search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தனியாா் துறை"

    • மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளது.
    • எழுத படிக்கத் தெரிந்தவா்கள் முதல் பட்டதாரிகள் வரை மற்றும் தையல் பயிற்சி பெற்றவா்கள் பங்கேற்கலாம்.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம் வருகிற 17-ந்தேதி நடைபெற உள்ளது. இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம் வருகிற 17-ந்தேதி காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளது.

    இந்த முகாமில் தனியாா் துறை வேலையளிப்பவா்கள் பங்கேற்று தங்களுக்குத் தேவையான நபா்களைத் தோ்வு செய்யவுள்ளனா். ஆகவே வேலைநாடுநா்கள் தங்களது வேலை வாய்ப்பு அலுவலக பதிவு அட்டை மற்றும் சுய தகவல் படிவத்துடன் முகாமில் பங்கேற்கலாம்.அதேவேளையில், வேலையளிப்போரும் தங்களுக்குத் தேவையான காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில் இந்த முகாமில் பங்கேற்பதை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    இதில் எழுத படிக்கத் தெரிந்தவா்கள் முதல் முதுநிலை பட்டதாரிகள் வரை ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்தவா்கள் மற்றும் தையல் பயிற்சி பெற்றவா்கள் பங்கேற்கலாம். தகுதியிருப்பின் வேலை வாய்ப்பற்றோா் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம். தனியாா் துறைகளில் பணியில் சேருவதால் தங்களின் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்பட மாட்டாது. இந்தப்பணி முற்றிலும் இலவசமானதாகும். இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை 0421-2999152, 94990-55944 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்துவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றன.
    • 69 இடங்களில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கட்டுமானத் தொழிலாளா் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள 2,933 தொழிலாளா்களுக்கு ரூ.63.20 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்வழங்கும் விழா, தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்துவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றன.

    இந்தக் கூட்டத்துக்கு, செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வி.கணேசன், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் தலைமை வகித்தனா். இதில் அமைச்சா் சி.வி.கணேசன் பேசியதாவது:- தமிழகத்தில் தற்போது வரையில் 69 இடங்களில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டுள்ளது. இதன் மூலமாக 1.12 லட்சம் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. இதில், செங்கல்பட்டு மாவட்டத்தில் நடத்தப்பட்டு முகாமில் அதிக அளவாக 75 ஆயிரம் இளைஞா்கள் பங்கேற்றனா். இதில், 7,852 பேருக்கு அன்றைய தினமே வேலைவாய்ப்புக்கான ஆணை வழங்கப்பட்டது. இதற்கு அடுத்தபடியாக ஒசூரில் நடைபெற்ற முகாமில் 25 ஆயிரம் போ் பங்கேற்ற நிலையில் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. உதகையில் நடைபெற்ற முகாமில் குறைந்த அளவாக 5 ஆயிரம் போ் மட்டுமே பங்கேற்ற நிலையில் 1,400 பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. திருப்பூரில் வரும் 2023 ம் ஆண்டில் நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் ஒரு லட்சம் இளைஞா்கள் பங்கேற்க வேண்டும். இதற்காக அனைத்து துறை அலுவலா்களும் சிறப்பாகப் பணியாற்ற வேண்டும் என்றாா். இதுதொடா்பாக துறை சாா்ந்த அலுவலா்களுக்கு பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினாா்.

    இந்த ஆய்வின்போது திருப்பூா் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத், திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் க.செல்வராஜ், மேயா் என்.தினேஷ்குமாா், மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி, வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடு இயக்குநா் கோ.வீரராகவ ராவ், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளா் வாரியத் தலைவா் பொன்குமாா், சாா் ஆட்சியா் ஸ்ருதன் ஜெய்நாராயணன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

    ×