search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேலை வாய்ப்பு முகாம்"

    • வருகிற 25-ந்தேதி ஆற்காட்டில் நடக்கிறது
    • கலெக்டர் தகவல்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் , வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவை சார்பில், முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ,

    படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பை பெரும் நோக்கில் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 25-ந்தேதி (சனிக்கிழமை) அன்று காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை ஆற்காடு வரதராசுலு செட்டியார் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது.

    இந்த முகாமில் 100-க்கும் மேற்பட்ட தனியார்துறை முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்பிட தங்களுக்கு தேவையான தகுதியான நபர்களை தேர்வு செய்து, பணி நியமனம் செய்ய உள்ளனர்.

    இந்த வேலைவாய்ப்பு முகாமில் 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் 10, 12ம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ,பட்டபடிப்பு ,நர்சிங், பொறியியல், எம்.பி.ஏ உள்பட கல்வித் தகுதிகளை உடைய வேலை தேடுவோர் கலந்து கொண்டு, தங்களுக்கு தேவையான வேலையினை தங்கள் அளவிலேயே தேர்வு செய்து பயன்பெறலாம்.

    விருப்பமும், தகுதியும் உள்ள வேலை தேடுவோர் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், தற்குறிப்பு மற்றும் அனைத்து கல்விச் சான்றுகளுடன் முகாமில் கலந்து கொண்டு வேலை வாய்ப்பினை பெறலாம்.

    மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    • 4-ந் தேதி கம்பத்தில் உள்ள தனியார் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
    • முகாமில் பங்கேற்க எந்தவித கட்டணமும் இல்லை என்று கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

    தேனி:

    தேனி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் மாவட்ட ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் வருகிற 4-ந் தேதி கம்பத்தில் உள்ள தனியார் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

    150க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு வேலை தேடுபவர்களை தேர்வு செய்ய உள்ளனர். 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை மற்றும் பி.இ. டிப்ளமோ, நர்சிங் டெய்லரிங், டிரைவர் மற்றும் இதர தகுதி உடைய அனைவரும் இம்முகாமில் கலந்து கொள்ளலாம். முகாமில் பங்கேற்க எந்தவித கட்டணமும் இல்லை என்று கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

    • 200க்கும் மேற்பட்ட முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர்.
    • கணினி இயக்குபவர்கள், ஓட்டுநர்கள், தையல் கற்றவர்கள் என அனைத்து வித தகுதியாளர்களும் கலந்து கொள்ளலாம்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    டாக்டர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு திருப்பூர் மாவட்டம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் மகளிர் திட்ட அலுவலகம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் தாராபுரம் மகாராணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2.11.2023 அன்று காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறவுள்ளது. இம்முகாமில் 200க்கும் மேற்பட்ட முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர். 10ம் வகுப்பு, பிளஸ்-2, ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி, பொறியியல் மற்றும் தொழிற் கல்வி பெற்றவர்கள், கணினி இயக்குபவர்கள், ஓட்டுநர்கள், தையல் கற்றவர்கள் என அனைத்து வித தகுதியாளர்களும் கலந்து கொள்ளலாம்.

    இம்முகாமில் கலந்து கொள்ள அனுமதி இலவசமானதாகும். இம்முகாமில் பங்கேற்க www.tnprivatejobs.tn.gov.in, என்ற இணையதள முகவரியில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.இம்முகாமில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் தொழில்முனை வோர்களுக்கான ஆலோசனைகள், மாவட்ட முன்னோடி வங்கியின் வாயிலாக வங்கி கடன் குறித்த வழிகாட்டுதல்கள் ஆகியன மேற்கொள்ளப்பட உள்ளது.

    மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தினை 0421-2999152 அல்லது 94990 55944 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார். 

    • மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
    • வேலை அளிப்பவர்களுக்கு முற்றிலும் இலவசமாக செயல்படுத்தப்படுகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட நிர்வா கம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையம், தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து வரும் 30-ந் தேதி ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி யில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

    இம்முகாமை அமைச்சர் சு.முத்துசாமி பங்கேற்று பணி நியமன ஆணைகளை வழங்க உள்ளார். இவ்வேலை வாய்ப்பு முகா மில் 200-க்கும் மேற்பட்ட தனியார் துறை வேலை அளிப்பவர்கள் கலந்து கொண்டு 10 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட காலிப்பணி யிடங்களுக்கு தங்கள் நிறுவனங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர்.

