search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அந்தியூர் பகுதியில்"

    • இளநீர் கடை அதிக அளவில் வைக்கப்பட்டு விற்பனை நடைபெறுகிறது.
    • விலை குறையாமல் அதே 40 ரூபாய் விலைக்கு விற்பனை செய்யப்பட்ட வருகிறது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து விழைய கூடிய தேங்காய் மற்றும் இளநீரை வியாபாரிகள் விவசாயிகளிடம் இருந்து வாங்கி வந்து வார சந்தைகளிலும், வணிக நிறுவனங்கள் மற்றும் உணவகங்களுக்கு தேங்காய் விற்பனை செய்து வருகின்றார்கள்.

    இந்த நிலையில் வெயில் காலங்களில் இளநீர் விற்பனை தொடங்கி தற்போது வெயில் காலம் குறைந்தும் விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது. அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் அருகே உள்ள ரவுண்டானா பகுதிகளில் இளநீர் கடை அதிக அளவில் வைக்கப்பட்டு விற்பனை நடைபெறுகிறது.

    இது குறித்து அந்தியூர் பகுதி பொதுமக்கள் கூறுகையில்,

    வெயில் காலங்களில் இளநீர் தட்டுப்பாடு அதிகமாக இருந்த படியால் 50 ரூபாய்க்கும், 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்ப ட்டது. தற்போது வெயில் காலம் குறைந்து குளிர்ந்த காற்றும், வெயிலின் தாக்கம் குறைந்தும் இருக்கும் நிலையில் மருத்து வர்கள் அறிவுறு த்தலின்படி மருத்துவ மனையில் அனுமதிக்க ப்ப ட்டிருக்கும் நோயாளி களுக்கும் மற்றும் கோ வில்களில் அபிஷேகங்களுக்கும் தற்போது இளநீர் வாங்கி செல்கின்ற னர்.

    இன்னும் விலை குறையாமல் அதே 40 ரூபாய் விலைக்கு விற்பனை செய்யப்பட்ட வருகிறது.

    இதனை வியாபாரிகள் விவசாய இடத்தில் எடுத்துக் கூறி அங்கு விலையை சற்று குறைத்து வாங்கி பொது மக்கள் விற்பனை செய்யும் விலையும் சிறிது குறைத்தால் தற்போது இருக்கும் காலகட்ட சூழ்நிலைக்கு சிரமம் இன்றி இருக்கும் என்று தெரிவிக்கின்றனர்.

    • கடந்த 2 நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது.
    • சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களும், நடந்து செல்பவர்களும் மிகவும் சிரமப்பட்டனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர், தவிட்டுப்பாளையம், வெள்ளியம்பாளையம், புதுப்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது.

    இதனால் சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களும், நடந்து செல்பவர்களும் மிகவும் சிரமப்பட்டனர். நடந்து செல்பவர்கள் குடைகளை பிடித்த வாரும், ஆங்காங்கே கடைகளில் சிறிது நேரம் இழப்பாறியும் சென்றனர்.

    இது குறித்து அந்தியூர் பகுதி பொதுமக்கள் கூறுகையில், சித்திரை, வைகாசி மாதங்களில் கூட கடந்து வந்து விட்டோம்.

    அந்த வெயிலை காட்டிலும் தற்போது 2 நாட்கள் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக காணப்படுகிறது.

    மாலை 5 மணி அளவில் தான் வீட்டை விட்டு வெளியே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது என்றனர்.

    • மது பிரியர்கள் பீர் குடிப்பதில் அதிக நாட்டம் செலுத்தி வருகின்றார்கள்.
    • அந்தியூர் பகுதிகளில் பீர் பாட்டில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூரில் தவிட்டுப்பாளையம், பச்சாம்பாளையம்,மூலக்கடை, பிரம்மதேசம் பாலம் உள்ளிட்ட பகுதிகளில் டாஸ்மார்க் மதுபான கடை செயல்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கடந்த 10 நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதனால் மது பிரியர்கள் பீர் குடிப்பதில் அதிக நாட்டம் செலுத்தி வருகின்றார்கள்.

