என் மலர்
உள்ளூர் செய்திகள்
- மதுரையில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த புகாரில் பாஜக மாநில நிர்வாகி எம்.எஸ்.ஷா மீது போக்சோவில் வழக்கு தொடரப்பட்டது.
- சிறுமியின் செல்போன் எண்ணுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பி பாஜக நிர்வாகி எம்.எஸ்.ஷா பாலியல் தொந்தரவு என புகார் எழுந்தது.
பாஜக மாநில பொருளாதார பிரிவு தலைவராக பதவி வகித்து வருபவர் எம்.எஸ்.ஷா. இவர் மீது 15 வயது மதிக்கத்தக்க பள்ளி மாணவி ஒருவரின் தந்தை மதுரை மாநகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
அதில் தனது மகளின் செல்போனுக்கு பா.ஜ.க. பிரமுகர் எம்.எஸ்.ஷா தொடர்ந்து ஆபாசமான உரையாடல்களை அனுப்பி வந்துள்ளதாகவும், இதுபற்றி தனது மகளிடம் கேட்டபோது எம்.எஸ்.ஷா அந்தச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தெரிய வந்தது.
மேலும், புகார் கொடுத்தவரின் மனைவி பா.ஜ.க. பிரமுகர் இருக்கும் இடத்திற்கு மகளை தனியாக அழைத்துச் சென்று தங்க வைத்ததாகவும், வாட்ஸ்அப் மூலம் அவர் கூப்பிடும் இடத்திற்கு சென்று அவருடன் தங்கி னால் ஸ்கூட்டர், புதிய ஆடைகள் வாங்கித் தருகிறேன், கடனை அடைக்கி றேன் என ஆசை வார்த்தை களை கூறி அழைத்து சென்று பாலியல் துன்பு றுத்தல் அளித்துள்ளார். இதற்கு தனது மனைவியும் உடந்தையாக இருந்து வந்துள்ளார் என புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் பா.ஜ.க. நிர்வாகி எம்.எஸ்.ஷா மீதும் மற்றும் பள்ளி மாணவியின் தாய் இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பா.ஜ.க. மாநில நிர்வாகி எம்.எஸ்.ஷா இன்று மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
- அபுதாபிக்கு இயக்கப்படும் விமானத்தில் பெரிய அளவுக்கு சரக்குகள் கொண்டு செல்லப்படுவது இல்லை.
- ஷார்ஜா செல்லும் விமானத்தில் பல வகையான பொருட்களும் இணைத்து அனுப்பி வைக்கப்படுகின்றன.
கோவை:
கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், ஷார்ஜா, அபுதாபி ஆகிய வெளிநாடுகளுக்கு நேரடி விமான சேவை வழங்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக கோவை-ஷார்ஜா இடையே வாரத்தில் 5 நாட்கள் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
கோவை விமான நிலையத்தில் இருந்து வழக்கமாக ஒவ்வொரு முறையும் 3 டன்கள் வரை சரக்குகள் கையாளப்படுவது வழக்கம். மேலும் காய்கறிகள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் உள்ளிட்ட பொருட்கள் முன்பதிவு செய்யப்படும்.
இந்த நிலையில் நடப்பாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஷார்ஜா செல்லும் விமானத்தில் கரும்புகளை கொண்டு செல்வதற்கான புக்கிங் பணிகள், கடந்த சில நாட்களாக மும்முரமாக நடைபெற்றன.
இதுகுறித்து கோவை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:-
கோவை விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு தினமும் விமான சேவை வழங்கப்படும் போதும் ஒவ்வொரு முறையும் ஒரு டன் வீதம் மட்டுமே சரக்குகள் கையாளப்படுகிறது.
அபுதாபிக்கு இயக்கப்படும் விமானத்தில் பெரிய அளவுக்கு சரக்குகள் கொண்டு செல்லப்படுவது இல்லை. ஷார்ஜா செல்லும் விமானத்தில் பல வகையான பொருட்களும் இணைத்து அனுப்பி வைக்கப்படுகின்றன.
அதிலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 10, 11-ந்தேதி ஆகிய 2 நாட்களில் மட்டும் கோவை விமான நிலையத்தில் இருந்து மதுரை, திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்ட 2 டன் கரும்புகள் புக்கிங் செய்யப்பட்டு, ஷார்ஜாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.
கோவை விமான நிலையத்தில் தினமும் 10 ஆயிரம் பயணிகள் வந்து செல்லும் நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் கூட்டமும் அதிகரித்து உள்ளது.
அதிலும் குறிப்பாக ஜனவரி 9-ந்தேதி மட்டும் உள்நாட்டு பிரிவில் 9893 பேரும், வெளிநாட்டுப்பிரிவில் இருந்து 1279 பேரும் என மொத்தம் 11,172 பேர் பயணித்து உள்ளனர். மேலும் அன்றைய தினம் 33 விமானங்கள் இயக்கப்பட்டன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- திருவிழா காலங்களில் அங்கு தற்காலிக பஸ் நிலையம் அமைத்து அங்கிருந்து கோவிலுக்கு அரசு பஸ்கள் இயக்க வேண்டும்.
- பக்தர்கள் வருகையால் வாகன போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
திருச்செந்தூர்:
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை (செவ்வாய்க்கிழமை) உலகம் முழுவதும் தமிழர்களால் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
பொங்கல் திருநாளுக்கு முன்பாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் இருந்து முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-வது படை வீடான திருச்செந்தூருக்கு ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து சாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம். சிலர் அலகு குத்தியும், காவடி எடுத்தும் வந்து கடல் மற்றும் நாழிகிணறு புனித தீர்த்தத்தில் நீராடி சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
அந்த வகையில் இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அதிகாலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் நின்று சுமார் 6 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து தரிசனம் செய்தனர். இதனால் கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதி காணப்பட்டது. அவர்கள் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா என்ற கோஷம் விண்ணதிர தரிசனம் செய்தனர்.
இன்று ஆருத்ரா தரிசனம் நடைபெறுவதை முன்னிட்டு திருச்செந்தூரில் சுப்பிரமணிய சுவாமி கோவில் நடை அதிகாலை 2 மணிக்கு திறக்கப்பட்டது. 2.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 3 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜ பெருமான், சிவகாமி அம்மன், மாணிக்கவாசகர் சுவாமி ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது. பின்னர், அலங்கார தீபாராதனைக்கு பிறகு சுவாமி நடராஜர், மாணிக்கவாசகர் பெருமான் ஆகியோர் தனித்தனி தங்க சப்பரத்தில் எழுந்தருளி கோவில் உள் பிராகாரத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சிறப்பு பூஜையில் திரளான பெண்கள் கலந்து கொண்டு கழி படைத்து வழிபாடு செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினர். தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.
பக்தர்கள் வருகையால் வாகன போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. திருச்செந்தூர் நகர எல்லையில் இருந்து கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் ஆகியது. போக்குவரத்து நெருக்கடியால் பக்தர்கள் சிரமப்பட்டனர். போக்குவரத்து நெருக்கடியால் திருச்செந்தூர் சன்னதி தெரு, பட்டர் குளம் தெரு, அக்ரகாரம், ரதவீதிதளில் உள்ள பொதுமக்கள் அவசர சிகிச்சைக்கோ அல்லது அத்தியாவசிய தேவைக்கோ வெளியே வரமுடியாத நிலை இருந்தது. இதனால் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறும்போது, கோவிலுக்கு சொந்தமான சுமார் 100 ஏக்கருக்கு மேற்பட்ட நிலம் ராணிமகராஜபுரத்தில் உள்ளது. திருவிழா காலங்களில் அங்கு தற்காலிக பஸ் நிலையம் அமைத்து அங்கிருந்து கோவிலுக்கு அரசு பஸ்கள் இயக்க வேண்டும்.
