search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Job placement camp"

    • வருகிற 25-ந்தேதி ஆற்காட்டில் நடக்கிறது
    • கலெக்டர் தகவல்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் , வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவை சார்பில், முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ,

    படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பை பெரும் நோக்கில் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 25-ந்தேதி (சனிக்கிழமை) அன்று காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை ஆற்காடு வரதராசுலு செட்டியார் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது.

    இந்த முகாமில் 100-க்கும் மேற்பட்ட தனியார்துறை முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்பிட தங்களுக்கு தேவையான தகுதியான நபர்களை தேர்வு செய்து, பணி நியமனம் செய்ய உள்ளனர்.

    இந்த வேலைவாய்ப்பு முகாமில் 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் 10, 12ம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ,பட்டபடிப்பு ,நர்சிங், பொறியியல், எம்.பி.ஏ உள்பட கல்வித் தகுதிகளை உடைய வேலை தேடுவோர் கலந்து கொண்டு, தங்களுக்கு தேவையான வேலையினை தங்கள் அளவிலேயே தேர்வு செய்து பயன்பெறலாம்.

    விருப்பமும், தகுதியும் உள்ள வேலை தேடுவோர் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், தற்குறிப்பு மற்றும் அனைத்து கல்விச் சான்றுகளுடன் முகாமில் கலந்து கொண்டு வேலை வாய்ப்பினை பெறலாம்.

    மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    • 4-ந் தேதி கம்பத்தில் உள்ள தனியார் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
    • முகாமில் பங்கேற்க எந்தவித கட்டணமும் இல்லை என்று கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

    தேனி:

    தேனி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் மாவட்ட ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் வருகிற 4-ந் தேதி கம்பத்தில் உள்ள தனியார் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

    150க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு வேலை தேடுபவர்களை தேர்வு செய்ய உள்ளனர். 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை மற்றும் பி.இ. டிப்ளமோ, நர்சிங் டெய்லரிங், டிரைவர் மற்றும் இதர தகுதி உடைய அனைவரும் இம்முகாமில் கலந்து கொள்ளலாம். முகாமில் பங்கேற்க எந்தவித கட்டணமும் இல்லை என்று கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

    • 200க்கும் மேற்பட்ட முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர்.
    • கணினி இயக்குபவர்கள், ஓட்டுநர்கள், தையல் கற்றவர்கள் என அனைத்து வித தகுதியாளர்களும் கலந்து கொள்ளலாம்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    டாக்டர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு திருப்பூர் மாவட்டம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் மகளிர் திட்ட அலுவலகம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் தாராபுரம் மகாராணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2.11.2023 அன்று காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறவுள்ளது. இம்முகாமில் 200க்கும் மேற்பட்ட முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர். 10ம் வகுப்பு, பிளஸ்-2, ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி, பொறியியல் மற்றும் தொழிற் கல்வி பெற்றவர்கள், கணினி இயக்குபவர்கள், ஓட்டுநர்கள், தையல் கற்றவர்கள் என அனைத்து வித தகுதியாளர்களும் கலந்து கொள்ளலாம்.

    இம்முகாமில் கலந்து கொள்ள அனுமதி இலவசமானதாகும். இம்முகாமில் பங்கேற்க www.tnprivatejobs.tn.gov.in, என்ற இணையதள முகவரியில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.இம்முகாமில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் தொழில்முனை வோர்களுக்கான ஆலோசனைகள், மாவட்ட முன்னோடி வங்கியின் வாயிலாக வங்கி கடன் குறித்த வழிகாட்டுதல்கள் ஆகியன மேற்கொள்ளப்பட உள்ளது.

    மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தினை 0421-2999152 அல்லது 94990 55944 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார். 

    • சோளிங்கரில் நாளை நடக்கிறது
    • கலெக்டர் தகவல்

    ராணிப்பேட்டை:

    சோளிங்கரில் நாளை தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இது தொடர்பாக ராணிப்பேட்டை கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகிய துறைகள் இணைந்து வேலைவாய்ப்பு முகாம் நாளை நடைபெற உள்ளது.

