search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விநாயகர் சிலைகள்"

    • கறம்பக்குடியில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது
    • அக்கினி ஆற்றுக்கு புறப்பட்டது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. முன்னதாக கறம்பக்குடி முழுவதும் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் அனைத்தும் ஒரே இடத்திற்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக அக்கினி ஆற்றுக்கு புறப்பட்டது.

    நிகழ்ச்சி தலைமை மாவட்ட செயலாளர் கருப்பையா தலைமையில் நடைபெற்றது. முன்னதாக அனைவரையும் காசிகண்ணன் வரவேற்று பேசினார். மாநில பா.ஜ.க. பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் கொடியசைத்து துவக்கி வைத்தார். மாநில விளையாட்டு திறன்மேம்பாட்டு பிரிவு செயலாளர் ந.ராமச்சந்திரன் சிறப்புரையாற்றினார். இந்த விழாவில் கறம்பக்குடி பா.ஜ.க. வடக்கு ஒன்றிய தலைவர் இருக்களவிடுதி பாலசுப்பிரமணியன், பா.ஜ.க. தெற்கு ஒன்றிய தலைவர் சேசு.மாரிமுத்து மற்றும் களக்கடிப்பட்டி சந்திரன், ஆனந்தராஜ், முருகையன், சின்னக்குழந்தை, ஆட்டோரவி அசோக்குமார், ஜெயபால், மற்றும் பலர் கலந்து கொண்டார்கள். 

    • கொட்டும் மழையில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது.
    • 11 சிலைகள் கரைக்கப்பட்டன.

    அரியலூர்:

    விநாயகர் சதுர்த்தியையொட்டி கடந்த 31-ந் தேதி அரியலூர் நகரில் பெரிய அரண்மனை தெரு, சின்னக்கடை தெரு, பட்டுநூல்கார தெரு, எத்திராஜ் நகர், அண்ணா நகர், பொன்னுசாமி அரண்மனை தெரு ஆகிய இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடந்தது. இதைத்தொடர்ந்து 5-ம் நாளான நேற்று சிலைகளை கரைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

    இதற்காக சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. அப்போது பலத்த மழை பெய்தது. இதனால் விநாயகர் சிலைகள் கரையாமல் இருப்பதற்காக, சிலைகளுக்கு மேல் பக்தர்கள் குடைபிடித்து வந்தனர். தேரடி அருகே ஊர்வலம் வந்தபோது அங்கிருந்து பஸ் நிலையம் வரை செல்ல வேண்டும் என்று பக்தர்கள் கூறினார்கள்.

    இது பற்றி விசுவ இந்து பரிஷத்தின் மாவட்ட தலைவர் முத்துவேல், போலீசாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சிலைகள் அண்ணா சிலை வரை சென்று வர போலீசார் அனுமதித்தனர். இதைத்தொடர்ந்து தேரடியில் இருந்து மேளதாளங்கள் முழங்க, வாணவேடிக்கையுடன் பக்தர்கள் நடனமாடியபடி விநாயகர் சிலைகளுடன் கொட்டும் மழையில் ஊர்வலமாக சென்றனர். பின்னர் மருதையாற்றில் மொத்தம் 11 சிலைகள் கரைக்கப்பட்டன.

    ஊர்வலத்தையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்ல போக்குவரத்து போலீசார் ஏற்பாடு செய்திருந்தனர்."


    • இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது.
    • விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சங்கரன்கோவில் சாலையில் உள்ள கருங்குளத்தில் கரைக்கப்பட்டது.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகர் பகுதியில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வழிபாடு நடத்தப்பட்டது. இதையடுத்து 30-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பஞ்சு மார்க்கெட் பகுதியில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப் பட்டது.