அவ்வாறு செய்தால் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் இருக்கும். எனவே வரும் காலங்களில் அதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பொங்கல் கொண்டாட சென்னையில் இருந்து 20 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் ரெயில் படிக்கட்டில் தொங்கியபடி சென்றனர்.
- பொங்கல் பண்டிகை நாளை கொண்டாட உள்ள நிலையில் சென்னை மற்றும் சுற்றுப் பகுதியில் உள்ள வெளியூர் மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டனர்.
பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் செல்ல வசதியாக 6 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டது. இதன் காரணமாக வெளியூர் பயணம் இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.
10-ந்தேதி தொடங்கி இன்று வரை அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து அரசு பஸ்கள், ஆம்னி பஸ்கள் வழக்கமான ரெயில்கள், சிறப்பு ரெயில்கள் மற்றும் கார், வேன் போன்ற சொந்த வாகனங்களில் புறப்பட்டு சென்றனர்.
இன்று அரசு வேலை நாளாக இருந்தாலும் மதசார்பு விடுமுறை எடுத்து கொள்ளலாம் என்பதால் பெரும்பாலான அரசு ஊழியர்கள் இன்று ஆர்.எச். விடுமுறை எடுத்து விட்டு சொந்த ஊர் சென்றனர். பொங்கலை கொண்டாட வும் சுற்றுலா மையங்களுக்கு செல்லவும் திட்டமிட்டு பயணம் மேற்கொண்டதால் பஸ், ரெயில்கள் அனைத்தும் நிரம்பி சென்றன.
பொங்கல் பண்டிகை நாளை கொண்டாட உள்ள நிலையில் சென்னை மற்றும் சுற்றுப் பகுதியில் உள்ள வெளியூர் மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டனர். இதனால் நகரம் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது.
கடந்த 3 நாட்களில் சுமார் 18 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு இயக்கப்படும் ரெயில்கள், கோவை, திருவனந்தபுரம், மும்பை நகரங்களுக்கும் எழும்பூர், தாம்பரத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கும் பிற நகரங்களுக்கும் இயக்கப்பட்ட வழக்கமான ரெயில்கள், சிறப்பு ரெயில்களில் சுமார் 10 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட ரெயில்களில் 3 நாட்களில் பொது பெட்டிகளில் நிற்க கூட இடம் இல்லாத அளவிற்கு பயணித்தனர்.
முன்பதிவு செய்யாத பெட்டிகளில் பயணம் செய்ய மக்கள் பல மணி நேரத்துக்கு முன்பாக காத்திருந்தனர். படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்தனர். முன்பதிவு பெட்டிகளிலும் ஆங்காங்கே அமர்ந்து பயணம் செய்தனர்.
அரசு பஸ்களில் நேற்று வரை 11,463 பஸ்களில் 6 லட்சத்து 40 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 2 லட்சத்து 17 ஆயிரம் பேர் புறப்பட்டு சென்றனர்.
இன்று 4-வது நாளாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படு கிறது. காலையில் இருந்தே மக்கள் பயணத்தை தொடங்கினார்கள். கிளாம்பாக்கம் பஸ் முனையத்திற்கு மக்கள் படையெடுத்தார்கள். இன்று நள்ளிரவு வரை வெளியூர்களுக்கு மக்கள் புறப்பட்டு செல்ல வசதியாக பஸ் வசதி செய்யப்பட்டு உள்ளது. இன்று 2 லட்சத்திற்கும் மேலானவர்கள் பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆம்னி பஸ்களில் கடந்த 3 நாட்களில் ஒரு லட்சத்து 90 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளனர். இன்று 60 ஆயிரம் பேர் பயணம் செய்ய முன்பதிவு செய்திருப்பதாக அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சஙக தலைவர் அன்பழகன் தெரிவித்தார்.
