search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபர்கள் கைது"

    • அருப்புக்கோட்டையில் இருந்து மதுரைக்கு கடத்திய 35 மூடை ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
    • இந்த சம்பவத்தில் தொடர்புடைய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட உணவு பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அருப்புக் கோட்டை அருகே உள்ள குறுந்தமடம் பஸ் நிறுத்தம் அருகே வாகன தணிக்கை யில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த வேனை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் உரிய ஆவணங்களின்றி 35 மூடைகள் ரேஷன் அரிசி இருந்தது. வேனில் வந்தவர் களை விசாரித்தபோது அவர்கள் கடலாடி தொண்டு நல்லம்பட்டியைச் சேர்ந்த டிரைவர் கணேசமூர்த்தி (வயது18), மதுரை பெருங்குடியைச் சேர்ந்த லோடுமேன் ஜோதிமுத்து (28) என்பது தெரியவந்தது.

    மேலும் அருப்புக் கோட்டை அருகே உள்ள கே.எம்.கோட்டை பகுதியை சேர்ந்த சந்திரசேருக்கு சொந்தமான இடத்தில் இருநது மதுரை வில்லா புரத்தை சேர்ந்த சுப்பிரமணி என்பவருக்கு சொந்தமான இடத்திற்கு கடத்தி சென்றதும் தெரிய வந்தது. வேனுடன் அரிசியை பறிமுதல் செய்த உணவு பொருள் தடுப்பு பிரிவு போலீசார் டிரைவர், லோடுமேனை கைது செய்தனர்.

    மேலும் சந்திரசேகர், சுப்பிரமணி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • தப்பி ஓடிய 4 பேரையும் தேடி வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    பூந்தமல்லி அருகே உள்ள கோலப்பஞ்சேரி பகுதியில் வெள்ளவேடு இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் லாரன்ஸ் மற்றும் போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது கோலப்பஞ்சேரி கூட்டுறவு வங்கி அருகே உள்ள முட்புதரில் சந்தேகப்படும்படி 6 பேர் நின்று கொண்டிருந்தனர். போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பி ஓட்டம் பிடித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களில் 2 பேரை மடக்கி பிடித்தனர். மற்ற 4 பேரும் தப்பி ஓடிவிட்டனர்.

    விசாரணையில் பிடிபட்ட வாலிபர்கள் திருமழிசை உடையார் கோவில் பகுதியை சேர்ந்த வேலன் (22), மணிமாறன்(21) என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து அரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    கூட்டுறவு வங்கியில் கொள்ளை அடிக்க வந்தார்களா? அல்லது வேறு ஏதேனும் குற்ற செயலில் ஈடுபட திட்டமிட்டு இருந்தனரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். தப்பி ஓடிய 4 பேரையும் தேடி வருகின்றனர்.

    • 3 நபர்களும் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.
    • 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களை திருச்செந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி கந்தசாமிபுரம் ரோடு பகுதியில் வசிப்பவர் அரவிந்த் சிங். இவரது மனைவி விசாலாட்சி (வயது 46) காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலை ஆஸ்பத்திரி பணியில் இருந்துள்ளார்.

    அப்போது தலையில் காயமடைந்த நிலையில் ஒரு வாலிபரும், அவருக்கு துணையாக மேலும் 2 வாலிபர்களும் அங்கு வந்துள்ளனர். 3 பேரும் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. திடீரென அந்த நபர்கள் ஆஸ்பத்திரி அறையில் இருந்த பேண்டேஜ் துணியை எடுத்து தலையில் கட்டு போட்டுக்கொண்டு அதனை வீடியோவும் எடுத்துள்ளனர்.

    பின்னர் அங்கிருந்த நர்சுகளிடம் ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.அப்போது நர்ஸ் விசாலாட்சி அவர்களுக்கு அறிவுரையை சொல்லி அமைதிப்படுத்தியுள்ளார்.பின்னர் மற்றொரு நர்ஸ் வனச்செல்வியுடன் சேர்ந்து, அடிபட்டவரின் தலையில் தையல் போட்டுள்ளார். ஆனால் இதன் பிறகும் அந்த போதை நபர்கள் அவதூறாக பேசி அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். இதனை தடுக்க முயலும்போது கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அத்துடன் உங்களை எல்லாம் வீடியோ எடுத்து சி.எம். செல்லுக்கு அனுப்பி வேலையை காலி செய்து விடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர். இந்த ரகளை சத்தத்தால் அங்கு கூட்டம் கூடியது. உடனே அந்த 3 நபர்களும் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.

