search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TamizhPadam2"

    சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா - ஐஸ்வர்யா மேன்ன நடிப்பில் வெளியாகி திரையரங்குளில் ஓடிக் கொண்டிருக்கும் `தமிழ்ப்படம் 2' படத்தின் தொலைக்காட்சி உரிமையை பிரபல நிறுவனம் ஒன்று கைப்பற்றியிருக்கிறது. #TP2 #Tamizhpadam2
    சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா - ஐஸ்வர்யா மேன்ன நடிப்பில் நேற்று வெளியாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் படம் `தமிழ்ப்படம் 2'. தமிழ்ப்படம் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக உருவாகி இருக்கும் இந்த பாகம் போலீஸ் அத்தியாயமாக உருவாகி இருக்கிறது. முதல் பாகத்தை போலவே இந்த பாகத்திற்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. 

    படத்தில் நடிகர் சிவா போலீஸ் அதிகாரியாக வந்து ரசிகர்களை கவர்ந்துவிட்டார். ரஜினி, கமல், அஜித், விஜய், விஷால் என பிரபல நடிகர்களின் படங்களை கலாய்த்து உருவாகி இருக்கும் இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ள சதீஷுக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
    படம் ரிலீசாகி வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், படத்தின் தொலைக்காட்சி உரிமையை விஜய் டிவி கைப்பற்றியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #TP2 #Tamizhpadam2

    சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா - ஐஸ்வர்யா மேனன் நடிப்பில் வெளியாகி இருக்கும் `தமிழ்ப்படம் 2' படத்தின் விமர்சனம். #TP2 #Tamizhpadam2
    தமிழ்ப்படம் முதல் பாகத்தில் `டி' என்ற வில்லனை கண்டுபிடிக்க போலீசாக வரும் சிவாவுக்கு, தனது பாட்டியை கைது செய்ய வேண்டிய நிலை வர தனது போலீஸ் வேலையை ராஜினாமா செய்வார். அதன் தொர்ச்சியாக இந்த படம் உருவாகி இருக்கிறது. 

    மதுரையில் கலவரம் நடக்க, அதை கட்டுப்படுத்த சிவாவால் தான் முடியும் என்று, காவல்துறை சிவாவின் உதவியை நாடுகிறது. சமூக நலனை கருத்தில் கொண்டு சிவா கலவரக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். பேசியே அந்த பிரச்சனையை தீர்த்தும் வைக்கிறார். அவரது இந்த அசாத்திய திறமையை பார்த்து வியக்கும் காவல்துறை, அவரை மீண்டும் பணியில் சேர அழைக்க, சிவா மறுத்துவிடுகிறார். 



    இந்த நிலையில், சிவாவின் வீட்டிற்கு ஒரு பார்சல் வருகிறது. அதை அவரது மனைவி திஷா பாண்டே வாங்கி திறக்கும் போது குண்டுவெடித்து இறந்துவிடுகிறார். சிவாவின் பாட்டி நமது குடும்பத்திற்கு வாரிசு வேண்டும் என்று சிவாவை இரண்டாவது திருமணம் செய்துகொள்ள வற்புறுத்துகிறார். இதற்கிடையே ஐஸ்வர்யா மேனனையும் சந்திக்கிறார். இருப்பினும் தனது மனைவியை கொன்றவனை கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காக கண்ணீர் மல்க மீண்டும் போலீஸ் வேலையில் சேர்கிறார். 

    மீண்டும் போலீசில் சேரும் சிவா, அந்த பார்சலை அனுப்பியது `பி' என்று அழைக்கப்படும் சதீஷ் என்பது தெரிய வருகிறது. சிவாவை மீண்டும் போலீஸ் வேலையில் சேர வைத்து சிவாவை பழிவாங்க வேண்டும் என்பதே சதீஷின் நோக்கம். 



