search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபர்கள் கைது"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கைது செய்யப்பட்ட வாலிபர்கள் மற்றும் மீட்கப்பட்ட மாணவிகளிடம் விசாரணை நடத்தியதில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.
    • கைதானவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் வண்டூர் பகுதியை சேர்ந்த 15 மற்றும் 14 வயது மதிக்கத்தக்க இரண்டு சிறுமிகள் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தனர். 10 மற்றும் 8-ம் வகுப்பு மாணவிகளான அவர்கள் இருவரும் விடுமுறைக்காக வண்டூரில் உள்ள தங்களது உறவினர் வீட்டிற்கு கடந்த 16-ந்தேதி சென்றுள்ளனர்.

    இந்தநிலையில் மாணவிகள் இருவரும் திடீரென மாயமாகிவிட்டனர். இதுகுறித்து அவர்களது உறவினர்கள் வண்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து மாயமான மாணவிகள் இருவரையும் தேடி வந்தனர்.

    அவர்களது செல்போன் மூலம் அவர்களது இருப்பிடத்தை போலீசார் கண்காணித்தனர். அப்போது மாணவிகள் இருவரும் பெங்களூருவில் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். மாணவிகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இந்நிலையில் அந்த மாணவிகள், 2 வாலிபர்களுடன் பஸ்சில் வந்த போது போலீசாரிடம் சிக்கினர். மாணவிகள் இருவரையும் போலீசார் மீட்டனர். அவர்களுடன் இருந்த வாலிபர்கள் குறித்து விசாரித்த போது இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்தவர்கள் என்று தெரிவித்தனர்.

    மேலும் தங்களை பெங்களூருவுக்கு கடத்திச் சென்றதாகவும், மதுபானம் கொடுத்து மயங்க செய்து பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர். இதையடுத்து மாணவிகளுடன் இருந்த எர்ணாகுளம் அங்கமாலி பகுதியை சேர்ந்த பாசில் பேபி (வயது 23), திருச்சூர் கொடுங்கல்லூர் முகமது ரமீஸ் (22) ஆகிய இருவரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

    கைது செய்யப்பட்ட வாலிபர்கள் மற்றும் மீட்கப்பட்ட மாணவிகளிடம் விசாரணை நடத்தியதில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. பள்ளி மாணவிகள் இருவருக்கும், அந்த வாலிபர்கள் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகம் ஆகியுள்ளனர். அதன் மூலமாக அவர்கள் பேசி பழகி வந்துள்ளனர்.

    இந்நிலையில் மாணவிகள் இருவரும் விடுமுறைக்காக வண்டூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றனர். அதனை அறிந்து கொண்ட அந்த வாலிபர்கள், அங்கு சென்று மாணவிகளை சந்தித்துள்ளனர். பின்பு மோட்டார் சைக்கிளில் மாணவிகள் இருவரையும் எர்ணாகுளத்துக்கு அழைத்து வந்திருக்கின்றனர்.

    பின்பு மாணவிகளை பெங்களூருக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு வைத்து மாணவிகளுக்கு மதுபானம் கொடுத்து மயங்கச்செய்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேற்கண்ட தகவல்கள் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    இதையடுத்து பாசில் பேபி, முகமது ரமீஸ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களின் மீது கடத்தல், கற்பழிப்பு, காயத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் சிறுமிகளை போதையில் வைத்தல், பாலியல் வன்கொடுமை, போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

    இன்ஸ்டாகிராமில் பழகிய பள்ளி மாணவிகளை கடத்திச் சென்று மதுபானம் கொடுத்து மயங்க செய்து வாலிபர்கள் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • மணிபாரதி அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்துல்ரஹீம், சதீஸ் உட்பட 4 பேரையும் கைது செய்தனர்.

    தஞ்சாவூா்:

    தஞ்சை மாவட்டம் ஆடுதுறையை சேர்ந்தவர் மணிபாரதி (வயது 26). இவர் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவதன்று வேலையை முடித்து கொண்டு ரெயிலில் ஆடுதுறைக்கு செல்வதற்காக தஞ்சை ரெயில் நிலையத்திற்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.