    இச்சம்பவம் குறித்து நர்ஸ் விசாலாட்சி ஆறுமுகநேரி போலீஸ்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செல்லத்துரை வழக்குப் பதிவு செய்தார். மற்றொரு சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வன், இன்ஸ்பெக்டர் செந்தில் ஆகியோர் தீவிர விசாரணை நடத்தினர்.

    அப்போது காயல் பட்டினம் அரசு மருத்துவ மனையில் ரகளை செய்தவர்கள் ஆறுமுகநேரி கீழநவ்வலடிவிளையைச் சேர்ந்த முருகேசன் மகன் நரேஷ் (34), காமராஜபுரம் வடக்கு தெருவை சேர்ந்த ராஜன் மகன் பிரதாப் சிங் (27), பெருமாள்புரம் தெற்கு தெருவை சேர்ந்த மந்திர மூர்த்தி மகன் மகேஷ்மூர்த்தி (26) ஆகியோர் என்பது தெரிய வந்தது.

    இந்த 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களை திருச்செந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    • அலிபிரி பஸ் நிலையம் அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் 2 வாலிபர்கள் சுற்றி திரிந்தனர்.
    • நகைகளை அலிபிரி பஸ் நிலையத்தில் பக்தர்களிடம் இருந்து திருடியதாக அவர்கள் ஒப்புக் கொண்டனர்.

    திருப்பதி:

    திருப்பதியில் ஏழுமலையான தரிசிக்க நாடு முழுவதிலும் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

    இதனால் பஸ் நிலையம் ரெயில் நிலையம் உள்ள இடங்களில் கூட்டல் நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. இதனை சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் கும்பல் பக்தர்களிடம் இருந்து நகை, பணத்தை திருடி வருகின்றனர்.

    திருப்பதி போலீஸ் சூப்பிரண்டு பரமேஸ்வர ரெட்டி உத்தரவின்பேரில் குற்றப்பிரிவு போலீஸ் சூப்பிரண்டு விமலா குமாரி டி.எஸ்.பி. ரவிக்குமார் மற்றும் போலீசார் பக்தர்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். மேலும் அப்பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களை ஆய்வு செய்தனர்.

    அலிபிரி பஸ் நிலையம் அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் 2 வாலிபர்கள் சுற்றி திரிந்தனர். போலீசார் அவர்களை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

    வாலிபர்கள் தமிழகத்தில் நெய்வேலியை சேர்ந்த வேலு, ராஜேந்திரன் என தெரியவந்தது. அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் 65 கிராம் எடையில் தங்க நகைகள் இருந்தன.

    நகைகளை அலிபிரி பஸ் நிலையத்தில் பக்தர்களிடம் இருந்து திருடியதாக அவர்கள் ஒப்புக் கொண்டனர்.

    நகைகளை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். அவர்களை ஜெயிலில் அடைத்தனர்.

    • பள்ளகவுண்டம்பாளையத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று திருட்டு போய் இருந்தது.
    • திருப்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள ஆதியூர் பிரிவில் மளிகை கடை உள்ளது. சம்பவத்தன்று இங்கு மளிகை கடையின் பூட்டை உடைத்து ரூ.7 ஆயிரம் ரொக்க பணம் திருட்டு போய் இருந்தது. இதேபோல் பள்ளகவுண்டம்பாளையத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று திருட்டு போய் இருந்தது. இந்த 2 குற்றத்திற்கும் ஊத்துக்குளி போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் சம்பவத்தன்று ஊத்துக்குளி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சந்தேகத்தின் பேரில் 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் ஊத்துக்குளி ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்த அகமது நசீர் (வயது 26), யாசர் அராபத் (வயது 24) ஆகிய 2 பேர் மேற்கண்ட திருட்டு வழக்கில் தொடர்பு உடையவர்கள் என்பதை ேபாலீசார் கண்டு பிடித்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து ரூ.7 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அவர்கள், திருப்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • போதை மாத்திரைகள் விற்பனை அரசு ஊழியர்களின் உதவியுடன் நடப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.
    • பள்ளி, கல்லூரி பகுதிகளில் ரோந்து பணியை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    உசிலம்பட்டி:

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் உத்தரவின் பேரில் தனிப்பிரிவு போலீசார் உசிலம்பட்டி நகர் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    பங்களாமேடு பகுதியில் அவர்கள் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிள்களில் வந்த வாலிபர்களை தடுத்து நிறுத்தினர். அவர்களிடம் விசாரித்தபோது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். சந்தேகமடைந்த போலீசார் மோட்டார் சைக்கிள்களை சோதனை செய்தபோது 2 கிலோ கஞ்சா கஞ்சா, 48 போதை மாத்திரைகளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. போலீசார் விசாரணையில் அவர்கள் அளித்த பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    உசிலம்பட்டி அரசு மருத்துவமனை தற்காலிக பணியாளர் ஜெயராமன், செல்லம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர் கண்ணன் ஆகியோர் உதவியுடன் போதை மாத்திரைகளை வாங்கி வந்து உசிலம்பட்டி பகுதியில் விற்பனை செய்து வருவதாகவும், மேலும் சிலருடன் இணைந்து கஞ்சா விற்று வருவதாகவும் அவர்கள் கூறினர். மேலும் விசாரணையில் அவர்கள் உசிலம்பட்டி கருப்புக்கோவில் தெருவைச் சேர்ந்த பிரகாஷ், வி.பெருமாள்பட்டியைச் சேர்ந்த சரவணன், குளத்துப்பட்டியைச் சேர்ந்த ஜெயராமன், கவுண்டன் பட்டியைச் சேர்ந்த பாண்டியன் என்பதும் தெரியவந்தது.

    போலீஸ் நிலையத்தின் அருகில் உள்ள பங்களாமேடு பகுதியில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை நடந்து வந்ததும், அரசு ஆஸ்பத்திரி ஊழியர்களே இதற்கு உடந்தையாக இருந்ததும் தனிப்பிரிவு போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    அவர்கள் 5 பேரையும் கைது செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து இதுகுறித்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் போதை பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க தீவிரமாக செயலாற்ற வேண்டும் என முதல்-அமைச்சர் ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் போதைப்பொருள் தடுப்பு பணிகளில் அதிகாரிகளும், போலீசாரும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் போதை மாத்திரைகள் விற்பனை அரசு ஊழியர்களின் உதவியுடன் நடப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது. எனவே அதிகாரிகளும், போலீசாரும் அரசு ஆஸ்பத்திரிகளிலும் மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவது குறித்து கண்காணிக்க வேண்டும் என்றும் பள்ளி, கல்லூரி பகுதிகளில் ரோந்து பணியை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    போலீஸ் நிலையம் அருகிலேயே தைரியமாக கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படும் அவலத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் இளைஞர்களின் எதிர்காலத்தை பாழாக்கும் வகையில் செயல்படும் சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • நேற்று முன்தினம் இரவு காளி குமாரசாமி கோவில் பின்புறம் செல்போன் பேசிக்கொண்டு நடந்து சென்றார்.
    • வீரபாண்டி போலீசார் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்

    திருப்பூர்:

    திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகன் கிறிஸ்டின் ராஜ் (வயது 27). இவர் திருப்பூர் பலவஞ்சிபாளையம் பகுதியில் தங்கியிருந்து அப்பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு காளி குமாரசாமி கோவில் பின்புறம் செல்போன் பேசிக்கொண்டு நடந்து சென்றார். அப்போது 3 வாலிபர்கள் திடீரென்று அவரை வழிமறித்து பணம் கேட்டு வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது அதில் ஒருவர் கத்தியை எடுத்து கிறிஸ்டின் ராஜன் கழுத்தில் காயப்படுத்தி விட்டு செல்போனை பறித்துக் கொண்டு 3 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

    இது குறித்து வீரபாண்டி குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கீதாவிடம் கிறிஸ்டின் ராஜ் புகார் தெரிவித்தார். அதன் அடிப்படையில் போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இது தொடர்பாக திருப்பூர் பலவஞ்சிபாளையம் அடுக்குமாடி குடியிருப்போர் பகுதியை சேர்ந்த நிதிஷ்குமார் (வயது 19), சூர்யா (19) மற்றும் கவுதம் (22) என்ற 3 வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கிறிஸ்டின் ராஜை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டியதோடு கத்தியால் காயப்படுத்தி அங்கிருந்து தப்பி சென்றதும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து வீரபாண்டி போலீசார் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

    • செல்போனை மர்ம நபர்கள் திருடி சென்றவிட்டனர்.
    • 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    ஈரோடு:

    திருச்சி மாவட்டம் தொட்டி யம் சின்னபள்ளி பாளை யத்தை சேர்ந்தவர் கவின் (22). இவர் சம்பவத்தன்று சென்னையில் இருந்து திருப்பூர் செல்லும் சேரன் அதிவிரைவு ரெயிலில் பொது பெட்டியில் பயணித்துள்ளார்.

