search icon
என் மலர்tooltip icon

    ஐக்கிய அரபு அமீரகம்

    • டாஸ் வென்ற யுஏஇ அணி பவுலிங் தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 166 ரன்கள் எடுத்தது.

    துபாய்:

    நியூசிலாந்து அணி ஐக்கிய அரபு எமிரேட்சில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டியில் நியூசிலாந்தும், 2வது போட்டியில் யு.ஏ.இ.யும் வென்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி துபாயில் நடைபெற்றது. டாஸ் வென்ற யுஏஇ அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக வில் யங் 56 ரன்னும், மார்க் சாப்மன் 51 ரன்னும் எடுத்தனர்.

    இதையடுத்து, 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் யு.ஏ.இ. அணி களமிறங்கியது. முன்னணி வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை.

    ஆயன் அப்சல் கான் அதிகபட்சமாக 42 ரன்கள் எடுத்தார். பசில் ஹமீது 24 ரன்கள் சேர்த்தார்.

    இறுதியில், யு.ஏ.இ. அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 32 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நியூசிலாந்து, டி20 தொடரை 2-1 என கைப்பற்றியது.

    நியூசிலாந்தின் வில் யங் ஆட்ட நாயகன் விருதும், சாப்மன் தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.

    • கஸ்ர்-அல்-வதன் ஜனாதிபதி மாளிகையில் பிரதமர் மோடிக்கு விருந்து அளிக்கப்பட்டது.
    • ஐக்கிய அரபு எமிரேட்சின் ஒருநாள் பயணத்தை முடித்து கொண்டு பிரதமர் மோடி இந்தியாவுக்கு புறப்படுகிறார்.

    பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பிரான்ஸ் பயணத்தை முடித்துக் கொண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபரின் அழைப்பின் பேரில் பிரதமர் ஒரு நாள் பயணமாக இன்று அபுதாபி சென்றுள்ளார்.

    அங்கு பிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரத்தின் அதிபர் முகமது பின் சையத் அல் நஹ்யான் விமான நிலையத்தில் வரவேற்பு அளித்தார்.

    இதையடுத்து, ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபரும், அபுதாபி ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் சமீத் அல் ரஹ்யானை சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

    இதற்கிடையே, ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர், பிரதமர் மோடிக்கு முழு சைவ உணவு விருந்து அளித்துள்ளார்.

    கஸ்ர்-அல்-வதன் ஜனாதிபதி மாளிகையில் பிரதமர் மோடிக்கு விருந்து அளிக்கப்பட்டது. விருந்தில் முதலில், கோதுமை மற்றும் பேரீச்சம்பழ சாலட் உடன் கரிம காய்கறிகளை தொடர்ந்து, மசாலா சாஸில் வறுக்கப்பட்ட காய்கறிகளை ஸ்டார்டர்களாக பறிமாறப்பட்டது.

    மேலும் உணவு பட்டியலில் கறுப்புப் பருப்பும், கோதுமை, காலிஃபிளவர் மற்றும் கேரட் தந்தூரி ஆகிய உணவு வகைகளை முக்கிய உணவாக வழங்கப்பட்டன.

    இனிப்புக்காக உள்ளூர் பருவகால பழங்கள் அளிக்கப்பட்டது.

    பிரதமர் மோடிக்கு வழங்கப்படும் அனைத்து உணவுகளும் சைவ உணவுகள் மற்றும் தாவர எண்ணெய்களால் தயாரிக்கப்பட்டுள்ளன என்றும் பால் அல்லது முட்டை பொருட்கள் இல்லை என்றும் விருந்துக்கான மெனு கார்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ஐக்கிய அரபு எமிரேட்சின் ஒருநாள் பயணத்தை முடித்து கொண்டு பிரதமர் மோடி இந்தியாவுக்கு புறப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பிரதமர் மோடியை ஐக்கிய அரபு அமீரத்தின் அதிபர் முகமது பின் சையத் அல் நஹ்யான் விமான நிலையத்தில் வரவேற்பு அளித்தார்.
    • பிரதமர் மோடியின் முகமும் புர்ஜ் கலிஃபாவின் கோபுரத்தில் ஒளிரும் வகையில் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

    பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பிரான்ஸ் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுள்ளார்.