    ரெயில்வே குட்ஷெட் பகுதியில் வந்த போது 4 பேர் திடீரென மணிபாரதியை சுற்றி வளைத்து தாக்கி அவரிடமிருந்து ரூ.480 பறித்தனர். பின்னர் செல்போனை பறிக்க முயலும் போது மணிபாரதி அங்கிருந்து தப்பி ஓடினார். அவரை பின் தொடர்ந்து 4 பேரும் ஓடினர்.

    இதையடுத்து மணிபாரதி அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் தலைமை காவலர் தேவஞானம், காவலர்கள் கண்ணன், சிவபாதசேகர் மற்றும் போலீசார் விரைந்து சென்று வழிப்பறிக் கொள்ளையர்கள் 4 பேரையும் விரட்டி சென்று சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில், தஞ்சை பர்மா காலனியை சேர்ந்த அப்துல்ரஹீம் (வயது 19), ஒக்கநாடு கீழையூர் வருண் ( 20), தஞ்சை வண்டிக்கார தெரு சதீஷ் ( 19), ஜெபமாலைபுரம் முகமது ரோஷன் (20) என்பது தெரிய வந்தது.

    தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்துல்ரஹீம், சதீஸ் உட்பட 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணம் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்யப்பட்டது.

    • நவநீதன் மற்றும் செல்வம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
    • தலைமறைவான சக்தி என்ற பறவையை போலீசார் தேடி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தெர்மல்நகர் லேபர் காலனியை சேர்ந்தவர் ஜோசப். இவரது மகன் ஜெகன்ராஜ் (வயது30). கூலி தொழிலாளி.

    நேற்று மதியம் லேபர் காலனியில் ஜெகன்ராஜ் நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த சிலர் ஜெகன்ராஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் ஆத்திரமடைந்தவர்கள் ஜெகன்ராஜை சரமாரியாக வெட்டியும், கத்தியால் குத்தினர்.

    இதனால் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே அவர் இறந்தார்.

    இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் குற்றவாளிகளை பிடிக்க தெர்மல்நகர் இன்ஸ்பெக்டர் அலெக்ஸ்ராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

    இதில் அப்பகுதியை சேர்ந்த நவநீதன், செல்வம் (29) மற்றும் சக்தி என்ற பறவை (27) ஆகியோர் ஜெகன்ராஜை கொலை செய்தது தெரியவந்தது. இந்நிலையில் நவநீதன் மற்றும் செல்வம் ஆகியோரை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர்.

    அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் நவநீதன், சக்தி என்ற பறவை என்பவர் மூலம் ஜெகன்ராஜிடம் ரூ. 40 ஆயிரம் கடன் வாங்கி உள்ளார். அதனை ஜெகன்ராஜ் திருப்பி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும் சேர்ந்து ஜெகன்ராஜை கொலை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவான சக்தி என்ற பறவையையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • கத்தியை காட்டி மிரட்டி பொறியியல் பட்டதாரியிடம் பணத்தை கொடுக்குமாறு கேட்டுள்ளனர்.
    • பட்டதாரி வாலிபர் சிறிது நாட்கள் கழித்து பெருந்துறை போலீசில் புகார் செய்தார்.

    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தை சேர்ந்த 27 வயது பொறியியல் பட்டதாரி வாலிபர் சரியான வேலை கிடைக்காததால் தந்தையுடன் தறி ஓட்டும் வேலை பார்த்து வந்தார். இவருக்கு ஓரினச்சேர்க்கை பழக்கம் இருந்து வந்துள்ளது. இதற்காக இந்த வாலிபர் செல்போன் செயலி மூலம் ஓரினச்சேர்க்கை ஒருவரிடம் சமீபத்தில் பேசி பழகி வந்துள்ளார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று அந்த வாலிபர் செயலி மூலம் பொறியியல் பட்டதாரி வாலிபருடன் தொடர்பு கொண்டு விஜயமங்கலம் அருகே உள்ள ஒரு காலி இடத்திற்கு வரச்சொல்லி உள்ளார்.

    இதனை நம்பி அந்த பொறியியல் பட்டதாரி வாலிபரும் சம்பவ இடத்திற்கு சென்றார். அப்போது அங்கு இருந்த வாலிபரிடம் அறிமுகமாகி அவர்கள் 2 பேரும் பேசி கொண்டிருந்தனர். அப்போது திடீரென 3 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தனர்.