    சோளிங்கரில் எத்திராஜம்மாள் முதலியாண்டார் அரசினர் மாதிரி மகளிர் மேநிலைப்பள்ளியில் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறுகிறது.

    முகாமில் முன்னணி நிறுவனங்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட தனி யார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

    இந்த முகாமில் 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் 10, 12 ம் வகுப்புகள்,ஐ.டி.ஐ., டிப்ளமோ , டிகிரி, நர்சிங், என்ஜினீயரிங் உள்ளிட்ட கல்வித் தகுதிகளை உடைய வேலை தேடுவோர் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் அனைத்து கல்விச் சான்றுகளுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    இந்த சிறப்பு முகாமில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு வேலைவாய்ப்பு முகாமில் தேர்வான நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்க உள்ளார்.

    இளைஞர்கள், பெண்கள் கலந்து கொண்டு வேலைவாய்ப்பினை பெற்று பயன்பெறலாம்.

    இவ்வாறு கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

    • வேலை வாய்ப்பற்ற ஆண், பெண்களுக்கு பல்வேறு முன்னணி நிறுவனங்கள் மூலம் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் பொருட்டு வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.
    • மாவட்ட அளவிலான தனியார் துறை இளைஞர் திறன் மற்றும் வேலை வாய்ப்பு முகாம் புதுச்சத்திரம் ஏ.கே.சமுத்திரம் ஞானமணி கல்லூரி வளாகத்தில் அடுத்த மாதம் 2-ந்தேதி நடத்துகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    வேலை வாய்ப்பு

    நாமக்கல் மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தீனதயாள் உபத்யாய ஊரக திறன் பயிற்சி திட்டத்தின் கீழ் மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் வாயிலாக படித்து வேலை வாய்ப்பற்ற ஆண், பெண்களுக்கு பல்வேறு முன்னணி நிறுவனங்கள் மூலம் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் பொருட்டு வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.

    மாவட்ட இயக்க மேலாண்மை அலகு மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் இணைந்து மாவட்ட அளவிலான தனியார் துறை இளைஞர் திறன் மற்றும் வேலை வாய்ப்பு முகாம் புதுச்சத்திரம் ஏ.கே.சமுத்திரம் ஞானமணி கல்லூரி வளா கத்தில் அடுத்த மாதம் 2-ந்தேதி நடத்துகிறது.

    இதில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த படித்து வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் கலந்துகொண்டு பொருத்த மான நிறுவனங்களை தேர்வு செய்து பயிற்சி மற்றும் தனியார் நிறுவ னங்களில் வேலை வாய்ப்பு பெற்றுக்கொள்ளலாம்.

    பதிவு

    முகாமில் பங்கேற்று பணியா ளர்களை தேர்வு செய்ய விரும்பு கிற தனியார் நிறுவனங்கள் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வா தார இயக்கம் திட்ட இயக்குநர் அலுவலகத்தில் தங்களது நிறுவனத்தின் பெயரை வருகிற 1-ந்தேதிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • நாளை நடக்கிறது
    • 15-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நடைபெறுகிறது.

    முகாமில் 15-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன.

    மேலும் இந்த முகாமில் 250-க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    8-ம் வகுப்பு முதல் பொறியியல் படிப்பு வரை படித்தவர்கள் வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ளலாம். முகாமில் கலந்து கொள்ள வரும்போது பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 4, ரேசன் கார்டு, சாதிச்சான்று, கல்வித் தகுதி சான்று ஆகியவற்றின் நகல்களை எடுத்து வரவேண்டும்.

    முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் பதிவு செய்யலாம். கூடுதல் விவரங்களை பெற 04175-233381 என்ற மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக கைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தகவல்களை பெறலாம்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த முகாமை பயன்படுத்தி கொள்ளுமாறு கலெக்டர் பா.முருகேஷ் கேட்டுக்கொண்டார்.

    • வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் பெண்கள் பயன்பெறும் வகையில் முதற்கட்டமாக இன்று‌ சேலம் சோனா கல்லூரி வளாகத்தில் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.
    • முன்னணி வேலை அளிக்கும் நிறுவனங்கள் தங்களின் காலி பணியிடங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் பெண்கள் பயன்பெறும் வகையில் முதற்கட்டமாக இன்று சேலம் சோனா கல்லூரி வளாகத்தில் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.

    முகாமில் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கி சேவைகள், காப்பீடு,மருத்துவம், கட்டுமானம் உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட முன்னணி வேலை அளிக்கும் நிறுவனங்கள் தங்களின் காலி பணியிடங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்தனர்.

    இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து வழங்கினர்.

    அவர்களில் சிலருக்கு சில நிறுவனத்தினர் நேர்முக தேர்வை உடனடியாக நடத்தினர்.

    இந்த முகாமில் 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல், செவிலியர், ஆசிரியர், தொழிற்கல்வி போன்ற அனைத்து விதமான கல்வித் தகுதியும் உள்ளவர்கள் பங்கேற்றனர்

    மேலும் அடுத்த கட்டமாக 16-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை எடப்பாடி மற்றும் ஆத்தூர் ஆகிய இடங்களில் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

    இன்றைய முகாமில் பங்கேற்றவர்களுக்கு கலெக்டர் கார்மேகம் கலந்து கொண்டு வேலைவாய்ப்புக்கான ஆணைகளை வழங்கினார்.

    • பங்கேற்க கலெக்டர் அழைப்பு
    • வருகிற 11-ந் தேதி நடக்கிறது

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வேலூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் வி.ஐ.டி. பல்கலைக்கழகம் இணைந்து மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் 11-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 8.30 மணிமுதல் 3 மணிவரை வேலூர், வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது.

    முகாமில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளார்.

    இதில் 150 -க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் முகாமில் பங்கு பெற உள்ளனர்.

    10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பி.இ.டிகிரி, நர்சிங், பார்மசி ஆகிய கல்வி தகுதி தேர்ச்சி பெற்ற வேலை நாடுநர்கள் கலந்து கொள்ளலாம்.

    தனியார் துறைகளில் வேலை வாய்ப்பு பெறுபவர்களுக்கு அவர்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டது.

    தனியார்துறை பணிகளுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    விருப்பமுள்ளவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களை முன்பதிவு செய்து கொள்ளவும். மேலும் விவரங்களுக்கு 0416-2290042, 9499055896, 8610977602, 8778078130, 8148727787,9095559590 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். இவர் அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.

    • கலெக்டர் தகவல்
    • வருகிற 2-ந் தேதி நடக்கிறது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சிதுறை வேலை வாய்ப்பு பிரிவின் சார்நிலை அலுவலகங்களான அனைத்து மாவட்ட வேலை வாய்ப்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் ஒவ்வொரு மாதமும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

    அதன்அடிப்படையில் வருகிற 2-ந் தேதி அன்று ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

    இதில் பல முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. இந்த வேலைவாய்ப்பு முகாமில் 8,10,12ம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ மற்றும் பொறியியல் படித்தவர்கள் கலந்து கொள்ளலாம்.

    எனவே மேற்காணும் கல்வித்தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 2-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு ராணி ப்பேட்டையில் ஆற்காடு சாலையில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலக வளாகத்தில் செயல்படும் ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் நடைபெறும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன் பெறுமாறும், இந்த தனியார் வேலை வாய்ப்பு முகாமில் பணி நியமனம் பெறுப வர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்ப டமாட்டாது எனவும் கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

    • மேலூர் அருகே வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.
    • 25-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களும் 402-க்கும் மேற்பட்ட இளைஞர்களும் கலந்து கொண்டனர்.

