என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
செல்போன் திருடிய 2 பேர் கைது
Byமாலை மலர்29 July 2023 9:53 AM GMT
- பொதுமக்கள் செல்போன் திருடிய 2 பேரை மடக்கி பிடித்தனர்.
- போலீசார் அவர்கள் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
பெருந்துறை:
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த கரு மாண்டி செல்லிபாளை யத்தை சேர்ந்தவர் தாமோ தரன் (23). இவர் ஆட்டோ வைத்து தொழில் செய்து வருகிறார்.
இந்நிலையில் அவர் மடத்துப்பாளையம் பகுதிக்கு வாடகைக்கு ஆட்டோவில் சென்றார்.
இதை தொடர்ந்து அவர் தனது ஆட்டோவில் ரூ.7 ஆயிரம் மதிப்புள்ள 2 செல்போன்களை வைத்து விட்டு சென்றுள்ளார்.
அப்போது 2 பேர் தனது செல்போனை திருடி கொண்டு சென்றதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தாமோதரன் சத்தம் போட்டார்.
அவரது சத்தம் கேட்டு பொதுமக்கள் செல்போன் திருடிய 2 பேரை மடக்கி பிடித்தனர்.
இதையடுத்து அவர்க ளை பெருந்துறை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணை யில் அவர்கள் குன்னத்தூரை சேர்ந்த சபரி (வயது 25), சம்பத்குமார் (37) என்பது தெரியவந்தது.
பின்னர் போலீசார் அவர்கள் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X