என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாடகி ஜானகி"

    • "தென்னிந்தியாவின் நைட்டிங்கேல்" என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் பாடகி எஸ்.ஜானகி.
    • முரளி கிருஷ்ணா ஒரு பிரபலமான பரதநாட்டிய கலைஞர்

    "தென்னிந்தியாவின் நைட்டிங்கேல்" என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் பாடகி எஸ்.ஜானகி. இவரின் ஒரே மகன் முரளி கிருஷ்ணா இன்று காலமானார். நீண்ட நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. முரளி கிருஷ்ணாவுக்கு ஒரு மனைவி, இரண்டு மகள்கள் உள்ளனர். பாடகி ஜானகியின் மகன் என்பதைத் தாண்டி, பிரபலமான பரதநாட்டிய கலைஞர் என்ற பட்டத்தையும் பெற்றவர். சில படங்களிலும் நடித்துள்ளார். 

    இந்த செய்தியை பாடகி கே.எஸ். சித்ரா சமூக ஊடகங்களில் அறிவித்துள்ளார். முரளியின் திடீர் மரணச் செய்தியை கேட்டு தான் அதிர்ச்சியடைந்ததாகவும், அன்பாக சகோதரரை இழந்துவிட்டதாகவும் தனது குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

    "இன்று காலை எங்கள் அன்புக்குரிய ஜானகி அம்மாவின் ஒரே மகன் முரளி அண்ணாவின் திடீர் மறைவுச் செய்தியைக் கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன். நாங்கள் ஒரு அன்பான சகோதரனை இழந்துவிட்டோம். இந்த தாங்க முடியாத வலியையும் துக்கத்தையும் கடக்கும் வலிமையை அம்மாவுக்கு கடவுள் வழங்கட்டும். மறைந்த ஆன்மா நித்திய சாந்தியில் இளைப்பாறட்டும். ஓம் சாந்தி" என்று கே.எஸ். சித்ரா அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். 




    எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் ஜானகியின் உடல்நலம் முன்னேற்றம் இருப்பதாக அவரது மகன் முரளி கிருஷ்ணா பேட்டியளித்துள்ளார். #Janaki
    மூத்த பின்னணி பாடகி எஸ்.ஜானகிக்கு விபத்து ஒன்றில் இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சையில் இருக்கிறார். ஜானகியின் உடல்நலம் குறித்து பல்வேறு வதந்திகள் வெளியாகின.

    இதுதொடர்பாக ஜானகியின் மகன் முரளி கிருஷ்ணா அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ‘தனிப்பட்ட காரணங்களுக்காக அம்மாவும் நானும் மைசூருக்கு வந்துள்ளோம். இங்கு தங்கி இருந்த இடத்தில் வீட்டு காம்பவுண்டுக்குள் அம்மா வாக்கிங் சென்றார். வாக்கிங் முடித்த பின்னர் வீட்டுக்குள் நுழைய வாசல்படியில் ஏறும் போது கால் தவறி கீழே விழுந்து விட்டார்.



    ஆனால் அம்மா குளியல் அறையில் தவறி விழுந்து விட்டதாக செய்திகள் வெளியானது உண்மை இல்லை. உடனடியாக அம்மாவை மருத்துவமனையில் சேர்த்தோம்.

    ஆபரே‌ஷன் நடந்துள்ள நிலையில் அம்மாவை வீட்டுக்கு அழைத்துவந்து விட்டோம். இப்போது அம்மா குணமாகி வருகிறார். சீக்கிரமே எழுந்து நடக்கும் அளவுக்கு அவர் இயல்பு நிலைக்கு திரும்பி விடுவார். வரும் நாள்களில் அம்மாவின் உடல்நிலையை பொறுத்து ஐதராபாத்தில் உள்ள எங்கள் வீட்டுக்கு திரும்புவோம். அம்மாவின் உடல் நிலைகுறித்து ரசிகர்கள் யாரும் பயப்பட வேண்டிய தில்லை’.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    ×