search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எஸ்.வி.சேகர் ஜூன் 20ல் நேரில் ஆஜராக வேண்டும் - எழும்பூர் கோர்ட் சம்மன்
    X

    எஸ்.வி.சேகர் ஜூன் 20ல் நேரில் ஆஜராக வேண்டும் - எழும்பூர் கோர்ட் சம்மன்

    எஸ்.வி.சேகர் ஜூன் 20-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை எழும்பூர் கோர்ட் மாஜிஸ்திரேட் சம்மன் அனுப்பியுள்ளார். #SVShekher #EgmoreCourt #Summon
    சென்னை:

    நகைச்சுவை நடிகரும், பா.ஜ.க. பிரமுகருமான எஸ்.வி.சேகர், பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறான கருத்துக்களை தன் முகநூல் பக்கத்தில் வெளியிட்டார். இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது.

    புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் எஸ்.வி. சேகர் மீது, பெண் வன்கொடுமைச் சட்டப்பிரிவு உள்பட பல பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    இதற்கிடையே, இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் எஸ்.வி.சேகர் மனு தாக்கல் செய்துள்ளார்.

    அதேபோல, இவருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என்று பத்திரிகையாளர் முரளிகிருஷ்ணன் சின்னத்துரை, நக்கீரன் பிரகாஷ், ஜெ.கவின்மலர், பெண் வக்கீல்கள் சங்கம் உள்பட ஏராளமானோர் மனு தாக்கல் செய்தனர்.

    இதில் அவரது முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த சென்னை ஐகோர்ட், எஸ்.வி.சேகரை கைது செய்வதில் எந்தத் தடையும் இல்லை என உத்தரவிட்டது. ஆனாலும் போலீசார் அவரை இன்னும் கைது செய்யவில்லை.

    இந்நிலையில், ஜூன் 20-ல் சென்னை எழும்பூர் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என மாஜிஸ்திரேட் சம்மன் அனுப்பியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் அளித்துள்ள சம்மனில், ஜூன் 20-ம் தேதி காலை 10 மணிக்கு எழும்பூர் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #SVShekher #EgmoreCourt #Summon
    Next Story
    ×