search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Andhiyur area"

    • கடந்த 2 நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது.
    • சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களும், நடந்து செல்பவர்களும் மிகவும் சிரமப்பட்டனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர், தவிட்டுப்பாளையம், வெள்ளியம்பாளையம், புதுப்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது.

    இதனால் சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களும், நடந்து செல்பவர்களும் மிகவும் சிரமப்பட்டனர். நடந்து செல்பவர்கள் குடைகளை பிடித்த வாரும், ஆங்காங்கே கடைகளில் சிறிது நேரம் இழப்பாறியும் சென்றனர்.

    இது குறித்து அந்தியூர் பகுதி பொதுமக்கள் கூறுகையில், சித்திரை, வைகாசி மாதங்களில் கூட கடந்து வந்து விட்டோம்.

    அந்த வெயிலை காட்டிலும் தற்போது 2 நாட்கள் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக காணப்படுகிறது.

    மாலை 5 மணி அளவில் தான் வீட்டை விட்டு வெளியே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது என்றனர்.

    • மது பிரியர்கள் பீர் குடிப்பதில் அதிக நாட்டம் செலுத்தி வருகின்றார்கள்.
    • அந்தியூர் பகுதிகளில் பீர் பாட்டில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூரில் தவிட்டுப்பாளையம், பச்சாம்பாளையம்,மூலக்கடை, பிரம்மதேசம் பாலம் உள்ளிட்ட பகுதிகளில் டாஸ்மார்க் மதுபான கடை செயல்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கடந்த 10 நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதனால் மது பிரியர்கள் பீர் குடிப்பதில் அதிக நாட்டம் செலுத்தி வருகின்றார்கள்.

    இதனால் அந்தியூர் பகுதிகளில் செயல்படும் கடைகளில் பீர் பாட்டில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    இதனால் மது பிரியர்கள் 160 ரூபாய் விலைக்கு விற்க கூடிய பீர் பாட்டிலை 220 ரூபாய் கொடுத்து வாங்கி குடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக வேதனையோடு தெரி விக்கின்றார்கள்.

    மேலும் தினமும் நாங்கள் கூலி வேலைக்கு சென்று வருகின்றோம்.

    இந்த நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதனால் வேலை முடிந்து வீட்டிற்கு செல்லும்போது உடம்பிற்கு உஷ்ணத்தை போக்கும் வகையில் பீர்குடித்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணி நாங்கள் பீர் வாங்க டாஸ்மார்க் கடைக்கு சென்றால் அங்கு தற்போது இருப்பு இல்லை என்று கூறி விடுகின்றார்கள்.

    இதனால் வெளியிடங்களில் விற்கப்படும் பீர் பாட்டிலை அதிக விலை கொடுத்து வாங்கி குடிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    தற்போது வெயில் காலம் முடியும் வரை பீர் பாட்டில் அதிக அளவில் டாஸ்மாக்கடை களுக்கு இறக்குமதி செய்து கூலித்தொழி லாளர்களின் வருமானத்திற்கு ஏற்றார் போல் டாஸ்மாக் கடைகளிலேயே கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று மது பிரியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • அந்தியூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது.
    • இதனால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் விநியோகம் இருக்காது.

    அந்தியூர்:

    அந்தியூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது.

    இதனால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அந்தியூர், புதுப்பாளையம், மைக்கேல்பாளையம், நகலூர், முனியப்பன்பாளையம், தோப்பூர், கொண்டையம்பாளையம், வெள்ளையம் பாளையம், பிரம்மதேசம், காட்டூர், செம்புளிச்சாம்பாளையம், பருவாச்சி, பச்சாபாளையம், பெருமாபாளையம், சங்கராபாளையம், எண்ணமங்கலம், கோவிலூர், வெள்ளிதிருப்பூர், மற்றும் பர்கூர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் விநியோகம் இருக்காது.

    ×