    அங்கு அபுதாபிக்கு சென்றுள்ள பிரதமர் மோடியை ஐக்கிய அரபு அமீரத்தின் அதிபர் முகமது பின் சையத் அல் நஹ்யான் விமான நிலையத்தில் வரவேற்பு அளித்தார்.

    இந்நிலையில், பிரதமர் மோடியை வரவேற்கும் விதமாக துபாயில் உள்ள உலகின் உயரமான கோபுரமான புர்ஜ் கலிஃபாவில் இந்தியாவின் தேசியக் கொடியின் மூவர்ணங்களால் ஒளிரூட்டப்பட்டது. இது காண்போரை வியக்க வைத்தது.

    இதைத்தவிர, பிரதமர் மோடியின் முகமும் புர்ஜ் கலிஃபாவின் கோபுரத்தில் ஒளிரும் வகையில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும், பிரதமர் மோடியின் படத்தின் கீழ் மதிப்பிற்குரிய நரேந்திர மோடிக்கு நல்வரவு என்ற வாசகங்களும் இடம்பெற்றுள்ளன.

    • பிரதமர் மோடி, பிரான்ஸ் மற்றும் இந்திய தொழில் அதிபர்களை சந்தித்து பேசினார்.
    • அரவணைப்பு மற்றும் விருந்தோம்பலுக்கு பிரான்ஸ் அதிபர் மெக்ரான் மற்றும் பிரான்ஸ் மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக பிரான்ஸ் நாட்டுக்கு நேற்று முன்தினம் சென்றார். தலைநகர் பாரிசுக்கு சென்றடைந்த அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    அங்கு இந்திய வம்சாவளியினர் கூட்டத்தில் பங்கேற்று பேசினார். பின்னர் எலிசி அரண்மனையில் மோடிக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் அந்நாட்டின் உயரிய விருதான கிராண்ட் கிராஸ் ஆப் தி லீஜியன் ஆர் ஹானர் விருதை வழங்கினார்.

    நேற்று பிரான்ஸ் தேசிய தினத்தையொட்டி பாரிஸ் நகரில் நடந்த அணிவகுப்பு நிகழ்ச்சியில் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது அவருக்கு பிரான்ஸ் அதிபர் மெக்ரான், பாரம்பரிய அணிவகுப்பின் சிறப்புகளை விளக்கி கூறினார்.

    இந்த அணிவகுப்பில் இந்திய முப்படைகளை சேர்ந்த 269 வீரர்கள் கொண்ட குழுவும் கலந்து கொண்டது. மேலும் பிரான்ஸ் ஜெட் விமானங்களுடன் சேர்ந்து இந்திய விமானப்படையின் ரபேல் விமானங்களும் சாகசம் நிகழ்த்தின.

    பின்னர் மோடி-மெக்ரான் இருவரும் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பல்வேறு விஷயங்கள் குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினார்கள். இதில் இரு நாடுகள் இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

    விண்வெளி, ராணுவம் உள்ளிட்ட துறைகளில் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. பிரான்சில் இருந்து 26 ரபேல் விமானங்களும் கூடுதலாக மூன்று ஸ்கார்பின் நீர்மூழ்கி கப்பல்களை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.

    பேச்சுவார்த்தைக்கு பின்னர் இரு நாட்டு தலைவர்களும் கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது மோடி கூறியதாவது:-

    ராணுவ தளவாடங்களை கூட்டாக உற்பத்தி செய்து நட்பு நாடுகளுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பருவநிலை மாறுபாடு, புவி வெப்ப நிலையை கண்காணித்து இரு நாடுகள் இடையே ஒத்துழைப்பு ஏற்படுத்தப்படும். விண்வெளி சார்ந்த கடல்சார் பாதுகாப்பிலும் இணைந்து பணியாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

    உக்ரைன்-ரஷியா போரை முடிவுக்கு கொண்டு வரவே இந்தியா விரும்புகிறது என்றார்.

    அதன் பின்னர் பிரதமர் மோடி, பிரான்ஸ் மற்றும் இந்திய தொழில் அதிபர்களை சந்தித்து பேசினார். அப்போது இரு நாடுகளின் இந்த மகத்தான பயணத்தை விரைவுபடுத்தவும், வலுப்படுத்தவும் நீங்கள் பணியாற்ற வேண்டும் என்று மோடி கேட்டுக் கொண்டார்.

