search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆழ்வார்"

    • பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை
    • பவித்ர உற்சவம் திருவிழா வருகிற 22-ந்தேதி தொடங்குகிறது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர கடற்கரை வளா கத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் வெங்கடாஜலபதி கோவில் கட்டப்பட்டு உள்ளது. இந்த கோவிலில் பவித்ர உற்சவம் திருவிழா வருகிற 22-ந்தேதி தொடங்குகிறது. இந்த திருவிழா 25-ந் தேதி வரை 4 நாட்கள் நடக்கிறது.

    இந்த பவித்ர உற்சவத்தை திருமலை திருப்பதி தேவஸ் தானத்தின் ஆகம ஆலோச கர் வேணுகோபால தீட்சிதர் தலைமையில் திருப்பதி வெங்கடாஜலபதி கோவி லில் உள்ள 7 அர்ச்சகர்கள் நடத்துகிறார்கள். பவித்ர உற்சவம் நடப்பதற்கு முன்பு கோவிலில் ஆழ்வார் திரு மஞ்சனம் நிகழ்ச்சி நடை பெறுவது வழக்கம். அதன்படி நாளை மறுநாள் (20-ந்தேதி) ஆழ்வார் திருமஞ்சனம் நிகழ்ச்சி நடக்கிறது. இதை யொட்டி அன்றைய தினம் காலை 6 மணி முதல் 8 மணி வரை கோவில் நடை அடைக்கப்படுகிறது. இந்த 2 மணி நேரம் பக்தர்கள் கோவி லுக்குள் தரிச னத்துக்கு செல்ல அனும திக்கப்பட மாட்டார்கள். இந்த தகவலை கன்னியா குமரியில் உள்ள திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் ஆய்வாளர் ஹேமதர்ரெட்டி தெரிவித்து உள்ளார்.

    • பாசுரங்களில் பெருமாள் மனம் லயித்ததாக பல சான்றுகள் உள்ளன.
    • காஞ்சியில் உள்ள சொன்ன வண்ணம் செய்த பெருமாள், ஆழ்வார் பின்னாடியே சென்று விட்டதாக வரலாறு உள்ளது.

    திருமழிசை ஆழ்வார் தை மாதம் மகம் நட்சத்திரத்தில் சக்கர அம்சமாக தோன்றியவர். 4-வது ஆழ்வாரான இவர் சைவம், வைணவம் இரண்டிலும் ஈடுபட்டு பாடல்கள் இயற்றினார்.

    சைவத்தில் சிவவாக்கியர் ஆயிரம் என்ற பதிகத்தை இயற்றினார். இவரது சொல்லாற்றாலை கண்டு வியந்த சிவன் இவருக்கு ''பக்திசாரர்'' என்ற சிறப்பை அளித்தார்.

    கால் கட்டை விரலில் இவர் ஞானக்கண் பெற்றிருந்தார். இவரது பாசுரங்களில் பெருமாள் மனம் லயித்ததாக பல சான்றுகள் உள்ளன.

    ஸ்ரீரங்கம், அன்பில், திருப்பேர்நகர், கும்பகோணம், கவித்தலம், திருக்கோட்டியூர், திருக்கூடல், திருக்குறுங்குடி, திருப்பாடகம், திருவூரகம், திருவெக்கா, திருவள்ளூர், திருப்பதி, திருபாற்கடல், துவாரகை, பரமபதம் ஆகியவை இவர் பாடல் பெற்ற தலங்களாகும்.

    ஒரு தடவை இவர் தன் சீடர் கனி கண்ணனுடன் காஞ்சியில் தங்கி இருந்தார். அப்போது அந்நகரின் மன்னன் பல்லவராயன் தன்னை வாலிபனாக்கும்படி ஆழ்வாரிடம் கேட்டார். ஆழ்வார் மறுக்கவே அவரை நகரில் இருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டார்.

    உடனே திருமழிசை ஆழ்வார், ''துணிவுடைய செந்நாப்புலவனும் போகின்றேன். நீயுமுன் கைநாகப்பாய் சுருட்டிக் கொள்'' என்று பாடி விட்டு சென்றார். இதனால் காஞ்சியில் உள்ள சொன்ன வண்ணம் செய்த பெருமாள், ஆழ்வார் பின்னாடியே சென்று விட்டதாக வரலாறு உள்ளது.

    திருமலையில் இருந்த பேயாழ்வார் கேட்டுக் கொண்டபடி இவர் தன் இறுதி காலத்தில் திருமழிசையில் தங்கி இருந்து 200 பாசுரங்கள் பாடினார். பிறகு கும்பகோணத்தில் முக்தியானார். திருமழிசை தலத்தில் இவரை வழிபட்டால் சைவ, வைணவ தலங்களில் பெறக்கூடிய பலன்களை பெறலாம்.

    ×