    பழைய பஸ்நிலையம், காந்தி சிலை ரவுண்டானா வழியாக ஊர்வலம் சென்றது. ஊர்வலத்தின் தொடக்கமாக இந்து முன்னணி மாநில இணை அமைப்பாளர் பொன்னையா, நகர தலைவர் சஞ்சீவி, துணைத்தலைவர் முத்துமாணிக்கம் உள்ளிட்ட நிர்வாகிகளும், ஆர்.எஸ். எஸ். விஷ்வ இந்து பரிஷத், பா.ஜ.க. நிர்வாகிகளும் பங்கேற்ற பொதுக்கூட்டம் பஞ்சு மார்க்கெட்டில் நடந்தது.

    அதை தொடர்ந்து ஊர்வலம் நடந்தது. விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மனோகர், கூடுதல் கண்காணிப்பாளர் சூரியமுத்து, ராஜபாளையம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பிரீத்தி, ஸ்ரீவில்லிபுத்தூர் டி.எஸ்.பி. சபரிநாதன், சாத்தூர் டி.எஸ்.பி. நாகராஜன் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சங்கரன்கோவில் சாலையில் உள்ள கருங்குளத்தில் கரைக்கப்பட்டது.

    • விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டன
    • 3 நாட்கள் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த 31-ந் தேதி பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து சிறப்பு வழிபாடு நடந்தது. இதேபோல் மாவட்டத்தில் பெரம்பலூர் புறநகர் பகுதி மற்றும் பெரம்பலூர், வேப்பந்தட்டை, ஆலத்தூர், குன்னம் ஆகிய 4 தாலுகாக்களில் பல்வேறு பகுதிகளில் போலீசார் அனுமதியுடன் மொத்தம் 126 இடங்களில் விநாயகர் சிலைகள் அலங்கரித்து வைக்கப்பட்டு 3 நாட்கள் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. பெரம்பலூரில் விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம் நேற்று மாலை நடந்தது.

    ஊர்வலம் செல்வ விநாயகர் கோவிலில் இருந்து மேள, தாளம் முழங்க, வாண வேடிக்கையுடன் புறப்பட்டு காமராஜர் வளைவு, வடக்கு மாதவி சாலை, சாமியப்பா நகர், எளம்பலூர் சாலை, காமராஜர் சிக்னல், சங்குப்பேட்டை, கடைவீதி வழியாக மீண்டும் காந்தி சிலையை அடைந்தது. பெரம்பலூர் நகரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் அதன் பிறகு சரக்கு வாகனங்களில் எடுத்து சென்று காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டது.

    விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தன.

    • சிங்கம்புணரியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது.
    • பாலம் நண்பர்கள் குழுசார்வில் 2 ஆயிரம் பேருக்கு அன்னதாணம் வழங்கப்பட்டது.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது. சீரணி அரங்கம் பகுதியில் இருந்து தொடங்கிய ஊர்வலம் அரசு மருத்துவமனை சாலை, சுந்தரம் நகர், திண்டுக்கல் ரோடு, பஸ் நிலையம், 4 முனை சாலை சந்திப்பு வழியாக திருப்பத்தூர் ரோட்டில் உள்ள சேவுகப் பெருமாள் அய்யனார் ஆலய தெப்பக்குளத்தில் விஜர்சனம் செய்யப்பட்டது.

    41 விநாயகர் சிலைகள் பங்கேற்ற இந்த ஊர்வலத்தை பா.ஜ.க. சிறுபான்மையினர் ஒன்றிய செயலாளர் சகுபர் சாதிக் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    பஸ் நிலையம் முன்பு அமைந்துள்ள பள்ளிவாசல் முன்புறம் மாநில சிறுபான்மையினர் அணி துணை செயலாளர் சேக் தாவூத் விநாயகர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

    சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில் குமார் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் நடந்த ஊர்வலத்தில் வழிநெடுகிலும் பக்தர்கள் அமைதியான முறையில் கண்டு களித்தனர்.

    விழா ஏற்பாடுகளை சிங்கம்புணரி ஆர்.எஸ்.எஸ். வட்டார தலைவர் குகன் மற்றும் தினேஷ், சத்தியன் அம்பலம், பாலசுப்பிரமணியன், மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். சேவுகப் பெருமாள் அய்யனார் ஆலய தெப்பத்தில் விநாயகர் அனைத்து விநாயகர் சிலைகளும் விஜர்சனம் செய்யப்பட்டது. பாலம் நண்பர்கள் குழுசார்வில் 2 ஆயிரம் பேருக்கு அன்னதாணம் வழங்கப்பட்டது.