    ஈரோடு ரெயில் நிலைய த்திற்கு வந்தபோது அவரது செல்போனை மர்ம நபர்கள் திருடி சென்றவிட்டனர். இது குறித்து கவின் ஈரோடு ரெயில் நிலையத்தில் புகார் அளித்தி ருந்தார்.

    அதன் பேரில் ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து செல்போன் திருடிய மர்ம நபர்களை குறித்து சி.சி.டி.வி. கேமிரா காட்சிகள் கைப்பற்றி அவர்களை தேடி வந்தனர்.

    இந்நிலையில் கவினின் செல்போன் திருடியது உத்தரப்பிரதேசம் மாநிலம் பதோகி மாவட்டம் கேட்டல்பர் பகுதியை சேர்ந்த ப்ரடும் பட்டேல் (25), பீகார் மாநிலத்தை சேர்ந்த சசுதீன் ஆலம் (21) ஆகிய 2 பேர் என்பது உறுதி செய்யப்பட்டது.

    இதை யடுத்து ஈரோடு ரெயி ல்வே போலீசார் 2 பேரையும் பிடி த்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் கவின் செல்போன் திருடியதை ஒப்புக்கொண்டனர்.

    மேலும் அவர்கள் ரெயில் பயணிகள் மற்றும் பொதுமக்களிடம் திருடிய 8 ஸ்மார்ட் போன்க ளையும் மீட்டு 2 பேரையும் போலீசார் கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.

    • கஞ்சா கடத்தி வந்து அம்பத்தூர் தொழிற்பேட்டையில் பணிபுரியும் வட மாநில வாலிபர்களை குறிவைத்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
    • கைதானவர்களிடம் இருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    அம்பத்தூர்:

    அம்பத்தூர் அடுத்த பட்டரவாக்கம் ரெயில் நிலையத்தில் ரெயிலில் கஞ்சா கடத்தி வந்த வடமாநில வாலிபர்கள் 2 பேரை அம்பத்தூர் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் தனம்மாள் மற்றும் போலீசார் கைது செய்தனர்.

    விசாரணையில் அவர்கள் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த முன்னா நாயக் (34) பிதம்பரநாயக் (28) என்பதும் ஒடிசா மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்து அம்பத்தூர் தொழிற்பேட்டையில் பணிபுரியும் வட மாநில வாலிபர்களை குறிவைத்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

    அவர்களிடம் இருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    • சின்னசாமி கூச்சலிட சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்த இரவு நேர காவலாளிகள் வர, அதைப்பார்த்து 3 வாலிபர்களும் அங்கிருந்து தப்பி சென்றனர்.
    • 3 பேரை கைது செய்த போலீசார், நீதிமன்ற உத்தரவுப்படி போலீசார் சிறையில் அடைத்தனர்.

    பெருந்துறை:

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி (65). இவர் தற்போது ஈரோடு மாவட்டம் பெருந்துறை பணிக்கம்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் தங்கி பாய்லரில் விறகு போடும் வேலை செய்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் சின்னசாமி அவர் தங்கியிருந்த கம்பெனியில் இருந்து அருகில் உள்ள விடுதிக்கு செல்ல நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்த 3 வாலிபர்கள் சின்னசாமியை வழிமறித்து செல்போன் கொடுத்தால் பேசிவிட்டு தருகிறேன் என கூறியுள்ளனர்.

    ஆனால் சின்னசாமி சந்தேகம் அடைந்து தர மாட்டேன் என மறுக்க 3 பேரும் சின்னசாமியிடம் நாங்கள் ஈரோட்டில் பெரிய ரவுடி செல்போன், வாட்ச்சினை தரவில்லை என்றால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர். சுதாரித்து கொண்ட சின்னசாமி கூச்சலிட சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்த இரவு நேர காவலாளிகள் வர அதைப்பார்த்து 3 வாலிபர்களும் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்றனர்.

