search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நோக்கியா டி20"

    சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா - ஐஸ்வர்யா மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் `தமிழ்படம் 2' படத்தின் இசை வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #TamizhPadam2
    சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் `தமிழ்படம் 2'. ரசிகர்களை கவர படம் குறித்த புதுப்புது அறிவிப்புகளை அவ்வப்போது வெளியிட்டு வரும் படக்குழு, சினிமா, அரசியல் என பல்வேறு அட்ராசிட்டிகளையும் கலாய்த்து போஸ்டர்களை வெளியிட்டு வருகிறது.

    சமீபத்தில் படத்தில் இருந்து நான் யாருமில்ல என்ற சிங்கள் டிராக் ஒன்று வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை இந்த சிங்கிள் டிராக்கை 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கண்டுகளித்துள்ளனர். இந்த நிலையில், படத்தின் இசை வெளியீடு நாளை நடைபெற இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும் படத்தில் இடம்பெறும் பாடல் லிஸ்ட்டையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 
    இந்த படத்தில் சிவா ஜோடியாக ஐஸ்வர்யா மேனன் நடித்திருக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் திஷா பாண்டே, சதீஷ், சந்தான பாரதி, மனோபாலா, ஆர்.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, சேத்தன், உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 

    படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில் படம் வருகிற ஆகஸ்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #TamizhPadam2

    சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா - ஐஸ்வர்யா மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் `தமிழ்படம் 2' படத்தின் அடுத்த பாடல் மற்றும் போஸ்டர் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #TamizhPadam2 #TP2
    தமிழ் சினிமாவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் `தமிழ்படம் 2'. சி.எஸ்.அமுதன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் சிவா - ஐஸ்வர்யா மேனன் நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். 

    ரசிகர்களை கவர படம் குறித்த புதுப்புது அறிவிப்புகளை அவ்வப்போது வெளியிட்டு வரும் படக்குழு, சினிமா, அரசியல் என பல்வேறு அட்ராசிட்டிகளையும் கலாய்த்து போஸ்டர்களை வெளியிகிறது. 

    இதுவரை வெளியான போஸ்டர்கள் மற்றும் டீசருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், படத்தில் இருந்து இரண்டாவது பாடல் மற்றும் 17-வது போஸ்டரை இன்று மாலை 5 மணிக்கு வெளியிட இருப்பதாக இயக்குநர் சி.எஸ்.அமுதன் அறிவித்திருக்கிறார்.
    இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் திஷா பாண்டே, சதீஷ், சந்தான பாரதி, மனோபாலா, ஆர்.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, சேத்தன், உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில் படம் வருகிற ஆகஸ்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #TamizhPadam2 #TP2

    சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா நடிப்பில் உருவாகி இருக்கும் தமிழ்ப்படம் 2.0 படத்தின் தலைப்பை படக்குழு மாற்றியுள்ளதாக அறிவித்துள்ளது. #TP2Point0 #TamizhPadam2
    சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா - ஐஸ்வர்யா மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் `தமிழ்படம் 2.0' படத்தின் தலைப்பை `தமிழ்படம் 2' என மாற்றிவிட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதுகுறித்து படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 

    `ஜுரோவிற்கு மதிப்பில்லை என்பதால், தலைப்பில் இருந்து ஜுரோவை மட்டும் நீக்குகிறோம். எனவே படத்தின் தலைப்பு இனிமேல் தமிழ்ப்படம் 2 என்றே அழைக்கப்படும்' இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

    சமீபத்தில் வெளியாகிய படத்தின் டீசர் மற்றும் புகைப்படங்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சினிமா மற்றும் சினிமா அல்லாது நடக்கும் அட்ராசிட்டிகளையும் படக்குழு அவ்வப்போது கலாய்த்து புகைப்படங்களை வெளியிடுவது படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது. 

    சமீபத்தில் படத் தயாரிப்பாளர் சசிகாந்த், தலையில் கைவைத்தபடி குணிந்து உட்கார்ந்திருப்பது போல ஒரு புகைப்படத்தை வெளியிட்ட இயக்குநர் அமுதன், தமிழ்ப்படம் 2 படம் பார்த்த தயாரிப்பாளரின் மனநிலை இது என்றும் பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    இதில் முக்கிய கதாபாத்திரத்தில் திஷா பாண்டே, சதீஷ், சந்தான பாரதி, மனோபாலா, ஆர்.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, சேத்தன், உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில் படம் வருகிற ஆகஸ்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #TP2Point0 #TamizhPadam2
    எஸ்.வி.சேகர் ஜூன் 20-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை எழும்பூர் கோர்ட் மாஜிஸ்திரேட் சம்மன் அனுப்பியுள்ளார். #SVShekher #EgmoreCourt #Summon
    சென்னை:

    நகைச்சுவை நடிகரும், பா.ஜ.க. பிரமுகருமான எஸ்.வி.சேகர், பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறான கருத்துக்களை தன் முகநூல் பக்கத்தில் வெளியிட்டார். இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது.

    புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் எஸ்.வி. சேகர் மீது, பெண் வன்கொடுமைச் சட்டப்பிரிவு உள்பட பல பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    இதற்கிடையே, இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் எஸ்.வி.சேகர் மனு தாக்கல் செய்துள்ளார்.

    அதேபோல, இவருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என்று பத்திரிகையாளர் முரளிகிருஷ்ணன் சின்னத்துரை, நக்கீரன் பிரகாஷ், ஜெ.கவின்மலர், பெண் வக்கீல்கள் சங்கம் உள்பட ஏராளமானோர் மனு தாக்கல் செய்தனர்.

    இதில் அவரது முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த சென்னை ஐகோர்ட், எஸ்.வி.சேகரை கைது செய்வதில் எந்தத் தடையும் இல்லை என உத்தரவிட்டது. ஆனாலும் போலீசார் அவரை இன்னும் கைது செய்யவில்லை.

    இந்நிலையில், ஜூன் 20-ல் சென்னை எழும்பூர் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என மாஜிஸ்திரேட் சம்மன் அனுப்பியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் அளித்துள்ள சம்மனில், ஜூன் 20-ம் தேதி காலை 10 மணிக்கு எழும்பூர் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #SVShekher #EgmoreCourt #Summon
    அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்திற்கு பிறகு தமிழ்படம் 2.0 படத்தில் குத்துப்பாட்டு ஒன்றுக்கு ஆடியிருக்கும் கஸ்தூரி, இந்த படத்தில் இடம்பெற்றது பற்றி பேசினார். #TP2Point0 #TamizhPadam2
    நல்ல தலைவனை தேடிக் கொண்டிருக்கிறேன் ஒரு பக்கம் அரசியலில் அதிரடி கருத்துகள், இன்னொரு பக்கம் சினிமாவில் கவர்ச்சி அவதாரம் என்று பரபரப்பாக இருக்கும் கஸ்தூரியுடன் பேசும் போது, 

    தமிழ்படம்-2 படத்தில் டான்ஸ் ஆடிய அனுபவம்?

    அந்த படத்துக்கு பூஜை போட்ட உடனேயே எடுத்தது என்னுடைய பாடல் தான். பாடல் முழுக்க 3 சேலைகள் தான் எனக்கு காஸ்ட்யூம். ஆனால் செம கவர்ச்சியாக இருக்கும். முதல் பாகத்தில் நான் ஆடியதால் ஆஸ்திரேலியாவில் இருந்த என்னை அழைத்து செண்டிமெண்ட் ஆக ஆடவைத்து இருக்கிறார் சி.எஸ்.அமுதன்.

    அதிரடியாக பல வி‌ஷயங்கள் பேசுகிறீர்களே... இந்த துணிச்சல் எப்படி வந்தது?

    மரணத்தையே மூன்று முறை கூப்பிடும் தூரத்தில் சந்தித்துவிட்டேன். எனவே எனக்கு பயம் இல்லை.

    மகனுக்கு என்னை பற்றி கேட்டால் அம்மா என்று சொல்வான். அவ்வளவுதான் அவனுக்கு தெரியும். என் கணவர் உயிரை காப்பாற்றும் மருத்துவராக இருக்கிறார். அவர் இதைபற்றி கண்டுகொள்ளவே மாட்டார். வீட்டில் அமெரிக்க கலாசாரத்தை கொண்டவர்கள். அவர்கள் தனி மனித சுதந்திரத்தை பெரிதும் மதிப்பவர்கள்.



    உங்களை வைத்து அமைதிப்படை 3 எடுக்கலாமா?

    கொஞ்சம் பொறுங்கள். அமைதிப்படை சத்யராஜ் வேடத்துக்கு நிகரான ஒரு வேடத்தில் அக்கினி என்ற படத்தில் நடிக்கிறேன். இதில் நான் வில்லி அரசியல்வாதி.