இது தவிர கார்களிலும் சொந்த ஊர்களுக்கு ஆயிரக்கணக்கானவர்கள் பயணத்தை தொடர்ந்து உள்ளனர். பஸ், ரெயில்களில் இட நெருக்கடியை பார்த்து 3 நாட்களுக்கு முன்பே சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.
வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், புதுச்சேரி, வந்த வாசி, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த தொழிலாளர்கள் சென்னையில் இருந்து மோட்டார்சைக்கிளில் பயணம் செய்தனர்.
பொங்கல் பண்டிகையை யொட்டி கடைசி நேர பயணம் மேற்கொள்பவர்கள் இன்று தொடங்கினர். இத னால் சென்னையில் மக்கள் நடமாட்டம், வாகன ஓட்டம் குறைந்தது. சென்னையில் இருந்து இன்றுடன் சேர்த்து சுமார் 20 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.
- பெரியார் பற்றி சீமான் தொடர்ந்து விமர்சிப்பது அவரது முதிர்ச்சி இன்மையை காட்டுகிறது.
- ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் மக்களிடம் ஆதரவு திரட்டலாம். அவர்களை ஏற்பதும் ஏற்காததும் மக்கள் கைகளில் உள்ளது.
சென்னை:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பிரதான கட்சிகள் புறக்கணித்து உள்ளது. பெரியார் பற்றி விமர்சிப்பதால் சீமான் பிரசாரத்துக்கு சென்றால் தடுப்போம் என்று அந்த மாவட்ட காங்கிரஸ் முடிவு செய்து உள்ளது.
இதுபற்றி தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. தேர்தலை புறக்கணித்து இருப்பது அவர்கள் கட்சியின் முடிவு. மற்ற கட்சிகள் உள்விவகாரத்தில் தலையிட முடியாது.
நான் முடிவெடுப்பதில்லை என்று அண்ணாமலை என்னைப் பற்றி விமர்சித்துள்ளார். அவரும் தேசிய கட்சியில்தான் இருக்கிறார். தேசிய தலைமை சொல்லாமல் முடிவெடுப்பாரா? தலைமை இடதுபுறமாக செல் என்றால் இடது புறமாக செல்வார். வலது புறமாக செல் என்றால் வலது புறமாக செல்வார். அவர் என்னை விமர்சிப்பது ஆச்சரியமாக உள்ளது.
பெரியார் பற்றி சீமான் தொடர்ந்து விமர்சிப்பது அவரது முதிர்ச்சி இன்மையை காட்டுகிறது. இதனால் அவருக்கு எதிர்ப்பு அதிகரித்து இருக்கிறது.
அதற்காக ஈரோடு தொகுதியில் பிரசாரம் செய்ய விடாமல் தடுப்போம் என்பது கட்சியின் முடிவு அல்ல. அந்த மாவட்ட தலைவரின் தனிப்பட்ட கருத்து.
ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் மக்களிடம் ஆதரவு திரட்டலாம். அவர்களை ஏற்பதும் ஏற்காததும் மக்கள் கைகளில் உள்ளது.
ஜனநாயகத்தில் உரிமை இருக்கிறது என்பதற்காக எதை வேண்டுமானாலும் பேசிவிட முடியாது. உண்மைகள் தானாகவே வெளிவரும். அதை ஒரு போதும் மறைக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழகத்தில் இதற்கு முன்பு நடைபெற்ற பெரும்பாலான இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சியே வெற்றி பெற்றுள்ளது.
- தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை அதை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்பதற்கு தி.மு.க.வினர் திட்டமிட்டு உள்ளனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மரணம் அடைந்ததை தொடர்ந்து அங்கு பிப்ரவரி 5-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.
தி.மு.க. வேட்பாளராக வி.சி.சந்திரகுமார் போட்டியிடும் நிலையில் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. தேர்தலை புறக்கணித்து உள்ளது. பா.ஜ.க,, தே.மு.தி.க. ஆகிய கட்சிகளும் போட்டியிடாமல் விலகி உள்ளன.