    இந்தியா வழங்கும் வாய்ப்புகளை பயன்படுத்துமாறும் வலியுறுத்தினார்.

    பிரதமர் மோடிக்கு பிரான்ஸ் அதிபர் மெக்ரான் இரவு விருந்து அளித்தார். பின்னர் மோடி பிரான்ஸ் பயணத்தை முடித்துக் கொண்டு ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு புறப்பட்டார். அவருக்கு விமான நிலையத்தில் பிரான்ஸ் அரசு சார்பில் வழியனுப்பு நிகழ்ச்சி நடந்தது.

    பிரான்சில் இருந்து புறப்படுவதற்கு முன்பு பிரதமர் மோடி டுவிட்டரில் கூறும்போது, இந்த பிரான்ஸ் பயணம் மறக்க முடியாத ஒன்றாக இருந்தது. தேசிய தின கொண்டாட்டத்தில் பங்கேற்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததால் மேலும் சிறப்பு வாய்ந்ததாக அமைந்தது.

    அணிவகுப்பில் இந்திய குழு பெருமை சேர்த்ததை பார்த்தது அருமையாக இருந்தது. அரவணைப்பு மற்றும் விருந்தோம்பலுக்கு பிரான்ஸ் அதிபர் மெக்ரான் மற்றும் பிரான்ஸ் மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியா-பிரான்ஸ் நட்புறவு தொடரட்டும் என்றார்.

    ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு இன்று பிரதமர் மோடி சென்றடைந்தார். அவருக்கு விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடி அபுதாபியின் பட்டத்து இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யானை சந்தித்தார்.

    ஐக்கிய அரபு எமிரேட்சின் அதிபரும், அபுதாபி ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் சமீத் அல் ரஹ்யானை சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார். இது தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை கூறும்போது, ' இந்தியா-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே விரிவான மூலோபாய கூட்டாண்மை சீராக வலுவடைந்து வருகிறது. மேலும் பிரதமரின் வருகை, ஆற்றல், கல்வி, சுகாதாரம், உணவுப் பாதுகாப்பு, பின்டெக், பாதுகாப்பு மற்றும் கலாச்சாரம் போன்ற பல்வேறு துறைகளில் இதை முன்னெடுத்து செல்வதற்கான வழிகளை அடையாளம் காண்பதற்கான வாய்ப்பாக அமையும்' என்று தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்சின் ஒருநாள் பயணத்தை முடித்து கொண்டு பிரதமர் மோடி இந்தியாவுக்கு புறப்ப டுகிறார்.

    • கடந்த 1970-ம் ஆண்டு மற்றும் 1980-ம் ஆண்டுகளில் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் இந்த கிராமத்தின் கட்டிடங்கள் அரசால் கட்டி தரப்பட்டுள்ளது.
    • மணலில் புதையுண்ட கட்டிடங்களின் மேற்கூரை மட்டுமே தெரிகிறது.

    சார்ஜா:

    சார்ஜா வானொலி நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஆட்சியாளர் மேதகு ஷேக் சுல்தான் பின் முகம்மது அல் காஸிமி பங்கேற்று பொதுமக்களிடம் நேரடியாக பேசுவது வழக்கம். வானொலி நிகழ்ச்சியில் நேற்று ஆட்சியாளர் பங்கேற்று பேசும்போது, பொதுமக்கள் ஒருவர் சார்ஜாவின் மதாம் அருகில் நாங்கள் வாழ்ந்த குரைபா கிராமத்தை மறுசீரமைத்து கொடுக்க வேண்டும்.