    அரசியலில் இப்போது நான் ஒரு பார்வையாளராக, விமர்சகியாக இருக்கிறேன். நான் எதிர்பார்த்த மாற்றத்தை தருபவர் இன்னும் அகப்படவில்லை. அப்படி ஒரு நல்லவர் கிடைத்தால் நிச்சயம் வருவேன். இரட்டை வேடம் போடாமல் மனசாட்சிபடி நடப்பவரை தான் நான் தலைவராக ஏற்றுக்கொள்வேன்.

    நடிகர் ரஜினிக்கு நான் தீவிர விசிறி. ஆனால் அரசியலில் அவரது கொள்கைகளும், பேச்சுகளும் ஏற்புடையதாக இல்லை.

    திருமணத்துக்கு பின் நடிக்க வந்தாலும் பாடல், கவர்ச்சி வேடங்கள் என்று கலக்குகிறீர்கள்?

    கதாநாயகர்களை பார்த்து நீங்கள் இப்படி கேட்பதில்லை. ஆனா நடிகைகள் என்றால் மட்டும் திருமணமானாலே அக்கா, அண்ணியாக நடிக்க வேண்டுமா? என்னுடைய அழகையும், உடல் கட்டுக்கோப்பையும் வைத்து தான் இந்த மாதிரி வேடங்கள் வருகின்றன. எனக்கு இதில் சந்தோ‌ஷம் தான். #TP2Point0 #TamizhPadam2 #Kasthuri
    சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா - ஐஸ்வர்யா மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் `தமிழ்படம் 2.0' படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். #TP2Point0 #TamizhPadam2
    தமிழ் சினிமாவில் காலங்காலமாக நடந்து வரும் அட்ராசிட்டிகளை கிண்டல் செய்யும்படியாக உருவான `தமிழ் படம்' படத்தின் இரண்டாவது பாகம் `தமிழ்படம் 2.0' என்ற பெயரில் உருவாகி இருக்கிறது. 

    சி.எஸ்.அமுதன் இயக்கியிருக்கும் இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்டதாக படத்தின் இயக்குநர் சி.எஸ்.அமுதன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

    சிவா, ஐஸ்வர்யா மேனன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் திஷா பாண்டே, சதீஷ், சந்தான பாரதி, மனோபாலா, ஆர்.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, சேத்தன், உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 



    ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் சசிகாந்த் இந்த படத்தை தயாரித்துள்ளார். இந்த பாகம் ஒரு போலீஸ் அத்தியாயமாக உருவாகி இருப்பதாக படக்குழு அறிவித்திருக்கிறது. படம் விரைவில் வெளியாக இருக்கிறது. #TP2Point0 #TamizhPadam2

    ஐசிசி உலக லெவன் அணியுடனான டி20 போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. #WorldXIvsWI #ICC #WorldXi #WestIndies #CricketRelief

    லார்ட்ஸ்:

    ஐ.சி.சி. உலக லெவன்- வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதும் ஒரே ஒரு 20 ஓவர் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

    உலக லெவன் அணிக்கு பாகிஸ்தான் முன்னாள் வீரர் ‌ஷகீத் அப்ரிடி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இது அப்ரிடி விளையாடும் கடைசி சர்வதேச போட்டியாகும். வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு பிராத்வெயிட் கேப்டனாக உள்ளார். இப்போட்டியில் டாஸ் வென்ற உலக லெவன் அணி கேப்டன் அப்ரிடி பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    இதையடுத்து வெஸ்ட்இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியில் எவின் லெவிஸ் 58 ரன்களும், சாமுவேல்ஸ் 43 ரன்களும், ராம்தின் 44 ரன்களும் எடுத்தனர். இறுதியில் வெஸ்ட்இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்தது. உலக லெவன் அணி பந்திவீச்சில் ரஷித் கான் 2 விக்கெட்கள் வீழ்த்தினார். 



    இதன்மூலம் உலக லெவன் அணியின் வெற்றிக்கு 200 ரன்களை இலக்காக வெஸ்ட்இண்டீஸ் அணி நிர்ணயித்தது. இதையடுத்து உலக லெவன் அணி பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தமிம் இக்பால், லூக் ராங்கி ஆகியோர் களமிறங்கினர். 2-வது ஓவரை ரசல் வீசினார், அந்த ஓவரின் 3-வது பந்தில் தமிம் ஆட்டமிழந்தார். அவர் 2 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதன்பின் சாம் பில்லிங்ஸ் களமிறங்கினார். 

