search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வேனை வழிமறித்து வியாபாரியிடம் செல்போன்-பணம் கொள்ளை: 4 வாலிபர்கள் சிறையில் அடைப்பு
    X

    வேனை வழிமறித்து வியாபாரியிடம் செல்போன்-பணம் கொள்ளை: 4 வாலிபர்கள் சிறையில் அடைப்பு

    • குருவாயில் அரசு ஆஸ்பத்திரி அருகே சென்றபோது இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு வாலிபர்கள் வேனை திடீரென வழிமறித்தனர்.
    • குற்றவாளிகளான நான்கு வாலிபர்கள் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து திருவள்ளூர் முதல்நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், வெங்கல் அருகே உள்ள குருவாயல் கிராமத்தில் முருகன் கோவிலில் நேற்று முன்தினம் நிச்சயதார்த்த நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதற்கு ஆவடி பாலவேடு கிராமம், கர்ணன் தெருவை சேர்ந்த தினேஷ்பாபு (வயது36) என்பவர் பந்தல் மற்றும் சவுண்ட் சர்வீஸ் அமைத்திருந்தார்.

    இந்நிலையில் அவர் நிகிழ்ச்சி முடிந்த பின்னர் நேற்று விடியற்காலை அனைத்தையும் அவிழ்த்து வேனில் ஏற்றிக்கொண்டு தனது கடைக்கு சென்று கொண்டிருந்தார்.

    குருவாயல்-காரணி கூட்ரோடு சாலையில் குருவாயில் அரசு ஆஸ்பத்திரி அருகே சென்றபோது இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு வாலிபர்கள் வேனை திடீரென வழிமறித்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்கள் தினேஷ்பாபுவை சரமாரியாக தாக்கினர். பின்னர் அவரிடம் இருந்த விலை உயர்ந்த செல்போன் மற்றும் ரொக்க பணத்தை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிள்களில் ஏறி தப்பி சென்றனர்.

    இந்தச்சம்பவம் குறித்து தினேஷ்பாபு வெங்கல் காவல் நிலையத்தில் நேற்று காலை புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் தலைமையில் போலீசார் இந்த வழிப்பறி சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை வலைவீசி தேடி வந்தனர்.

    இந்நிலையில், செங்குன்றம் காந்தி நகரைச் சேர்ந்த கிஷோர்(வயது 18), செங்குன்றம், நாரவாரிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த நவீன்பாலாஜி (வயது18), பழைய மகாபலிபுரம், நாவலூர் பகுதியைச் சேர்ந்த மகேஷ் (வயது26), பூரிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சேதுராமன் (வயது18) ஆகிய நான்கு பேரையும் போலீசார் பிடித்து வந்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்தனர். அப்போது அந்த நான்கு வாலிபர்களும் வேனை வழிமறித்து செல்போன் மற்றும் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்துச் சென்றதை ஒப்புக்கொண்டனர். மேலும், அவர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    குற்றவாளிகளான நான்கு வாலிபர்கள் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து திருவள்ளூர் முதல் நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அவரது உத்தரவின் பேரில் 4 பேரையும் போலீசார் நேற்று மாலை புழல் சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×