search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூரில் தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம்  வருகிற 17-ந் தேதி நடக்கிறது
    X

    கோப்புபடம்.

    திருப்பூரில் தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம் வருகிற 17-ந் தேதி நடக்கிறது

    • மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளது.
    • எழுத படிக்கத் தெரிந்தவா்கள் முதல் பட்டதாரிகள் வரை மற்றும் தையல் பயிற்சி பெற்றவா்கள் பங்கேற்கலாம்.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம் வருகிற 17-ந்தேதி நடைபெற உள்ளது. இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம் வருகிற 17-ந்தேதி காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளது.

    இந்த முகாமில் தனியாா் துறை வேலையளிப்பவா்கள் பங்கேற்று தங்களுக்குத் தேவையான நபா்களைத் தோ்வு செய்யவுள்ளனா். ஆகவே வேலைநாடுநா்கள் தங்களது வேலை வாய்ப்பு அலுவலக பதிவு அட்டை மற்றும் சுய தகவல் படிவத்துடன் முகாமில் பங்கேற்கலாம்.அதேவேளையில், வேலையளிப்போரும் தங்களுக்குத் தேவையான காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில் இந்த முகாமில் பங்கேற்பதை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    இதில் எழுத படிக்கத் தெரிந்தவா்கள் முதல் முதுநிலை பட்டதாரிகள் வரை ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்தவா்கள் மற்றும் தையல் பயிற்சி பெற்றவா்கள் பங்கேற்கலாம். தகுதியிருப்பின் வேலை வாய்ப்பற்றோா் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம். தனியாா் துறைகளில் பணியில் சேருவதால் தங்களின் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்பட மாட்டாது. இந்தப்பணி முற்றிலும் இலவசமானதாகும். இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை 0421-2999152, 94990-55944 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×