என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் வேலை வாய்ப்பு முகாமிற்கான -அரங்குகள் அமைக்கும் பணி தீவிரம்
    X

    சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் வேலை வாய்ப்பு முகாமிற்கான -அரங்குகள் அமைக்கும் பணி தீவிரம்

    • 'மெகா' தனியார் வேலைவாய்ப்பு முகாம் - சிக்கண்ணா அரசு கல்லுாரி வளாகத்தில் நடக்கிறது.
    • 34 பல்வேறு துறை சார்ந்த வேலைவாய்ப்பு தரும் நிறுவனங்கள் நுாற்றுக்கணக்கில் பங்கேற்கவுள்ளன.

    திருப்பூர் :

    திருப்பூரில் வரும், 11ம் தேதி நடைபெறும் மெகா வேலை வாய்ப்பு முகாமில், 25 ஆயிரத்துக்கும் மேற்ப ட்டோருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் முயற்சி மேற்கொ ள்ளப்பட்டுள்ளது.

    திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து, திருப்பூர் மாநகராட்சி சார்பில் 'மெகா' தனியார் வேலைவாய்ப்பு முகாம் வரும், 11ம் தேதி காலை, 9:00 முதல் மாலை, 5:00 மணி வரை, சிக்கண்ணா அரசு கல்லுாரி வளாகத்தில் நடக்கிறது.

    தகவல் தொழி ல்நுட்பம், கணினி துறை சார்ந்த நிறுவனங்கள், ஆட்டோமொபைல், மெக்கானிக்கல், கெமிக்கல், ஓட்டல், சுற்றுலா துறை, ஷிப்பிங், போக்குவரத்து, தளவாட உற்பத்தி நிறுவனங்கள், ஜவுளி, வங்கி துறை சார்ந்த நிறுவனங்கள் என, 34 பல்வேறு துறை சார்ந்த வேலைவாய்ப்பு தரும் நிறுவனங்கள் நுாற்றுக்கணக்கில் பங்கேற்க வுள்ளன.

    Next Story
    ×