    கடைசியில், தனது மனைவியை கொன்ற சதீஷை சிவா பழிவாங்கினாரா? இரண்டாவது திருமணம் செய்தாரா? ஐஸ்வர்யா மேனனுடன் இணைந்தாரா? சிவாவின் போலீஸ் அத்தியாயம் எப்படி முடிந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தில் சிவா முதல் பாகத்தை போலவே, இந்த பாகத்திலும் தனக்கே உண்டான தனித்துவமான நடிப்புடன், நடனத்துடன், பேச்சுடன், அன்புடன், அடக்கத்துடன், பணிவுடன், கோபத்துடன், சிரிப்புடன், கவலையுடன், காதலுடன், பிரம்மாண்டத்துடன் கலக்கியிருக்கிறார். இந்த பாகத்திலும் சிவாவின் போட்டி நடனம் பிரளயத்தை உண்டுபண்ணும்படியாக இருக்கிறது. அகில உலக சூப்பர் ஸ்டாராகவே வாழ்ந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். 



    ஐஸ்வர்யா மேனன் அவருக்கு கொடுத்த கதபாத்திரத்தில் ஸ்கோர் செய்திருக்கிறார். குறிப்பாக `எவடா உன்ன பெத்தா' பாடலில் அவரது நடனம் ரசிக்கும்படியாக இருக்கிறது. வில்லனாக சதீஷ் சிறப்பாக நடித்திருக்கிறார். தசாவதாரம் கமலை விட இந்த படத்தில் சதீஷுக்கு கெட்அப்புகள் அதிகம். அதிலும் அவர் கவர்ந்திருக்கிறார். தொடக்கம் முதல் இறுதி வரை சிவா - சதீஷ் இடையே நடக்கும் அதி தீவிர மோதல் அனைவரையும் கவரும்படியாக இருக்கிறது. 

    திஷா பாண்டே குடும்ப பெண்ணாக சிறப்பு தோற்றத்தில் வந்து செல்கிறார். சேத்தன், கலைராணி கதாபாத்திரங்கள் ரசிகர்களை கவர்கிறது. நிழல்கள் ரவி, மனோபாலா, சந்தான பாரதி, ஜார்ஜ் படத்தின் ஓட்டத்துக்கு உதவியாக இருந்துள்ளனர். 



    தமிழ்ப்படம் முதல் பாகத்தில் நடிகர் சிவா போலீசாக வருவார். அதன் தொடர்ச்சியாக, போலீஸ் அத்தியாயமாக இந்த பாகத்தை உருவாக்கி இருக்கிறார் சி.எஸ்.அமுதன். முதல் பாகத்தை போலவே இந்த பாகத்திலும் தனது அட்ராசிட்டியை உச்ச நிலைக்கு கொண்டு சென்றிருக்கிறார் அமுதன். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், சிம்பு, தனுஷ், விஷால் என பிரபல நடிகர்கள் ஒருத்தரைது படத்தையும் விட்டுவைக்கவில்லை. படத்தில் முடிவில் முன்னணி நாயகிகளை வைத்து உருவாக்கி இருக்கும் காட்சிகளும் ரசிகர்களை கவரும்படியாகவே இருக்கிறது. 

    அரசியல் பிரபலங்கள், தொலைக்காட்சி சேனல்கள் என அனைத்தையும் கலாய்த்துள்ளனர். கலாய்ப்பது மட்டுமின்றி, சமூகத்திற்கு தேவையானவற்றை வலியுறுத்துவதும், சமூகத்தில் நடக்கும் குற்றங்களை குத்திக்காட்டும்படியாகவும் சில காட்சிகளை ஆங்காங்கே வைத்திருப்பது சிறப்பு. இவ்வாறாக அனைத்தும் கலந்த கலவையாக, இளைஞர்களுக்கு ஏற்ற படமாக இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார். இருப்பினும் படத்தின் நீளத்தை மட்டும் கொஞ்சம் குறைத்திருந்தால் இன்னும் படம் சிறப்பாக இருக்கும். 



