search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெங்கடாஜலபதி"

    • வெங்கடாசலபதிக்கு நிவேதனம் செய்யும் பொருட்களில் சர்க்கரைப் பொங்கல் மற்றும் வடை இடம் பெறுவதுண்டு.
    • பூஜை முடிந்த பிறகு பக்திப் பாடல்களைப் பாடி வணங்கி, வழிபாடு செய்வர்.

    வெங்கடாசலபதிக்கு நிவேதனம் செய்யும் பொருட்களில் சர்க்கரைப் பொங்கல் மற்றும் வடை இடம் பெறுவதுண்டு.

    சிலர் பாயாசமும் படைப்பர்.

    வெண்ணெயும், சர்க்கரையும் கலந்த கலவையான நவநீதமும் படைப்பதுண்டு.

    அன்புடன் இலையை அர்ப்பணித்தாலும் ஏற்பேன் என்று கீதையில் கண்ணன் கூறியது இங்கே கருதத்தக்கது.

    பெருமாளுக்குப் படையலிட்டுப் பூஜை செய்யும்போது உறவினர்களையும், நண்பர்களையும் அழைத்து கலந்து கொள்ள செய்ய வேண்டும்.

    எல்லோரும் பக்திப் பெருக்குடன், கோவிந்தா, கோவிந்தா என்று கோஷமிட வேண்டும்.

    பூஜை முடிந்த பிறகு பக்திப் பாடல்களைப் பாடி வணங்கி, வழிபாடு செய்வர்.

    பிறகு வீட்டிற்கு வந்துள்ள விருந்தினர்களுக்கு உணவளித்து, தாம்பூலம் கொடுப்பர்.

    இப்படி அவரவர் இருப்பிடத்திலேயே கோவிந்தா என்ற திருநாமத்தைக் கூறிய படி இருந்தால் திருமாலே அந்த இல்லத்துக்கு எழுந்தருள்வார்

    • பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை
    • பவித்ர உற்சவம் திருவிழா வருகிற 22-ந்தேதி தொடங்குகிறது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர கடற்கரை வளா கத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் வெங்கடாஜலபதி கோவில் கட்டப்பட்டு உள்ளது. இந்த கோவிலில் பவித்ர உற்சவம் திருவிழா வருகிற 22-ந்தேதி தொடங்குகிறது. இந்த திருவிழா 25-ந் தேதி வரை 4 நாட்கள் நடக்கிறது.

    இந்த பவித்ர உற்சவத்தை திருமலை திருப்பதி தேவஸ் தானத்தின் ஆகம ஆலோச கர் வேணுகோபால தீட்சிதர் தலைமையில் திருப்பதி வெங்கடாஜலபதி கோவி லில் உள்ள 7 அர்ச்சகர்கள் நடத்துகிறார்கள். பவித்ர உற்சவம் நடப்பதற்கு முன்பு கோவிலில் ஆழ்வார் திரு மஞ்சனம் நிகழ்ச்சி நடை பெறுவது வழக்கம். அதன்படி நாளை மறுநாள் (20-ந்தேதி) ஆழ்வார் திருமஞ்சனம் நிகழ்ச்சி நடக்கிறது. இதை யொட்டி அன்றைய தினம் காலை 6 மணி முதல் 8 மணி வரை கோவில் நடை அடைக்கப்படுகிறது. இந்த 2 மணி நேரம் பக்தர்கள் கோவி லுக்குள் தரிச னத்துக்கு செல்ல அனும திக்கப்பட மாட்டார்கள். இந்த தகவலை கன்னியா குமரியில் உள்ள திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் ஆய்வாளர் ஹேமதர்ரெட்டி தெரிவித்து உள்ளார்.

    • 22-ந் தேதி தொடங்கி 4 நாட்கள் நடக்கிறது
    • வாகனத்தில் எழுந்தருளி 4 மாடவீதிகளில் பவனி வரும் விமான பிரகார உற்சவம் நடக்கிறது

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி விவே கானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தா னத்தின் சார்பில் வெங்கடா ஜலபதி கோவில் கட்டப்பட்டு உள்ளது. கோவில் கட்டப்பட்ட பிறகு 2-வது முறையாக பவித்ர உற்சவம் திருவிழா வருகிற 22-ந்தேதி தொடங்கு கிறது. இந்த விழா 25-ந்தேதி வரை 4 நாட்கள் நடக்கிறது.

