search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேலை வாய்ப்பு முகாம்"

    • வேலை வாய்ப்பு முகாம் அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வரும் 19-ந் தேதி நடத்தப்பட உள்ளது.
    • இம்முகாமில் அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. பணி நியமன ஆணைகளை வழங்க உள்ளார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட நிர்வாகம், ஈரோடு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மற்றும் ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலை ப்பள்ளியில் வரும் 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடத்தப்பட உள்ளது.

    இம்முகாமில் அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. பணி நியமன ஆணைகளை வழங்க உள்ளார். இவ்வேலை வாய்ப்பு முகாமில் 50-க்கும் மேற்பட்ட தனியார் துறை வேலையளிப்பவர்கள் கலந்து கொண்டு 1000-க்கும் மேற்பட்ட காலிப்பணி யிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர்.

    இம்முகாமில் 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பிளஸ்-2 தேர்ச்சி, பட்டதாரி கள், பட்டய ப்படிப்பு படித்தவர்கள், ஐடிஐ, தொழில் கல்வி பெற்ற வர்கள், பொறியியல் பட்டம், கணினி இயக்கு பவர்கள், தையல் கற்றவ ர்கள் என அனைத்து வித தகுதியுள்ள மாற்றுத்திற னாளி, வேலை நாடுநர்களும் கலந்து கொள்ளலாம்.

    முகாமில் கலந்து கொள்ள அனுமதி இலவ சமானதாகும். தமிழ்நாடு திறன் மேம்பாட்டு க்கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி களுக்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் தொழில் முனைவோர்க ளுக்கான ஆலோசனைகள், மாவட்ட முன்னோடி வங்கியின் வாயிலாக வங்கி கடன் குறித்த வழி காட்டுதல்கள் ஆகியன மேற்கொள்ளப்பட உள்ளது.

    ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்துடன் இணைந்து நடத்தப்படும் இவ்வேலை வாய்ப்பு முகாம், வேலை நாடுநர்கள் மற்றும் வேலை அளிப்பவர்களுக்கு முற்றிலும் இலவசமாக செயல்படுத்தப்படுகிறது.

    எனவே தனியார் துறை யில் பணிபுரிய ஆர்வமாக உள்ள அனைத்து மாற்றுத்தி றனாளிகளும் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறும், இம்முகாமின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு தனியார் துறையில் பணிய மர்த்தம் செய்யப்படும் வேலை நாடுநர்களின் வேலை வாய்ப்பு அலுவலக பதிவுஎண் ரத்து செய்யப்பட மாட்டாது என்றும் கலெக்டர் கிருஷ்ணணுண்ணி தெரிவித்துள்ளார்.

    மேலும் விவரங்களுக்கு ஈரோடு மாவட்ட மாற்றுத்திற னாளிகள் நல அலுவலகம் மற்றும் ஈரோடு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ அல்லது தொலைபேசி எண்: 9499055942, 94990 55943, 04242275860 அல்லது மின்னஞ்சல் முகவரி: erodemegajobfair@gmail.com வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம்.

    • பங்கேற்க கலெக்டர் அழைப்பு
    • வருகிற 11-ந் தேதி நடக்கிறது

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வேலூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் வி.ஐ.டி. பல்கலைக்கழகம் இணைந்து மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் 11-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 8.30 மணிமுதல் 3 மணிவரை வேலூர், வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது.

    முகாமில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளார்.

    இதில் 150 -க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் முகாமில் பங்கு பெற உள்ளனர்.

    10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பி.இ.டிகிரி, நர்சிங், பார்மசி ஆகிய கல்வி தகுதி தேர்ச்சி பெற்ற வேலை நாடுநர்கள் கலந்து கொள்ளலாம்.

    தனியார் துறைகளில் வேலை வாய்ப்பு பெறுபவர்களுக்கு அவர்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டது.

    தனியார்துறை பணிகளுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    விருப்பமுள்ளவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களை முன்பதிவு செய்து கொள்ளவும். மேலும் விவரங்களுக்கு 0416-2290042, 9499055896, 8610977602, 8778078130, 8148727787,9095559590 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். இவர் அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.