    பத்ரி வீசிய மூன்றாவது ஓவரின் முதல் பந்திலேயே ராங்கி டக் அவுட் ஆனார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய தினேஷ் கார்த்திக், அந்த ஓவரின் கடைசி பந்தில் டக் அவுட் ஆனார். அதன்பின் ஷோயிப் மாலிக் களமிறங்கினார். பில்லிங்ஸ் 4 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் ரசல் பந்தில் ஆட்டமிழந்தார். இதனால் 4 ஓவர்களில் உலக லெவன் அணி 16 ரன்களுக்கு 4 விக்கெட்களை பறிகொடுத்தது. அவரைத்தொடர்ந்து திசாரா பெரெரா களமிறங்கினார். 



    அதன்பின் உலக லெவன் அணியினர் நிதானமாக விளையாடினர். 8-வது ஓவரை பிரத்வெய்ட் வீசினார். அந்த ஓவரின் 4-வது பந்தில் மாலிக் ஆட்டமிழந்தார். அவர் 12 ரன்கள் எடுத்திருந்தார். அதன்பின் பெரெரா உடன், அப்ரிடி ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடி ரன் சேர்த்தனர். இதனால் 10 ஓவர்கள் முடிவில் உலக லெவன் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 63 ரன்கள் எடுத்தது. 

    சிறப்பாக விளையாடிய பெரெரா 28 பந்தில் அரைசதம் அடித்தார். இதில் 6 பவுண்டரிகளும், 3 சிக்ஸர்களும் அடங்கும். தனது கடைசி சர்வதேச போட்டியில் விளையாடிய அப்ரிடி 11 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து ரஷித் கான் களமிறங்கினார். 

    பெரெரா 37 பந்தில் 61 ரன்கள் (7 பவுண்டரி, 3 சிக்ஸர்) எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் மிச்செல் மெக்லினகன் களமிறங்கினார். அதே ஓவரின் ரஷித் கான் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து சந்தீப் லமிச்சானே களமிறங்கினார். மெக்லினகன் 10 ரன்னில் ஆட்டமிழந்தார். டைமால் மில்ஸ் காயம் காரணமாக பேட்டிங் செய்யவில்லை. இதனால் உலக லெவன் அணி 16.4 ஓவர்களில் 127 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 



    வெஸ்ட்இண்டீஸ் அணி பந்துவீச்சில் கெஸ்ரிக் வில்லியம்ஸ் 3 விக்கெட்களும், சாமுவேல் பத்ரி, ஆண்ட்ரே ரசல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களும் வீழ்த்தினர். இதன்மூலம் வெஸ்ட்இண்டீஸ் அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. #WorldXIvsWI #ICC #WorldXi #WestIndies #CricketRelief
    ஐசிசி உலக லெவன் - வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட்இண்டீஸ் அணி 199 ரன்கள் எடுத்துள்ளது. #WorldXIvsWI #ICC #WorldXi #WestIndies #CricketRelief

    லார்ட்ஸ்:

    ஐ.சி.சி. உலக லெவன்- வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதும் ஒரே ஒரு 20 ஓவர் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. 

    உலக லெவன் அணிக்கு பாகிஸ்தான் முன்னாள் வீரர் ‌ஷகீத் அப்ரிடி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இது அப்ரிடி விளையாடும் கடைசி சர்வதேச போட்டியாகும். வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு பிராத்வெயிட் கேப்டனாக உள்ளார். இப்போட்டியில் டாஸ் வென்ற உலக லெவன் அணி கேப்டன் அப்ரிடி பந்துவீச்சை தேர்வு செய்தார்.



    இதையடுத்து வெஸ்ட்இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் கிறிஸ் கெய்ல், எவின் லெவிஸ் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். கெய்ல் நிதானமாக விளையாட, லெவிஸ் அதிரடியில் இறங்கினார். இதனால் 6 ஓவர்களில் ஸ்கோர் 51-ஐ எட்டியது. 

    அதிரடியாக விளையாடிய லெவிஸ் 23 பந்தில் அரைசதம் அடித்தார். 8-வது ஓவரை ரஷித் கான் வீசினார். அந்த ஓவரின் 5-வது பந்தில் லெவிஸ் ஆட்டமிழந்தார். அவர் 26 பந்தில் 58 ரன்கள் எடுத்திருந்தார். இதில் 5 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். அதைத்தொடர்ந்து ஆண்ட்ரே பிளச்சர் களமிறங்கினார். வெஸ்ட்இண்டீஸ் அணி 10 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 87 ரன்கள் எடுத்தது.



    11-வது ஓவரை ஷோயிப் மாலிக் வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தில் 28 பந்தில் 18 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேய்ல் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து மார்லன் சாமுவேல்ஸ் களமிறங்கினார். அப்ரிடி வீசிய 12-வது ஓவரின் 2-வது பந்தில் ஆண்ட்ரே பிளச்சர் ஆட்டமிழந்தார். அதன்பின் தினேஷ் ராம்தின் களமிறங்கினார். 