இதனால் தி.மு.க.வுக்கும், சீமானின் நாம் தமிழர் கட்சிக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சி இதுவரை பல்வேறு தேர்தல்களை சந்தித்துள்ளது. அப்போதெல்லாம் இது போன்று பிரதான கட்சியுடன் அந்த கட்சி நேரடி மோதலில் ஈடுபட்டது இல்லை. தற்போது முதல் முறையாக நாம் தமிழர் கட்சி ஆளும் கட்சியான தி.மு.க.வை நேரடியாக தேர்தல் களத்தில் சந்திக்கிறது.
தமிழகத்தில் இதற்கு முன்பு நடைபெற்ற பெரும்பாலான இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சியே வெற்றி பெற்றுள்ளது. அப்போதெல்லாம் ஆளும் கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் களத்தில் நின்று போட்டியை ஏற்படுத்தி உள்ளன. ஆனால் ஈரோடு இடைத்தேர்தலில் பிரதான கட்சிகள் போட்டியில் இருந்து பின் வாங்கியதால் தி.மு.க. வேட்பாளருக்கும், நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கும் இடையே மட்டுமே போட்டி ஏற்பட்டிருப்பதால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்பர பரப்பின்றியே காணப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் ஏற்கனவே நடைபெற்ற இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றிருந்தார். தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை அதை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்பதற்கு தி.மு.க.வினர் திட்டமிட்டு உள்ளனர்.
தி.மு.க. அரசின் சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்பதன் மூலமாகவும், முக்கிய எதிர்க்கட்சிகள் களத்தில் இல்லாததாலும் தி.மு.க. வேட்பாளரை இதுவரை இல்லாத வகையில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க முடியும் என்று தி.மு.க. தலைவர்கள் நம்புகிறார்கள்.
இதற்கு முன்பு நடைபெற்ற பல்வேறு இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சி சார்பில் அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் தொகுதிக்கு சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அது போன்று யாரும் பிரசாரம் செய்ய செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இதனால் உள்ளூர் தி.மு.க.வினர் மற்றும் கூட்டணி கட்சியினர் மட்டுமே அங்கு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
- பூஜித குரு பாலபிரஜாதிபதி அடிகளார் முன்னிலை வகித்தார்.
- சிறப்பு விருந்தினராக நடிகை காயத்ரி ரகுராம் கலந்து கொண்டு பேசினார்.
குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் குமரி கடற்கரையில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவினை தொடங்கி வைத்தார்.
இயக்கத்தின் தலைவரும் திரைப்பட தயாரிப்பாளருமான பி.டி.செல்வகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பூஜித குரு பாலபிரஜாதிபதி அடிகளார் முன்னிலை வகித்தார். காணிமடம் தபஸ்வி பொன். காமராஜ், வள்ளலார் பேரவை தலைவர் பத்மனேந்திர சுவாமிகள் வாழ்த்துரை வழங்கினார்கள். சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகை காயத்ரி ரகுராம் கலந்து கொண்டு பேசினார்.

முன்னதாக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் இஸ்ரோவின் புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள டாக்டர் வி. நாராயணனை அவரது இல்லத்தில் சென்று சந்தித்து விஜய் வசந்த் எம்.பி. வாழ்த்து தெரிவித்தார்.
- கார் பந்தயத்தில் அஜித் குமார் ரேசிங் அணி மூன்றாவது இடம் பிடித்து அசத்தியுள்ளது.