    • கலெக்டர் தகவல்
    • வருகிற 2-ந் தேதி நடக்கிறது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சிதுறை வேலை வாய்ப்பு பிரிவின் சார்நிலை அலுவலகங்களான அனைத்து மாவட்ட வேலை வாய்ப்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் ஒவ்வொரு மாதமும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

    அதன்அடிப்படையில் வருகிற 2-ந் தேதி அன்று ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

    இதில் பல முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. இந்த வேலைவாய்ப்பு முகாமில் 8,10,12ம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ மற்றும் பொறியியல் படித்தவர்கள் கலந்து கொள்ளலாம்.

    எனவே மேற்காணும் கல்வித்தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 2-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு ராணி ப்பேட்டையில் ஆற்காடு சாலையில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலக வளாகத்தில் செயல்படும் ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் நடைபெறும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன் பெறுமாறும், இந்த தனியார் வேலை வாய்ப்பு முகாமில் பணி நியமனம் பெறுப வர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்ப டமாட்டாது எனவும் கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

    • வேலை வாய்ப்பு முகாமில் 6 திருநங்கைகளும், 3 திருநம்பிகளும் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
    • பணி நியமன ஆணைகளை மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வழங்கினார்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தை சார்ந்த மூன்றாம் பாலினத்தவர்களுக்கான (திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள்) சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடத்தப்பட்டது.

    இதில் காஞ்சிபுரத்தைச் சார்ந்த 114 திருநங்கைகள் மற்றும் 3 திருநம்பிகள் மற்றும் 5 வேலையளிக்கும் தனியார் துறை நிறுவனங்களும் கலந்துகொள்ள விருப்பம் தெரிவித்தனர்.

    இதனைத் தொடர்ந்து நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் 6 திருநங்கைகளும், 3 திருநம்பிகளும் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

    அவர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வழங்கினார். அவருக்கு திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் நன்றி தெரிவித்தனர்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய துறை இயக்குனர் அருணகிரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மேலூர் அருகே வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.
    • 25-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களும் 402-க்கும் மேற்பட்ட இளைஞர்களும் கலந்து கொண்டனர்.

    மேலூர்

    மேலூர் அருகே உள்ள வண்ணாம்பாறை பட்டியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மேலூர், கொட்டாம்பட்டி வட்டாரங்கள் இணைந்து நடத்திய வட்டார அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் அங்குள்ள சமுதாய கூடத்தில் நடைபெற்றது. மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் காளிதாசன் முகாமை தொடங்கி வைத்து தேர்வு பெற்ற இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

    வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் மாவட்ட செயல் அலுவலர் ஜெயபிரகாஷ் கலந்து கொண்டார். மாநில ஊரக வாழ்வாதார இயக்க உதவி திட்ட அலுவலர் சின்னத்துரை வரவேற்புரை ஆற்றினார். இம்முகாமில் 25-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களும் 402-க்கும் மேற்பட்ட இளைஞர்களும் கலந்து கொண்டனர். மேலூர் வட்டார இயக்க மேலாளர் ராமு நன்றி கூறினார். மேலூர் மற்றும் கொட்டாம்பட்டி வட்டார ஒருங்கிணைப் பாளர்கள் முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தனர். மேலும் சமுதாய பணியாளர்களும் கலந்து கொண்டனர்.

    • தனியார் வேலை வாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது.
    • காலை 7 மணிக்கு வந்து நுழைவுப்படிவம் பெற்று வருகை பதிவேட்டில் பதிந்து கொள்ள வேண்டும்.

    மதுரை

    மதுரையில் போலீசார், தீயணைப்பு படை மற்றும் ஊர்க்காவல் படை ஆகியவற்றில் வேலை பார்க்கும் ஊழியர்களின் வாரிசுகளுக்கான தனியார் வேலை வாய்ப்பு முகாம் நாளை 25-ந் தேதி மற்றும் நாளை மறுநாள் 26-ந்தேதிகளில் நடக்க உள்ளது.

    மதுரை விமான நிலையம் அருகே வலையப ட்டியில் உள்ள நாகரத்தினம் அங்காளம்மாள் கலை அறிவியல் கல்லூரியில் காலை 8.30 மணி முதல் மாலை 5 மணி வரை வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.

    தமிழ்நாடு போலீசார் குடும்பத்தினருக்கான மெகா சிறப்பு வேலை வாய்ப்பு முகாமில் கடந்த ஆண்டு 230 தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன. 4009 பேர் கலந்து கொண்டனர். அவர்களில் 1054 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

    எனவே மதுரையில் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய 2 நாட்கள் மட்டும் நடக்கும் வேலை வாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள விரும்புவோர், காலை 7 மணிக்கு வந்து நுழைவுப்படிவம் பெற்று வருகை பதிவேட்டில் பதிந்து கொள்ள வேண்டும்.