    8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பிளஸ்-2 தேர்ச்சி, பட்டதாரிகள், பட்டயப் படிப்பு படித்தவர்கள், ஐ.டி.ஐ., டிப்ளமோ, பொறி யியல் பட்டம் படித்தவர்கள், கணினி இயக்குபவர்கள், ஓட்டுநர்கள், செவிலியர், மருந்தாளுநர் பயிற்சி முடித்தவர்கள் என அனை த்து கல்வித் தகுதியினரும் கலந்து கொள்ளலாம்.

    இம்முகாமில் கலந்து கொள்ள அனுமதி இலவசமானதாகும். இம்முகாமில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு, அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தின் மூலம் வேலை வாய்ப்பு பெறுவதற்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் தொழில் முனைவோர்களு க்கான ஆலோசனைகள், மாவட்ட முன்னோடி வங்கியின் வாயிலாக வங்கி கடன் குறித்த வழிகாட்டு தல்கள் ஆகியன மேற்கொ ள்ளப்பட உள்ளது.

    வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மூலம் நடத்தப்படும் இவ்வேலை வாய்ப்பு முகாம், வேலை நாடுநர்கள் மற்றும் வேலை அளிப்பவர்களுக்கு முற்றிலும் இலவசமாக செயல்படுத்தப்படுகிறது.

    எனவே ஈரோடு மாவட்ட த்தில் தனியார் துறையில் பணிபுரிய ஆர்வமாக உள்ள அனைவரும் இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடை யுமாறும்,

    இம்முகாமின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு தனியார் துறையில் பணிய மர்த்தம் செய்யப்படும் வேலைநாடுநர்களின் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்பட மாட்டாது.

    மேலும் விவரங்களுக்கு ஈரோடு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்தினை நேரிலோ அல்லது தொலைபேசி எண் 0424-2275860, 94990 55942 மின்னஞ்சல்முகவரி: erodemegajobfair@gmail.com வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம்.

    • கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.
    • முகாமில் மாற்றுத்திறனாளிகளும் கலந்து கொண்டு பணி நியமன ஆணைகளை பெற்றனர்.

    சங்கரன்கோவில்:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தென்காசி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை யினர் ஆகியோர் இணைந்து சங்கரன்கோவில் ராஜபாளையம் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடத்தியது.

    முகாமிற்கு தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். தனுஷ்குமார் எம்.பி., தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செய லாளர் ராஜா எம்.எல்.ஏ., டாக்டர் சதன் திருமலைக்கு மார் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் பத்மா வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் வீரராகவராவ் திட்ட விளக்க உரையாற்றினார். நெல்லை வேலைவாய்ப்பு மண்டல இணை இயக்குனர் டாக்டர் சண்முகசுந்தரம் வரவேற்றார். இதில் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தகுதி உடைய நபர்களை நேர்காணல் செய்து பணி நியமன ஆணைகளை வழங்கினர்.

    இதில் மாற்றுத்திறனாளிகளும் கலந்து கொண்டு பணி நியமன ஆணைகளை பெற்றனர். இதில் பள்ளி செயலாளர் டாக்டர் சுப்பாராஜ், பள்ளி முதல்வர் சுருளிநாதன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ரம்யா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயபிரகாஷ் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், தனியார் நிறுவ னங்களின் அதிகாரி கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • சோளிங்கரில் நாளை நடக்கிறது
    • கலெக்டர் தகவல்

    ராணிப்பேட்டை:

    சோளிங்கரில் நாளை தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இது தொடர்பாக ராணிப்பேட்டை கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகிய துறைகள் இணைந்து வேலைவாய்ப்பு முகாம் நாளை நடைபெற உள்ளது.

    சோளிங்கரில் எத்திராஜம்மாள் முதலியாண்டார் அரசினர் மாதிரி மகளிர் மேநிலைப்பள்ளியில் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறுகிறது.