    15 ஓவரில் வெஸ்ட்இண்டீஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்தது. அதிரடியாக விளையாடி ரன் குவித்த சாமுவேல்ஸ் 22 பந்தில் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் 2 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர் அடங்கும். அதைத்தொடர்ந்து ரசல் களமிறங்கினார். இறுதியில் வெஸ்ட்இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்தது. ராம்தின் 44 ரன்களுடனும் (3 பவுண்டரி, 3 சிக்ஸர்), ரசல் 21 ரன்களுடனும் (3 சிக்ஸர்) களத்தில் இருந்தனர். 



    உலக லெவன் அணி பந்திவீச்சில் ரஷித் கான் 2 விக்கெட்கள் வீழ்த்தினார். இதன்மூலம் உலக லெவன் அணியின் வெற்றிக்கு 200 ரன்களை இலக்காக வெஸ்ட்இண்டீஸ் அணி நிர்ணயித்துள்ளது. #WorldXIvsWI #ICC #WorldXi #WestIndies #CricketRelief
    ஐசிசி உலக லெவன்- வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் உலக வெவன் அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. #WorldXIvsWI #ICC #WorldXi #WestIndies #CricketRelief

    லார்ட்ஸ்:

    ஐ.சி.சி. உலக லெவன்- வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதும் ஒரே ஒரு 20 ஓவர் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று நடக்கிறது.

    உலக லெவன் அணிக்கு பாகிஸ்தான் முன்னாள் வீரர் ‌ஷகீத் அப்ரிடி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு பிராத்வெயிட் கேப்டனாக உள்ளார். இப்போட்டியில் டாஸ் வென்ற உலக லெவன் அணி கேப்டன் அப்ரிடி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

    இந்தப்போட்டி இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு தொடங்குகிறது. இரு அணி வீரர்கள் விவரம்:-

    ஐ.சி.சி. உலக லெவன்:

    லூக் ராஞ்சி, தமீம் இக்பால், சாம் பில்லிங்ஸ், தினேஷ் கார்த்திக், சோயிப் மாலிக், அப்ரிடி (கேப்டன்), திசாரா பெரேரா, ரஷித் கான், மிச்செல் மெக்லினகன், சந்தீப் லமிச்சானே, தைமால் மில்ஸ்.

    வெஸ்ட்இண்டீஸ்: 

    கிறிஸ் கெய்ல், எவின் லீவிஸ், ஆண்ட்ரே பிளச்சர், மார்லன் சாமுவேல்ஸ், தினேஷ் ராம்தின், ஆண்ட்ரே ரஸ்சல், கார்லோஸ் பிரத்வெயிட் (கேப்டன்), சாமுவேல் பத்ரி, ஆஸ்லே நர்ஸ், கீமோ பவுல், கெஸ்ரிக் வில்லியம்ஸ். #WorldXIvsWI #ICC #WorldXi #WestIndies #CricketRelief
    சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா நடிப்பில் உருவாகி இருக்கும் `தமிழ்படம் 2.0' படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், முக்கிய அறிவிப்பு ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. #TP2Point0 #TamizhPadam2
    தமிழ் சினிமாவில் காலங்காலமாக நடந்து வரும் அட்ராசிட்டிகளை கிண்டல் செய்யும்படியாக உருவான `தமிழ் படம்' படத்தின் அடுத்த பாகம் `தமிழ்படம் 2.0' என்ற பெயரில் உருவாகி இருக்கிறது. சி.எஸ்.அமுதன் இயக்கியிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி இருக்கும் இந்த படத்தின் டீசர் வெள்ளிக்கிழமை (நாளை) வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. 

    படம் மே 25-ஆம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் இன்னும் முடிவடையாததால் ரிலீஸ் தேதி தள்ளிப்போயுள்ளதாக ரஜினியின் 2.0 படத்தை கிண்டல் செய்யும்படியாக படக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 



    சிவா, ஐஸ்வர்யா மேனன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் திஷா பாண்டே, சதீஷ், சந்தான பாரதி, மனோபாலா, ஆர்.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, சேத்தன், உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 

    ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் சசிகாந்த் இந்த படத்தை தயாரித்துள்ளார். இந்த பாகம் ஒரு போலீஸ் அத்தியாயமாக உருவாக இருப்பதாக படக்குழு அறிவித்திருக்கிறது. #TP2Point0 #TamizhPadam2

    ×