search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "stealing cell phones"

    • செல்போனை மர்ம நபர்கள் திருடி சென்றவிட்டனர்.
    • 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    ஈரோடு:

    திருச்சி மாவட்டம் தொட்டி யம் சின்னபள்ளி பாளை யத்தை சேர்ந்தவர் கவின் (22). இவர் சம்பவத்தன்று சென்னையில் இருந்து திருப்பூர் செல்லும் சேரன் அதிவிரைவு ரெயிலில் பொது பெட்டியில் பயணித்துள்ளார்.

    ஈரோடு ரெயில் நிலைய த்திற்கு வந்தபோது அவரது செல்போனை மர்ம நபர்கள் திருடி சென்றவிட்டனர். இது குறித்து கவின் ஈரோடு ரெயில் நிலையத்தில் புகார் அளித்தி ருந்தார்.

    அதன் பேரில் ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து செல்போன் திருடிய மர்ம நபர்களை குறித்து சி.சி.டி.வி. கேமிரா காட்சிகள் கைப்பற்றி அவர்களை தேடி வந்தனர்.

    இந்நிலையில் கவினின் செல்போன் திருடியது உத்தரப்பிரதேசம் மாநிலம் பதோகி மாவட்டம் கேட்டல்பர் பகுதியை சேர்ந்த ப்ரடும் பட்டேல் (25), பீகார் மாநிலத்தை சேர்ந்த சசுதீன் ஆலம் (21) ஆகிய 2 பேர் என்பது உறுதி செய்யப்பட்டது.

    இதை யடுத்து ஈரோடு ரெயி ல்வே போலீசார் 2 பேரையும் பிடி த்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் கவின் செல்போன் திருடியதை ஒப்புக்கொண்டனர்.

    மேலும் அவர்கள் ரெயில் பயணிகள் மற்றும் பொதுமக்களிடம் திருடிய 8 ஸ்மார்ட் போன்க ளையும் மீட்டு 2 பேரையும் போலீசார் கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.

    • பொதுமக்கள் செல்போன் திருடிய 2 பேரை மடக்கி பிடித்தனர்.
    • போலீசார் அவர்கள் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த கரு மாண்டி செல்லிபாளை யத்தை சேர்ந்தவர் தாமோ தரன் (23). இவர் ஆட்டோ வைத்து தொழில் செய்து வருகிறார்.

    இந்நிலையில் அவர் மடத்துப்பாளையம் பகுதிக்கு வாடகைக்கு ஆட்டோவில் சென்றார்.

    இதை தொடர்ந்து அவர் தனது ஆட்டோவில் ரூ.7 ஆயிரம் மதிப்புள்ள 2 செல்போன்களை வைத்து விட்டு சென்றுள்ளார்.

    அப்போது 2 பேர் தனது செல்போனை திருடி கொண்டு சென்றதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தாமோதரன் சத்தம் போட்டார்.

    அவரது சத்தம் கேட்டு பொதுமக்கள் செல்போன் திருடிய 2 பேரை மடக்கி பிடித்தனர்.

    இதையடுத்து அவர்க ளை பெருந்துறை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    விசாரணை யில் அவர்கள் குன்னத்தூரை சேர்ந்த சபரி (வயது 25), சம்பத்குமார் (37) என்பது தெரியவந்தது.

    பின்னர் போலீசார் அவர்கள் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    • மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் 2 பேர் செல்போனை பறித்துகொண்டு மாயமாகி விட்டனர்.
    • போலீசார் செல்போன் திருடிய நபர்களைப் பற்றி தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    சென்னிமலை:

    சென்னிமலையை அடுத்துள்ளது ஈங்கூர் குட்டப்பாளையம் அருகே ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மகேந்திர பட்டேல் (21) என்பவர் வசித்து வருகிறார்.

    இவர் இங்கு உள்ள தொழிற்சாலை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர் சம்பவத்தன்று தனது குடும்பத்தினருடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார்.

    அப்போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் 2 பேர் இவரது செல்போனை திடீரென பறித்துக் கொண்டு மாயமாகி விட்டனர்.

    பின்னர் மகேந்திர பட்டேல் இச்சம்பவம் குறித்து சென்னிமலை போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் செல்போன் திருடிய நபர்களைப் பற்றி தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் இந்த வழக்கு சம்பந்தமாக சேலம் மாவட்டம், மேட்டூர் பகுதியைச் சேர்ந்த விஜய் (24) என்பவரையும், திங்களூர் அருகில் உள்ள தாண்டாக்கவுண்டன் பாளையத்தை சேர்ந்த மகேஷ் (19) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.  

    ×