    முகாமில் முன்னணி நிறுவனங்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட தனி யார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

    இந்த முகாமில் 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் 10, 12 ம் வகுப்புகள்,ஐ.டி.ஐ., டிப்ளமோ , டிகிரி, நர்சிங், என்ஜினீயரிங் உள்ளிட்ட கல்வித் தகுதிகளை உடைய வேலை தேடுவோர் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் அனைத்து கல்விச் சான்றுகளுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    இந்த சிறப்பு முகாமில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு வேலைவாய்ப்பு முகாமில் தேர்வான நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்க உள்ளார்.

    இளைஞர்கள், பெண்கள் கலந்து கொண்டு வேலைவாய்ப்பினை பெற்று பயன்பெறலாம்.

    இவ்வாறு கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

    • வேலை வாய்ப்பற்ற ஆண், பெண்களுக்கு பல்வேறு முன்னணி நிறுவனங்கள் மூலம் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் பொருட்டு வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.
    • மாவட்ட அளவிலான தனியார் துறை இளைஞர் திறன் மற்றும் வேலை வாய்ப்பு முகாம் புதுச்சத்திரம் ஏ.கே.சமுத்திரம் ஞானமணி கல்லூரி வளாகத்தில் அடுத்த மாதம் 2-ந்தேதி நடத்துகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    வேலை வாய்ப்பு

    நாமக்கல் மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தீனதயாள் உபத்யாய ஊரக திறன் பயிற்சி திட்டத்தின் கீழ் மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் வாயிலாக படித்து வேலை வாய்ப்பற்ற ஆண், பெண்களுக்கு பல்வேறு முன்னணி நிறுவனங்கள் மூலம் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் பொருட்டு வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.

    மாவட்ட இயக்க மேலாண்மை அலகு மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் இணைந்து மாவட்ட அளவிலான தனியார் துறை இளைஞர் திறன் மற்றும் வேலை வாய்ப்பு முகாம் புதுச்சத்திரம் ஏ.கே.சமுத்திரம் ஞானமணி கல்லூரி வளா கத்தில் அடுத்த மாதம் 2-ந்தேதி நடத்துகிறது.

    இதில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த படித்து வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் கலந்துகொண்டு பொருத்த மான நிறுவனங்களை தேர்வு செய்து பயிற்சி மற்றும் தனியார் நிறுவ னங்களில் வேலை வாய்ப்பு பெற்றுக்கொள்ளலாம்.

    பதிவு

    முகாமில் பங்கேற்று பணியா ளர்களை தேர்வு செய்ய விரும்பு கிற தனியார் நிறுவனங்கள் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வா தார இயக்கம் திட்ட இயக்குநர் அலுவலகத்தில் தங்களது நிறுவனத்தின் பெயரை வருகிற 1-ந்தேதிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • நாளை நடக்கிறது
    • 15-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நடைபெறுகிறது.

    முகாமில் 15-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன.

    மேலும் இந்த முகாமில் 250-க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    8-ம் வகுப்பு முதல் பொறியியல் படிப்பு வரை படித்தவர்கள் வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ளலாம். முகாமில் கலந்து கொள்ள வரும்போது பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 4, ரேசன் கார்டு, சாதிச்சான்று, கல்வித் தகுதி சான்று ஆகியவற்றின் நகல்களை எடுத்து வரவேண்டும்.

    முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் பதிவு செய்யலாம். கூடுதல் விவரங்களை பெற 04175-233381 என்ற மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக கைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தகவல்களை பெறலாம்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த முகாமை பயன்படுத்தி கொள்ளுமாறு கலெக்டர் பா.முருகேஷ் கேட்டுக்கொண்டார்.

    • கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
    • அமைச்சர் முத்துசாமி பங்கேற்று பணிநியமன ஆணைகளை வழங்க உள்ளார்.

    ஈரோடு:

    டாக்டர். கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு ஈரோடு மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து வரும் 12-ந் தேதி கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாபெரும் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

    இம்முகாமில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி பங்கேற்று பணிநியமன ஆணைகளை வழங்க உள்ளார்.

    இவ்வேலை வாய்ப்பு முகாமில் ஈரோடு, கோவை, திருப்பூர், சென்னை, சேலம் ஆகிய மாவட்டங்களில் இரு ந்து 200-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு பல்வேறு துறை சார்ந்த, 10,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர்.