    • பொதுமக்கள் வீடுகளில் வழிபட்ட 200-க்கும் மேற்பட்ட சிறிய களிமண் சிலைகளையும் நகர வீதியில் ஊர்வலமாக எடுத்து சென்றனர்.
    • காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து 100க்கு மேற்பட்ட விநாயகர் சிலைகள் மாமல்லபுரம் கடலில் கரைக்கப்பட உள்ளது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் கடந்த 31-ந்தேதி விநாயகர் சதூர்த்தியன்று 4 இடங்க ளில் பெரிய விநாயகர் சிலைகள் பொது இடத்தில் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.

    வழிபாடு முடிந்து 3-ம் நாளான நேற்று மாலை அந்த சிலைகளுடன், பொதுமக்கள் வீடுகளில் வழிபட்ட 200-க்கும் மேற்பட்ட சிறிய களிமண் சிலைகளையும் நகர வீதியில் ஊர்வலமாக எடுத்து சென்றனர்.

    பின்னர் மீனவர் பகுதி மற்றும் வடக்கு மாமல்லபுரம் கடற்கரையில் போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.

    5-ம் நாளான நாளை காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து 100க்கு மேற்பட்ட விநாயகர் சிலைகள் மாமல்லபுரம் கடலில் கரைக்கப்பட உள்ளது.

    செங்கல்பட்டு போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங் உத்தரவின் பெயரில் டி.எஸ்.பி ஜெகதீஸ்வரன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ருக்மாந்தகன் தலைமையில் போலீசார் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில், அசம்பாவிதங்களை தடுக்கும் வண்ணம் அதற்கான பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    • சத்தியமங்கலம் பகுதியில் வைக்கப்பட்டு உள்ள விநாயகர் சிலைகள் ஊர்வலம் இன்று மாலை 4 மணிக்கு நடக்கிறது.
    • இதேபோல் அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் 27 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு இருந்தது.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் பஸ் நிலையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான ஈஸ்வரன் கோவில் வீதி, வடக்குபேட்டை, கெஞ்ச னூர் உள்பட 59 இடங்களில் பல்வேறு அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் கடந்த 31-ந் தேதி பிரதி ஷ்டை செய்யப்பட்டது. இதையொட்டி தினமும் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

    இந்த நிலையில் சத்தியமங்கலம் பகுதியில் வைக்கப்பட்டு உள்ள விநாயகர் சிலைகள் ஊர்வலம் இன்று மாலை 4 மணிக்கு நடக்கிறது. இதையொட்டி முன்னதாக சத்தியமங்கலம் எஸ்.ஆர்.டி. கார்னர் பகுதிக்கு விநாயகர் சிலைகள் கொண்டு வர ப்படுகிறது.

    இதை தொடர்ந்து பஸ் நிலையம் பகுதி, ஆற்று பாலம், பழைய மார்க்கெட், கோட்டு வீராம்பாளையம், பெரிய பள்ளிவாசல் வீதி வரதம்பாளையம் வழியாக சிலைகள் ஊர்வலமாக கொண்டு வரப்படுகிறது.

    இதையடுத்து இன்று மாலை 4 மணிக்கு சத்தியமங்கலம் பவானி ஆற்றில் சிலைகள் கரைக்கப்படுகிறது.

    இதையொட்டி சத்திய மங்கலம் மற்றும் சுற்று வட்டார முக்கிய பகுதிகளில் டி.எஸ்.பி.க்கள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீ சார் என பலத்த போலீஸ் பாதுகாப்பு போட ப்பட்டு உள்ளது. அவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

    அவர்கள் பொதுமக்கள் சிைலகளை கரைக்கும் போது அரசு அறிவித்து உள்ள பாதுகாப்பு வழி முறை களை கடை பிடிக்க வேண்டும். ஆற்றில் ஆழமான பகுதிக்கு செல்ல கூடாது என்பன உள்பட பல்வேறு கட்டுபாடுகளை போலீசார் விதித்துள்ளனர்.