    அந்த கிராமம் மணல் புயல் தாக்கி புதையுண்ட பகுதியாக காட்சியளிக்கிறது. அதனை மறுசீரமைத்து கொடுத்தால் மீண்டும் அந்த பகுதியில் எங்களது வாழ்க்கை தொடர உதவியாக இருக்கும் என கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கையை தொடர்ந்து ஆட்சியாளர் அந்த புதையுண்ட கிராமத்தை சீரமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனைதொடர்ந்து கிராமப் பகுதியில் சீரமைப்பு பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சார்ஜாவின் புதையுண்ட கிராமம் குறித்த விவரம் வருமாறு:-

    சார்ஜாவில் கடந்த 1 லட்சத்து 30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே மனிதர்கள் வாழ்ந்து வந்ததற்கான ஆதாரங்கள் தொல்பொருள் ஆய்வின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அப்படி பழம்பெருமை வாய்ந்த பகுதியில் ஆச்சர்யங்களும், மர்மங்களும் இருப்பது இயல்பாகவே உள்ளது. துபாயில் இருந்து 60 கி.மீ மற்றும் சார்ஜாவில் இருந்து 50 கி.மீ தொலைவில் உள்ளது அல் மதாம் என்ற பாலைவன பகுதி. இங்கு இருந்து தென்மேற்கு பகுதியில் சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ளதுதான் குரபா கிராமம்.

    ஒரு காலத்தில் அழகிய கிராமமாக விளங்கிய இந்த பகுதியில் தற்போது மனித நடமாட்டமே இல்லை என்பதுதான் மர்மமுடிச்சாக உள்ளது. ஏனென்றால் தற்போது இந்த முழு கிராமமே மணலில் புதையுண்டு கிடக்கிறது. மணலில் புதையுண்ட கட்டிடங்களின் மேற்கூரை மட்டுமே தெரிகிறது.

    கடந்த 1970-ம் ஆண்டு மற்றும் 1980-ம் ஆண்டுகளில் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் இந்த கிராமத்தின் கட்டிடங்கள் அரசால் கட்டி தரப்பட்டுள்ளது. ஆனால் அடுத்த 10 ஆண்டுகள் மட்டுமே அந்த கிராம மக்களின் வாழ்க்கை நிம்மதியாக இருந்துள்ளது. அதன் பிறகு அந்த பகுதியில் தொடர்ந்து மணல் புயல் வீச தொடங்கியது.

    பிறகு வெள்ளம் வருவது போல் வீடுகளில், கட்டிடங்களில் மணல் புயல் தாக்கியது. இதனால் அந்த கிராமம் முழுவதும் மணலில் புதையுண்டது.

    அந்த கிராம மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு அந்த ஊரை விட்டு காலி செய்துவிட்டனர். இன்று அந்த பகுதிக்கு சென்றால் மணலில் மூழ்கிய வீடுகள் மற்றும் கட்டிடங்களை பார்க்கலாம். மேலும் அன்று வாழ்ந்த மக்கள் விட்டு சென்ற பொருட்களும் அப்படியே சேதமடைந்து உள்ளது.

    தற்போது இந்த பகுதி சுற்றுலா பயணிகள் சென்று சுற்றிபார்க்கும் இடமாக மாறியுள்ளது. பகலில் இந்த பகுதிக்கு வாகனங்களில் செல்வோர் இரவில் செல்வதில்லை.

    இப்படி மர்மம் நிறைந்த கிராமமாக இருந்த இந்த பகுதிக்கு தற்போது ஆட்சியாளரின் உத்தரவு மூலம் புதுவாழ்வு கிடைத்துள்ளது.

    • முதலில் ஆடிய பாகிஸ்தான் 182 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய ஆப்கானிஸ்தான் 116 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது.

    ஷார்ஜா:

    பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஷார்ஜாவில் நடைபெற்றது. இதில் முதல் இரு போட்டிகளில் ஆப்கானிஸ்தான் வென்று அசத்தியுள்ளது.

    இதையடுத்து, இரு அணிகள் இடையிலான 3-வது போட்டி ஷார்ஜாவில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 182 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் சமீம் அயூப் 49 ரன்கள் எடுத்தார்.

    இதையடுத்து, 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஆப்கானிஸ்தான் களமிறங்கியது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன.

    இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி 18.4 ஓவர்களில் 116 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் பாகிஸ்தான் 66 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது.

    3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என ஆப்கானிஸ்தான் அணி வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இகா ஸ்வியாடெக் (போலந்து), தரவரிசையில் 30-வது இடத்தில் உள்ள செக்குடியரசின் பார்போரா கிரெஜ்சிகோவாவுடன் மோதினார்.
    • மகுடம் சூடிய கிரெஜ்சிகோவா 900 தரவரிசை புள்ளிகளுடன் ரூ.3¾ கோடியை பரிசாக தட்டிச் சென்றார்.

