search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அந்தியூர் பகுதியில் டாஸ்மாக் மதுக்கடைகளில் பீர் தட்டுப்பாடு
    X

    அந்தியூர் பகுதியில் டாஸ்மாக் மதுக்கடைகளில் பீர் தட்டுப்பாடு

    • மது பிரியர்கள் பீர் குடிப்பதில் அதிக நாட்டம் செலுத்தி வருகின்றார்கள்.
    • அந்தியூர் பகுதிகளில் பீர் பாட்டில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூரில் தவிட்டுப்பாளையம், பச்சாம்பாளையம்,மூலக்கடை, பிரம்மதேசம் பாலம் உள்ளிட்ட பகுதிகளில் டாஸ்மார்க் மதுபான கடை செயல்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கடந்த 10 நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதனால் மது பிரியர்கள் பீர் குடிப்பதில் அதிக நாட்டம் செலுத்தி வருகின்றார்கள்.

    இதனால் அந்தியூர் பகுதிகளில் செயல்படும் கடைகளில் பீர் பாட்டில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    இதனால் மது பிரியர்கள் 160 ரூபாய் விலைக்கு விற்க கூடிய பீர் பாட்டிலை 220 ரூபாய் கொடுத்து வாங்கி குடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக வேதனையோடு தெரி விக்கின்றார்கள்.

    மேலும் தினமும் நாங்கள் கூலி வேலைக்கு சென்று வருகின்றோம்.

    இந்த நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதனால் வேலை முடிந்து வீட்டிற்கு செல்லும்போது உடம்பிற்கு உஷ்ணத்தை போக்கும் வகையில் பீர்குடித்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணி நாங்கள் பீர் வாங்க டாஸ்மார்க் கடைக்கு சென்றால் அங்கு தற்போது இருப்பு இல்லை என்று கூறி விடுகின்றார்கள்.

    இதனால் வெளியிடங்களில் விற்கப்படும் பீர் பாட்டிலை அதிக விலை கொடுத்து வாங்கி குடிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    தற்போது வெயில் காலம் முடியும் வரை பீர் பாட்டில் அதிக அளவில் டாஸ்மாக்கடை களுக்கு இறக்குமதி செய்து கூலித்தொழி லாளர்களின் வருமானத்திற்கு ஏற்றார் போல் டாஸ்மாக் கடைகளிலேயே கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று மது பிரியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    Next Story
    ×