    8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பிளஸ்-2 தேர்ச்சி, பட்டதாரிகள், பட்டயப் படிப்பு படித்தவர்கள், ஐ.டி.ஐ., டிப்ளமோ, பொ றியியல் பட்டம் படித்தவர்கள், மருத்துவத்துறை சா ர்ந்த செவிலியர்கள், ஆய்வ க உதவியாளர்கள், லேப் டெக்னிசீயன்கள், கணினி இயக்குபவர்கள், ஓட்டுநர்கள் என அனைத்து வித கல்வித் தகுதியினரும் கல ந்து கொள்ளலாம்.

    இம்முகாமில் கலந்து கொள்ள அனுமதி இலவசமானதாகும். இம்முகாமில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு, அயல்நா ட்டு வேலை வாய்ப்பு நிறுவ னத்தின் மூலம் வேலை வாய்ப்பு பெறுவதற்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் தொழில்முனை வோர்களுக்கான ஆலோசனைகள், ஆகியன மேற்கொ ள்ளப்பட உள்ளது.

    வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் மூலம் நடத்தப்படும் இவ்வேலை வாய்ப்பு முகாம் வேலைநாடு நர்கள் மற்றும் வேலை அளிப்பவர்களுக்கு முற்றிலும் இலவசமாக செயல்படுத்தப்படுகிறது.

    இம்முகாமின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு தனியார்துறையில் பணி யமர்த்தம் செய்யப்படும் வேலைநாடு நர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்ப டமாட்டாது.

    மேலும் விவரங்களுக்கு ஈரோடு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழி ல்நெறி வழிகாட்டும் மைய த்தினை நேரிலோ அல்லது தொலைபேசி எண்.0424-2275860, 9499055942 அல்லது மின்னஞ்சல் முகவ ரி. erodemegajobfair@gmail.com வாயிலாகவும் தொ டர்பு கொள்ளலாம்.

    எனவே ஈரோடு மாவட்டத்தில் தனியார் துறையில் பணிபுரிய ஆர்வமாக உள்ள அனைவரும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார். 

    • வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் பெண்கள் பயன்பெறும் வகையில் முதற்கட்டமாக இன்று‌ சேலம் சோனா கல்லூரி வளாகத்தில் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.
    • முன்னணி வேலை அளிக்கும் நிறுவனங்கள் தங்களின் காலி பணியிடங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் பெண்கள் பயன்பெறும் வகையில் முதற்கட்டமாக இன்று சேலம் சோனா கல்லூரி வளாகத்தில் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.

    முகாமில் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கி சேவைகள், காப்பீடு,மருத்துவம், கட்டுமானம் உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட முன்னணி வேலை அளிக்கும் நிறுவனங்கள் தங்களின் காலி பணியிடங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்தனர்.

    இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து வழங்கினர்.

    அவர்களில் சிலருக்கு சில நிறுவனத்தினர் நேர்முக தேர்வை உடனடியாக நடத்தினர்.

    இந்த முகாமில் 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல், செவிலியர், ஆசிரியர், தொழிற்கல்வி போன்ற அனைத்து விதமான கல்வித் தகுதியும் உள்ளவர்கள் பங்கேற்றனர்

    மேலும் அடுத்த கட்டமாக 16-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை எடப்பாடி மற்றும் ஆத்தூர் ஆகிய இடங்களில் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

    இன்றைய முகாமில் பங்கேற்றவர்களுக்கு கலெக்டர் கார்மேகம் கலந்து கொண்டு வேலைவாய்ப்புக்கான ஆணைகளை வழங்கினார்.

    • மதுரையில் வேலை வாய்ப்பு முகாம் வருகிற 5-ந்தேதி நடக்கிறது.
    • தனியார் நிறுவனங்கள் http://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது சுய விவரங்களை பதிவேற்றம் செய்து பயன்பெறலாம்.

