.

    • "தென்னிந்தியாவின் நைட்டிங்கேல்" என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் பாடகி எஸ்.ஜானகி.
    • முரளி கிருஷ்ணா ஒரு பிரபலமான பரதநாட்டிய கலைஞர்

    "தென்னிந்தியாவின் நைட்டிங்கேல்" என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் பாடகி எஸ்.ஜானகி. இவரின் ஒரே மகன் முரளி கிருஷ்ணா இன்று காலமானார். நீண்ட நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. முரளி கிருஷ்ணாவுக்கு ஒரு மனைவி, இரண்டு மகள்கள் உள்ளனர். பாடகி ஜானகியின் மகன் என்பதைத் தாண்டி, பிரபலமான பரதநாட்டிய கலைஞர் என்ற பட்டத்தையும் பெற்றவர். சில படங்களிலும் நடித்துள்ளார். 

    இந்த செய்தியை பாடகி கே.எஸ். சித்ரா சமூக ஊடகங்களில் அறிவித்துள்ளார். முரளியின் திடீர் மரணச் செய்தியை கேட்டு தான் அதிர்ச்சியடைந்ததாகவும், அன்பாக சகோதரரை இழந்துவிட்டதாகவும் தனது குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

    "இன்று காலை எங்கள் அன்புக்குரிய ஜானகி அம்மாவின் ஒரே மகன் முரளி அண்ணாவின் திடீர் மறைவுச் செய்தியைக் கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன். நாங்கள் ஒரு அன்பான சகோதரனை இழந்துவிட்டோம். இந்த தாங்க முடியாத வலியையும் துக்கத்தையும் கடக்கும் வலிமையை அம்மாவுக்கு கடவுள் வழங்கட்டும். மறைந்த ஆன்மா நித்திய சாந்தியில் இளைப்பாறட்டும். ஓம் சாந்தி" என்று கே.எஸ். சித்ரா அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். 




    • சுவிட்சர்லாந்தில் உலக பொருளாதார மாநாடு நடந்து வருகிறது.
    • பிரதமர் மோடி ஒரு அற்புதமான மனிதர், எனது நண்பர்.

    சுவிட்சர்லாந்தில் உலக பொருளாதார மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பங்கேற்று பேசினார்.

    அப்போது செய்தியாளர்களிடம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறுகையில், தனது நண்பர் பிரதமர் மோடி மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பதாகவும், அவருடன் நல்ல வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள போவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில்,

    உங்கள் பிரதமர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அவர் ஒரு அற்புதமான மனிதர், எனது நண்பர். எங்களுக்கு ஒரு நல்ல ஒப்பந்தம் ஏற்படப் போகிறது என்று கூறினார்.

    இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்த கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    • பேருந்தின் முன்பக்க டயர் வெடித்து எதிரே வந்த லாரி மீது மோதியது.
    • பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து மற்ற பயணிகள் பாதுகாப்பாக வெளியேறினர்.

    ஆந்திராவின் நெல்லூரிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு ஐதராபாத் நோக்கிச் சென்ற தனியார் ஆம்னி சொகுசுப் பேருந்து தீப்பிடித்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    நந்தியால் மாவட்டத்தில் ஸ்ரீவெல்லாமெட்டா அருகே தனியார் பேருந்து அதி வேகத்தில் சென்று கொண்டிருந்த போது பேருந்தின் முன்பக்க டயர் வெடித்து எதிரே வந்த லாரி மீது மோதியது. இதில் கண்ணிமைக்கும் நேரத்தில் பேருந்து முழுவதும் தீப்பிடித்து பேருந்து ஓட்டுநர், லாரி ஓட்டுநர் மற்றும் கிளீனர் ஆகியோர் உயிருடன் எரிந்தனர். பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து மற்ற பயணிகள் பாதுகாப்பாக வெளியேறினர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 

    • இந்திய வீரர்களான எச்.எஸ்.பிரனாய், கிரண் ஜார்ஜ், ஆயுஷ் ஷெட்டி ஆகியோர் முதல் சுற்றுடன் நடையை கட்டினர்.
    • பி.வி.சிந்து 22-20, 21-18 என்ற நேர்செட்டில் ஜப்பானின் மனானி சுய்சூவை தோற்கடித்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தார்.

    ஜகர்த்தா:

    இந்தோனேசிய மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஜகர்த்தாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் முதலாவது சுற்றில் இந்திய வீரர்களான எச்.எஸ்.பிரனாய், கிரண் ஜார்ஜ், ஆயுஷ் ஷெட்டி ஆகியோர் முதல் சுற்றுடன் நடையை கட்டினர்.