    பவித்ர உற்சவத்தின் போது ஸ்ரீதேவி பூதேவியுடன் வெங்கடாஜலபதி அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் எழுந்தருளி 4 மாடவீதிகளில் பவனி வரும் விமான பிரகார உற்சவம் நடக்கிறது. இதனை திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஆகம ஆலோசகர் வேணுகோபால தீட்சிதர் தலைமையில் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் உள்ள 7அர்ச்சகர் கள் நடத்துகிறார்கள். பவித்ர உற்சவத்துக்கான ஏற்பாடுகளை சென்னையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான உள்ளூர் மற்றும் தகவல் ஆலோசனை மைய தலைவர் சேகர்ரெட்டி தலை மையில் தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பி னர்கள் மற்றும் துணை செயல் அலுவலர் விஜய குமார், கன்னியாகுமரி வெங்க டாஜலபதி கோவில் ஆய்வாளர் ஹேமதர்ரெட்டி, பக்த சேவா அமைப்பைச் சேர்ந்த ஜெயராம் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

    • திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெங்க டாஜலபதி கோவிலில்
    • தீபாவளி ஆஸ்தானம் நிகழ்ச்சி நேற்று நடந்தது

    நாகர்கோவில் : கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெங்கடாஜலபதி கோவிலில், தீபாவளி ஆஸ்தானம் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று காலையில் சுப்ரபாதம் நிகழ்ச்சியும் அதைதெ் தொடர்ந்து விசேஷ பூஜைகள் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. பின்னர் சுவாமிக்கு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பூலங்கி சேவை நடந்தது.அதைத்தொடர்ந்து அலங்கார தீபாராதனை யும், அர்ச்சகர்கள் பாராயணம் பாடும் நிகழ்ச்சியும் நடந்தது. மாலையில் தோமாலை சேவையும், இரவு ஏகாந்த சேவையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடு களை கன்னியாகுமரி திருமலை திருப்பதி தேவஸ்தான வெங்கடாஜல பதி கோவில் ஆய்வாளர் ஹேமதர்ரெட்டி மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

    • காலை 7 மணிக்கு தொடங்கிய உண்டியல் எண்ணிக்கை மாலை 3 மணி வரை நீடித்தது
    • 3 சன்னதிகள் முன்பும் 3 பெரிய உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளன.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் கட்டப்பட்டு உள்ளது. இந்த கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள்.

    அவர்கள் தங்களது நேர்ச்சை நிறைவேறுவ தற்காக வேண்டி கோவில் உண்டியலில் பணம், காசு, தங்கம், வெள்ளி மற்றும் வெளிநாட்டு பணங்களை காணிக்கையாக செலுத்து வது வழக்கம். இதற்காக வெங்கடாஜலபதி, பத்மாவதி தாயார், ஆண்டாள் ஆகிய 3 சன்னதிகள் முன்பும் 3 பெரிய உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளன.

    இந்த உண்டியலில் உள்ள காணிக்கை எண்ணும்பணி சென்னையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான துணை செயல் அலுவலர் விஜய குமார், கன்னியாகுமரி திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவில் ஆய்வாளர் ஹேமதர் ரெட்டி, கோவில் பக்தர்கள் சங்க நிர்வாகி ஜெயராம் மற்றும் திருமலை திருப்பதி தேவஸ்தான விஜிலன்ஸ் அதிகாரிகள் முன்னிலையில் நடந்தது. உண்டியல் எண்ணும் பணியில் திருமலை திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் மற்றும் மதுரையைச் சேர்ந்த சேவகர்கள் ஈடுபட்டனர். காலை 7 மணிக்கு தொடங்கிய உண்டியல் எண்ணிக்கை மாலை 3 மணி வரை நீடித்தது. இதில் வருமானமாக ரூ.6 லட்சத்து 40 ஆயிரத்து 494 வசூல் ஆகி இருந்தது.