- அஜித் குமாரின் வெற்றிக்கு ரசிகர்கள், திரைத்துறையை சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
துபாயில் நடந்த 24H சீரிஸ் கார் பந்தயத்தில் அஜித் குமார் ரேசிங் அணி மூன்றாவது இடம் பிடித்து அசத்தியுள்ளது. தனது அணி மூன்றாவது இடம்பிடித்த நிலையில், நடிகர் அஜித் குமார், இந்திய தேசியக் கொடியுடன் வலம் வந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
மேலும், மகிழ்ச்சியில் அஜித் குமார் சக அணியினருடன் துள்ளி குதித்து வெற்றியை கொண்டாடினார். இவரது வெற்றிக்கு ரசிகர்கள், திரைத்துறையை சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் அஜித் குமாருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரஜினி தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
என் அன்பான அஜித்குமாருக்கு வாழ்த்துகள். நீங்க சாதிச்சிட்டீங்க. கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார். லவ் யூ.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
- பாத தரிசனத்தை முன்னிட்டு நூற்றுக்கணக்கான போலீசார் கோவில் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் குடிநீர் சுகாதார வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருவாரூர்:
வரலாற்று சிறப்புமிக்க திருவாரூர் தியாகராஜ சாமி கோவிலில் திருவாதிரை திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவையொட்டி இன்று தியாகராஜ சாமி பாத தரிசனம் நடைபெற்று வருகிறது. முன்னதாக நேற்று இரவு தியாகராஜ சுவாமிக்கு திருவாதிரை மகா அபிஷேகம் நடைப்பெற்றது. தொடர்ந்து இன்று அதிகாலை நடராஜருக்கு அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் தியாகராஜ சுவாமி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பதஞ்சலி, வியக்ரபாத முனிவர்களுக்கும், பக்தர்களுக்கும் வலது பாதம் காட்டும் பாத தரிசனமும், தீபாரதனையும் நடைபெற்றது. பின்னர் நடராஜ பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்ட்டு தீபாராதனை நடைபெற்றது.
இதனை தொடர்ந்து நடராஜர், சிவகாமி அம்மனுடன் வீதியுலா வந்து சபாபதி மண்டபத்திற்கு எழுந்தருள செய்யப்பட்டது. இவ்விழாவில் கோவிலின் வெளிப்புறத்தில் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு வரிசையில் நின்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாத தரிசனம் செய்து வருகின்றனர்.
பாத தரிசனத்தை முன்னிட்டு நூற்றுக்கணக்கான போலீசார் கோவில் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் குடிநீர் சுகாதார வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது.
- பார் வெள்ளி ஒரு லட்சத்து இரண்டாயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த வாரம் சவரனுக்கு ரூ.800 வரை உயர்ந்தது. இதனை தொடர்ந்து வார தொடக்க நாளான இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது.
சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ. 58,720-க்கும் கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.7,340-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 102 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து இரண்டாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
12-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,520
11-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,520
10-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,280
09-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,080
08-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,800
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
12-01-2025- ஒரு கிராம் ரூ. 101
11-01-2025- ஒரு கிராம் ரூ. 101
10-01-2025- ஒரு கிராம் ரூ. 101
09-01-2025- ஒரு கிராம் ரூ. 100
08-01-2025- ஒரு கிராம் ரூ. 100
- இத்தகைய ஆணவம் நல்லதல்ல. பாரதமே உயர்ந்த தாய் என்பதையும், அவளது குழந்தைகளுக்கு அரசியலமைப்பே உயர்ந்த நம்பிக்கை என்பதையும் மறந்துவிடாதீர்கள் என ஆளுநர் குறிப்பிட்டிருந்தார்.
- வேலூர் மாங்காய் மண்டி அருகே "அரசு பொருட்காட்சி" திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து ஆளுநர் மாளிகை நேற்று எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டது.
அதில், "முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தேசிய கீதத்துக்கு உரிய மரியாதையை வலியுறுத்துவதையும், அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள அடிப்படைக் கடமைகளைச் செய்யச் சொல்வதையும் "அபத்தமானது" மற்றும் "சிறுபிள்ளைத்தனமானது" என்று வற்புறுத்துகிறார்."