    மேலூர்

    மேலூர் அருகே உள்ள வண்ணாம்பாறை பட்டியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மேலூர், கொட்டாம்பட்டி வட்டாரங்கள் இணைந்து நடத்திய வட்டார அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் அங்குள்ள சமுதாய கூடத்தில் நடைபெற்றது. மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் காளிதாசன் முகாமை தொடங்கி வைத்து தேர்வு பெற்ற இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

    வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் மாவட்ட செயல் அலுவலர் ஜெயபிரகாஷ் கலந்து கொண்டார். மாநில ஊரக வாழ்வாதார இயக்க உதவி திட்ட அலுவலர் சின்னத்துரை வரவேற்புரை ஆற்றினார். இம்முகாமில் 25-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களும் 402-க்கும் மேற்பட்ட இளைஞர்களும் கலந்து கொண்டனர். மேலூர் வட்டார இயக்க மேலாளர் ராமு நன்றி கூறினார். மேலூர் மற்றும் கொட்டாம்பட்டி வட்டார ஒருங்கிணைப் பாளர்கள் முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தனர். மேலும் சமுதாய பணியாளர்களும் கலந்து கொண்டனர்.

    • 3,185 பேருக்கு அமைச்சர் ஆர்.காந்தி பணி ஆணை வழங்கினார்
    • குறைந்தபட்ச மாத சம்பளம் ரூ.10 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.25 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது

    வாலாஜா:

    வாலாஜாபேட்டையில் உள்ள அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம், தமிழ்நாடு ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் தி ஜி.கே.உலக பள்ளி ஆகியோர் இணைந்து நடத்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நேற்று அக்கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

    முகாமிற்கு ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார்.மகளிர் திட்ட இயக்குனர் நானிலதாசன் வரவேற்றார்.ஜிகே உலக பள்ளி மேலாண்மை இயக்குனர் வினோத் காந்தி, ஈஸ்வரப்பன் எம்எல்ஏ, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி, ஒன்றிய குழு தலைவர்கள் வெங்கட்ரமணன், வடிவேலு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு நடைபெற்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு பெற்றவர்களுக்கு பணி ஆணைகளை நேற்று மாலை 4.00 மணிவரை நடைபெற்ற முகாமில் 131 தொழிற் நிறுவனங்கள் கலந்துகொண்டது.இதில் வேலை நாடுனர்கள் ஆண்கள் 8,347,பெண்கள் 14,342 என மொத்தம் 22,689 நபர்கள் முகாமில் கலந்து கொண்டனர்.இதில் 122 மாற்றுத்திறனாளிகளும் அடங்குவர். இவர்களில் 28 மாற்றுத்திறனாளிகளும் 3157 நபர்களும் என மொத்தமாக 3,185 நபர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.குறைந்தபட்ச மாத சம்பளம் ரூ.10,000/-முதல் அதிகபட்சமாக ரூ.25,000/- வரை நிறுவனங்கள் தேர்வானவர்களுக்கு வழங்கவுள்ளது.

    நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை லோகநாயகி, துணை இயக்குநர் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அருணகிரி, உதவி இயக்குநர்கள் பரமேஸ்வரி, செந்தில்குமார், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவிதா, வருவாய் கோட்டாட்சியர் வினோத்குமார், தி ஜிகே உலக பள்ளி மேலாண்மை இயக்குநர்சந்தோஷ் காந்தி, நகரமன்றத் தலைவர்கள் ஹரிணிதில்லை, சுஜாதா வினோத், முகமது அமீன், மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் சரவணக்குமார், கல்லூரி முதல்வர் சீனிவாசன் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சித்துறை, மாற்றுத்திறனாளி நலத்துறை, மகளிர் திட்டம், தமிழ்நாடு ஊரக/நர்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகிய துறைச்சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • வருகிற 18-ந்தேதி நடக்கிறது
    • கலெக்டர் வளர்மதி ஆய்வு

    வாலாஜா:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே உள்ள அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலை கல்லூரியில் வருகின்ற 18-ந்தேதி (சனிக்கிழமை) அன்று நடைபெற உள்ள மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

    இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து ராணிப்பேட்டை கலெக்டர் வளர்மதி நேரில் பார்வையிட்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

    இந்த ஆய்வின் போது வருவாய் கோட்டாட்சியர் வினோத்குமார், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, வாலாஜாப்பேட்டை நகரமன்ற தலைவர் ஹரிணி தில்லை, வட்டார போக்குவரத்து அலுவலர் ராமலிங்கம், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சரவணன், தாசில்தார் நடராஜன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.

    ×