    • 3-ந்தேதி தொடங்குகிறது
    • கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 28-ந்தேதி கும்பாபி ஷேகம் நடத்தப்பட்டு திறக்கப்பட்டது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் வெங்கடாஜலபதி கோவில் கட்டப்பட்டுஉள்ளது.

    இந்த கோவில் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 28-ந்தேதி கும்பாபி ஷேகம் நடத்தப்பட்டு திறக்கப்பட்டது. இந்த கோவில் கட்டி 3 ஆண்டுகள் ஆகிறது. இந்த கோவில் கட்டப்பட்ட பிறகுமுதல் முறையாக இந்த கோவிலில் பவித்ர உற்சவம் என்ற திருவிழா வருகிற 3-ந்தேதி தொடங்குகிறது. இந்த திருவிழா 6-ந்தேதி வரை 4 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. 3-ந்தேதி காலை 9 மணிக்கு ஆச்சாரிய ருத்வின்யம் நிகழ்ச்சியும் மாலை 6.30 மணிக்கு அங்குர அர்ப்பனமும்நடக்கிறது.

    2-ம் திருவிழாவான 4-ந்தேதி காலை 8.30 மணிக்கு யாகசாலை பூஜை ஆரம்பமாகிறது. பின்னர் காலை 10.30 மணிக்கு உற்சவர்களுக்கு ஸ்னப்பன திருமஞ்சனம் சாத்துதலும் அபிஷேகமும் நடக்கிறது. மாலை 6.30 மணிக்குயாகசாலை பூஜைநடக்கிறது.3-ம்திருவிழாவான 5-ந்தேதி காலை 8.30 மணிக்கு யாகசாலை பூஜையும் 10.30 மணிக்கு உற்சவர்களுக்கு ஸ்னப்பன திருமஞ்சனம் சாத்துதலும் அபிஷேகமும் நடக்கிறது.

    பகல் 12.00 மணிக்கு பவித்ர சமர்ப்பனமும் மாலை 6.30 மணிக்கு யாகசாலை பூஜையும் நடக்கிறது. 4-ம் திருவிழா வான 6-ந்தேதி காலை 8.30 மணிக்கு யாகசாலை பூஜையும் 10.30 மணிக்கு உற்சவர்களுக்கு ஸ்னப்பன திருமஞ்சனம் சாத்துதலும் அபிஷேகமும் நடக்கிறது. மாலை 5.30 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவியுடன் வெங்கடாஜலபதி அலங்கரிக்கப்பட்ட வாக னத்தில் எழுந்தருளி நான்குமாடவீதிகளில் பவனி வரும் விமான பிரகார உற்சவம் நடக்கிறது. பின்னர் 6.30 மணிக்கு யாகசாலை பூஜையும் இரவு 8.30 மணிக்கு பூர்ணா குதி மற்றும் சிறப்பு மணி ஒலியுடன் விசேஷ பூஜையும் நடக்கிறது.

    அதைத்தொடர்ந்து பகுமானம் அர்ச்சனையும் வெங்கடாஜலபதி சுவாமி யின் தலையில் அணி விக்கப்படும் கிரீடம் மூலம் பக்தர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கும் நிகழ்ச்சியும் 9 மணிக்கு ஏகாந்த சேவை யும் நடக்கிறது. இந்த பவித்ர உற்சவத்தை திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் வைகானசா ஆகம ஆலோ சகர் ஸ்ரீ விஷ்ணு பட்டாச் சார்யலு தலைமையில் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் உள்ள 7 அர்ச்ச கர்கள் நடத்துகிறார்கள்.

    இந்த பவித்ர உற்சவத்துக் கான ஏற்பாடுகளை சென் னையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான உள்ளூர் மற்றும் தகவல் ஆலோசனை மைய தலைவர் சேகர் ரெட்டி தலைமையில் தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் கன்னியாகுமரி வெங்கடா ஜலபதி கோவில் ஆய்வாளர் சாய்கிருஷ்ணா ஆகியோர் செய்து வருகிறார்கள்.