    இதேபோல் அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் 27 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு இருந்தது. இந்த விநாயகர் சிலைகள் இன்று மாலை 3 மணிக்கு அந்தியூர் ஈரோடு ரோட்டில் இருந்து ஊர்வலமாக கொண்டு வரப்படுகிறது. அந்தியூர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து அத்தாணி ஆற்றில் கரைக்கப்பட உள்ளது.

    இதனை அடுத்துபவானி டி.எஸ்.பி. அமிர்தவர்ஷினி, ஏ.டி.எஸ்.பி. கணகேஸ்வரி ஆகியோர் தலைமையில் 8 இன்ஸ்பெக்டர்கள் 26 சப் இன்ஸ்பெக்டர்கள் 180 போலீசார் என 250 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    • 126 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
    • மகாதீப ஆராதனைகளும் நடைபெற்றது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 126 இடங்களில் விநாயகர் உருவசிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. அதன்படி பெரம்பலூர் நகரில் பிரம்மபுரீஸ்வரர் கோவில், கடைவீதியில் தேரடி, காந்திசிலை அருகே உள்ள செல்வவிநாயகர் கோவில், எளம்பலூர் சாலையில் மேட்டுத்தெரு, மேரிபுரம் அருள்சக்தி விநாயகர் கோவில், துறையூர் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர்.நகரில் பாலமுத்துமாரியம்மன் கோவில், இந்திராநகர், வடக்குமாதவி சாலையில் சவுபாக்கிய விநாயகர் கோவில், சங்குப்பேட்டை பகுதி, வெங்கடேசபுரம் உள்பட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.

    பெரம்பலூர் வடக்குமாதவி சாலையில் உள்ள ஸ்ரீமகாலிங்க சித்தர் ஆசிரமத்தின் சார்பில் மகாலிங்க சித்தர்சுவாமி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள வலம்புரி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்திவிழாவை முன்னிட்டு கணபதி ஹோமம், அபிஷேக ஆராதனைகளும், மகாதீப ஆராதனையும் நடந்தது. மதியம் அன்னதானமும், மாலை சிறப்பு பூஜையும் நடந்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் வேப்பந்தட்டை, ஆலத்தூர், குன்னம் மற்றும் பெரம்பலூர் தாலுகா என மொத்தம் 126 இடங்களில் விநாயகர் சிலைகள் அலங்கரித்து வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

    • ராஜபாளையத்தில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது.
    • பாதுகாப்பு ஏற்பாடுகளை விருதுநகர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு செய்திருந்தார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் தர்மாபுரம் மாப்பிள்ளை விநாயகர் கோவில் நண்பர் நற்பணி மன்றம் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா, மன்ற தலைவரும் சமூக சேவகருமான ராமராஜ் தலைமையில் கொண்டாடப்படுகிறது.

    இந்த ஆண்டு 35-வது விநாயகர் சதுர்த்தி திருவிழா நடந்தது. 5 தினங்கள் நடந்த விழாவில் தினமும் கலை நிகழ்ச்சிகள், ஆன்மீக சொற்பொழிவுகள், நடந்தன. தினமும் 3 வேளை அன்னதானமும் நடந்தது.

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று காலை சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. மாலையில் மும்பையில் வடிவமைக்கப்பட்டு வரவழைக்கப்பட்ட மும்பை சித்தி கணபதி, வல்லப கணபதி, சுபக்ருது கணபதி, ஹேரம்ப கணபதி, உச்சிஷ்ட கணபதி விக்ரகங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

    மதுரை சாலை, பழைய பஸ் நிலையம், தென்காசி சாலை, காந்தி கலை மன்றம் விலக்கு, சொக்கர் கோவில், திருவனந்தபுரம் தெரு, சங்கரன் கோவில் விலக்கு வழியாக ஐ.என்.டி.யு.சி. நகர் எதிரே உள்ள புதியாதியார்குளத்தில் அனைத்து சிலைகளும் போலீஸ் பாதுகாப்புடன் சிறப்பு வழிபாடு நடத்தி கரைக்கப்பட்டது.