    கண்ணனின் இசையில் பாடல்கள் ரசிக்கும்படியாகவே இருக்கிறது. கோபி அமர்நாத்தின் கேமராவில் காட்சிகள் பல இடங்களை ரம்மியமாக காட்சிப்படுத்தியிருக்கிறது. 

    மொத்தத்தில் `தமிழ்ப்படம் 2' வச்சி செஞ்ச படம். #TP2 #Tamizhpadam2 #Shiva #IshwaryaMenon

    சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா நடிப்பில் தமிழ்ப்படம் 2 நாளை வெளியாக இருக்கும் நிலையில், வெற்றி அடைந்த படங்களை தான் எடுத்து ஸ்பூப் பண்ண முடியும் என்று நடிகர் சிவா கூறினார். #Tamizhpadam2 #TP2 #Shiva
    போஸ்டர்கள் மூலமாகவே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது தமிழ்படம் 2. அதன் கதாநாயகன் சிவாவிடம் பேசினோம்.

    ஸ்பூப் பண்ணுவது எளிது அல்ல. எளிது என்றால் இந்நேரம் தமிழ்படம் பாணியில் 10 படங்களாவது வந்து இருக்கும். ஒரு படம் கூட வரவில்லையே? புதிதாக ஒரு கதையை உருவாக்குவது கூட எளிது. ஆனால் ஏற்கெனவே இருக்கும் காட்சிகளை வைத்து கதை எழுதுவது சிரமம். படம் தொடங்குவதற்கு 6 மாதங்கள் முன்பே தயாரிப்பாளர் சசிகாந்த் என்னை அழைத்து 2வது பாகம் உருவாக இருப்பதை கூறினார். கதை தயாரான பின் நான் பார்ட்டி, கலகலப்பு 2 படங்களில் நடிக்க வேண்டி இருந்ததால் தாமதம் ஆனது.

    உங்கள் கேரியரில் அடிக்கடி இடைவெளி விழுகிறதே?

    குவார்ட்டர் கட்டிங் தோல்விக்கு பிறகு நடிக்கவே வேண்டாம் என்று நினைத்தேன். ரேடியோவில் வேலை பார்க்கும்போது சுந்தர்.சி அழைத்ததால் கலகலப்பில் நடித்தேன். இடையில் படம் இயக்கும் எண்ணத்தில் கதைகள் எழுத தொடங்கினேன். சென்னை 28 பார்ட் 2, கலகலப்பு 2, பார்ட்டி, தமிழ்படம் 2 என்று போகிறது. நாம் ஒரு திட்டம் வைத்து இருந்தால், கடவுள் ஒரு திட்டம் வைத்து இருக்கிறார். பார்ப்போம்.



    தமிழ் சினிமாவில் உங்களுக்கு என்று ஒரு இடம் இல்லையே?

    நான் திரையில் தோன்றினால் சிரிப்பு வரும் என்று மக்கள் நம்புகிறார்கள். மக்களை திருப்திபடுத்தினால் போதும் என்று நினைக்கிறேன். இருக்கை நிரந்தரம் இல்லை என்று நினைப்பவர்கள் தான் இடம் பிடிக்க முயற்சிப்பார்கள். ஆனால் மக்கள் மனதில் இடம் இருக்கும்போது ஏன் மற்ற இடத்தை பற்றி கவலைப்பட வேண்டும்?

    யாரையும் கலாய்க்கவோ, கிண்டலடிக்கவோ இல்லை. வெற்றி அடைந்த படங்களை தான் எடுத்து ஸ்பூப் பண்ண முடியும். அப்போது தான் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். இது ஒரு வகை சினிமா. இது யாரையும் புண்படுத்த செய்யவில்லை. ரசிக்க மட்டும்தான். ஏற்கனவே வந்த காட்சிகள் இப்படி இருந்தால் எப்படி இருந்து இருக்கும்? என்பதே ஸ்பூப். எனக்கு தெரிந்து யாரும் புண்பட்டதாக தெரியவில்லை. அப்படி புண்பட்டிருந்தால் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

    விடியற்காலை 5 மணி காட்சி அளவுக்கு வளர்ந்துவிட்டீர்கள். அகில உலக சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டீர்களா?