    துபாய் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்தது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில் நம்பர் ஒன் வீராங்கனையும், 3 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான இகா ஸ்வியாடெக் (போலந்து), தரவரிசையில் 30-வது இடத்தில் உள்ள செக்குடியரசின் பார்போரா கிரெஜ்சிகோவாவுடன் மோதினார்.

    1 மணி 31 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் கிரெஜ்சிகோவா 6-4, 6-2 என்ற நேர்செட்டில் ஸ்வியாடெக்குக்கு அதிர்ச்சி அளித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

    மகுடம் சூடிய கிரெஜ்சிகோவா 900 தரவரிசை புள்ளிகளுடன் ரூ.3¾ கோடியை பரிசாக தட்டிச் சென்றார். 2வது இடம் பெற்ற இகா ஸ்வியாடெக் ரூ.2¼ கோடியை பரிசாக பெற்றார்.

    • இந்தியா சார்பில் மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் புரி கலந்து கொள்கிறார்.
    • பல்வேறு நாடுகளின் எரிசக்தித்துறை அமைச்சர்கள் இதில் பங்கேற்கின்றனர்.

    அபுதாபி தேசிய கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுவனம், உலகின் முன்னணி உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்த நிறுவனம் சார்பில் சர்வதேச பெட்ரோலிய கண்காட்சி மற்றும் மாநாடு இன்று தொடங்குகிறது.

    இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த எரிசக்தித்துறை அமைச்சர்கள் மற்றும் சர்வதேச எரிசக்தி நிறுவனங்களின் தலைவர்கள், உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

    இந்த கண்காட்சியில் கலந்து கொள்ளுமாறு இந்தியாவுக்கு, ஐக்கிய அரபு அமீரக அரசு அழைப்பு விடுத்துள்ளது. அந்நாட்டின் எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்புத்துறை அமைச்சர் சுஹைல் முகமது ஃபராஜ் அல் மஸ்ரூயி விடுத்த அழைப்பை ஏற்று இந்தியா சார்பில் மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி இன்று ஐக்கிய அரபு அமீரக நாட்டிற்கு பயணம் மேற்கொள்கிறார்.

    தமது பயணத்தின் போது அபுதாபி சர்வதேச பெட்ரோலிய கண்காட்சியில் ​​இந்திய பெட்ரோலியம் தொழில் கூட்டமைப்பு மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு இணைந்து அமைத்துள்ள அரங்கையும் அவர் திறந்து வைக்கிறார். மேலும் இந்த கண்காட்சியில் பங்கேற்கும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த எரி சக்தித்துறை அமைச்சர்கள், எரிசக்தி நிறுவனங்களின் தலைவர்களையும் அவர் சந்திப்பார்.

    மேலும் ஐக்கிய அரபு அமீரகம்-இந்தியா இடையேயான எரிசக்தித்துறை ஒத்துழைப்பை வலுப்படுத்த அந்நாட்டு அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் புரி விரிவான ஆலோசனை நடத்துவார் என்று  மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இரு அணிகளும் சமபலம் வாய்ந்து உள்ளதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • ஆசிய கோப்பையை இலங்கை அணி 5 முறையும், பாகிஸ்தான் 2 முறையும் வென்றுள்ளன.

    15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 27-ந் தேதி ஐக்கிய அரபு எமிரேட்சில் தொடங்கியது. 20 ஓவரில் நடத்தப்பட்ட இப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய 6 அணிகள் பங்கேற்றன.

    லீக் ஆட்டங்கள் கடந்த 2-ம் தேதி முடிவடைந்தது. இதில் 'ஏ' பிரிவில் இருந்து இந்தியா, பாகிஸ்தான், 'பி' பிரிவில் இருந்து ஆப்கானிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள் 'சூப்பர் 4' சுற்றுக்கு முன்னேறின. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதின.