"பாரதத்தை ஒரு தேசமாகவும் அதன் அரசியலமைப்பாகவும் ஏற்றுக்கொள்ளாத மற்றும் மதிக்காத ஒரு தலைவராக இருக்கும் அவர் கூட்டு நலன்கள் மற்றும் சித்தாந்தங்களின் உண்மையான நோக்கங்களை வஞ்சகம் செய்ததற்கு நன்றி."
"இத்தகைய ஆணவம் நல்லதல்ல. பாரதமே உயர்ந்த தாய் என்பதையும், அவளது குழந்தைகளுக்கு அரசியலமைப்பே உயர்ந்த நம்பிக்கை என்பதையும் மறந்துவிடாதீர்கள். அவர்கள் இத்தகைய வெட்கக்கேடான அவமானத்தை விரும்பவோ பொறுத்துக்கொள்ளவோ மாட்டார்கள்," என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, வேலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் வேலூர் மாங்காய் மண்டி அருகே "அரசு பொருட்காட்சி" திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதனை, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பொருட்காட்சியை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சிக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:-
தமிழக சட்டப்பேரவையில் மரபு மீறவில்லை. காலம், காலமாக கூட்டம் தொடங்கும்போது தமிழ்தாய் வாழ்த்து பாடுவதும், முடியும் போது தேசிய கீதம் பாடுவதும்தான் வழக்கம். இதை ஆளுநர் மாற்றச் சொன்னார். தற்போது தமிழக முதல்வருக்கு ஆணவம் என அவர் கூறியுள்ளார். அவருக்கு தான் திமிர் அதிகம்..
இவ்வாறு அவர் கூறினார்.
- மக்களின் பயன்பாட்டுக்காக விழாக்காலங்களில் சிறப்பு பேருந்து- ரெயில்களும் இயக்கப்பட்டு வருகிறது.
- பொங்கல் பண்டிகையையொட்டி, தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகள்.
கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட காரணங்களால் லட்சக்கணக்கான வெளியூர்வாசிகள் சென்னையில் வாழ்ந்து வருகிறார்கள். பொங்கல், தீபாவளி பண்டிகை காலங்களின்போது, சொந்த ஊர்களுக்கு சென்று அவர்கள் விழாவை சிறப்பித்து வருவது வழக்கம். மக்களின் பயன்பாட்டுக்காக விழாக்காலங்களில் சிறப்பு பேருந்து- ரெயில்களும் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை 14-ந்தேதி கொண்டாடப்படுகிறது. அதனைத்தொடர்ந்து மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி பொங்கல் பண்டிகையை சொந்த ஊருக்கு சென்று கொண்டாட சென்னைவாசிகள் விரும்பி, கடந்த வெள்ளிக்கிழமை முதல் சென்னையில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்று வருகிறார்கள். இதனால் பேருந்து - ரெயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதி வருகிறது.
பொங்கல் பண்டிகையையொட்டி, தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகள் என மொத்தம் (10-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை) 21,904 பஸ்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில் பொங்கல் சிறப்பு பஸ்களில் கடந்த 3 நாட்களில் 6.40 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அரசு போக்குவரத்துத்துறை தனது எக்ஸ் வலைதளத்தில், "தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையின் சார்பில், பொங்கல் திருநாளினை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு பஸ்களின் இயக்கம் நேற்று (12.01.2025) நள்ளிரவு 12 மணி நிலவரப்படி, வழக்கமாக இயக்கப்படும் பஸ்களின் எண்ணிக்கையான 2,092 பஸ்களில், 2,092 பஸ்களும், 1,858 சிறப்பு பஸ்களும் ஆக 3,950 பஸ்களில் 2,17,250 பயணிகள் பயணம் செய்தனர். கடந்த 10.01.2025 முதல் 12.01.2025 இரவு 12 மணி வரை 11,463 பஸ்களில் 6,40,465 பயணிகள் பயணித்துள்ளனர்" என்று அதில் பதிவிட்டுள்ளது.