    அதில் உங்களுக்கு என்ன சந்தேகம்? 5 மணிக்கு காட்சி திறக்க காரணம் மக்களிடம் ஏற்பட்டுள்ள எதிர்பார்ப்பு தான். இதை நான் மனதில் ஏற்றிக்கொண்டால் அடுத்த படத்துக்கு இது நடக்கவில்லையே என்று ஏமாற்றம் ஆவேன். நாம் எதையும் எதிர்பார்க்காமல் செய்தால் போதும். தானாக சில வி‌ஷயங்கள் நடக்கும்.



    சீரியஸ் வேடங்களில் நடிக்க விருப்பம் இல்லையா?

    காமெடி என்பதே சீரியசான வி‌ஷயம் தான். சீரியசான வேடங்களில் நடிப்பதைவிட காமெடி வேடம் தான் சிரமம்.

    கதைகள் தயாராகி இயக்கலாம் என்று முடிவெடுத்தால், யாராவது வந்து நடிக்க அழைத்து விடுகிறார்கள். நல்ல படம் கொடுக்க வேண்டும். எனவே காத்திருக்கிறேன்.

    எந்த திட்டமும் இல்லை. இனிமேல் தேர்ந்தெடுத்து தான் நடிக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறேன் என்றார். #Tamizhpadam2 #TP2 #Shiva

    சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா - ஐஸ்வர்யா மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் `தமிழ்ப்படம் 2' படத்தின் ரிலீஸ் தேதியை இயக்குநர் அமுதன் உறுதிப்படுத்தியிருக்கிறார். #Tamizhpadam2 #TP2
    சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் தமிழ்படத்தின் இரண்டாவது பாகமாக `தமிழ்ப்படம் 2' உருவாகி இருக்கிறது. 

    சிவா நாயகனாக நடித்திருக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா மேனன் நடித்திருக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் திஷா பாண்டே, சதீஷ், சந்தான பாரதி, மனோபாலா, ஆர்.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, சேத்தன், உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 

    படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் முதல் தற்போது வரை பல்வேறு திரைப்படங்களையும், அரசியல் சம்பந்தப்பட்ட சில நிகழ்ச்சிகளையும் கலாய்த்து போஸ்டர் வெளியிட்டு வரும் படக்குழு சமீபத்தில் பாகுபலி, நடிகையர் திலகம், டார்க் நைட், சின்னக்கவுண்டர் உள்ளிட்ட படங்களை சமீபத்தில் கலாய்த்து போஸ்டர் வெளியிட்டிருந்தது. படத்தின் டீசர் முதல் பாடல்கள் வரை நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், படம் வருகிற 12-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக முன்னதாக தெரிவித்திருந்தோம். இந்த நிலையில், இயக்குநர் அமுதன் தற்போது அதனை உறுதிப்படுத்தியிருக்கிறார். 
    படத்தின் ரிலீசுக்கு நடுவே ரசிகர்களுடனான கலந்துரையாடலில் ஈடுபட்ட அமுதனிடம் ரசிகர்கள் படம் குறித்த பல்வேறு கேள்விகளை கேட்டனர். அதில் ரசிகர் ஒருவர் படத்தின் ரிலீஸ் எப்போது என கேட்க, 12 என்று அவர் பதிலளித்தார். இதன் மூலம் படத்தின் ரிலீஸை அவர் உறுதிப்படுத்தியுள்ளார். #Tamizhpadam2 #TP2

    அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்திற்கு பிறகு தமிழ்படம் 2.0 படத்தில் குத்துப்பாட்டு ஒன்றுக்கு ஆடியிருக்கும் கஸ்தூரி, இந்த படத்தில் இடம்பெற்றது பற்றி பேசினார். #TP2Point0 #TamizhPadam2
    நல்ல தலைவனை தேடிக் கொண்டிருக்கிறேன் ஒரு பக்கம் அரசியலில் அதிரடி கருத்துகள், இன்னொரு பக்கம் சினிமாவில் கவர்ச்சி அவதாரம் என்று பரபரப்பாக இருக்கும் கஸ்தூரியுடன் பேசும் போது, 

    தமிழ்படம்-2 படத்தில் டான்ஸ் ஆடிய அனுபவம்?

    அந்த படத்துக்கு பூஜை போட்ட உடனேயே எடுத்தது என்னுடைய பாடல் தான். பாடல் முழுக்க 3 சேலைகள் தான் எனக்கு காஸ்ட்யூம். ஆனால் செம கவர்ச்சியாக இருக்கும். முதல் பாகத்தில் நான் ஆடியதால் ஆஸ்திரேலியாவில் இருந்த என்னை அழைத்து செண்டிமெண்ட் ஆக ஆடவைத்து இருக்கிறார் சி.எஸ்.அமுதன்.

    அதிரடியாக பல வி‌ஷயங்கள் பேசுகிறீர்களே... இந்த துணிச்சல் எப்படி வந்தது?

    மரணத்தையே மூன்று முறை கூப்பிடும் தூரத்தில் சந்தித்துவிட்டேன். எனவே எனக்கு பயம் இல்லை.

    மகனுக்கு என்னை பற்றி கேட்டால் அம்மா என்று சொல்வான். அவ்வளவுதான் அவனுக்கு தெரியும். என் கணவர் உயிரை காப்பாற்றும் மருத்துவராக இருக்கிறார். அவர் இதைபற்றி கண்டுகொள்ளவே மாட்டார். வீட்டில் அமெரிக்க கலாசாரத்தை கொண்டவர்கள். அவர்கள் தனி மனித சுதந்திரத்தை பெரிதும் மதிப்பவர்கள்.



    உங்களை வைத்து அமைதிப்படை 3 எடுக்கலாமா?

    கொஞ்சம் பொறுங்கள். அமைதிப்படை சத்யராஜ் வேடத்துக்கு நிகரான ஒரு வேடத்தில் அக்கினி என்ற படத்தில் நடிக்கிறேன். இதில் நான் வில்லி அரசியல்வாதி.

    அரசியலில் இப்போது நான் ஒரு பார்வையாளராக, விமர்சகியாக இருக்கிறேன். நான் எதிர்பார்த்த மாற்றத்தை தருபவர் இன்னும் அகப்படவில்லை. அப்படி ஒரு நல்லவர் கிடைத்தால் நிச்சயம் வருவேன். இரட்டை வேடம் போடாமல் மனசாட்சிபடி நடப்பவரை தான் நான் தலைவராக ஏற்றுக்கொள்வேன்.

    நடிகர் ரஜினிக்கு நான் தீவிர விசிறி. ஆனால் அரசியலில் அவரது கொள்கைகளும், பேச்சுகளும் ஏற்புடையதாக இல்லை.

    திருமணத்துக்கு பின் நடிக்க வந்தாலும் பாடல், கவர்ச்சி வேடங்கள் என்று கலக்குகிறீர்கள்?

    கதாநாயகர்களை பார்த்து நீங்கள் இப்படி கேட்பதில்லை. ஆனா நடிகைகள் என்றால் மட்டும் திருமணமானாலே அக்கா, அண்ணியாக நடிக்க வேண்டுமா? என்னுடைய அழகையும், உடல் கட்டுக்கோப்பையும் வைத்து தான் இந்த மாதிரி வேடங்கள் வருகின்றன. எனக்கு இதில் சந்தோ‌ஷம் தான். #TP2Point0 #TamizhPadam2 #Kasthuri
    ×