    நேற்றுடன் 'சூப்பர் 4' சுற்று முடிந்தது. இலங்கை தான் மோதிய மூன்று ஆட்டங்களிலும் வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

    பாகிஸ்தான் அணி 3 ஆட்டத்தில் இரண்டு வெற்றி, ஒரு தோல்வி பெற்று 4 புள்ளிகளுடன் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்தியா (ஒரு வெற்றி 2 தோல்வி), ஆப்கானிஸ்தான் (3 தோல்வி) அணிகள் வெளியேற்றப்பட்டன.

    ஆசிய கோப்பையை வெல்வதற்கான இறுதிப்போட்டி நாளை நடக்கிறது. இந்த ஆட்டம் இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.

    இதில் பாகிஸ்தான்- இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தான் அணியில் ஜகமது ரிஸ்வான், பஹர் ஓமான், இப்திகார் அகமது, குஷ்தில் ஷா ஆகிய பேட்ஸ்மேன்கள் உள்ளார். பந்து வீச்சில் நசீம்ஷா, ஹரிஸ்ரவுப், ஷதப்கான் ஆகியோர் உள்ளனர்.

    ஆல்- ரவுண்டர் முகமது நலாஸ் பேட்டிங், பந்து வீச்சில் அசத்தி வருகிறார். நேற்று நடந்த 'சூப்பர் 4' சுற்றில் கடைசி ஆட்டத்தில் இலங்கையிடம் பாகிஸ்தான் தோல்வி அடைந்தது. இதற்கு பதிலடி கொடுத்து கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது.

    தகன் ஷனகா தலைமையிலான இலங்கை அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானிடம் தோல்வி அடைந்தது. அதன்பின் அந்த அணி எழுச்சி பெற்று இறுதிப் போட்டியில் தகுதி பெற்று உள்ளது.

    இலங்கை அணி பேட்டிங் கில் நிசாங்கா, குசல் மென்டிஸ், பானுகா ராஜ பக்சே ஆகியோர் நல்ல நிலையில் உள்ளார். பந்து வீச்சில் ஹசரங்கா, தீக்‌ஷனா, பிரமோத் மதுஷன் ஆகியோர் உள்ளனர். ஆல்- ரவுண்டர் கருணாரத்னே கடைசி ஆட்டத்தில் அதிரடியாக விளையாட கூடியவர்.

    வெற்றி உத்வேகத்தை இறுதிப் போட்டியிலும் தொடர இலங்கை முயற்சிக்கும். இரு அணிகளும் சமபலம் வாய்ந்து உள்ளதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆசிய கோப்பையை இலங்கை அணி 5 முறையும் (1986, 1997, 2004, 2008, 2014), பாகிஸ்தான் 2 முறையும் (2000, 2012) வென்றுள்ளன.

    அதிகபட்சமாக இந்தியா 7 முறை ஆசிய கோப்பையை கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விமான நிலையத்தில் தரை இறக்குவதற்கு பதில் அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிராண்ட் பகுதியில் தரை இறக்கினார்.
    • விமானி லேசான காயங்களுடன் உயிர்தப்பியதாக மீட்பு படையினர் தெரிவித்தனர்.

    ஐக்கிய அரபு நாட்டின் அபுதாபிக்கு சிறிய ரக கிளைடர் விமானம் ஒன்று சென்றது. ஒற்றை என்ஜின் கொண்ட இந்த விமானம் தரை இறங்கும்போது என்ஜினில் திடீர் கோளாறு ஏற்பட்டது. எனவே விமானி விமானத்தை தலைநகரில் உள்ள தனியார் விமான நிலையத்தில் தரை இறக்குவதற்கு பதில் அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிராண்ட் பகுதியில் தரை இறக்கினார்.

    அப்போது விமானம் அங்குள்ள வாகன நிறுத்த பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தின் இறக்கை பகுதி சேதமானது.

    இந்த விபத்தில் விமானி லேசான காயங்களுடன் உயிர்தப்பியதாக மீட்பு படையினர் தெரிவித்தனர். விமானத்தில் வேறு யாரும் பயணிகள் இருந்தார்களா? என்ற தகவலை அவர்கள் வெளியிடவில்லை.

    தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே விமானம் விபத்துக்குள்ளானதாக விமான நிலைய ஆணையம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக யாரும் வதந்தி பரப்ப கூடாது எனவும் அவர்கள் எச்சரித்து உள்ளனர்.

