search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி வெங்கடாஜலபதி கோவிலில் பவித்ர உற்சவம்
    X

    கன்னியாகுமரி வெங்கடாஜலபதி கோவிலில் பவித்ர உற்சவம்

    • 22-ந் தேதி தொடங்கி 4 நாட்கள் நடக்கிறது
    • வாகனத்தில் எழுந்தருளி 4 மாடவீதிகளில் பவனி வரும் விமான பிரகார உற்சவம் நடக்கிறது

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி விவே கானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தா னத்தின் சார்பில் வெங்கடா ஜலபதி கோவில் கட்டப்பட்டு உள்ளது. கோவில் கட்டப்பட்ட பிறகு 2-வது முறையாக பவித்ர உற்சவம் திருவிழா வருகிற 22-ந்தேதி தொடங்கு கிறது. இந்த விழா 25-ந்தேதி வரை 4 நாட்கள் நடக்கிறது.

    பவித்ர உற்சவத்தின் போது ஸ்ரீதேவி பூதேவியுடன் வெங்கடாஜலபதி அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் எழுந்தருளி 4 மாடவீதிகளில் பவனி வரும் விமான பிரகார உற்சவம் நடக்கிறது. இதனை திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஆகம ஆலோசகர் வேணுகோபால தீட்சிதர் தலைமையில் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் உள்ள 7அர்ச்சகர் கள் நடத்துகிறார்கள். பவித்ர உற்சவத்துக்கான ஏற்பாடுகளை சென்னையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான உள்ளூர் மற்றும் தகவல் ஆலோசனை மைய தலைவர் சேகர்ரெட்டி தலை மையில் தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பி னர்கள் மற்றும் துணை செயல் அலுவலர் விஜய குமார், கன்னியாகுமரி வெங்க டாஜலபதி கோவில் ஆய்வாளர் ஹேமதர்ரெட்டி, பக்த சேவா அமைப்பைச் சேர்ந்த ஜெயராம் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×