    இதுகுறித்து பெருந்துறை போலீசில் சின்னசாமி அளித்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்து தப்பி சென்றவர்களின் மோட்டார் சைக்கிள் எண்ணினை வைத்து விசாரணை நடத்தினர்.

    இதில் வழிப்பறியில் ஈடுபட முயன்றது ஈரோடு சூரம்பட்டிவலசு கட்டபொம்மன் வீதியை சேர்ந்த ஜான்பாட்சா மகன் ரியாஷ் (21), சூரம்பட்டி வலசு அணைக்கட்டு சாலையை சேர்ந்த சம்பத் குமார் மகன் சிவக்குமார் (21), அதேபகுதியை 5-வது அணைக்கட்டு வீதியை சேர்ந்த குழந்தைவேலு மகன் யோகேஷ் (22) ஆகிய 3 பேர் என்பது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி போலீசார் சிறையில் அடைத்தனர்.

    • மான்வேட்டை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
    • இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே யுள்ள எலவனாசூர் கோட்டை பகுதியில் உள்ள காடுகளில் மான்வேட்டை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்படி எலவ னாசூர்கோட்டை சப்- இன்ஸ்பெக்டர் திருமால் மற்றும் போலீசார் எறையூர் பகுதியில் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள காட்டுப் பகுதியில் 2 நபர்கள் நாட்டுத் துப்பாக்கியுடன் சென்றனர்.

    அவர்களை அழைத்தபோது, 2 பேரும் தப்பியோடினர். அவர்களை மடக்கிப் பிடித்த போலீசார், போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில் எறையூரை சேர்ந்த ராஜ் என்கிற அருள்ஜோதி (வயது 31), அம்புரோஸ் மகன் குறவன் என்கிற டேவில் செல்வராஜ் (40) என்பது தெரியவந்தது. இவர்கள் நாட்டுத் துப்பாக்கி மூலம் மான்களை வேட்டையாட முயற்சித்ததும் போலீசாரின் விசாரணையில் தெரிந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த நாட்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • தென்மாவட்ட ரவுடிகளுக்கு நாட்டு வெடிகுண்டு தயாரிக்க பயிற்சி அளித்து வந்தது தெரியவந்தது.
    • மறைத்து வைத்திருந்த 2 அரிவாள், 4 நாட்டு வெடிகுண்டுகள், 30 கிராம் வெடி மருந்து ஆகியவற்றை கைப்பற்றி 2 பேரையும் கைது செய்தனர்.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகே தாயனூர் பகுதியில் ரவுடிகளுக்கு நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்க பயிற்சி அளிப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமாருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது.

    தகவல் அறிந்த சோமரசம்பேட்டை போலீசார் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றனர்.

    அப்போது அதவத்தூர் சந்தை புதிய கட்டளை வாய்க்கால் அருகாமையில் சந்தேகம்படும்படியாக 2 வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். ஆனால் போலீசார் அவர்களை விடாமல் மடக்கி பிடித்து விசாரித்தனர்.

    விசாரணையில் அவர்கள் தென்மாவட்ட ரவுடிகளுக்கு நாட்டு வெடிகுண்டு தயாரிக்க பயிற்சி அளித்து வந்தது தெரியவந்தது.

    பின்னர் அங்கு மறைத்து வைத்திருந்த 2 அரிவாள், 4 நாட்டு வெடிகுண்டுகள், 30 கிராம் வெடி மருந்து ஆகியவற்றை கைப்பற்றி 2 பேரையும் கைது செய்தனர்.

    கைதானவர்கள் சோமரசன்பேட்டை தாயனூர் கீழக்காடு கீழபுறம் பகுதியை சேர்ந்த சிவசக்தி (வயது 21), தாயனூர் வடக்கு தெருவை சேர்ந்த கர்ணன் (23) என்பது தெரியவந்தது.

    மேலும் பிடிப்பட்ட 2 வாலிபர்கள், நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்து ரவடிகள் மற்றும் சமூக விரோதிகளுக்கு சப்ளை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

    யார் யாருக்கு அவர்கள் வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் சப்ளை செய்தார்கள் என்று புலன் விசாரணை நடந்து வருகிறது. கைதான இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    ரவுடிகளுக்கு வெடிகுண்டு தயாரிக்க பயிற்சி அளித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×