    அந்த நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி பொறியியல் பட்டதாரியிடம் பணத்தை கொடுக்குமாறு கேட்டுள்ளனர். அவர் தன்னிடம் பணம் இல்லை என கூறியதையடுத்து, அவர் அணிந்திருந்த 3 பவுன் செயின், 1 பவுன் மோதிரம் ஆகியவற்றை பறித்துக்கொண்டனர். மேலும் இதுகுறித்து யாரிடமாவது கூறினால் நீ ஓரினச்சேர்க்கைக்கு எங்களை அழைத்தாய் என வெளியில் கூறி அசிங்கப்படுத்தி விடுவோம் என மிரட்டிவிட்டு அங்கிருந்து சென்று விட்டனர்.

    இதையடுத்து நடந்த சம்பவம் குறித்து அந்த பட்டதாரி வாலிபர் சிறிது நாட்கள் கழித்து பெருந்துறை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

    இந்த நிலையில் பொறியியல் பட்டதாரிடம் கத்தியை காட்டி மிரட்டி 4 பவுன் பறித்து சென்றது திருப்பூர் டி.டி.பி. மில் ரோடு பகுதியை சேர்ந்த தினேஷ் (21), திருப்பூர் 15 வேலம்பாளையம் விநாயகர் கோவில் வீதியை சேர்ந்த நந்தகுமார் (21), 15 வேலம்பாளையம் நேரு வீதியை சேர்ந்த அங்குகுமார் (21), சேலம் மாவட்டம் தாரமங்கலம் வண்ணார் சந்து பகுதியை சேர்ந்த ஆனந்தகுமார் (28) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து பெருந்துறை போலீசார் அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியாகியது. அதன்படி இந்த கொள்ளை சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டது ஆனந்தகுமார் என தெரிய வந்தது. ஆனந்தகுமார் உடுமலைப்பேட்டையில் நடந்த கொலை வழக்கில் தொடர்புடையவர் எனவும், அப்போது நண்பர்களுடன் ஏற்பட்ட பழக்கத்தால் ஓரினச்சேர்க்கை செயலி குறித்து தெரிந்து கொண்டுள்ளார்.

    இதையடுத்து ஆனந்தகுமார் போனில் ஓரினச்சேர்க்கை செயலி மூலம் தொடர்பு கொண்டு அவர் கூறும் இடங்களுக்கு வரும் நபர்களை நண்பர்களுடன் சேர்ந்து மிரட்டி பணம் பறித்து வந்து உள்ளார்.

    இதுகுறித்து வெளியே சொன்னால் அவமானம் ஆகிவிடும் என்பதால் இது குறித்து யாரும் புகார் செய்யவில்லை. இதனை சாதமாக பயன்படுத்தி கொண்ட ஆனந்தகுமார் மற்றும் அவரது நண்பர்கள் இதேபோல் சேலம், பவானி, ஆத்தூர், சங்ககிரி, திருப்பூர், பெருமாநல்லூர் போன்ற பல்வேறு பகுதிகளில் இவ்வாறு மிரட்டி பணம் பறித்தது விசாரணையில் தெரியவந்தது.

    கைதான 4 பேர்களிடம் இருந்து சொகுசு கார், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    • இருசக்கர வாகனத்தில் வந்த 2 வாலிபர்களை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரணை செய்தனர்.
    • கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்தும் ஒற்றை குழல் நாட்டுத்துப்பாக்கி ஒன்று, இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    துறையூர்:

    திருச்சி துறையூர் காவல் நிலைய போலீசார் முருகூர் பிரிவு சாலை அருகே வாகன சோதனை செய்தனர்.

    அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 வாலிபர்களை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரணை செய்தனர். மேலும் அவர்கள் கொண்டு வந்திருந்த பையையும் சோதனை செய்தனர். அதில் அவர்கள் இருவரும் திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சஞ்சய் (வயது 22), உலகநாதன் (எ) வடிவேல் (22) என்பதும், பையில் வைத்திருந்த அரசின் உரிய அனுமதி இல்லாத துப்பாக்கியை கொண்டு வேட்டைக்கு சென்று கொண்டிருப்பதும் தெரிய வந்தது.