    • அதைத் தொடர்ந்து கன்னியாகுமரியில் உள்ள திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் பிரம்மோற்சவ திருவிழாவும், அதற்கு முன்பாக அடுத்தமாதம் (நவம்பர் 3-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை, 4 நாட்கள் பவித்ர உற்சவ திருவிழாவும் நடத்தப்பட உள்ளது.
    • அதைத்தொடர்ந்து சீனிவாசத் திருக்கல்யாண வைபவமும் நடத்தப்பட உள்ளது.

    கன்னியாகுமரி, அக்.20-

    திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கன்னியாகுமரி விவேகானந்த புரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் ரூ.22 கோடி செலவில் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் கட்டப்பட்டுள்ளது.

    இந்த கோவிலின் மூலஸ்தானத்தில் ஸ்ரீதேவி- பூதேவியுடன் வெங்கடேச பெருமாள் எழுந்தருளியுள்ளார். இது தவிர பத்மாவதி தாயார் சன்னதி, ஆண்டாள் சன்னதி, கருட பகவான் சன்னதி ஆகிய சன்னதிகளும் தனித்தனியாக கட்டப்பட்டுள்ளன. கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுக்கு வரும் பக்தர்கள் இந்த கோவிலில் திருப்பதியை போன்று பிரம்மோற்சவ திருவிழா நடத்த வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இதைத்தொடர்ந்து பக்தர்களின்கோரிக்கையை ஏற்று இந்த கோவிலில் பிரம்மோற்சவ திருவிழா நடத்த திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடுகள் செய்து வருகிறது. அந்த அடிப்படையில் பிரம்மோற்சவ திருவிழாவின் போது 10 நாட்களும் காலை மற்றும் மாலை நேரங்களில் கோவிலை சுற்றி வெங்கடாஜலபதி சுவாமி பவனி வருவதற்காக 12 வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

    இந்த நிலையில் திருப்பதியில் உள்ள திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் 7 தலைநாகம் கொண்ட பெரிய சேஷ வாகனம், அனுமந்த வாகனம், அன்ன வாகனம் ஆகிய 3 புதிய வாகனங்கள் கன்னியாகுமரியில் உள்ள திருப்பதி வெங்கடாஜபதி கோவிலுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் கொண்டு வரப்பட்டுள்ளது.

    இது தவிர 5 தலை நாகம் கொண்ட சின்னசேஷ வாகனம், சிம்மவாகனம் ஆகிய மேலும் 2 புதிய வாகனங்கள் திருப்பதி திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் இருந்து கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மீதி உள்ள வாகனங்கள் பக்தர்கள்மற்றும் நன்கொடையாளர்கள் மூலம் கும்பகோணத்தில் வடிவமைக்கப்பட்டு விரைவில் கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலுக்கு கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதைத் தொடர்ந்து கன்னியாகுமரியில் உள்ள திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் பிரம்மோற்சவ திருவிழாவும், அதற்கு முன்பாக அடுத்தமாதம் (நவம்பர் 3-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை, 4 நாட்கள் பவித்ர உற்சவ திருவிழாவும் நடத்தப்பட உள்ளது. அதைத்தொடர்ந்து சீனிவாசத் திருக்கல்யாண வைபவமும் நடத்தப்பட உள்ளது.

    • 24-ந்தேதி நடக்கிறது
    • கன்னியாகுமரி திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் இயங்குகிறது

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வெங்கடாஜலபதி கோவில் கட்டப்பட்டு உள்ளது.

    இந்தக் கோவில் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 27-ந்தேதி திறக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்த கோவில் கட்டப்பட்டு 3 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் திருப்பதியில் ஆண்டு தோறும் ஐப்பசி மாதத்தில் வரும் நரக சதுர்த்தி அன்று தீபாவளி ஆஸ்தானத்தை தேவஸ்தானம் நடத்தி வருவது போல் கன்னியாகுமரியில் உள்ள வெங்கடாஜலபதி கோவிலிலும் தீபாவளி ஆஸ்தானம் நிகழ்ச்சி வருகிற 24-ந்தேதி நடக்கிறது.