    துபாயில் இதற்கு முன்பு கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம் விமான விபத்து ஏற்பட்டதில் 4 பேர் பலியானார்கள்

    • அபுதாபியின் முதல் இந்து கோயிலின் இடத்தை அமைச்சர் ஜெய்சங்கர் பார்வையிட்டார்
    • இந்த கோயில் 55,000 சதுர மீட்டர் நிலப்பரப்பில் கட்டப்படுகிறது.

    அபுதாபி:

    இந்திய வெளியுறவுத் துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் 3 நாள் பயணமாக வளைகுடா நாட்டிற்கு நேற்று சென்றார். அங்கு அபுதாபியில் கட்டப்பட்டு வரும் இந்து கோயிலின் முதல் இடத்தைப் பார்வையிட்டார். கோயிலைக் கட்டுவதில் இந்தியர்களின் முயற்சிகளையும் பாராட்டினார்.

    இதுதொடர்பாக ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், விநாயக சதுர்த்தி அன்று அபுதாபியில் கட்டப்பட்டு வரும் இந்துக் கோயிலுக்குச் சென்றதற்கு ஆசீர்வதிக்கப்பட்டேன். விரைவான முன்னேற்றத்தைக் கண்டு மகிழ்ச்சியடைந்து, சம்பந்தப்பட்ட அனைவரின் பக்தியையும் ஆழ்ந்து பாராட்டுகிறேன் என பதிவிட்டுள்ளார்.

    மேலும், அந்நாட்டு வெளியுறவு மந்திரி ஷேக் அப்துல்லா பின் சயீத்துடன் பேச்சுவார்த்தை நடத்தும் மந்திரி ஜெய்சங்கர், இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

    அபுதாபியில் அமையவுள்ள இந்தக் கோயில் சுமார் 55,000 சதுர மீட்டர் நிலப்பரப்பில் கட்டப்படும். இந்திய கோவில் கைவினைஞர்களால் பணிகள் நடைபெற உள்ளன. மத்திய கிழக்கின் முதல் பாரம்பரிய இந்துக் கற்கோயில் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    • முதல் மற்றும் 3வது இடத்தை பாகிஸ்தான் வீரர்கள் பிடித்தனர்.
    • இந்திய வீரர் ஷ்ரேயாஸ் ஐயருக்கு 19வது இடம் கிடைத்தது.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி. டி20 கிரிக்கெட்டில் சிறந்த பேட்ஸ்மேன்கள் பட்டியலை வெளியிடப்பட்டது. அதில், 818 புள்ளிகளுடன் பாகிஸ்தானின் பாபர் ஆசம் முதல் இடத்தில் நீடிக்கிறார்.

    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடரில் சிறப்பாக ஆடிய இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் 805 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் 3-வது இடத்தை பிடித்தார். இந்த பட்டியலில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு 19வது இடம் கிடைத்துள்ளது.

    ஐசிசி டி20 சிறந்த பந்து வீச்சாளர் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹெசல்வுட் 792 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். தென்னாப்பிரிக்காவின் பத்ரைஸ் ஷம்சி 2-வது இடத்திலும், ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் 3-வது இடத்திலும், உள்ளனர்.

    644 புள்ளிகளுடன் இந்திய வீரர் புவனேஸ்குமார் 9 வது இடத்தை பிடித்தார். யுவேந்திர சாகல் 22வது இடத்திலும், ஹர்சல் படேல் 28 வது இடத்திலும், பும்ரா 34வது இடத்திலும், ரவி பிஷ்னாஸ் 44 இடத்திலும் உள்ளனர்.

    டி20 போட்டியில் சிறந்த ஆல்ரவுண்டர் பட்டியலில் 267 புள்ளிகளுடன் ஆப்கானிஸ்தானின் முகமது நபி முதல் இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக வங்காளதேசத்தின் ஷகிப் அல் ஹசன் 2-வது இடத்திலும், இங்கிலாந்தின் மொயீன் அலி 3-வது இடத்திலும், உள்ளனர். இந்த பட்டியலில் இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யாவுக்கு 13வது இடம் கிடைத்துள்ளது.

    ×