    பெண்கள் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்றவரான இந்தியாவின் பி.வி.சிந்து 22-20, 21-18 என்ற நேர்செட்டில் ஜப்பானின் மனானி சுய்சூவை தோற்கடித்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீராங்கனை அன்மோல் கார்ப் 21-16, 21-17 என்ற நேர்செட்டில் சீன தைபேயின் பாய் யூ போவை விரட்டியடித்தார். அதே சமயம் ஆகர்ஷி காஷ்யப் 21-8, 20-22, 17-21 என்ற செட் கணக்கில் டென்மார்க்கின் ஜூலி டாவலிடம் போராடி பணிந்தார். மாள்விகா பான்சோத், தன்வி ஷர்மா ஆகியோரும் முதல் சுற்றுடன் வெளியேறினர்.

    • ‘சிறை’ திரைப்படம் கிறிஸ்துமஸ் தினத்தன்று உலகமெங்கும் வெளியானது.
    • ‘சிறை’ படம் ரசிகர்களிடையே மட்டுமின்றி திரைப்பிரபலங்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

    நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் வெளியான படம் 'சிறை'. இயக்குநர் வெற்றிமாறனின் இணை இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இப்படத்தினை எழுதி இயக்கி இருந்தார்.

    7 ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில், SS லலித் குமார் இந்த படத்தை தயாரித்துள்ளார். ஒரு காவல் அதிகாரிக்கும், விசாரணைக் கைதிக்குமான பயணம் தான் இப்படத்தின் மையம்.

    நடிகர் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்க, ஜோடியாக நடிகை அனந்தா நடித்து இருந்தார். இப்படத்தில் தயாரிப்பாளர் SS லலித் குமார் மகன் LK அக்ஷய் குமார் அறிமுகமாகியுள்ளார். இவருக்கு ஜோடியாக அனிஷ்மா நடித்து இருந்தார். இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். 'சிறை' திரைப்படம் கிறிஸ்துமஸ் தினத்தன்று உலகமெங்கும் வெளியானது.

    'சிறை' படம் ரசிகர்களிடையே மட்டுமின்றி திரைப்பிரபலங்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமின்றி வசூலையும் குவித்தது.

    அந்த வகையில், 'சிறை' படம் இதுவரை உலகளவில் ரூ.31.58 கோடி வசூல் செய்துள்ளதாக போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 27.27 கோடி, கர்நாடகாவில் 1.05 கோடி என உலகளவில் ரூ.31.58 கோடி வசூல் குவித்துள்ளது. இப்படம் ரூ.6 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே 'சிறை' படம் குடியரசு தினத்தையொட்டி நாளை ஜீ5 ஓ.டி.டி. தளத்தில் வெளியாகிறது.



    • சிக்னல் அமைப்பு, தண்டவாள செயல்திறன், ரெயில் இயக்கம், உறுதித் தன்மை உள்ளிட்டவைகள் பரிசோதிக்கப்பட்டது.
    • பூந்தமல்லி - வடபழனி இடையே பயணிகள் ரெயில் சேவையை தொடங்குவதற்கான அனுமதியை வழங்கும்.

    சென்னை:

    சென்னையில் 116 கிலோ மீட்டர் தொலைவுக்கு 3 வழித்தடங்களில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டப் பணிகள் நடந்து வருகிறது. இதில், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரையிலான வழித்தடத்தில் (26 கிலோ மீட்டர்) பூந்தமல்லி - போரூர் வரையிலான 10 கிலோ மீட்டர் தொலைவுக்கு பணிகள் முடிந்துள்ளது. இந்த பூந்தமல்லி - போரூர் இடையே மெட்ரோ ரெயில் சேவையை தொடங்குவதற்கான பாதுகாப்பு சான்றிதழையும் ரெயில்வே வாரியம் வழங்கியது.

    இந்த நிலையில், போரூர் - வடபழனி இடையில் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து கடந்த 11-ந்தேதி வெற்றிகரமாக சோதனை ஓட்டம் நடத்தி பார்க்கப்பட்டது.

    அப்போது, சிக்னல் அமைப்பு, தண்டவாள செயல்திறன், ரெயில் இயக்கம், உறுதித் தன்மை உள்ளிட்டவைகள் பரிசோதிக்கப்பட்டது. இதனால், பூந்தமல்லி - வடபழனி இடையில் மெட்ரோ ரெயிலை இயக்குவதற்கான அனைத்து சோதனை பணிகளையும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் முழுமையாக முடித்துள்ளது. இதேபோல, போரூர் - வடபழனி இடையே இம்மாத இறுதிக்குள் ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதைத்தொடர்ந்து, பூந்தமல்லி - வடபழனி வரையிலான வழித்தடத்தில் வரும் பிப்ரவரி மாதம் மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்பட இருக்கிறது.

    இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    பூந்தமல்லி - வடபழனி இடையே சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மேற்கொண்டு வந்த சோதனை பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றுள்ளது. ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் குறிப்பிட்ட வழித்தடம், பயணிகள் வசதி உள்ளிட்டவைகளை ஆய்வு செய்த பின்னர் அவருடைய ஆய்வுக் குறிப்புகள் ரெயில்வே வாரியத்திற்கு அனுப்பி வைக்கப்படும். இதைத்தொடர்ந்து, பூந்தமல்லி - வடபழனி இடையே பயணிகள் ரெயில் சேவையை தொடங்குவதற்கான அனுமதியை வழங்கும். பிப்ரவரி மாதம் இவ்வழித்தடத்தில் சேவை தொடங்கும் என எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து டி.டி.வி.தினகரன் விலகி இருந்தார்.
    • தேசிய ஜனநாயக கூட்டணியில் டி.டி.வி.தினகரன் இணைந்துள்ளார்.

    பா.ஜ.க. கூட்டணியில் இணைவதை அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து டி.டி.வி.தினகரன் விலகி இருந்தார். தற்போது மீண்டும் பா.ஜ.க. கூட்டணியில் இணைய உள்ளதாக அறிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டு தேசிய ஜனநாயக கூட்டணியில் டி.டி.வி.தினகரன் இணைந்துள்ளார்.

    இந்நிலையில், டிடிவி தினகர் தலைமையிலான அமமுக, தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்ததை வரவேற்கிறேன் என மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அமித்ஷா தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    வளமான தமிழகம் - வலுவான தேசிய ஜனநாயகக் கூட்டணி.

    டிடிவி தினகரன் அவர்கள் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்ததை நான் வரவேற்கிறேன்.

    திமுகவின் வாரிசு மற்றும் ஊழல் ஆட்சியால் தமிழக மக்கள் சோர்வடைந்து, பிரதமர் திரு. நரேந்திரமோடி அவர்கள் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியால், தமிழகம் வளர்ச்சி மற்றும் செழிப்பின் புதிய உயரங்களுக்கு எடுத்து செல்ல இருப்பதை ஆசீர்வதிக்க தயாராக இருக்கின்றனர்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • கஞ்சா மாடல் தி.மு.க ஆட்சியில் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
    • மாநிலம் முழுவதும் இத்தகைய வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.

    கஞ்சா மாடல் திமுக ஆட்சியின் கீழ் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

    கோவையில் கஞ்சா போதையில் இருந்த கும்பல் இளைஞரை கொடூரமாக தாக்கும் வீடியோவை பகிர்ந்து அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

    இது ஒரு இடத்தில நடந்த வன்முறை சம்பவம் அல்ல, சமீபத்தில் திருத்தணி, சென்னை, நேற்று கோவையில் நடந்துள்ளது.

    இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பாவது:-

    கஞ்சா மாடல் தி.மு.க ஆட்சியில் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

    கோவை கணபதி பகுதியில், கஞ்சா போதையில் இருந்த ஒரு கும்பல் ஒரு இளைஞரை மிகக் கொடூரமாகத் தாக்கியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அங்கிருந்த பொது மக்கள் சரியான நேரத்தில் தலையிட்டிருக்காவிட்டால், அந்தத் தாக்குதல் ஒரு உயிரிழப்பில் முடிந்திருக்கும்.

    இது ஒரு தனிப்பட்ட சம்பவம் அல்ல. சமீபத்தில் திருத்தணியிலும், பிறகு சென்னையின் வேளச்சேரியிலும், நேற்று கோவையிலும் என மாநிலம் முழுவதும் இத்தகைய வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.

    தி.மு.க-வோடு தொடர்புடையவர்கள் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுவது மீண்டும் மீண்டும் அம்பலமாகும் போது, ஏன் கஞ்சா வலைப்பின்னல் செழித்து வளர்கிறது என்பதும், வன்முறை ஏன் கட்டுக்கடங்காமல் போகிறது என்பதும் தெளிவாகத் தெரிகிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ஒரே ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி விளாசினார்.
    • 4 பவுண்டரி, 4 சிக்சருடன் அரைசதம் அடித்தார்.

    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியா முதலில் களம் இறங்கியது.

    அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். சஞ்சு சாம்சன் 7 பந்தில் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த இஷான் கிஷன் 5 பந்தில் 8 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    3-வது விகெட்டுக்கு அபிஷேக் சர்மா உடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். அபிஷேக் சர்மா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினா். 8-வது ஓவரை பிலிப்ஸ் வீசினார். இந்த ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி அடித்து 22 பந்தில் அரைசதம் அடித்தார். அவரது ஸ்கோரில் 4 பவுண்டரி, 4 சிக்சர் அடங்கும்.

    ×