    பாதுகாப்பு ஏற்பாடு களை விருதுநகர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சூரியமூர்த்தி, காவல் பயிற்சி பள்ளி துணை முதல்வர் முகேஷ் ஜெயக்குமார், டி.எஸ்.பிக்கள் பிரீத்தி(ராஜபாளையம்), சபரிநாதன் (வில்லிபுத்தூர்), பாபு பிரசாத் (சிவகாசி) தலைமையில் திரளான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • அரியலூர் மாவட்டத்தில் 314 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
    • பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி

    அரியலூர்:

    விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி அரியலூர் மாவட்டத்தில் 314 சிலைகள் பிரஷ்டை செய்யப்பட்டுள்ளன.

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்திலுள்ள விநாயகர் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    அரியலூர், ெஜயங்கொண்டம், ஆண்டிமடம், மீன்சுருட்டி, செந்துறை, பொன்பரப்பி, தா.பழூர்திருமானூர், திருமழபாடி, கீழப்பழுவூர் உள்ளிட்ட 314 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க காவல்துறை அனுமதி அளித்தது. இதையடுத்து அந்த இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பல இடங்களில் சிறியது முதல் பெரிய அளவிலான விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடுகள் நடத்தப்பட்டது.

    பிரச்னைக்குரிய இடங்களில் துப்பாக்கி ஏந்திய காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதிகாலை முதலே விநாயகருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. வீடுகளிலும்,விநாயகர் சிலைகள் வைத்து, அவல், பொறி, பழங்கள் படைத்து மக்கள் வழிபட்டனர்.

    அரியலூர் கடைவீதிகளில் விற்பனைக்கு வந்த களிமண்ணால் செய்யப்பட்ட சிறிய விநாயகர் சிலைகளை போட்டி போட்டு வாங்கிச் சென்றனர்.

    இந்த ஆண்டு 3 முதல் 10 அடி உயரம் வரையிலான விநாயகர் சிலைகளுக்கு மட்டுமே காவல் துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடிய இடங்களில் யாரும் சிலைகளை வைக்கக் கூடாது என்று எச்சரித்துள்ளனர். உரிய அனுமதி பெற்ற பின்பே சிலைகள் வைக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். மேலும் விநாயகர் சிலைகள் வைக்க காவல் துறையினர் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

    கீற்று கொட்டகையை தவிர்த்து தகரத்தால் ஆன தகடுகள் அமைத்த கொட்டகையில் தான் சிலைகள் வைக்க வேண்டும் உள்ளிட்ட சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இந்நிலையில், மாவட்ட முழுவதும் விதவிதமாக கோணத்தில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை அந்ததந்த பகுதி இந்து அமைப்பினர் செய்து வருகின்றனர்.

    • ஈரோடு மாநகரில் வருகிற 3-ந் தேதி விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கருங்கல்பாளையம் காவிரி கரையில் கரைக்கப்படுகிறது.
    • இதற்காக போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர்.

    ஈரோடு:

    விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, கோபி, பவானி, சத்தி, அந்தியூர், பெருந்துறை, கொடுமுடி, தாளவாடி, மொடக்குறிச்சி, நம்பியூர் உள்ளிட்ட தாலுகா பகுதியில் இந்து அமைப்புகள், பொதுமக்கள் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதி ஷ்டை செய்யப்பட்டன.

    இதில் இந்து அமைப்புகள் சார்பில் 500 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்ப ட்டுள்ளன. இது தவிர பொதுமக்கள் சார்பில் தனியாக 600 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    ஈரோடு மாவட்டத்தில் இன்று முதல் வரும் 5-ந் தேதி வரை விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதி அளிக்கப்ப ட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் முழுவதும் 11 இடங்களில் விநாயகர் சிலைகள் கரைக்க போலீ சார் அனுமதி அளித்து ள்ளனர்.