    இதனால் அந்தியூர் பகுதிகளில் செயல்படும் கடைகளில் பீர் பாட்டில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    இதனால் மது பிரியர்கள் 160 ரூபாய் விலைக்கு விற்க கூடிய பீர் பாட்டிலை 220 ரூபாய் கொடுத்து வாங்கி குடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக வேதனையோடு தெரி விக்கின்றார்கள்.

    மேலும் தினமும் நாங்கள் கூலி வேலைக்கு சென்று வருகின்றோம்.

    இந்த நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதனால் வேலை முடிந்து வீட்டிற்கு செல்லும்போது உடம்பிற்கு உஷ்ணத்தை போக்கும் வகையில் பீர்குடித்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணி நாங்கள் பீர் வாங்க டாஸ்மார்க் கடைக்கு சென்றால் அங்கு தற்போது இருப்பு இல்லை என்று கூறி விடுகின்றார்கள்.

    இதனால் வெளியிடங்களில் விற்கப்படும் பீர் பாட்டிலை அதிக விலை கொடுத்து வாங்கி குடிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    தற்போது வெயில் காலம் முடியும் வரை பீர் பாட்டில் அதிக அளவில் டாஸ்மாக்கடை களுக்கு இறக்குமதி செய்து கூலித்தொழி லாளர்களின் வருமானத்திற்கு ஏற்றார் போல் டாஸ்மாக் கடைகளிலேயே கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று மது பிரியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • ஆப்பக்கூடல் சாலை, அரசுஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானம் உள்ளிட்ட இடங்களில் அதிக அளவில் குதிரைகள் சுற்றி திரிகின்றது.
    • பொதுமக்கள் அவதி அடைந்து வருகிறார்கள்.

    அந்தியூர்

    அந்தியூர் பகுதியில் பஸ் நிலையம், தேர் வீதி, அத்தாணி சாலை, ஆப்பக்கூடல் சாலை, அரசுஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானம் உள்ளிட்ட இடங்களில் அதிக அளவில் குதிரைகள் சுற்றி திரிகின்றது.

    அச்சம்

    இதனால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகிறார்கள். மேலும் வாகன ஓட்டி களும் சாலையில் நடந்து செல்பவர்களும் காலை மற்றும் மாலை நேரங்களில் நடைபயிற்சி செல்பவர்க ளும் ஒருவித அச்சத்தோடு சென்று வருகிறார்கள.

    இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை யொட்டி அந்தியூர் வார ச்சந்தை, தேர் நிலையம் பகுதிக்கு பொது மக்கள் அதிக அளவில் வந்திரு ந்தார்கள். மேலும் அந்த பகுதிகளில் வாகனங்கள் நிறுத்தப்பட்டும் இருந்தன. இதனால் அந்த பகுதியில் மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

    பெண் குழந்தை காயம்

    இந்த நிலையில் அந்தியூர் பஸ் நிலையம் பகுதிக்கு திடீரென குதிரைகள் வந்தது. அந்த குதிரைகள் பொதுமக்களின் கூட்டத்தை பார்த்து மிரண்டு நின்று கொண்டு இருந்தவர்கள் மீது மோதி கீழே தள்ளி சென்றது. இதனால் அந்த பகுதியில் இருந்த பொது மக்கள் அலறி அடித்து கொண்டு சென்றனர். இதையடுத்து ஒரு பெண் மற்றும் குழந்தை கீழே விழுந்தனர். இதில் அந்த பெண்ணுக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது. குழந்தைக்கு லேசான காயம் ஏற்பட்டது.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அவர்களை மீட்டு தனியார் ஆம்புலன்சு மூலம் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.

    தொடர்ந்து அந்த குதிரை அரசு ஆஸ்பத்திரி கார்னர் பகுதிக்கு சென்று அங்கு இருசக்கர வாகனத்தில் சென்றவரை கீழே தள்ளியது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    அபராதம்

    இதையொட்டி அந்தியூர் பகுதி மக்கள் ரோட்டில் சுற்றி திரியும் குதிரைகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    இதுகுறித்து அந்தியூர் பேரூராட்சி செயல் அலு வலர் செல்வகுமாரிடம் கேட்ட போது, குதிரையின் உரிமையாளர்கள் குதிரை களை பிடித்து சாலையில் விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதை மீறி சாலையில் சுற்றும் குதிரைகளை பிடித்து வேறு இடங்களுக்கு கொண்டு விடப்படும். மேலும் குதிரையின் உரிமையாள ர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்தார்.