    இதனையடுத்து இருவரையும் கைது செய்த துறையூர் போலீசார், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடை த்தனர். கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்தும் ஒற்றை குழல் நாட்டுத்துப்பாக்கி ஒன்று, இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். துறையூர் அருகே அனுமதி இல்லாத நாட்டுத்துப்பாக்கி போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • அஜித்குமார் தனக்கு மின்சார அடுப்பு வேண்டும் என கல்லூரி மாணவியிடம் கேட்டார்.
    • அதிகாலை நேரத்தில் மாணவிக்கு நினைவு திரும்பியது.

    மும்பை:

    மும்பை செம்பூர் போஸ்டல் காலனி பகுதியில் பாபா அணு ஆராய்ச்சி மைய ஊழியர்கள் குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் உள்ள வீட்டில் பாபா அணு ஆராய்ச்சி மைய ஊழியரின் 19 வயது மகள் தங்கியிருந்து, அங்குள்ள கல்லூரியில் படித்து வந்தார். வேலை காரணமாக கல்லூரி மாணவியின் குடும்பத்தினர் வேறு பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வந்தனர். கல்லூரி மாணவி தங்கி இருந்த வீட்டின் அருகில் அஜித்குமார் (26) என்ற வாலிபர் வசித்து வருகிறார். பக்கத்து வீடு என்பதால் மாணவி, அஜித்குமாருடன் நட்பாக பேசி வந்தார்.

    சம்பவத்தன்று இரவு அஜித்குமார் குடும்பத்தினர் வெளியே சென்று இருந்தனர். அஜித்குமார் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். எனவே அவர் கோவண்டி பகுதியை சேர்ந்த தனது நண்பர் பிரபாகரை(30) வீட்டுக்கு அழைத்தாா்.

    இந்தநிலையில் அஜித்குமார் தனக்கு மின்சார அடுப்பு வேண்டும் என கல்லூரி மாணவியிடம் கேட்டார். மாணவி அடுப்பை கொடுக்க அஜித்குமார் வீட்டுக்கு சென்றார். அங்கு அவர் அஜித்குமார், அவரது நண்பர் பிரபாகரிடம் சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தார். அந்த சந்தர்ப்பத்தில் 2 பேரும் மாணவிக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை குடிக்க கொடுத்தனர். இதனை அறியாத மாணவி குளிர்பானத்தை குடித்து மயங்கி உள்ளார். இதைத்தொடர்ந்து வாலிபர்கள் 2 பேரும் சேர்ந்து மாணவியை கற்பழித்ததாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் அதிகாலை நேரத்தில் மாணவிக்கு நினைவு திரும்பியது. தான் கற்பழிக்கப்பட்டதை உணர்ந்த அவர், உடனடியாக சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தினர், பெற்றோருக்கு தகவல் கொடுத்தார். மேலும் செம்பூர் போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்தார்.

    இந்த புகார் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கூட்டு பலாத்காரம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து வாலிபர்கள் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • இளம்பெண்ணை அவதூறாக பேசிய 2 வாலிபர்கள் கைது செய்தனர்.
    • யாழினி பலமுறை எச்சரித்தும் அவர்கள் கேட்கவில்லை

    மண்டபம்

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அண்ணா குடி யிருப்பு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் மகள் யாழினி (வயது 21). இவர் சம்பவத் தன்று ராமநாதபுரத்தில் இருந்து அரசு பேருந்தில் ஏறி தனது சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.

    இந்த பேருந்து வேதாளை ஊராட்சி குஞ்சார்வலசை பஸ் நிறுத்தம் வந்த போது தங்கச்சிமடம் மாந்தோப்பு பகுதியை சேர்ந்த கிருஷ் ணன் மகன் டாரஸ் (19), சந்தியா மகன் கிர்லோஸ்கார் (20) ஆகியோர் பேருந்தில் ஏறினர். பின்னர் அவர்கள் யாழினி அருகில் நின்று கொண்டு அவரை ஆபாச மாகவும், அவதூறாகவும் பேசியதாக கூறப்படுகிறது.

    இதனை கண்டித்து யாழினி பலமுறை எச்சரித் தும் அவர்கள் கேட்கவில்லை. இதையடுத்து யாழினி தனது பெற்றோருக்கு செல் போனில் தகவல் கொடுத் தார். அவர்கள் இதுகுறித்து மண்டபம் காவல் நிலையத் தில் புகார் அளித்தனர். சப்- இன்ஸ்பெக்டர் சதீஷ் குமார் வழக்குப்பதிவு செய்து டாரஸ், கிர்லோஸ் கார் ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • பொதுமக்களை அச்சுறுத்தும் விதத்தில் சில வாலிபர்கள் ரேஸில் ஈடுபட்டு அதனை வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
    • மோட்டார் வாகன விதிமுறைகளை மீறியதாக ரூ.11 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

    கடையநல்லூர்:

    தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதிகளில் வாலிபர்கள் சிலர் மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபடுபவதாக போலீசாருக்கு புகார் சென்றது.