    மதுரை

    மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய துணை இயக்குநர் சண்முகசுந்தர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:-

    கலைஞர் நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 100 தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம்கள் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறையால் நடத்தப்பட உள்ளது. இதன் தொடர்ச்சியாக மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக வரும் 5-ந்தேதி (சனிக்கிழமை) அன்று மதுரை கோரிப்பாளையம் அமெரிக்கன் கல்லூரியில் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

    இந்த முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் நிறுவனங்கள் அலுவ லகத்தை தொடர்பு கொண்டு தங்களது நிறுவனத்திற்கு தேவையான காலிப்பணியிட விவரத்து டன் நேரிலோ அல்லது ddemptmdu@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ தெரிவிக்கலாம்.

    இந்த முகாமில் 200 -க்கும் மேற்பட்ட தனியார் முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.

    இந்த முகாமில் அனைத்து கல்வித்தகுதியுடைய 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, 12ம் வகுப்பு, பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ மற்றும் பொறியியல் பட்டதாரிகள் அனைவரும் கலந்து கொண்டு தங்களது கல்வித் தகுதிக்கேற்ற தனியார் துறை நிறுவனங்களில் பணி நியமனம் பெறலாம்.

    இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள வேலைநாடுநர்கள் தங்களது அனைத்து கல்விச் சான்றிதழ்களின் நகல்கள், ஆதார் அட்டை நகல் மற்றும் சுயவிவரப் படிவம் ஆகிய வற்றுடன் முகாமிற்கு வரவேண்டும்.

    மேலும், இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலைநாடுநர்கள் மற்றும் வேலையளிக்கும் தனியார் நிறுவனங்கள் http://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது சுய விவரங்களை பதிவேற்றம் செய்து பயன் பெறலாம்.

    மேலும் விவரங்களுக்கு மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் தொலைபேசி எண். 0452 -2566022 வாயிலாக தொடர்பு கொள்ளவும்.

    இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளு மாறும், இந்த முகாம் மூலம் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவ தால் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எவ்விதத்திலும் பாதிக்காது.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
    • வேலை அளிப்பவர்களுக்கு முற்றிலும் இலவசமாக செயல்படுத்தப்படுகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறிவழி காட்டும் மையத்தில் ஒவ்வொரு மாதமும் 3-ம் வெள்ளிக் கிழமை அன்று தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

    இவ்வேலை வாய்ப்பு முகாமில் பல்வேறு தனியார் துறை வேலை அளிப்பவர்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான எழுதப்படிக்க தெரிந்த நபர்கள் முதல் பட்டப் படிப்பு படித்த நபர்கள் வரை மற்றும் டெய்லர்கள், கணினி இயக்குபவர்கள், தட்டச்சர்கள், ஓட்டுநர்கள் போன்ற பணிகளுக்கு தகுதியுள்ள நபர்களை தேர்வு செய்து தனியார் துறையில் பணியமர்த்தம் செய்யப்பட்டு வருகின்றனர்.

    இதன் மூலம் மாதந்தோறும் 100-க்கும் மேற்பட்ட பயனாளிகள் பயனடைந்து வருகின்றனர். மேலும் திறன்பயிற்சி அளிக்கும் நிறுவனங்களும் கலந்து கொண்டு திறன் பயிற்சிக்கு தேவையான நபர்களை தேர்வு செய்து பயிற்சி அளித்து வருகின்றனர்.

    அதன்படி வரும் 21-ந் தேதி (வெள்ளிக் கிழமை) தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் காலை 10 மணிக்கு ஈரோடு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறிவழி காட்டும் மையத்தில் நடைபெற உள்ளது.

    வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் மூலம் நடத்தப்படும் இவ்வேலை வாய்ப்பு முகாம் வேலை நாடுநர்கள் மற்றும் வேலை அளிப்பவர்களுக்கு முற்றிலும் இலவசமாக செயல்படுத்தப்படுகிறது.

    எனவே ஈரோடு மாவட்டத்தில் தனியார் துறையில் பணிபுரிய ஆர்வமாக உள்ள அனைவரும் இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறும்,

    இம்முகாமின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு தனியார் துறையில் பணிய மர்த்தம் செய்யப்படும் வேலை நாடுநர்களின் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்பட மாட்டாது என்றும் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

    மேலும் விவரங்களுக்கு ஈரோடு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறிவழி காட்டும் மையத்தினை நேரிலோ அல்லது தொலைபேசி எண்.0424-2275860, மின்னஞ்சல் முகவரி:erodemegajobfair@gmail.com வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம்.

    ×