    • அந்தியூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது.
    • இதனால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் விநியோகம் இருக்காது.

    அந்தியூர்:

    அந்தியூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது.

    இதனால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அந்தியூர், புதுப்பாளையம், மைக்கேல்பாளையம், நகலூர், முனியப்பன்பாளையம், தோப்பூர், கொண்டையம்பாளையம், வெள்ளையம் பாளையம், பிரம்மதேசம், காட்டூர், செம்புளிச்சாம்பாளையம், பருவாச்சி, பச்சாபாளையம், பெருமாபாளையம், சங்கராபாளையம், எண்ணமங்கலம், கோவிலூர், வெள்ளிதிருப்பூர், மற்றும் பர்கூர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் விநியோகம் இருக்காது.

    • சத்தியமங்கலம் பகுதியில் வைக்கப்பட்டு உள்ள விநாயகர் சிலைகள் ஊர்வலம் இன்று மாலை 4 மணிக்கு நடக்கிறது.
    • இதேபோல் அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் 27 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு இருந்தது.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் பஸ் நிலையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான ஈஸ்வரன் கோவில் வீதி, வடக்குபேட்டை, கெஞ்ச னூர் உள்பட 59 இடங்களில் பல்வேறு அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் கடந்த 31-ந் தேதி பிரதி ஷ்டை செய்யப்பட்டது. இதையொட்டி தினமும் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

    இந்த நிலையில் சத்தியமங்கலம் பகுதியில் வைக்கப்பட்டு உள்ள விநாயகர் சிலைகள் ஊர்வலம் இன்று மாலை 4 மணிக்கு நடக்கிறது. இதையொட்டி முன்னதாக சத்தியமங்கலம் எஸ்.ஆர்.டி. கார்னர் பகுதிக்கு விநாயகர் சிலைகள் கொண்டு வர ப்படுகிறது.

    இதை தொடர்ந்து பஸ் நிலையம் பகுதி, ஆற்று பாலம், பழைய மார்க்கெட், கோட்டு வீராம்பாளையம், பெரிய பள்ளிவாசல் வீதி வரதம்பாளையம் வழியாக சிலைகள் ஊர்வலமாக கொண்டு வரப்படுகிறது.

    இதையடுத்து இன்று மாலை 4 மணிக்கு சத்தியமங்கலம் பவானி ஆற்றில் சிலைகள் கரைக்கப்படுகிறது.

    இதையொட்டி சத்திய மங்கலம் மற்றும் சுற்று வட்டார முக்கிய பகுதிகளில் டி.எஸ்.பி.க்கள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீ சார் என பலத்த போலீஸ் பாதுகாப்பு போட ப்பட்டு உள்ளது. அவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

    அவர்கள் பொதுமக்கள் சிைலகளை கரைக்கும் போது அரசு அறிவித்து உள்ள பாதுகாப்பு வழி முறை களை கடை பிடிக்க வேண்டும். ஆற்றில் ஆழமான பகுதிக்கு செல்ல கூடாது என்பன உள்பட பல்வேறு கட்டுபாடுகளை போலீசார் விதித்துள்ளனர்.

    இதேபோல் அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் 27 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு இருந்தது. இந்த விநாயகர் சிலைகள் இன்று மாலை 3 மணிக்கு அந்தியூர் ஈரோடு ரோட்டில் இருந்து ஊர்வலமாக கொண்டு வரப்படுகிறது. அந்தியூர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து அத்தாணி ஆற்றில் கரைக்கப்பட உள்ளது.

    இதனை அடுத்துபவானி டி.எஸ்.பி. அமிர்தவர்ஷினி, ஏ.டி.எஸ்.பி. கணகேஸ்வரி ஆகியோர் தலைமையில் 8 இன்ஸ்பெக்டர்கள் 26 சப் இன்ஸ்பெக்டர்கள் 180 போலீசார் என 250 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    ×