    அதன்பேரில் அச்சன்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்கனி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, வடகரை, பண்பொழி, திருமலை கோவில் சாலை, இலத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட வந்தனர். இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு பொதுமக்களை அச்சுறுத்தும் விதத்தில் சில வாலிபர்கள் ரேஸில் ஈடுபட்டு அதனை வீடியோ பதிவு செய்து இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

    இதுதொடர்பாக அச்சன்புதூர் இன்ஸ்பெக்டர் வேல்கனி தலைமையிலான தனிப்படையினர் அங்கு சென்று வடகரை கீழத்தெருவை சேர்ந்த அப்துல் ரசாக் மகன் முகம்மது ஆசிக் (வயது21), வடகரை ரஹ்மானியாபுரம் மேலத்தெருவை சேர்ந்த ஷேக் ஒலி(25) ஆகியோரை கைது செய்தனர்.

    மேலும் புளியரை-கொல்லம் மெயின் ரோட்டை சேர்ந்த கவுதம் கிருஷ்ணா (24) என்பவரும் சாகசம் செய்ததாக அவர் மீது இலத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

    செங்கோட்டை அருகே கலங்காத கண்டியைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவரின் மகன் பரத்குமார்(26) என்பவருக்கு மோட்டார் வாகன விதிமுறைகளை மீறியதாக ரூ.11 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு அவரின் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
    • தப்பி ஓடிய 4 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    வேலூர்:

    வேலூர் அடுத்த விரிஞ்சிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன்பாபு மற்றும் போலீசார், பொய்கை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். பொய்கை சமத்துவபுரம் சமுதாயக்கூடம் அருகில், சந்தேகம்படும்படி 2 பைக்குகளில் 6 பேர் சுற்றித்திரிந்தனர்.

    போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பியோட முயன்றனர். அவர்களை போலீசார் ஜீப்பில் துரத்திச்சென்று ஒரு பைக்கை மடக்கி, 2 பேரை பிடித்து விசாரித்தனர்.

    விசாரணையில், அவர்கள் சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த விஜய் இம்மானுவேல் என்கிற வெள்ளை விஜய் ( வயது 23) மற்றும் சென்னை நம்மாழ்வார்பேட்டை பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்கிற போண்டா சதீஷ் (20) என்பது தெரிய வந்தது.

    மேலும், தீபாவளி செலவுக்காக வேலூர் பகுதியில் திருட்டு மற்றும் கொள்ளையில் ஈடுபட திட்டமிட்டு குழுவாக அவர்கள் சுற்றித் திரிந்ததும், அவர்கள் ஓட்டி வந்த பைக், வில்லிவாக்கம் பகுதியில் 2 நாட்களுக்கு முன்பு திருடியதும் தெரிய வந்தது.

    இதனையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து பைக், 2 கத்தி, இரும்பு கம்பிகள், கயிறு மற்றும் மிளகாய் பொடி டப்பா ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

    மேலும் தப்பி ஓடிய 4 பேரையும் போலீசார் தேடிவருகின்றனர்.

    • பல்வேறு புலனாய்வு போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    • முழுமையான ஆய்வுக்கு பின்னரே முழுவிபரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்தநல்லூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட சத்திரப்பட்டி பகுதியில் நூதன முறையில் தொலைதொடர்பு சாதனம் மூலம் மோசடியில் ஈடுபடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் அடிப்படையில் போலீசார் சத்திரப்பட்டியில் உள்ள மரக்கடை ஒன்றில் சோதனை செய்தபோது நூதன முறையில் மோசடி சம்பவம் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது சினிமா படத்தை மிஞ்சும் அளவிற்கு வெளிநாட்டு போன் கால்களை செலவு இல்லாமல் உள்நாட்டு போன் கால்களாக பேசுவதற்கு 600-க்கும் மேற்பட்ட சிம்கார்டுகளை முறைகேடாக பயன்படுத்தியது தெரியவந்தது.