    இதையொட்டி அன்று காலையில் சுப்ரபாதம் நிகழ்ச்சியும் அதைத் தொடர்ந்து சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடக்கிறது. பின்னர் சுவாமிக்கு புதிய பட்டாடை அணிவித்து பல வண்ண மலர்களால் அலங்க ரித்து பூலங்கி சேவை நடக்கிறது. அதைத்தொ டர்ந்து அலங்கார தீபாராத னையும் அர்ச்சகர்கள் பாராயணம் பாடும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    மாலையில் தோமாலை சேவையும், இரவு ஏகாந்த சேவையும் நடக்கிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்வார்கள். இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி திருமலை திருப்பதி தேவஸ்தான வெங்கடாஜலபதி கோவில் ஆய்வாளர் சாய் கிருஷ்ணா தலைமையில் பக்தர்கள் செய்து வருகிறார்கள்.

    • மாலை நேரங்களில் கோவிலை சுற்றி வெங்கடாஜலபதி சுவாமி பவனி வருவதற்காக 12 வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
    • 5 தலை நாகம் கொண்ட சின்ன சேஷ வாகனம், சிம்மவாகனம் ஆகிய புதிய வாகனங்கள்

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுக்கு வரும் பக்தர்கள் இந்த கோவிலில் பிரம்மோற்சவ திருவிழா நடத்த வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இதைத்தொடர்ந்து பக்தர்களின் கோரிக்கையை ஏற்று இந்த கோவிலில் பிரம்மோற்சவ திருவிழா நடத்த திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடுகள் செய்து வருகிறது. அந்த அடிப்படையில் பிரம்மோற்சவ திருவிழாவின் போது 10 நாட்களும் காலை மற்றும் மாலை நேரங்களில் கோவிலை சுற்றி வெங்கடாஜலபதி சுவாமி பவனி வருவதற்காக 12 வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

    இதற்காக திருப்பதியில் இருப்பது போன்று பெரிய சேஷ வாகனம், சின்ன சேஷ வாகனம், அன்ன வாகனம், சிம்ம வாகனம், முத்துப்பந்தல் வாகனம், கற்பக விருட்ச வாகனம், அனுமான் வாகனம், கஜவாகனம், சூரிய சந்திர பிரப வாகனம், கருட வாகனம், குதிரை வாகனம், மோகினி பல்லக்கு ஆகிய 12 வாகனங்கள் பொதுமக்கள் மற்றும் பக்தர்களிடம் இருந்து நன்கொடையாக பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. மேலும் ஒவ்வொரு வாகனங்களும் சராசரியாக குறைந்தபட்சம் ரூ.50ஆயிரம் மதிப்பீட்டில் தயாரிக்கப்பட உள்ளது. மொத்தம் ரூ.6லட்சம் செலவில் இந்த வாகனங்களை வடிவமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    மேலும் இந்த வாகனங்களை கும்ப கோணத்தில் மர சிற்ப சிற்பிகள் மூலம் வடிவமைக்கவும் திட்டமிடப்பட்டுஉள்ளது. இந்த நிலையில் திருப்பதியில் உள்ள திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் 7 தலைநாகம் கொண்ட பெரிய சேஷ வாகனம், அனுமந்த வாகனம், அன்ன வாகனம் ஆகிய 3 புதிய வாகனங்கள் கன்னியாகுமரியில் உள்ள திருப்பதி வெங்கடாஜபதி கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.

    இது தவிர 5 தலை நாகம் கொண்ட சின்ன சேஷ வாகனம், சிம்மவாகனம் ஆகிய புதிய வாகனங்கள் இன்னும் ஒரு சில நாட்களில் திருப்பதி திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் இருந்து கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலுக்கு கொண்டு வரப்பட உள்ளது. மீதி உள்ள வாகனங்கள் பக்தர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் மூலம் கும்பகோணத்தில் வடிவமைக்கப்பட்டு விரைவில் கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலுக்கு கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    அதைத் தொடர்ந்து கன்னியாகுமரியில் உள்ள திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் பிரம்மோற்சவ திருவிழாவும் அதன் பிறகு நவம்பர் மாதம் 3-ந்தேதி முதல் 6-ந்தேதி வரை 4 நாட்கள் பவித்ர உற்ச திருவிழாவும் நடத்தப்பட உள்ளது.

    ×