search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "s.v.shekar"

    எஸ்.வி.சேகர் ஜூன் 20-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை எழும்பூர் கோர்ட் மாஜிஸ்திரேட் சம்மன் அனுப்பியுள்ளார். #SVShekher #EgmoreCourt #Summon
    சென்னை:

    நகைச்சுவை நடிகரும், பா.ஜ.க. பிரமுகருமான எஸ்.வி.சேகர், பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறான கருத்துக்களை தன் முகநூல் பக்கத்தில் வெளியிட்டார். இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது.

    புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் எஸ்.வி. சேகர் மீது, பெண் வன்கொடுமைச் சட்டப்பிரிவு உள்பட பல பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    இதற்கிடையே, இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் எஸ்.வி.சேகர் மனு தாக்கல் செய்துள்ளார்.

    அதேபோல, இவருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என்று பத்திரிகையாளர் முரளிகிருஷ்ணன் சின்னத்துரை, நக்கீரன் பிரகாஷ், ஜெ.கவின்மலர், பெண் வக்கீல்கள் சங்கம் உள்பட ஏராளமானோர் மனு தாக்கல் செய்தனர்.

    இதில் அவரது முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த சென்னை ஐகோர்ட், எஸ்.வி.சேகரை கைது செய்வதில் எந்தத் தடையும் இல்லை என உத்தரவிட்டது. ஆனாலும் போலீசார் அவரை இன்னும் கைது செய்யவில்லை.

    இந்நிலையில், ஜூன் 20-ல் சென்னை எழும்பூர் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என மாஜிஸ்திரேட் சம்மன் அனுப்பியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் அளித்துள்ள சம்மனில், ஜூன் 20-ம் தேதி காலை 10 மணிக்கு எழும்பூர் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #SVShekher #EgmoreCourt #Summon
    பெண் பத்திரிகையாளர்களை இழிவாக விமர்சித்தது தொடர்பான வழக்கில் எஸ்.வி.சேகரை ஜூன் முதல் வாரம் வரை கைது செய்ய உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. #SVEShekar #SC
    புதுடெல்லி:

    பெண் பத்திரிகையாளர்கள் குறித்து  பா.ஜ.க. பிரமுகரும், நடிகருமான எஸ்.வி. சேகர் சமூக வலைதளத்தில் இழிவான கருத்துக்களை பதிவிட்டிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின. இது சம்பந்தமாக போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதையடுத்து எஸ்.வி. சேகரை போலீசார் கைது செய்யக்கூடும் என தகவல் வெளியானது. ஆனால் இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை.

    இதற்கிடையே பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக கருத்து பதிவிட்ட எஸ்.வி.சேகர் மீது கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இந்திய குடியரசு கட்சியின் மாநில அமைப்பாளர் தலித் பாண்டியன் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், வருகிற ஜூலை மாதம் 5-ந் தேதி நடிகர் எஸ்.வி.சேகர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.



    இதற்கிடையே எஸ்.வி. சேகரின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையடுத்து உச்ச நீதிமன்றத்தை நாடினார். முன்ஜாமீன் கோரிய அவரது மேல்முறையீட்டு மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது எஸ்.வி.சேகரை ஜூன் மாதம் முதல் வாரம் வரை கைது செய்யக்கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மேலும், இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. #SVEShekar #SC
    ×