    இதுதொடர்பாக மோசடியில் ஈடுபட்ட யோசுவா (வயது 30), முனீஸ்வரன் (28) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களுக்கு உள்ள குற்ற பின்னணிகள் குறித்து சங்கரன்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு சுதிர் தலைமையிலான தனிப்படை மற்றும் பல்வேறு புலனாய்வு போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கடந்த 2 நாட்களுக்கு மேல் இவர்களிடம் நடத்திய விசாரணையில் எந்த விதமான பிடியும் சிக்காததால் காவல் துறையினர் அவர்களை சட்ட விரோதமாக இணைப்பகம் நடத்திய வழக்கில் கைது செய்ததாக கூறப்படுகிறது.

    தற்பொழுது நவீன முறையில் அனைவரும் வீடியோ கால் பயன்படுத்துவதால் இவர்கள் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் நடத்தி இருக்க வாய்ப்பில்லை எனவும், வேறு ஏதாவது நவீன மோசடியில் ஈடுபட்டிருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    அந்த பகுதியில் 600-க்கும் மேற்பட்ட சிம்கார்டுகள் மற்றும் தொலைத்தொடர்பு சாதன கருவிகள் லேப்டாப் மற்றும் 30-க்கும் மேற்பட்ட செல்போன்கள் வை-பை மோடம் உள்ளிட்ட கருவிகளை போலீசார் பறிமுதல் செய்து ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர். முழுமையான ஆய்வுக்கு பின்னரே முழுவிபரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • அருப்புக்கோட்டையில் இருந்து மதுரைக்கு கடத்திய 35 மூடை ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
    • இந்த சம்பவத்தில் தொடர்புடைய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட உணவு பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அருப்புக் கோட்டை அருகே உள்ள குறுந்தமடம் பஸ் நிறுத்தம் அருகே வாகன தணிக்கை யில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த வேனை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் உரிய ஆவணங்களின்றி 35 மூடைகள் ரேஷன் அரிசி இருந்தது. வேனில் வந்தவர் களை விசாரித்தபோது அவர்கள் கடலாடி தொண்டு நல்லம்பட்டியைச் சேர்ந்த டிரைவர் கணேசமூர்த்தி (வயது18), மதுரை பெருங்குடியைச் சேர்ந்த லோடுமேன் ஜோதிமுத்து (28) என்பது தெரியவந்தது.

    மேலும் அருப்புக் கோட்டை அருகே உள்ள கே.எம்.கோட்டை பகுதியை சேர்ந்த சந்திரசேருக்கு சொந்தமான இடத்தில் இருநது மதுரை வில்லா புரத்தை சேர்ந்த சுப்பிரமணி என்பவருக்கு சொந்தமான இடத்திற்கு கடத்தி சென்றதும் தெரிய வந்தது. வேனுடன் அரிசியை பறிமுதல் செய்த உணவு பொருள் தடுப்பு பிரிவு போலீசார் டிரைவர், லோடுமேனை கைது செய்தனர்.

    மேலும் சந்திரசேகர், சுப்பிரமணி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • தப்பி ஓடிய 4 பேரையும் தேடி வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    பூந்தமல்லி அருகே உள்ள கோலப்பஞ்சேரி பகுதியில் வெள்ளவேடு இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் லாரன்ஸ் மற்றும் போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது கோலப்பஞ்சேரி கூட்டுறவு வங்கி அருகே உள்ள முட்புதரில் சந்தேகப்படும்படி 6 பேர் நின்று கொண்டிருந்தனர். போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பி ஓட்டம் பிடித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களில் 2 பேரை மடக்கி பிடித்தனர். மற்ற 4 பேரும் தப்பி ஓடிவிட்டனர்.

    விசாரணையில் பிடிபட்ட வாலிபர்கள் திருமழிசை உடையார் கோவில் பகுதியை சேர்ந்த வேலன் (22), மணிமாறன்(21) என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து அரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    கூட்டுறவு வங்கியில் கொள்ளை அடிக்க வந்தார்களா? அல்லது வேறு ஏதேனும் குற்ற செயலில் ஈடுபட திட்டமிட்டு இருந்தனரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். தப்பி ஓடிய 4 பேரையும் தேடி வருகின்றனர்.

    ×