    மேற்கண்ட தகவலை தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. ஆஸ்ரா கர்க், மதுரை சரக டி.ஐ.ஜி பொன்னி, போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    • 3,185 பேருக்கு அமைச்சர் ஆர்.காந்தி பணி ஆணை வழங்கினார்
    • குறைந்தபட்ச மாத சம்பளம் ரூ.10 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.25 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது

    வாலாஜா:

    வாலாஜாபேட்டையில் உள்ள அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம், தமிழ்நாடு ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் தி ஜி.கே.உலக பள்ளி ஆகியோர் இணைந்து நடத்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நேற்று அக்கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

    முகாமிற்கு ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார்.மகளிர் திட்ட இயக்குனர் நானிலதாசன் வரவேற்றார்.ஜிகே உலக பள்ளி மேலாண்மை இயக்குனர் வினோத் காந்தி, ஈஸ்வரப்பன் எம்எல்ஏ, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி, ஒன்றிய குழு தலைவர்கள் வெங்கட்ரமணன், வடிவேலு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு நடைபெற்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு பெற்றவர்களுக்கு பணி ஆணைகளை நேற்று மாலை 4.00 மணிவரை நடைபெற்ற முகாமில் 131 தொழிற் நிறுவனங்கள் கலந்துகொண்டது.இதில் வேலை நாடுனர்கள் ஆண்கள் 8,347,பெண்கள் 14,342 என மொத்தம் 22,689 நபர்கள் முகாமில் கலந்து கொண்டனர்.இதில் 122 மாற்றுத்திறனாளிகளும் அடங்குவர். இவர்களில் 28 மாற்றுத்திறனாளிகளும் 3157 நபர்களும் என மொத்தமாக 3,185 நபர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.குறைந்தபட்ச மாத சம்பளம் ரூ.10,000/-முதல் அதிகபட்சமாக ரூ.25,000/- வரை நிறுவனங்கள் தேர்வானவர்களுக்கு வழங்கவுள்ளது.

    நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை லோகநாயகி, துணை இயக்குநர் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அருணகிரி, உதவி இயக்குநர்கள் பரமேஸ்வரி, செந்தில்குமார், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவிதா, வருவாய் கோட்டாட்சியர் வினோத்குமார், தி ஜிகே உலக பள்ளி மேலாண்மை இயக்குநர்சந்தோஷ் காந்தி, நகரமன்றத் தலைவர்கள் ஹரிணிதில்லை, சுஜாதா வினோத், முகமது அமீன், மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் சரவணக்குமார், கல்லூரி முதல்வர் சீனிவாசன் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சித்துறை, மாற்றுத்திறனாளி நலத்துறை, மகளிர் திட்டம், தமிழ்நாடு ஊரக/நர்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகிய துறைச்சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • வருகிற 18-ந்தேதி நடக்கிறது
    • கலெக்டர் வளர்மதி ஆய்வு

    வாலாஜா:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே உள்ள அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலை கல்லூரியில் வருகின்ற 18-ந்தேதி (சனிக்கிழமை) அன்று நடைபெற உள்ள மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

    இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து ராணிப்பேட்டை கலெக்டர் வளர்மதி நேரில் பார்வையிட்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

    இந்த ஆய்வின் போது வருவாய் கோட்டாட்சியர் வினோத்குமார், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, வாலாஜாப்பேட்டை நகரமன்ற தலைவர் ஹரிணி தில்லை, வட்டார போக்குவரத்து அலுவலர் ராமலிங்கம், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சரவணன், தாசில்தார் நடராஜன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.

    • செய்யது அம்மாள் என்ஜினீயரிங் கல்லூரியில் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நாளை மறுநாள் நடக்கிறது.
    • மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்தும் தனியார்துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் வருகிற 18-ந்தேதி (சனிக்கிழமை) லாந்தை செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியில் நடக்கிறது.

    அமைச்சர் ராஜ கண்ணப்பன் தலைமையில் நடக்கும் வேலை வாய்ப்பு முகாமில் 100-க்கும் மேற்பட்ட பல்வேறு முன்னணி தனியார் நிறுவ னங்கள் கலந்துகொண்டு வேலை நாடுநர்களை தேர்வு செய்ய இருக்கின்றன.