    விநாயகர் சிலைகள் கரைக்கும் போது, அசம்பா விதங்கள் நடைபெறாமல் தடுக்க, போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அனைத்து சப்-டிவிசன்களிலும் போலீசார் கடந்த ஒருவாரகாலமாக கொடி அணிவகுப்பு நடத்தினர்.

    மாவட்டம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி பாது காப்பு பணியில் 1500 போலீ சார் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோடு மாநகரில் வருகிற 3-ந் தேதி விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கருங்கல்பாளையம் காவிரி கரையில் கரைக்கப்படுகிறது.

    இதேபோல் மொடக்குறிச்சி, கொடுமுடி, பெருந்துறை, பவானி, சத்தியமங்கலம் உள்பட மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதி களில் அந்தந்த நீர் நிலை களில் விநாயகர் சிலைகள் கரைக்கப்படுகிறது.

    இன்று முதல் வரும் 5-ந் தேதி வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ள நாட்களில் விநாயகர் சிலை கரைக்கப்படுகிறது. இதற்காக போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர்.

    அதன்படி விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது பட்டாசுகளைவெடிக்க க்கூடாது. கோஷங்களை எழுப்ப கூடாது. பூஜைக்காக பொது இடங்களில் வைக்க ப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை அனுமதி க்கப்பட்ட வழித்தடங்கள் வழியாக மட்டுமே எடுத்து செல்ல வேண்டும்.

    பிற மதத்தினர் ஆலயங்கள் வழியாக சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்லும் போது போலீசாரின் வழிகாட்டு தல்களை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

    விநாயகர் சிலைகளை மாட்டு வண்டிகள், மீன்பாடி வண்டிகள், ஆட்டோ போன்றவற்றில் எடுத்து செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மினி லாரி, டிராக்டர் ஆகியவ ற்றிலேயே சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்ல வேண்டும்.

    பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள சிலைகளை 5 நாட்களுக்குள் எடுத்து கரைத்து விட வேண்டும் போன்ற கட்டுப்பாடுகளை போலீசார் விதித்துள்ளனர். இவற்றை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • விநாயகர் சிலைகள் பழவேற்காடு கடலில் நாளையும் மற்றும் 4-ந் தேதியும் கரைக்கப்படுகிறது.
    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செபாஸ் கல்யாண் கடற்கரை பகுதியில் ஆய்வு செய்தார்.

    பொன்னேரி:

    விநாயகர் சதுர்த்தியையொட்டி பொன்னேரி, மீஞ்சூர் ஜனப்ப சத்திரம், தச்சூர், திருப்பாலைவனம் மெதுர் பழவேற்காடு காட்டூர், அத்திப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டன.

    இந்த சிலைகள் பழவேற்காடு கடலில் நாளையும் மற்றும் 4-ந் தேதியும் கரைக்கப்படுகிறது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செபாஸ் கல்யாண் கடற்கரை பகுதியில் ஆய்வு செய்தார்.

    அப்போது விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை அமைதியாக நடத்துவது, கடலில் ஒதுக்கப்பட்ட இடங்களில் சிலைகளை கரைப்பது, பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வண்ணம் தடுப்பு அமைப்பு ரோந்து பணியில் ஈடுபடுவது, தீயணைப்புத் துறையினர் தயார் நிலையில் இருப்பது, மருத்துவ குழுவினர், ஆம்புலன்ஸ், கடலில் பாதுகாப்பிற்காக, மீனவர்கள் படகுடன் தயார் நிலையில் இருப்பது குறித்து ஆலோசனை செய்தார்.

    டி.எஸ்.பி. சாரதி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவதாகவும் தெரிவித்தார். அப்போது பொன்னேரி வட்டாட்சியர் செல்வகுமார், திருப்பாலைவனம் இன்ஸ்பெக்டர் சின்னத்துரை மற்றும் போலீஸ் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    ×