    ராமநாதபுரம் மாவட்ட த்தை சேர்ந்த வேலை வாய்ப்பற்ற 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை படித்தவர்களும், ஐ.டி.ஐ., டிப்ளமோ, பொறியியல் பட்டதாரிகளும், முதுகலை, இளங்கலை பட்டதாரி ஆசிரியர்கள், செவிலியர் மற்றும் லேப் டெக்னீசியன் கல்வித்தகுதியுடைய அனைவரும் இம்முகாமில் கலந்துகொண்டு பயன் பெறலாம்.

    இந்த முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள தனியார் நிறுவனங்கள் ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது ramnademployment2020@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ, தொடர்பு கொள்ளலாம்.

    இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி யமர்த்தம் செய்யப்படும் நபர்களின் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு எக்கா ரணத்தைக் கொண்டும் ரத்து செய்யப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்படுகிறது.

    எனவே வேலை நாடுநர்கள் தங்களது முழு பயோ டேட்டா, அனைத்து அசல் கல்விச்சான்றுகள், குடும்ப அட்டை, ஆதார் அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் இத்தனியார்துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயனடை யலாம்.

    மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

    • தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாதம் தோறும் 3-வது வெள்ளிக்கிழமை நடைபெறும்.
    • இந்த மாதத்திற்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 17-ந் தேதி நடைபெற உள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தனியார் துறை நிறுவனங்களும் தனியார் துறையில் பணிபுரிய விருப்பமுள்ள மனுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாதம் தோறும் 3-வது வெள்ளிக்கிழமை நடைபெறும்.

    இந்த மாதத்திற்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 17-ந் தேதி நடைபெற உள்ளது.

    இந்த முகாம் முற்றிலும் இலவசமானது. வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. தகுதியும் விருப்பமும் உள்ளோர் அன்று காலை 10:30 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும் முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளது.
    • எழுத படிக்கத் தெரிந்தவா்கள் முதல் பட்டதாரிகள் வரை மற்றும் தையல் பயிற்சி பெற்றவா்கள் பங்கேற்கலாம்.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம் வருகிற 17-ந்தேதி நடைபெற உள்ளது. இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம் வருகிற 17-ந்தேதி காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளது.

    இந்த முகாமில் தனியாா் துறை வேலையளிப்பவா்கள் பங்கேற்று தங்களுக்குத் தேவையான நபா்களைத் தோ்வு செய்யவுள்ளனா். ஆகவே வேலைநாடுநா்கள் தங்களது வேலை வாய்ப்பு அலுவலக பதிவு அட்டை மற்றும் சுய தகவல் படிவத்துடன் முகாமில் பங்கேற்கலாம்.அதேவேளையில், வேலையளிப்போரும் தங்களுக்குத் தேவையான காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில் இந்த முகாமில் பங்கேற்பதை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    இதில் எழுத படிக்கத் தெரிந்தவா்கள் முதல் முதுநிலை பட்டதாரிகள் வரை ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்தவா்கள் மற்றும் தையல் பயிற்சி பெற்றவா்கள் பங்கேற்கலாம். தகுதியிருப்பின் வேலை வாய்ப்பற்றோா் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம். தனியாா் துறைகளில் பணியில் சேருவதால் தங்களின் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்பட மாட்டாது. இந்தப்பணி முற்றிலும் இலவசமானதாகும். இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை 0421-2999152, 94990-55944 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • பணி நியமன ஆணை வழங்கும் விழா நடைபெற்றது.
    • 25 கம்பெனிகள் பங்கு பெற்றன. இதில் சுமார் 500 பேர் கலந்து கொண்டதில் 125 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டம், இலக்கியம்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட நிர்வாகம், மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம் நடத்தும் தருமபுரி வட்டார அளவிலான தனியார் வேலை வாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் மற்றும் பணி நியமன ஆணை வழங்கும் விழா நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு உதவி திட்ட அலுவலர் லோகநாதன் தலைமை தாங்கினார். வேலைவாய்ப்பு முகாமில் 25 கம்பெனிகள் பங்கு பெற்றன. இதில் சுமார் 500 பேர் கலந்து கொண்டதில் 125 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் மகளிர் திட்ட உதவி அலுவலர் ராஜேஷ், வட்டார மேலாளர்கள் கலைச்செல்வி, பிரதீப் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    ×